காதல்

இனி வரும் காலங்களில் அனைவரின் மனதிலும்காதல் மிளிரட்டும்... எழுத்துக்களிலும் காதல் மிளிரும், ஏனென்றால் அன்பு தான் காதல்..

காதல் கூட ஓர் வழிபாடு தான்...

காதலிப்பவர்கள் அனைவரும் அன்பை தானே தேடுகிறார்கள்...

அன்பே சிவம்...

அன்பே நாராயணன்...

.

சிவனை தேடி கோவில் அலைபவரும் அன்பைத் தானே நினைக்கிறார்கள்...

எனவேதான் என் எழுத்துக்கள் காதலை மையப்படுத்தி தொடங்குகிறேன்....


https://anmaai.blogspot.com

மிக விரைவில்

 மிக விரைவில்

எதிர்பாருங்கள்

கண்ணன் பற்றிய

காதல் கவிதைகள்...

ஆம் நமது ஆயர் குல

மன்னனை பற்றிய

கவிதை தொடங்குகின்றது...

கண்ணதாசன் போல...

கண்ணணை நினைத்து

தூரிகை தொட்டு

தொடங்குகிறேன்...


உண்மையாக

தாயும்
தகப்பனும்
முதல் தெய்வம்...
அவர்களின்
மனதை 
புரிந்து கொள்ளாமல்
ஆயிரம் சொந்தங்கள் 
அவரகளை பேணுவதால்
என்ன பயன்
போலி கெளரவம்
தவிர்த்து வாழுங்கள்
உண்மையாக

வேலை

அவன்

நல்லவனா..

கெட்டவனா...

பணம் எப்படி

சம்பாதிக்கிறான்...

சந்தோஷமாக வாழ்கிறாரா???

கஷ்டத்தில் உழல்கிறானா???

இன்னும் பல கேள்விகள்...

அடுத்தவரை மாத்திரமே

பார்த்து பழகியவர்கள் அவர்கள்...

தன்னை பற்றி நினைப்பதே இல்லை...

எல்லா நேரங்களிலும்

அடுத்தவனை பார்ப்பதே

அவனுக்கு வேலை...

மகிழ்ச்சி

 ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம், என்றவரும் பேசுகின்றனர்

ரஜினியின் உடல்நிலை பற்றி, அவர் மீது கொண்ட அன்பினால்...

ஆயினும் கொள்கை வேறு தான்..‌

ஏனோ அரசியலுக்கு உள்ளே இழுத்து விட்டவர் எல்லாம், தூரத்திற்கு தள்ளி போய் விட்டனர்....

உண்மை நட்புக்கும் ஆதாய நட்பிற்கும் வித்தியாசம் தெரிந்தால் நல்லது...

ரசிகன் என்றுமே ரசிகனாகவே இருக்கிறான்...

ஏனென்றால் ரசனை மட்டுமே அவனிடம் உண்டு...

அதீதமான கற்பனையில் அவன் பிறரை நம்புவதில்லை...

இப்போதும் ரஜினிகாந்த் அவர்களை நல்ல மனிதராகவே பார்க்கிறேன்.

அவரால் ஆதாயம் பெற முடியாமல் போது ரசிகன் அல்ல, அவரை வைத்து இலாபம் பார்க்க நினைத்த கூட்டம்.

அவரை அவர் போக்கில் இயல்பாக இருக்க விடுங்கள்...

ரஜினி இனி நலமுடன் இருப்பார், என்பதை நினைத்து ஓர் ரசிகனாக மகிழ்ச்சி...

தள்ளி ப் போனவர்கள், தள்ளியே போகட்டும்..

மிக்க மகிழ்ச்சி.


விலகிப் போக

அரசியல் வெற்றிடம்

 அரசியல்

தமிழகத்தில்

பல கட்சிகள்

இருக்கிறது...

அதில் பல 

உறுப்பினர்களும்

இருக்கின்றனர்..

அப்படி இருக்கையில்

எங்க இருந்து

வந்தது புதிய சொல்

"அரசியல் வெற்றிடம்"...

எதுவே இல்லாமல்

இருந்தால் மட்டுமே 

அது வெற்றிடம்...

எல்லா தொண்டர்களும்

தலைவராகும்

தகுதி பெற்றவரே...

எனவேதான் இன்னும்

தொண்டனாகவே

இருக்கின்றனர்...

எல்லா கட்சியிலும்

லட்சக்கணக்கில்

கட்சி உறுப்பினர்

இருக்கின்றனர்...

எல்லோரின்

கனவும் 

நாற்காலி மீதே...

தமிழகத்தில் 

இல்லவே இல்லை

அரசியல் வெற்றிடம்...

ஆயிரம் கவலைகள்

செல்ல மகளின் 

அன்பு முத்தங்களில் 

மறந்து தான் போகிறது 

அலுவலகத்தின் 

ஆயிரம் கவலைகள்

பெற்றவர்கள்

 பெற்றவர்கள்...

.

.

தனது ஆசை

குழந்தையை

வாரியணைத்து

முத்தமிட்டு

தலை கோதிவிட்டு

அவர்களின்

சின்னஞ்சிறு

மழலையில் தனது

கவலைகளையும்

போராட்டங்களையும்

மறந்து வாய் நிறைய

புன்னகை புரிகின்றனர்

பெற்றவர்கள்...

ஆன்மீகமா... அரசியலா....

 மனித வாழ்க்கையே சந்தேகமும் சஞ்சலமும் கொண்டது தான்.

ஆண்டியானாலும் அரசனாக இருந்தாலும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதே சராசரி மனித இயல்பு.

ஆன்மீகம் என்பது தன்னை அறிவது அல்லது அது பிறருக்காகவே சேவையால் இறைவனை அடைவது...

அரசியல் என்பது யார் எப்படி இருந்தாலும் எனது கொள்கை என்பதற்காகவே வாழ்வது.

கட்டிய மனைவியும் பிள்ளைகளும் புத்தரின் பின்னால் செல்லவில்லை.

மாறாக அரச போகத்தில் தான் இருந்தனர்.

யாருமே என்னை பேச்சை கேட்கவில்லை என்பவரும், தன்னை யாரும் மதிக்கவில்லை என்பவரும், எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளால் சனிஸ்வர பகவான் மீது பழி போட்ட பின்னரே.

மகான் கூட இறைவனை தேடி அலைந்தான்.அப்படி அடைந்தவர் கண்டு பிடித்த வார்த்தைகள் தான் " கர்மா"...

அரியணையின் உச்சத்தில் இருந்த போதிலும், அரசமரத்தின் அடியில் பிச்சைகாரனாய் இருப்பவரையும் இணைத்து வைத்து வேடிக்கை பார்ப்பததே..கர்மா என்னும் 'விதி'

இதற்கு ஈசனும் உடன்பட்டவனே....

தான் விதித்த சட்டத்தின் படி, அதனை அனுசரித்து தான் வேதனை பட்டதாக மக்களுக்கு உணர்த்தினான்...


அரசியல்வாதியால் தன் நிழலை கூட நம்ப முடியாது.

ஏனென்றால் அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் அரியணை ஆசை உண்டு.

அரியணையில் அமர்ந்து விட துடிப்பவரும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை...

சாணக்கியர் புத்தியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சந்திர குப்த மெளரிய மன்னரும், பிற்காலத்தில் அவரின் ஆலோசனை கேட்க வில்லை என்பது வரலாறு..

இரண்டும் வேறு வேறு பாதைகள்.

ஆன்மீகத்தில் 

மிகவும் கடினம்

 தலைவனோ...

தொண்டனோ....

வியாபாரியோ....

சமூக சேவகனோ....

குழந்தையோ...

வாலிபனோ...

சிறுமியோ....

பெரியவளோ....

யாராக இருந்தாலும்

பெற்றவர்களின் கவலை

ஒன்றே கண்ணா...

நேரத்துக்கு சாப்பிடு...

நேரத்துக்கு தூங்கு....

இதை தாண்டி எந்த

பெற்றவரும் சிந்திப்பது

மிகவும் கடினம்

கடவுளின் அரசியல்

 ஓவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன்னால், தன்னை மெய்வருத்தி கடவுளை பிராத்தனை செய்தாள் கவிதா....

கவிதாவின் பக்தியை மிகவும் பெரிதாக நினைத்த கடவுளுக்கு தீடீரென ஓர் ஆசை உதயமானது.

தன் கவலைகளை மறக்கவ அவள் பிராத்தனை செய்தாலும், அவள் தனக்காக எதுவுமே கேட்கவில்லை...

ஓவ்வொரு நாளும் பிராத்தனை முடிவில் அவள் சொல்லும் வார்த்தைகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்தது..

ஆண்டவனே, சிறுவயதில் இருந்தே அப்பாவின் தூண்டுதலால் தினமும் உன்னை வணங்கினால் மட்டுமே இரவில் சாப்பாடு என்னும் புதிய நடைமுறை இடையே வந்தது..வேறு வழியின்றி நானும் தொடங்கிய வழிபாடு, இன்று நடைமுறை பழக்கமானது.

