விஷ்ணு துர்க்கையே.... @ Nearby Collector Bangalow & GH Tirunelveli Palayamkottai

 ..******விஷ்ணுதுர்க்கையே******.

ஆணும் பெண்ணும்
பட்டினியும் பங்களாவும்
காதலும் காமமும்
கண்ணீரும் கம்பலையும்
நாற்காலியும் நிம்மதியும்..
அன்பும் கோபமும்...
ஆசையும் கல்யாணமும்
நேசமும் வேஷமும்...
அரசியலும் ஆன்மீகமும்...
ஜோசியமும் ஜோசியரும்.....
அறிவியலும் கற்பனை கதைகளும்...
எதிர் எதிர் துருவங்களே...
ஒத்திசைவு சாத்தியமோ...
ஆயினும் அத்தனையும்..
எழுதிவிட துடிக்கின்றேன்...என்னை
ஏளனமாய் பேசியவர்...
எத்தனையோ தெரியாது....
மண்ணுக்குள் போகும் முன்னே
சத்தமாய் சத்தியமாய் சொல்லுகிறேன்....
சொந்தங்கள் யாருமின்றி
அனாதையாய் நின்ற போதும்
அரவிந்தன் வடிவில் வந்து
(அரவிந்த் சர்மா)
வாழ்க்கையை புரியவைத்தாள்...
இன்றோ ஆயிரம் சொந்தங்கள்....
எல்லா வசதிகளும் வரமாய் தந்தாயே...
இந்த பகட்டான வாழ்க்கையே
நீ போட்ட பிச்சையடி...
என்றைக்கும் மறவேனே..
கோவிலின் உள்ளே அமைதியாய்
கற்சிலையாய் இருந்தாலும்..
என்னை கண்ணிமையாய்
காப்பாற்றும் அன்னை நீயன்றோ...
விஷ்ணு துர்க்கையே....

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...