தாத்தா

எத்தனையோ
முறை
கட்டிப்பிடித்து
கன்னங்களை
ஈரமாக்கிய
பிறகும் கூட
இன்னும்
ஓரே ஒர்
தடவையென்று
பேத்தியுடன்
கொஞ்சி
கெஞ்சும்
தாத்தா

வாழ்க்கை

கவலைகள்
இல்லாத
மனிதன்
உலகில் இல்லை
ஆயினும்
கவலைகளை
மறந்து
சந்தோஷமாக
வாழும் கலை தான்
வாழ்க்கை

தோழி

அரையடி
கூந்தலை
ஆறடி போல
காட்ட வேண்டிய
கட்டாயம்....
திருமண வீட்டில்
அனைவரும்
கேட்கும் படி
தனக்கு
தெரியாதது
போல பலர் அறியும்படி
சவுரி முடி உனக்கு
சரியில்லை என
ஆறடி கூந்தல்
ரகசியம் உடைத்த
அருமை தோழி

Tirunelveli









கருப்பு கண்ணாடி

காதலித்து
திருமணம்
செய்த இருவரும்
காரில்
செல்லும் போது
விரும்பி
அணிவது
கருப்பு கண்ணாடி

பின்னால்

காதலின்
தொடங்கம்
உண்மையாக
பேசும்கண்கள்
ஆனால்
மறைத்து
வைக்கப்படுகிறது
கறுப்பு
கண்ணாடிகளின்
பின்னால்...

கோபமானஅன்பு

சிறுவயதில்
பட்ட பெல்ட் அடிகளே
இங்கே பலருக்கு 
அன்பு தேட விதையிட்டது,
தந்தையின் பாசம்
கோபத்தில்,
புரிந்து கொள்ள
அனைவரும்
புத்தர் அல்ல,
கோபத்தில்
கத்தும் மனிதனுக்கு
அன்பு அதிகம்
தேவை என்பது
கோபத்தை
கொப்பளித்த பிறகே
தெரிகிறது தேடலின்
தொடங்கம் தானோ
கோபமானஅன்பு

தர்பார்

எந்த மனிதர்
ஆட்சிக்கு
வந்தாலும்
கவலையில்லை,
பொருளாதார
பிரச்சனையில்லை,
அவை பிள்ளைகளின்
தலையில்,
அருமையான சமையல்
மனைவியும் மருமகளும்
அவைகளுக்கு பொறுப்பு
எனவே தினமும் 
அரட்டை தான்..
ரோட்டோர அரசமரத்தின்
அருகிலேயே மாலை நேரத்தில்
அரசியல் 
தலைவர் தொடங்கி
உள்ளூர் பிரமுகர் வரை.
அடுத்த இவரா? அவரா?
என அரசியல் நையாண்டி
பேசும் தாத்தா..
கோபத்துடன் அப்பா
காரணம் கேட்டால்
இரவு மருந்து சாப்பிடாமல்
அடம் பிடித்தார்..
மறுநாள் கூட்டத்தில்
வீராப்புடன் பேசினார்
எங்க வீட்டில்
நான் வைச்சதே
....................


பிடிக்கவில்லை


நிம்மதியான
உறக்கமின்றி
நண்பர்களை பிரிந்து
பதட்டமான
சூழ்நிலையில்
பணத்தையும்,
பதவியும் நாடி
உயிரினும்
மேலான
உண்மையான
நண்பர்களை
இழந்து விட்டு,
போலியாய்
பழகும் கூட்டத்தில்
அடுத்து என்ன
நடக்கும் என்பதை
அறிய முடியாத
அரசியல் வாழ்க்கை
எனது நண்பனுக்கு
பிடிக்கவில்லை



100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...