"உன்னை உண்மையாக பிராத்தனை செய்தால், நீ வருவாய், என்று ஓருவர் சொன்னார்.நீ ஏன் இன்னும் வரவில்லை.ஓருவேளை எனக்குத்தான் ஓழுஙஞ பிராத்தனை செய்ய தெரியவிங போல... ஆனால் பெரிய சாமியார் உன்னே வேண்டிய போது எல்லாம் நீ நேரில் பேசுவதாக சொல்கிறாரே, அது உண்மை தானா????"


இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்காக கட்டாயம், அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவளின் தாய் தந்தை எப்போதாவது பிராத்தனை செய்தாலும் அதில் அவ்வளவு உண்மை இல்லை, ஏதோ கடனுக்கு செய்கிறார்கள்...

சரி நாளைக்கு காலையில் அவளை சந்தித்து, இந்த கேள்விக்கான பதில் சொல்ல வேண்டும் நினைத்து கொண்டார்.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தது..

கடவுளுக்கு எந்த கலர் டிரஸ் போடுவது சந்தேகம் வந்தது...


கதை தொடரும்...


புத்திர பாசம்


வரத்தை 

கொடுத்து விட்டு

மனைவியின்

காலடியில் விழுந்து

புரண்டார் தசரதன்

அரசியல் காரணம் 

புத்திர பாசம்....

சபையின் நடுவே

பாஞ்சாலியின்

சேலை உருவப்பட்டது

பேசாமல் மெளனமாய்

இருந்து விட்ட மன்னன்

திருதராஷ்டிரன் அதுவும்

அரசியல் காரணம்

புத்திர பாசம்...

இன்றும் கூட

தொடருகிறது 

விளையாட்டு 

மாய விளையாட்டு

புத்திர பாசம்....

பேசாமல் இருக்கிறார்கள்

கலியுக பீஷ்மரின்

புத்திர பாசம்

இரவு கொள்ளை

 கணவனும்

மனைவியும்

ஆசையாய்

பேசிக்கொள்ள கூட

நேரமின்றி

பறந்து பறந்து

சம்பாதித்த பணம்

நகையாய் பணமாய்

வீட்டின் பீரோவில்

வைக்கப்பட்டது..

வயதான இரண்டு ஜீவன்

அப்பாவும் அம்மாவும்

முதியோர் இல்லத்தில்...

தன் வீட்டிற்கு எதிரே நின்று

திருடன் 

பத்துநாள் நோட்டமிட்ட 

தகவல் கூட 

போலீஸ் சொல்லித்தான்

தெரிந்து கொண்டாராம்...

கேட்டால் கவனிக்கவில்லை

என பதில் சொல்கிறார்

பல ஆயிரம் சம்பளம்

வாங்கும் அந்த அதிகாரி...

பல வருட உழைப்பு 

கொண்டு சென்றான்

ஓர் நாள் இரவு கொள்ளை




அரியணையின் அழகு

 

தூரத்தில்

இருந்து பார்த்தால்

பஞ்சணை ஓத்த அரியணை

சிம்மாசனம்

அரிமா அமர்ந்த

அதில் அமர்ந்திட

வேண்டித்தான்

புள்ளிமான்களுக்குள்

போட்டி.....

காடும் நாடும்

வேறு வேறு ஆயினும்

சூத்திரம் ஒன்றே....

புள்ளிமான் ஆனாலும்

அரியணை ஏறிய பின்னர்

ஓநாய்களும் நரிகளும் கூட

இடைஞ்சல் ஆயிரம் செய்யும்...

இடைஞ்சலும் இன்னலும்

ஈகை தாண்டிய அதிகாரமும்...

சூழ்ச்சிகள் கண்டு கலங்காத

இரும்பு போன்ற நெஞ்சுரமும்..

சில நேரங்களில் சொந்தங்களை

கூட பகைவராக மாற்றி விடும்

அது பஞ்சணை அல்ல....

எல்லோரின் கண்ணுக்கும்

அழகாய் மிடுக்காய்

காட்சி தரும் - அதில்

அமர்ந்து பார்த்தவனுக்கே

உண்மை புரியும்....

யாருக்கும் தெரியாமல்

அமர்ந்தவரை மாத்திரமே

முள்ளாய் குத்துவதே

அரியணையின் அழகு

வாழ்வின் சாதனை

வாழ்க்கையை 
வாழத்தெரிந்தவன்
அயர்ந்து போவதில்லை..
அயர்ச்சிகளுக்கு தனது 
முயற்சிகளை 
காணிக்கையாக்கி 
காண்கிறான் வாழ்வின் 
சாதனை

யோகி ராம் சுரத் குமார்

 எங்கோ இருந்து கொண்டு, எங்கே எல்லாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ, அங்கே எல்லாம் தன் கருணையை பொழிந்தவர்.

பல லட்சங்கள் கடன் வாங்கி விட்டு, கட்ட முடியாமல் தவித்தவரும் கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதி.

அன்று பணத்தை தேடி ஓடியவர், இன்று பரதேசிகளையும் சன்னியாசியாக நாடோடி வாழ்க்கை வாழும் சிவனடியார்களை தேடி அலைகிறார்..

ஆம், யோகி ராம் சூரத் குமார் தனது பக்தரின் மனதில் ஏற்படுத்திய சலனம், மிகவும் ஆழமானது.ஆடம்பரமும் எகத்தாளமும், ஆரவாரமும் கடந்து மனதில் நிலை கொண்டது, அவரின் அமைதி தவழும் முகம்.

இன்றும் கூட அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் ஆயிரம், இதை சொன்னால் பைத்தியம் என்பார்கள்.

பல வருடங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்.இவரை தரிசித்து விட்டு போன பிறகு, அவர்களுக்கு பிறந்தது குழந்தைகள் இரண்டு ( இரட்டை பிறவிகள்).

சிலருக்கு கல்யாணம் ஆனதாம், சிலருக்கு நோயின் தீவிரம் குறைந்து நலம் பெற்றனர்.

தொழில் நொடிப்பு சரியாகிப் போனதால் வருடம் ஓர் முறை ஆசிரமம் வரும் அன்பர் அவர்.

ஓவ்வொரு கதைகள் சொல்லும் பக்தர்கள்.

ஆயினும் எதுவும் பேசாமல், தன் குருவின் புகழை கூட பாடாமல், மாதம் ஓர் முறை திருவண்ணாமலை வந்து மலை சுற்றி விட்டு, அவரின் சிலை எதிராக சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்தார் ஓருவர்.

அப்போது அவரின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம், கண்களில் தான் எத்தனை மினுமினுப்பு.

எதுவுமே என் செயல் இல்லை, அனைத்தும் நீயே என்னும் தைரியம் அவரிடம்.

குருவே உன்னிடம் விதவிதமான கோரிக்கை வைக்கும் மனிதர் போல் அல்லாமல், உன் கண்ணீர் மல்க வேண்டி வணங்குண்கிறேன்.வரம் கொடு.....

சரியாக பேசக்கூட தெரியாமல் தவித்தவன் நான்.ஏதோ ஒருவன் தியானம் கற்றுக் கொடுத்த காரணத்தால், அபரிமிதமான ஆர்வக்கோளாறில் பல கோவில்களில்  தியானம் செய்வதாக நினைத்தே அமர்ந்து கொண்டு சிறு பிள்ளை போல் அலைந்தவனை கை பிடித்து தூங்கிய குருவே.

உன்னை இன்று போல் என்றும் தொழும் பாக்கியம் கொடு.இதை விட உலகில் பெரிய இன்பம் ஏதும் உண்டோ...

அதிசயங்களை நொடியில் நிகழ்த்தி காட்டிய நீ, உன்னை பிச்சைக்காரன் என்று கேலி செய்து கொண்டாய்... 

நீ என்னுள் ஏற்படுத்திய ஓர் சிறு அதிர்வே, எனது எழுத்துக்கள்...

இன்றே உனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.தனது 60-வது வயதில்.12 வயதேயான என் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்.. திருவண்ணாமலையில் ஓர் சாமியார் இருக்காரூ அவர் கையில் கொட்டங்குச்சியும் விசிறியும் தான் இருக்கும்..உனக்கோ படிப்பு சுட்டுப் போட்டாலும் மண்டையில் ஏறவே மாட்டேங்குது.

நீ பத்தாம் கிளாஸ் பாஸானா கூட எனக்கு நீ ஏதோ கலெக்டர் ஆன சந்தோஷம் கிடைக்கும் தெரியுமா.. அந்த சாமியாரை பத்தி நீ ஓர் நாள் தெரிஞ்சுக்குவே..

அவர் யாரிடமும் எதுவுமே வாங்க மாட்டார்..

தமிழ் அவ்வளவா பேச தெரியாது.ஹிந்தி இங்கிலிஷ் தான் புரியும் எப்படித்தான் திருவண்ணாமலை வந்தாரோ எனக்கு தெரியாது 

அவரிடம் போயி யாராவது ஏதாவது கேட்டா.. My father will bless you அப்படின்னு வானத்தை கைகாட்டி சொல்லுவாராம்..

ஓர் வேளை நீ நல்ல படியாக படிச்சு காலேஜ் போகும் போது நான் உயிரோடு இல்லாம போனா..இந்த வசனத்தை மட்டும் நினைவு வைச்சுக்கோ..

My father is blessing you from heaven 

ஆணவம் தலைக்கு ஏறும் முன்னரே உனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்...குருவே உனது அருளை விட பெரிய இன்பமும் சுகமும் உலகில் இல்லை.கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்து வைத்து விட்டு கோவில் கோவிலா சென்று நிம்மதி தேடுவதை விட உனது காலடியில் இருப்பதே நலம்..

உன்னை அதிகமாக நேசிப்பவரை நீ தள்ளி வைத்து அழகு பார்ப்பாய் என்பதையும்..உனது நாமத்தை சொல்லும் இடத்தில் நீ இருப்பதாகவும் சொல்லும் வார்த்தைகளை முழுவதுமாக நம்புகிறேன்.


பேச தெரியாதவன் என்று பகடி செய்து மனிதர்கள், சிரித்த போது ஓர் காவி வேட்டி கட்டியவர் சொல்லி விட்டு போனார்.தம்பி உனக்கு எழுத்து வசப்படுது நீ அதில் முயற்சி செய் என்று.


ஏதோ நேரம் போகாமல் என்னை பாதித்த விஷயங்களை சிறு சிறு துண்டுகளாக எழுதி வைப்பதை தவிர் எனக்கு எதுவும் பெரிதாக அறிவில்லையே

உன்னை இன்றே சரணடைகிறேன்.. ஓர் வேளை எனது எழுத்துக்கள் வருங்காலத்தில் புகழ்பெற்றாலும்.அது உனது செயலே அன்றி எனது திறமை கிடையாது.

வானில் பறக்கும் பட்டத்தை இயக்கும் கயிறு நீயே யோகி ராம் சுரத் குமார்

.. யோகி ராம் சுரத் குமார்..யோகி ராம் சுரத் குமார்...ஜெய குரு ராயா....

குருவின் அருளே என் வாழ்வு....


ஆன்மீக அரசியல்

அரசியலுக்கு

வந்த பிறகு

நிம்மதி தேடுவதும்....

கடலில் விழுந்த

கடுகு தேடுவதும்........





ஓர் முழம்

 

சிலருக்குச

சந்தோஷம்..

சிலருக்கு

சங்கோஷம்...

சிலருக்கு

சந்தேகம்...

சிலருக்கு

எகத்தாளம்...

சிலருக்கு

வெட்டிப் பேச்சு.....

சாலையோரத்தில்

கீரை விற்கும் பாட்டியிடம்

மைக் நீட்டி 

ஆச்சி ஆட்சி மாற்றம்

சாத்தியமா உங்கள்

கருத்தை சொல்லுங்க....

கூடி நின்ற கூட்டமெல்லாம்

அவளின் பதிலுக்கு

ஆவலாக எதிர்பார்த்து

வேடிக்கை பார்த்தது....

யாரு வந்தாலும்... 

வார்த்தைகள்

தட்டு தடுமாறியது

"மருமக என்னை வீட்டில்

சேர்த்துக்மாட்டா"....

கிழிந்த ரேஷன் கடை

புடவையில் மூக்கு

செருமியது....

யாரு வந்தாலும் ....‌

ஏம்பா வாங்கிறயா...

பத்து ரூபா ஓர் முழம்....



வரிச்சலுகை

 நண்பர்களே...

சில நிமிடங்களுக்கு யோசித்து பாருங்கள்...

டிரைவர் வேலைக்கு வருபவர்கள் யாரும் கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி விட்டு வருவதில்லை...

பலர் தங்களின் குடும்பசூழல் நிலை மற்றும் தவிர்க்க இயலாத சில பொருளாதார நெருக்கடியின் 

காரணமாகவே டிரைவிங் வேலைக்கு வருகின்றனர்... அப்படி வருபவர்கள் அனைவரும் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். பல ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவரும் கூட மலிவு கார் ஆட்டோவில் செல்ல செல்ல ஆசைப்படுகின்றனர்......அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் அதனால்

குறைந்தபட்ச வாடகைக்கு வண்டி ஓட்டுவதால் ஏற்பட போகும் பொருளாதார சிக்கலை உணர்ந்து பாருங்கள்...

5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள கடைகளுக்கு வரிச்சலுகை கொடுத்தது போல....

வருடத்திற்கு 1000 km குறைவாக வண்டி ஒட்டியிருந்தால் அதில் சலுகை கொடுங்கள்....

ஆட்டோ, கார், வேன் மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஓவ்வொரு வருடமும் FC என்று தன் வருமானத்தில் பெரும்பகுதி செலவு செய்கின்றனர்... அவர்களின் கஷ்டத்தை உணருங்கள்...

பல ஆயிரம் சம்பளம் எதிர்பார்க்கும் நாம் வண்டி ஓட்டுபவருக்கு சில ஆயிரம் பயணக்கூலி கொடுப்பதை குறைக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்...


சீக்கிரம் நல்ல சேதி சொல்லுறேன்

அப்பா அம்மாவிடம்

கேட்டார் இன்னுமா

சமையல் ஆகவில்லை...

இந்தா சீக்கிரமே ஆகிவிடும்....

அம்மாவின் பதிலில் சுவாரசியமில்லை..

எப்போ தம்பி வேலைக்கு 

போக போறீங்க... பக்கத்து 

வீட்டுக்காரரின் அக்கறை கேள்வி....

அவன் பேங்க் பரீட்சை எழுதி இருக்கான்

முடிவு தெரிந்தவுடன் சீக்கிரம்

வேலைக்கு போய்விடுவான்....

அப்பாவின் பதில் தயக்கத்துடன்...

என்னம்மா கல்யாணமாகி ஐந்து வருடமாச்சு ஏதும் விஷயம் உண்டா..க

கைக்குழந்தையுடன் கேலிகலந்ந 

நையாண்டியில் பெரியம்மாவின்

கடைக்குட்டி மகளுக்கு ..........

அசட்டு புன்னகையில் அக்கா சொன்னாள்..... 

எல்லாம் விதிப்படி தானே

நடக்கும்.......

இத்தனையும் கேட்டு பழகிய

காரணத்தால். சீக்கிரம் சொல்வேன்...

என்று மலுப்பலாக பேசும் நண்பனின்

பதில் எனக்கு புதிதாக 

தோன்றவில்லை......

இது எதிர்பார்த்த ஒன்றுதான்...

ஆட்டுவிப்பவனுக்கு தானே

அனைத்தும் தெரியும்...

சூழலும் பம்பரம் தான் மனித வாழ்க்கை...

சுற்றும் வரை தான் அதற்கு மரியாதை...

புரிந்து கொண்டதால் அமைதியாக...

யோசித்து பார்க்கிறேன்.... அனைவருக்கும் அவசரம்.... அவர்களின்

மனதில் விதைக்கிறேன் வார்த்தை...

சீக்கிரம் நல்ல சேதி சொல்லுறேன்.....


கார்த்திகை தீபம்

 எத்தனை இடைஞ்சல்கள், கவலைகள் அத்தனையும் மறக்கவும், தன்னை வெறுத்து ஒதுக்கிய உறவுகளையும் பண்புகளையும் யாரிடமும் குறை சொல்ல நினையாமல்.

மனதின் சஞ்சலத்தை போக்க வேண்டி, தேடி அலைந்தேன் "குரு"...

ஏன்ப்பா, இவ்வளவு கஷ்டத்திலும் உன்னால் சிரிக்க முடியுது.. கேட்கும் மனிதருக்கு எல்லாம் புன்னகை பதிலாக கொடுத்து விட்டு.

மனதிற்குள் மருகினேன், தொல்லை தரும் வாழ்க்கை வேண்டாம்.மனிதப்பிறவியில் தான் வார்த்தையில் சொல்ல முடியா, சிக்கல்கள் ஏராளம்.

திக்கு தெரியாமல் அலைந்தவனுக்கு குருவாய் வந்தான்/ள்..(அண்ணாமலை, உண்ணாமுலை)..

ஓர் முறை திருவண்ணாமலை போய் விட்டு வா.நல்லதே நடக்கும்...

அடிக்கடி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்"நல்லதே நடக்க வேண்டி, திருவண்ணாமலை வந்தேன்..வந்த பின்னர் தான் தெரிகிறது.என்னைவிட அதிகம் பேர் இருக்கிறார்கள்...

பணத்திற்காக, பதவிக்காக, மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, பங்குதாரர்களால் ஏமாற்றப்பட்ட பின்பும்.. "அவன் நல்லவன் தான், ஏன் இப்படி செய்தார்.அது தான் தெரியணும்"...

இன்னும் பல தேடல்கள், இந்த மலையை சுற்றி அலைபவர்கள் ஏராளம்...

எப்படியாவது ஓர் நல்ல நிலைமைக்கு வர வேண்டி, துடிப்பவர்கள் ஆயிரம்...

அவனோ கண்களை மூடி தியானத்தில் இருக்கிறான்...

உலகத்தை படைத்தவனே, தன் பொறுப்புக்களை மனைவியின் வசம் கொடுத்து விட்ட பின்னர்..

அவளும் என்ன சளைத்தவளா??, தன் கணவனுக்காக அவனருகே அமர்ந்து விட்டவள்.

 தன் கணவனை தவிர உலகில் உயர்ந்தது ஏதுமில்லை என்பதை தனது செயல்களால் காட்டுபவள்....

எல்லாம் எனக்கு தெரியும், என்ற இறுமாப்பு உடைந்து விட்டது.

ரமணரும், சேஷாத்திரி மும், விசிறி சாமியாரும் பல பல ஜாம்பவான்கள் சுற்றிய மலையை நானும் சுற்றுகிறேன்...

அவர்கள் எல்லையில்லா இறைவனை தேடினார்கள், நானோ அற்பன் மனிதரில் மானுடம் தேடுகிறேன்..சொந்த பந்தகளுக்காக, நட்புக்காக, என்னையே நம்பி, எனது கம்பெனி தவிர வேறு ஏதும் தெரியாத எனது தொழிலாளர்களுக்குக்காக... மனமுருகி வேண்டுகிறேன்.... கம்பெனியின் பொருளாதாரம் மீள வேண்டும்...

வியாபாரத்தின் மீது கொண்ட அதீத காதலால், இன்று வங்கி மேலாளர்கள் தினமும் அழைத்து பேசும் போது.. மனம் பதறுகிறது...

ஆசையே துன்பத்திற்கு காரணம்...இனி மிகவும் கவனமாக நடக்க வேண்டும்..

என்னையே நம்பி வாழும் சில தொழிலாளர் குடும்பங்கள்.. என் பசியை விட, அவர்களின் எதிர்காலம் பற்றி பதறுகிறது......

அண்ணாமலையானே, உன்னை நம்பி இத்தனை பேர்.. அவர்களின் கோரிக்கை நான் அறியேன்...

அடுத்த முறை வரும் போது, பல கோடி லாபம் கிடைத்தால் கூட, இன்று வாழும் எளிமையான வாழ்க்கை வாழவே நினைக்கிறேன்... ஆடம்பரம் வாழ்க்கை வேண்டவே வேண்டாம்...


ஏதோ தேடி வந்தவனுக்கு புரியாத விஷயம் பல உண்டு என்று உணர வைத்தான், இந்த ..... அத்தனையும்  உன் செயலே...

கொக்கு என்று நினைத்தாயோ

 கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

.

கானகத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோகப் பயிற்சிகளில் கொங்கண சித்தர் ஈடுபட்டபோது மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. அது 

கொங்கண சித்தர் மீது படவே, அவர் கோபத்தில் மரத்தில் இருந்த கொக்கை முறைத்துப் பார்க்க அந்தப் பார்வையின் வெம்மை தாளாமல் கொக்கு பொசுங்கிச் சாம்பலானது.

இறைவனின் ஆசை தனது அடியாரை அடிக்கடி பட்டை தீட்டுவது.. ஆம் தன் பக்தரின் ஆணவம் தலை தூக்கும் போது எல்லாம் அவரை விட சிறந்தவரை காட்டுவது அவன் செயல்..


ஓர் நாள்  பிச்சைக்காக கிராமத்திற்கு சென்று ஓர்  வீட்டில் பிச்சை கேட்டார். 


அது மதியவேளை கடையில் இருந்து வந்த கணவனுக்கு உணவு பரிமாறிக் கொள்ளும் தருணத்தில்.. வீட்டு வாசலில் யாசகம் கேட்டவரை கவனிக்கவில்லை...

.

வீட்டு திண்ணையில் அமர்ந்தார்...

.

.தனது தவ வலிமையை காட்டினால் தான் மக்கள் பயப்படுவார்கள்...


சற்று நேரம் கழித்து வந்து உணவிட்டாள்...

அவளை கோபமாக பார்த்தார், கொங்கணவர்...

அவளோ சிரித்து கொண்டே சொன்னாள்... நான் கொக்கு என்று நினைத்தாயோ...கொங்கணவா...

 இவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்.. குழப்பத்தில் ஆழ்ந்தார்.. அம்மா எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது... பதில் சொல்ல முடியுமா கேட்டார்...

.

ஜயா,  எனக்கு சில வேலை இருக்கு..உங்களை மாதிரி நான் ஒண்ணும் வேலை வெட்டி இல்லாமல் இல்லை.என்றாள்...

.

அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது...

.

உங்கள் குழப்பத்தை தீர்க்க ஒருவரால் தான் முடியும் என்று ஓர் ஊரில் வாழும் ஒருவன் பெயரை சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றாள்....

எங்கோ கானகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்திருக்கிறாளே என்று கொங்கணர் அதிர்ச்சியுற்றதோடு அந்தப்பெண்ணை வணங்கினார். .

ஆண்டவா, என் ஆணவம் அழிந்தது.ஆயினும் மனதில் உள்ள கேள்விக்கு பதில் வேணுமே....

.

.

மனிதனின் மனம் எதையும் எப்போதும் தவறாகக் சிந்தித்து குழப்பம் கொள்ளும்...இந்த அம்மா, ஏன் அவன் பெயரை சொல்கிறார்..


ஓரு வேளை இவரது சொந்தமா? நட்பா?

யோசித்தவாறே அந்த ஊரை சென்று அடைந்தார்....

.

. அந்த மனிதரின் பெயரை சொல்லி கேட்டார் சிலர் இவரை ஏறஇறங்க பார்த்தனர்...

இந்த சாமியாருக்கும் கசாப்புக்காரனுக்கும் என்ன சம்பந்தம்....

.

சிலர் கேள்வியாக கேட்டு விட்டனர்... அப்போது நினைத்தார் ஓரு வேளை இப்படித்தானே அந்த அம்மாவும் இருப்பாங்க...

.

அவங்களை தவறாக நினைத்தோம்.. இப்போது இவங்க என்னை தவறாக நினைக்கிறார்கள்... இறைவனின் கணக்கு சரியாக அமைகிறது..

.

ஓரு வழியாக அவனின் இடத்தை அடைந்தார்...

அவனோ, இவரை சட்டை செய்யவில்லை...

.

.

ஏதோ சொல்ல வந்தவரை, பெயர் சொல்லி அழைத்தான்..

.

என் வேலையை முடித்து விட்டு தான் பேச முடியும்..அதுவரை இந்த கட்டையில் அமருங்கள்..கறி வெட்டும் பலகையை தூக்கி கொடுத்தான்..

.

.

அவருக்கோ சங்கடமாக இருந்தது.. குளித்து சிவ சின்னங்கள் அணிந்து சுத்தமான ஆடை உடுத்தி இருக்கும் நான் எப்படி.. இங்கே அமர முடியும்.

.

சுற்றிலும் பார்த்தால் இறைச்சி வெட்டிய கழிவுகள்.. அதற்காக சண்டை போடும் தெரு நாய்கள்... ஒருவேளை நம்மை கடித்து விட்டால்... அசுத்தமான இடத்தில் எப்படி அமருவது எண்ணியபடி இருந்தவரை....நிலைகுலைய வைத்தது.. அவனின் அடுத்த பதில்...

.

.

.

கொங்கணரே, உமது சிந்தனையை விட, இந்த இடம் தூய்மையானது தான்..

.

.

வேறு வழியின்றி அங்கே அமர்ந்தார்.இவன் சொல்லுவது எத்தனை சரியான பேச்சு...

உதட்டிலும் உடலிலும் இறைவனின் அடையாளங்கள், ஆனால் சிந்தனையோ மிகவும் தவறாக...

.

.

தனது வேலையை முடித்து வந்தவன்.. அந்த அம்மாவே பதில் சொல்லி இருக்கலாம்.. எதுக்காக என்னிடம் அனுப்பினாங்களோ....

.

.

சில வார்த்தைகள் சொன்னான்.அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

.

.

ஐயா, நானே குழப்பத்தில் உள்ளேன். உங்களின் பேச்சு எனக்கு ஆச்சரியமாக உள்ளது.. நான் இல்லறம் துறந்து பல வருடங்களுக்கு தவம் செய்தேன்.. அப்போது ஓர் கொக்கு தலையில் எச்சமிட்டது.. கோபமாக பார்த்தவுடன் அது எறிந்து போனது....

.

.

உங்களை பார்த்தால் பெரிய தவசீலர் போல இல்லை.ஆனால் எப்படி இந்த சித்துக்கள் உங்களுக்கு வந்தது...

.

.

அவன் அமைதியாக சிரித்தான்...

காடுகளில் சென்று தவமிருப்பது...கடவுளை காண அல்ல..தன்னை அறியவே.... ஏனென்றால் தன்னையறிவதே சிறந்தது...

தியானம், யோகம், மூச்சு பயிற்சி என்பது போன்ற பல வழிகள் சித்த சுத்தி ஏற்படுத்தி தன்னை அறிய ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் மட்டுமே....

.

இவற்றில் ஒன்று கூட தெரியாமல், தனது கடமையை செய்பவருக்கும் சித்த சுத்தி ஏற்படும்..

.

.

என்றுமே குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டு.. ஆயினும் தனக்கு வழிகாட்டிய மனிதரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது நமது குரு பரம்பரை...

குரு என்பவர் சிஷ்யனின் பக்குவத்தை பார்ப்பவர்... அவனின் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்ல...

.

மனிதருக்கு சில கடமைகள் உண்டு.அதை சரியாக செய்பவரை நாளும் கோளும் என்று இடைஞ்சல் செய்யாது...

.

.

அவற்றில் சில தனது தாய் தந்தை பேணுவது.

கணவனுக்கு உதவியாக இல்லற தர்மத்தின் படி வாழ்வது...

மனைவிக்கு உண்மையாக நடப்பது...

குழந்தைகளின் தேவைக்கு தனது தேவைகளை தியாகம் செய்வது...

விருந்தினரை பேணுவது...

எனவேதான் துறவறத்தை விட இல்லறம் சிறந்தது...என்றான்....

.

.

படவிமர்சனம்


படம் வெளியாகும்
முன்னர் அப்படி
இப்படி என்றனர்..
வெளிவந்தவுடன்
உலகிலேயே
சிறந்த படம் இது
என்றே கோஷமிடுவர்....
முதல் ஷோ வசூல்
பல கோடி என்பர்
சில வாரத்தில்
முதலுக்கு மோசமில்லை
என்றே கதையெழுதுவர்
அடுத்த சில மாதங்களில்
படமெடுத்து கற்றுக்கொண்டேன்
என்ற விரக்தியாக
பேசி காலம் கடத்துவர்
ஆறுமாதம் கழித்து
அந்த படத்தால்
எனக்கு பல கோடி
நஷ்டமென்பார்....
நஷ்டமென்றால்
எதற்காக படத்தொழிலில்
மூதலீடு செய்கிறார்
என்று யாரும் அவரிடம்
கேட்பதில்லை மக்களுக்கு
நன்றாகவே தெரியும்...
திரையின் நடிப்பை
மட்டுமே ரசிக்கும்
சில ரசிகர்கள் எமது
தமிழ் மக்கள்

உன்னத மகிழ்ச்சி

வேண்டாம் என்றே

விலகி ஓடுபவனை

பிடித்து மேடையில்

அமர வைத்து

தலையில் கிரீடம்

சூட்டி மகிழ்ந்துவிட 

உங்களுக்கு ஏன் இந்த

அவசரம்... மலர் மாலை

வேண்டி வரிசையில்

பல பேர்.... காத்திருக்க....

என்னை மேடைக்கு

அழைப்பது ஏன்...

நீங்கள் காட்டும்

பாதையை விட...

நான் நடைபழகிய

பாதை போதும்...

அதில் முட்களும் இல்லை...

மலர்களும் இல்லை.. ஆனால்

அதில் தான் எத்தனை எத்தனையோ

ஆனந்தம்... செயற்கை வேண்டாம்...

இயற்கை போதும் அதுவே என்

உன்னத மகிழ்ச்சி


பாசக்கயிறு

 பாசக்கயிறு...

.

.


அரசு இயல்

துறந்த அன்று

கிடைத்த பெயர்

புத்தர்....இன்றோ

இமயமலையின்

சாரலையும் பனிகளையும்

ரசிக்க முடியாமல்

பணிசுமை கொடுத்து

கூண்டில் அடைக்க நினைக்கும்

முதன்முறையாக 

பார்வையில் படும்

யார் யாரோ புதிய மனிதர்கள்...

உடன் இருப்பவர்களையும்

சகிக்க முடியாமல்

தவிக்கும் தவிப்பில்

மீண்டும் சென்று

விட துடிக்கிறேன்

அந்த கங்கைகரை

நதியோரம் அமைதியான

ஆள்அரவரமற்ற

ஏகாந்தம் தேடி...

பதவியும் பட்டமும்

சுகமல்ல...

தலைவனாக என்று

சொல்லி என்னை நெறிக்க

துடிக்கின்ற

பாசக்கயிறு...

ஆனந்தம் ஆன்மீகம்...

அரசியல் ஆர்பாட்டம்...

திசை நோக்கியே

 கடல் அளவுபாசத்தை 

வைத்து கொண்டு

பணத்தை தேடுகிறான்...

பணத்தை மூட்டையாக

வைத்து இருப்பவன்

உண்மையான உறவுகளை

தேடுகிறான்... இரண்டு

உலகில் இருந்தால்

ஏனோ வெவ்வேறு

திசை நோக்கியே....


மனித இயல்பு


கஷ்டமான 

நேரத்தில் 

சந்தோஷத்தை 

நினைப்பது 

மனித இயல்பு..

மரகதப்புறா

 தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று இந்த மரகதப்புறா..

ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டை மீட்டு எடுக்கும் இளைய சமுதாய மக்களே.இந்த மரகதப்புறா என்னும் வகை புறா பாதுகாக்க முயற்சி செய்தால் மிக்க மகிழ்ச்சி....

ஏனென்றால் இளைய தலைமுறை ஏற்று செய்யும் காரியங்கள் தனது அடுத்த தலைமுறைக்கு மிகவும் பயன்படும்..

கடல் ஏரிப்பு

பனைமரங்களை கரை ஓரங்களில் நடுவது மட்டுமே நல்ல தீர்வு..

பனை சல்லிவேர் வகை சார்ந்த மரம். எனவே ஆயிரக்கணக்கில் பனைமரங்களை நடுவதே சாலங் சிறந்தது.. மேலும் அவை புயல் காற்றின் வேகத்தை குறைக்க உதவும்.இதனால் புயலால் ஊருக்குள் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்

கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் நடுவது தான் நல்ல தீர்வு. உயர்ந்த பனைமரங்கள் வேகத்தடை போல் செயல்பட்டு காற்றின் வேகத்தை குறைக்கும்...

கோவிலும் அது சார்ந்த பொருளாதாரமும்

 கிராமங்களில் மிகப்பெரிய சொத்து என்பது கோவில்களே.

கோவிலில் இறைவனின் பெயரால் மாதம் ஓர் முறை அபிஷேகம் ஆராதனை நிகழ்கிறது.

ஓர் கிராமத்தில் சிவன் கோவில் இருப்பதால் மாதமிருமுறை பிரதோஷம் நடைபெறுகிறது.

அப்போது நந்திக்கு அபிஷேக பொருட்கள் என்று அரிசிமாவு, மஞ்சள், திரவிய பொடிகளும் மற்றும் மலர் மாலைகளும் சூடம் பத்தி என்ற பொருட்களும் வியாபாரம் செய்யப்படுகிறது.

பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத விஷேச நிகழ்கிறது.

இது தவிர வெளியூர் மக்கள் அந்த ஊருக்கு வந்து செல்வதால் பொருளாதார சூழ்ச்சி நடைபெறுகிறது.

அதாவது பணத்தை செலவழிப்பதால் உண்டாகும் சூழற்சி.

பகுத்தறிவு என்னும் பெயரால் கோவில் மீது ஏனோ வெறுப்பு உண்டியல் உணர்வைமீது சிலர் ஏற்படுத்த முயன்றனர்.ஆயினும் பல கோவில்கள் கட்டப்பட்டன.இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

இந்து மதத்தின் ஓவ்வொரு நிகழ்வும் அறிவியலோடு சேர்ந்த ஆன்மீகம். சாதாரண மக்களிடம் பிள்ளையாருக்கு உக்கி போட்டால் நல்லது தருவார் என்று தான் பொதுவாக சொல்ல முடியும்.

இப்படி செய்வதால் உங்களின் மூளை நரம்புகள் வலுப்பெறும், மூளை சார்ந்த நோய் வராது, தேவையற்ற படபடப்பு குறையும் என்று எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.

ஏனென்றால் இந்து மதத்தின் ஓவ்வொரு நடைமுறைக்கு பின்னாலும் பல அறிவியல் மூடிச்சுக்கள் உண்டு.

அரசமர காற்றும் வாழையின் பலனும் வார்த்தைகளில் சொல்வதானால் பலருக்கும் எரிச்சல் தான் வரும்.

எனவே தான் வெள்ளி கிழமை துர்க்கை, சனிக்கிழமை ஈஸ்வரன், செவ்வாய் கிழமை முருகன், சதுர்த்தி விநாயகர் என்று வகுத்து வைத்தனர்.

வருடத்திற்கு ஓர் முறை தேர் திருவிழா என்ற பெயரிலும் மாபெரும் விழா கோலம் கண்டு ஊரில் வியாபாரம் செழிக்கிறது...

கோவிலுக்கு 



நவகைலாயம்


வரிசை                ஊர் பெயர்                       தெய்வம் பெயர்                    கிரக தத்துவம்


1                            பாபநாசம்                         பாபநாசநாதர்                         சூரியன்


2                            சேரன்மாதேவி            கைலாசநாதர்                        சந்திரன்


3                            கோடகநல்லூர்           கைலாசநாதர்                       செவ்வாய்.


4                           குன்னத்தூர்                    கோத பரமேசுவரர்             இராகு


5                           முறப்பநாடு                    கைலாசநாதர்                       குரு


6                           திருவைகுண்டம்          கைலாசநாதர்                      சனி


7                           தென்திருப்பேரை           கைலாசநாதர்                    புதன்


8                           ராஜபதி                                கைலாசநாதர்                   கேது


9                           சேர்ந்த பூமங்கலம்            கைலாசநாதர்                  சுக்கிரன்



எங்கள் தேனாலிராமன் வலைப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி. எங்கள் தேனாலிராமன் வலைப்பதிவில் கவிதை கதைகள் போன்ற பிற தலைப்புகளைப் படிக்கவும்



தேடல்

சிலருக்கு

பணத்தின் தேடல்...

சிலருக்கு

பதவி தேடல்....

சிலருக்கு

பாசத்தின் தேடல்...

சிலருக்கு

பசியின் விளைவால் தேடல்....

சிலருக்கு

ஆரோக்கிய தேடல்...

சிலருக்கு

ஆன்மிக தேடல்....

சிலருக்கு உண்மையான

உறவினர்களின் தேடல்....

சிலருக்கு

நட்பின் தேடல்....

சிலருக்கு

சொத்துக்களின் மீது தேடல்.....

சிலருக்கு 

சொந்த தேடல்....

சிலருக்கு

சொந்தங்களே தேடல்....

தேடல் என்னும் தேடலே

இன்றி பலர் சுயதேவைக்கு

இயந்திரமாய் வாழ்வது 

கண்டு சிலருக்கு

மனிதனுக்குள் புதைந்து போன

மனிதாபிமானத்தின் தேடல்...



உலகில் உண்டு

 உலகில் உண்டு..




தவறே

செய்யாத

மனிதன்

உலகில் இல்லை...

ஆனால்

செய்த தவறை

மறைக்காமல்

வாழும்

தைரியம் 

ஓரு சிலருக்ககே

உலகில் உண்டு

கவலை

பிள்ளைகளை

பற்றி எப்போதும்

பெற்றவருக்கு கவலை...

பெற்றவரை நினைத்து

பிள்ளைகளுக்கு கவலை...

அனைவருக்கும் மீண்டும்

குழந்தையாய் மாறி

குதூகலிக்க ஆசை... 

ஆனாலும் யதார்த்தம்

ஆசைப்பட கூட 

நேரமின்றி இயந்திரத்துடன்

இயந்திர மாய் போட்டி

போட்டு மறந்து போகிறது

வெளியே சொன்ன

முடியாத பலரின் கவலை...

பணம்

 யாரிடமும்

கோபமாக

பேசிவீடாதீர்கள்...

உறவுகள் முறிந்து விடும்..

இறைவன் படைத்த எல்லா

உயிரிகளுக்கும் சுதந்திரமாக

கோபப்பட உரிமையுண்டு...

மனிதன் மாத்திரமே அதில்

விதிவிலக்கு ஏனென்றால்

மனிதனிடம் மட்டும் தான்

இருக்கிறது அவன் படைத்த

பணம்

வெற்றி

 ஒருவனே 

பத்து தோசை

சாப்பிடும் போட்டியை

மனிதன் நடத்துகிறான்..

இறைவனோ பத்து

பேருக்கு பகிர்ந்து

உண்ணச் சொல்கிறான்

இருவருக்குமான

போட்டியில் யாருக்கு

வெற்றி...

ஆசை

சினிமா ஆசை
அரசியல் ஆசை
வியாபார ஆசை
கல்யாண ஆசை
குழந்தை ஆசை
குழந்தையோடு
குழந்தையாய் 
மாறிவிட ஆசை
சொத்துக்கு ஆசை
பதவிக்கு ஆசை
அனைத்தும் கிடைத்த
பிறகு நிம்மதியாக
வாழ ஆசை ஏனோ
ஆசை துறக்க நினைத்த
ஆசை மட்டும்
ஆசையாகவே நிற்கிறது

தலைவன்

 

அன்பான

அமைதியான

ஆரவாரமற்ற

சந்தோஷமான 

வாழ்க்கையில்

சலிப்பு ஏற்பட்டு

ஆர்பாட்டமான 

கூச்சல் குழப்பம்

நிறைந்த பாதையில்

நடைபயில முயலும்

எனது அன்பு நண்பன்...

யார் சொன்னாலும்

கேட்க போவதில்லை..

ஏனென்றால் ஓ

ஆர்பாட்டங்களை

உண்மையென்று நம்பி

பாதி தூரம் சென்ற

பின்னரே புலப்பட்டும்

ஒன்றை நாற்காலியை

நோக்கி லட்சம் பேர்

பயணம் - உணர்ச்சியின்

வேகத்தை ஆதாயமாக்கும்

வியாபார உலகம்...

உணர்ந்தவன் மட்டுமே

தப்பி பிழைக்கிறான்

தலைவன்.

கதை களம்


நாளை என்ன

நடக்கும் - எப்படி

நடக்கும் எதுவுமே

தெரியாத எதிர்காலத்தை

பற்றி அடிக்கடி

கற்பனை செய்வதே

மனித மனதிற்கு

கிடைக்கும் மிகப்பெரிய

கற்பனையின்

கதை களம்


சிஸ்டம் சரியில்லை

 ரஜினி என்பவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்னும் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுதுவதால் பத்திரிக்கைகள் விற்பனை சற்று அதிகமாகவே நடைபெறலாம். ஆனால் ஓர் முறை சிந்தியுங்கள், எதற்காக தேவையற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன.

ரஜினியின் படங்களை இன்றும் ஆவலுடன் பார்க்கும் ஓர் சராசரி மனிதரில் நானும் ஒருவன்.

எந்தவொரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட நபர்கள், சொல்லாமல் உடன் இருப்பவரின் யூகங்களிலும், ஊடகங்களின் அடிப்படையில் பேசுவது  நேரத்தை வீணாக்கும் செயல்.

சிஸ்டம் சரியில்லை என்னும் வசனம், பல வகை மீம்ஸ்களில் வந்து விட்டது. இந்த கட்டுரையை முழுவதும் படித்து விட்டு ஓர் முடிவுக்கு வாருங்கள்..

பிறகு சொல்லுங்கள், எந்த சிஸ்டம் சரியில்லை என்று.

நேர்மையான வழியில் இன்றும் வாழும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். தான் வாங்கும் சம்பளத்தை தவிர லஞ்சம் பெறாத பல நல்ல அரசு அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள்...

அரசு மருத்துவமனைக்கு சென்ற போது நான் கண்ட சில காட்சிகள், அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்ற சிந்தனையை அப்படியே மாற்றித்தான் விட்டது.

மகப்பேறு பகுதியில் ஓர் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவருக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், அவர் சில ரூபாய்க்கு இனிப்பு ஸ்வீட்கள் வாங்கி, தன் மனதின் சந்தோஷத்தை அங்கே எல்லோருக்கும் பரப்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவரின் அம்மா  சொன்னார். டேய் ரமேசு அந்த நர்ஸ்க்கு 500 ரூபாய் கொடுடா என்றார்.

ரமேஷ் என்பவரோ செய்வதறியாது தவித்தார்.. அந்த பெண்மணியின் அருகே சென்று, எங்கிட்ட இருந்த எல்லா காசுக்கும் ஸ்வீட் வாங்கியாச்சு. மத்த செலவுக்கு அக்கா காசு கொண்டு வர்றதா சொல்லி இருக்கா என தன் பொருளாதாரத்தை சொன்னார்.

அப்போது அங்கே வந்த நர்சிடம், அம்மா தப்பா நினைச்சுக்காதே. என் பையனுக்கு வரவு செலவு சரியா பண்ண தெரியாது. நாளைக்கு நாங்க வீட்டுக்கு போகும் போது கட்டாயமா, உனக்கு பணம் கொடுத்து விட்டு தான் போவோம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள் அந்த பாட்டி.

அதற்கு அந்த நர்சு சொன்ன பதிலில் தான் எவ்வளவு அன்பும் பொறுப்பும் அக்கறையுடம் பொதிந்து கிடந்தது..

பாட்டி, இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இங்கே பிரசவம் பார்ப்பது இலவசம். நீங்க பேசினது எல்லாம் கேட்டுகிட்டு தான் இருந்தேன். நான் பார்கிற வேலைக்கு சம்பளம் கிடைக்குது.. என் வீட்டுக்காரர் ஆட்டோ தான் ஓட்டுறாரு... அவர் என்கிட்ட தினமும் சொல்லுறதே யார்கிட்டேயும் லஞ்சம் வாங்காதே அதேசமயம் அவங்க பாசமா கொடுக்கிற பணத்தை உதாசீனம் பண்ணாதே...

ஏன்னா, நீ பிரசவ வார்டில் இருக்கே. பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி.

எப்பவுமே குழந்தை பிறந்தவுடன் பெற்றவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தையில் சொல்ல முடியாது. தன்னை அப்பா அப்படின்னு ஓர் உயிர் கூப்பிட போகுதுன்னு சந்தோஷத்தில் பார்க்கிற, எல்லாருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லை.அது தான் மனித இயல்பு.

சட்டத்தின் பார்வையில் இது வேறே, ஆனா மனித உணர்வுகளை மதிக்கிறதும் முக்கியம். என்று சொல்லி விட்டு.

சரி உங்க கையில் எவ்வளவு பணமிருக்கு என்றார் அவர்...

அந்த பாட்டியோ தன் கைகளை நீட்டினாள், அதில் சில பத்து ரூபாய் நோட்டுகளும் சில்லறை காசும் இருந்தது.

புதிய ஓரு ரூபாய் நாணயத்தை எடுத்து விட்டு அவர் சிரித்தபடி சொன்னார். உங்க அன்புக்கு இதுவே போதும்...

என்ன ரமேஷ் எனக்கு சாக்லேட் கிடையாதா? உரிமையோடு கேட்டார்.

அவனோ தட்டுத்தடுமாறி சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்தான்.

எனக்கு நாளைக்கு பெரிய கேக் ஃபாக்ஸ் வாங்கி தரணும் சரியா என்றாள்...

சரி சிஸ்டர், நாளைக்கு கண்டிப்பா வாங்கியாறேன்...

எல்லோருக்கும் தெரியும், அவர் சும்மா பேச்சுக்கு தான் கேட்கிறார் என்று.... பத்து நாள் கழிச்சு வேலைக்கு போனா தான் அவனுக்கு காசு கிடைக்கும்.

இங்கே உலகில் யாரும் யாருக்கும் இனாமாக காசு கொடுப்பதே இல்லை.

கொடுக்கும் பணத்திற்கு பதிலாக சக்கையாக பிழிந்து வேலை வாங்கப்படுகிறது.

அந்த புதிய ஓரு ரூபாய் நாணயத்தை வீட்டிற்கு போகும் போது ஆஸ்பத்திரி முன்னால் இருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் போட்டார்....

ஏன்ம்மா, உன் கைராசி எல்லாமே சுகப்பிரசவம் தானே என்று கேட்ட கோவில் பூசாரியிடம்.

ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள்...

இவ்வளவு நல்ல மனசை கொடுத்த சாமி, உனக்கு இன்னும்... அவர் பேச்சை சட்டென்று இடைமறித்து சொன்னாள்.

பூசாரி அய்யா, சாமிக்கு எல்லாம் தெரியும்.என்றவளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது..

அந்த நர்சுக்கு பணம் கொடுக்ககூடாது என்றோ, நான் எதுக்கு பணம் கொடுக்கணும். இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி தானே என்றோ யாருமே பேசவில்லை.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.ஆனால் ஓட்டுகளை வாங்கும் வித்தை தெரிந்தவரே அரசியலில் வெற்றி பெறுகிறார்.

அரசியல் ஆசையில் தன் பல மதிப்பு சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம்.

இங்கே ஜனநாயக அரசியலில் அனைவருக்கும் உரிமை உள்ளது.ஆனால் அரசியலில் அதிர்ஷ்டமும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.

இந்திய ஜனநாயக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும்.


நேர்மையாக பணிபுரியும் அரசு ஊழியர்களும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். சிஸ்டம் சரியில்லை என்று பொத்தாம் போதுவாக சொல்லாமல், எந்த துறையில் எந்த இடத்தில் என்று தைரியமாக யார் தவறு செய்தார்கள் என்று பெயரிட்டு சொல்லுங்கள்.



இந்து மதம்

 மத வழிபாட்டில் சில வார்த்தைகள்..

.

.


இந்து மதத்தில் சிவன் மற்றும் அம்பாள், அல்லது பெருமாளுடன் தாயார், அல்லது குலதெய்வமாக வணங்கும் சாஸ்தா அல்லது மனதுக்கு பிடித்த தெய்வத்தை இஷ்டதெய்வமாக வணங்கும் மரபு இந்து மதத்தில் உண்டு.

இவற்றில் ஏதாவது ஒன்றை வணங்கினாலும் , எல்லா தெய்வங்களை வணங்கினாலும் மனிதனின் மனோபலம் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை..

வாழ்வின் கடினமான தருணங்கள் கடக்க பல குருமார்களின் வழியில் அவர்கள் வகுத்து வைத்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிகவும் வலிமையானது.

ஆசை

 ஆசை....

.

.

மனம் என்னும் குரங்கு தரும் ஆசை...

ஊரை கட்டி ஆண்டுவிட ஆசை..

பல கோடிகள் சேர்ந்து வைக்க ஆசை..

விலையுயர்ந்த காருக்கு ஆசை...

அதிகாரமிக்க பதவிக்கு ஆசை....

பார்ப்பதை எல்லாம் பருகிவிட ஆசை...

மிகப்பெரிய பங்களாவிற்கு ஆசை..

ஆயிரங்களில் தொடங்கிய ஆசை...

விருட்சமாக கோடிகளில் சென்று 

நிறுத்தி விட்டது.... அத்தனையும்

கிடைத்த பிறகு இதில் எதிலும்

நிம்மதி இல்லையென்று ....

இறைவனின் காலடியில்

பணிந்து விட ஆசை.... அந்த

கோவில் பூசாரியோ எதுவுமேயின்றி

ஏழைமையில் நிம்மதியாய் 

வாழ்வது கண்டு அவரை

போலவே மாறிவிட ஆசை... ஆனால்

மனகுரங்கு ஆரவாரம் செய்து

அடங்கி விட மறுக்கிறது...

ஆசைகள் ஆசையாய்

நிறைவேறுவது எப்போது...

யாரை நம்புவது புரிவதேயிலையே..

 யாரை நம்புவது ..?..?..?

வாழ்வில் எல்லோருக்கும் ஓர் நாள் மனதில் இந்த கேள்விக்கு விடை தேடும் முயற்சி நடக்கிறது...

பலரை நம்பி நடையாய் நடந்து இப்படி ஏமாற்றி விட்டார்களே என்ற கவலை வருவது இயற்கை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், யார் உதவி செய்யவே மாட்டார்கள் என்று நினைத்தோமோ அந்த மனிதன் தான், ஆபத்தானது காலத்தில் உதவி செய்கிறான்.

அப்போது அவன் சொல்லும் வார்த்தைகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

இனியாவது எல்லாரையும் நம்பாதே..

எத்தனை வலிகளை உள்வாங்கிய வார்த்தை..

அப்படியெனில் இவனும் கூட நம்மை போலவே பாதிக்கப்பட்டவனா...????

ஏன் யாரிடமும் பேசாமல் இருந்தான், என்று நான் யோசித்து பார்க்க நேரமிருக்கவில்லையே....

இவனை பற்றி அனைவரும் தவறாக தானே பேசினார்கள்.

சரியான சிடுமூஞ்சி,

அன்பா பேச தெரியாதவன்...

கேட்ட கேள்விக்கு எதிரும் புதிருமா பேசுவான்...

சொந்தகாரங்களை மதிக்க தெரியாதவன்.

ஆக யாருமே சொல்லாத ஓர் விஷயத்தை, அவன் உணர்த்தி விட்டான்.

கேட்காமல் ஆபத்தான காலத்தில் வலிய சென்று உதவும் ஓர் நல்ல மனிதன்.

"நல்ல மனிதர்கள் நீ விரும்புவது போல் இருப்பதில்லை.நீ விரும்புவது போல் இருப்பவன் அரசியல்வாதி"... ஓஷோவின் வரிகளில் தான் எத்தனை உண்மையை உணர்ந்த வலிகள்.

வலிகள் இல்லாமல் யாருமே இங்கு வாழ்க்கை கடந்து வரவில்லை தான் போல.

உலகில் உயர்ந்த நிலையை அடைந்தவராக சொல்லப்படும், காட்டப்படும் மனிதர்கள் அனைவரும் இந்த நிலையை கடந்து தான் சென்றார்கள் போலும்.

வாழ்க்கை சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை மதிப்பு உடையது.

மாநில அளவில் பள்ளியில் முதலிடம் பெற்ற போது, கிடைத்த வெளிச்சத்தை விட அனுபவம் தரும் பாடம் பிரமிக்க வைத்தது..

கடவுளை யார் கண்டார்களா தெரியவில்லை, ஆனால் உடனிருக்கும் மனிதனை புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.

பல நாட்களுக்கு பிறகே இயல்பு வாழ்க்கை வாழமுடிகிறது.

ஏனெனில் வாழ்க்கை தரும் பாடம் அப்படி

இயல்பாய் சிரிப்பவரை கூட நம்ப முடியாத மனதின் வலி, கடந்து இன்றோ மனதில் வலிமை பிறந்தது.

வாழ்க்கை கற்றுக் கொடுத்த விஷயமே, நீங்கள் நீங்களாகவே இருங்கள்..

உலகில் பசுத்தோல் போர்த்திய புலியின் குணத்திலும் மனிதன் உண்டு.

புலியை போல குணம் காட்டும்  பசுவின் குணத்திலும் மனிதன் உண்டு.

இங்கே யார் உண்மை ?

யார் முகமூடி அணிந்தவர் என்பது சந்தர்ப்பங்களில் தான் வெளிப்படுகிறது..

யார் மீதும் வைக்கும் அதீதமான எதிர்பார்ப்பே கவலைகளை தருகிறது.

யாரிடமும் எதுவுமே எதிர்பாராமல் வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கை சுகமாகும்

அடுத்த முதல்வர் யார்‌..

அடுத்த முதலவர் யார்???


ஓவ்வொரு காலகட்டத்திலும் இந்த கேள்வி விவாதிக்கப்படுகிறது 

இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் இன்று வரை இந்த சச்சரவுகள் எல்லா கட்சியிலும் இருக்கிறது.அடுத்தது யார் என்று ஒருவர் இருக்கும் போதே தொடங்குகிறது.

அந்த நாற்காலியில் அமர நினைத்தது, எத்தனை எத்தனை பேருக்கு ஆசை.‌...

முதல்வர் என்பது நாட்டிற்கு மாத்திரம் இல்லை, எல்லா வீடுகளிலும் இந்த சண்டை நடைபெற்றிருக்கிறது.


ஓவ்வொரு வீட்டிலும் கூட நாற்காலி சண்டைகள் நடைபெறுகிறது.

ஏனோ அதன் சத்தம் தான் யாருக்கும் கேட்காதது மாதிரி கடந்து செல்கிறார்கள், அருமை உறவினர்கள்.

சொத்தை பிரிப்பதில் தொடங்கி, அலுவலகத்தில் தன் இருப்பை நிலை நிறுத்துவது வரை சண்டைகள் தொடர்கிறது.

ஆசையே இல்லாத மனிதன் யார்????.

அப்படி யாரையாவது படைத்தது உண்டா.

ஆசையில் பிறந்த வாழ்க்கையில் மக்கள் பதவிக்கு ஆசைபடுவதில் தவறேதுமில்லையே.

குழந்தையாக பிறக்கும் போதே அவனுடன் ஆசையும் சேர்த்தே பிறவி எடுத்து விடுகிறது. பம்பரம் தொடங்கி சைக்கிள் தொட்டு இன்னும் பல வகை... பள்ளி பருவத்தில் ஆரம்பித்த ஆசை விதைகள், பலவற்றை ஆசிரியரே பிடுங்கி போட்டார்....

இந்த வயசுல உனக்கு கதை கேட்க ஆசையா, காதை திருகி தடை போட்டார்.

ஆனால் அவர் பக்கத்து க்ளாஸ் டீச்சரிடம் கேட்டது பேசியது எந்த வகையில் சேரும் என்று புரியாத வயது அன்று.

ஏனோ சில ஆசைகள் வருவதேயில்லை.

பல ஆயிரத்தில் சம்பளம் வேண்டாம், அந்த சம்பளத்திற்கு உள்ளே ஒளித்து வைத்த பதட்டமும், தன் மானத்தை உரசும் விளையாட்டும் வேண்டாம்.


அரசியலில் மட்டுமா பதவிச் சண்டை நிகழ்கிறது.


சின்னஞ்சிறு ச அலுவலகத்தில் ஓர் சிறு பதவிக்கு வந்தவருக்கு கூட, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

ஆசை யாரை விட்டது,  சுவாசிக்க வேண்டும் என்று.

.

.

.

ஆசைப்படுவது தவறே இல்லை.

மனிதனுக்கு மனிதன் ஆசையின் அளவுகள் மாறுபடும்.

முதலமைச்சர் பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பது போன்ற பிம்பம் எதற்காக ஏற்படுத்தப்படுகிறது...

சுனாமியால்..

கஜா புயலால்..

நோய் வாய்பட்ட...

எத்தனையோ பேருக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்த மக்கள் பலர்...

300 நூறு சம்பாதிக்கும் ஏழை மக்கள் கூட தன் சேமிப்பின் சிறு பகுதியை கொடுத்து உதவியது பற்றியும் பேசுங்கள்..

பக்கத்து வீட்டு மனிதருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வேதனைபடும் மனிதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள்...

...

பதவி என்னும் முள்கிரீடம் தரித்து, சுதந்திர வாழ்வை அடகு வைத்து,  வேளைக்கு குறித்த நேரத்தில் சாப்பிட கூட முடியாத பரபரப்பு வாழ்வை தவிர்த்து.

நிம்மதியாய் நமக்கு பிடித்த படி, நாம் நாமாக வாழும் நிம்மதி வாழ்வு.

பணத்திற்கு அதிகாரமும் ஆணவமும் தான் கட்டுப்படும்..

அன்பின் வழியில் யார் மீதும் யாருக்கும் கட்டு போட வேண்டிய அவசியமில்லை...

சாப்பிட்டு முடித்து உடனே, குழந்தை தெருவில் சென்று தான் விளையாடும்..

ஏனென்றால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட அடக்கு முறை பிடிப்பதில்லை.

ஆனால் அரசியலில் நீங்கள் சுதந்திரமா செயல்படவே முடியாது. 

பல கோடிகள் பல தலைமுறை சேர்த்து வைக்கலாம், ஆனால் அடுத்த வேளைக்கு உணவை சேர்த்து சாப்பிட முடியாது.

இயற்கை மனிதனை இப்படித்தான் படைத்து இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் எதற்கும் ஆசைப்படலாம் தவறே இல்லை.

ஆனால் ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொண்டால் தலைவர் பதவிக்கு சச்சரவுகளும் குறையும் 

சுதந்திரமாக அன்பாக வாழ்வதே தவம்..

ஓவ்வொரு நொடியும், மூச்சு விடுங்கள். சுதந்திரமாக படபடப்பின்றி, யாருக்கும் பயப்படாமல், பதவி சுகங்களில் மயங்கி, உங்களின் தனித்துவம் இழந்து விடாதீர்கள். தொண்டராக இருப்பவருக்கு இருக்கும் சுதந்திரம் தலைவருக்கு கிடையாது என்பதை தலைவர் பதவிக்கு செல்லும் வரையில் பலரும் அறிவதில்லை


நன்றாக யோசித்து பாருங்கள், சுதந்திர உங்கள் மூச்சாக மாறட்டும்..தொண்டனா தலைவனா..முடிவு உங்களின் கைகளில்


நீங்கள் அடுத்த முதல்வரா.. அல்லது சிறந்த தொண்டரா....


குப்பைக்காரி

பசிக்குது

என்ற வார்த்தைக்கு

மதிய வேளையில்

பதில் சொல்ல முடியாமல்

தவித்த தாய்மையின் வேதனை

தன் பெண்மையை

விற்க விரும்பாத

தன்மானகாரி...

சாலையின் ஓரத்தில்

கிடக்கும் பிளாஸ்டிக்

பாட்டில்களை பொறுப்புடன்

எடுத்து முதுகில்

சுமக்கிறாள்...

பாரதியின் சிலையருகே

அவர்களின் வாழ்வு...

கணவனின் வாழ்வோ

மாதுவின் அணைப்பை தேடி

மதுகோப்பையுடன் அலைந்த

சாலையில் முடிந்தது..

ஏழையாக இருந்ததால்

ஜாதியும் மதமும் கூட ஏனோ

உதவிக்கு வரவில்லை...

கூடாரத்தின் சற்று தொலைவில்

மணிக்கு ஓர் முறை

நம்பிக்கை பரப்பும் ஆலயத்தின்

தயவில் பகட்டான காரில்

வலம் மதகுரு ஏனோ...

இவர்களுக்கு மட்டும்...

உதவி செய்யவில்லையா..... அல்லது

உதவுவதற்கு மனமில்லையா...

பணத்தை கொடுத்தவருக்கு

கிடைக்கும் நம்பிக்கை 

வாக்கும்... ஆசீர்வாதமும்

இவர்களுக்கு கிடையாது போல...

இறைவனுக்கு மாத்திரமே

உண்மைகள் தெரியும்...

பத்து ரூபாய் ரொட்டியை

வாங்கி மகனுக்கும் மகளுக்கும்

தனது அன்றைய தினத்தின்

சொத்தை பாசத்தின் மிகுதியில்

பிரித்து கொடுத்தாள்...

அவளின் கிழிந்த சேலையில்

திமிறிய இளமையை

பருகிட துடிக்கும் கழுகுகள்

முன்னால் கற்புடன் வாழவே

குப்பைகள் பொறுக்கும் 

ரோஷமான கோபக்காரி அந்த

குப்பைக்காரி....

நவராத்திரி

கருணை வடிவானவளே ?

கருணையே உருவானவளே ?

உணர்ந்த பின்னரே பித்தனை

போலவே சித்தமுடன் 

சத்தமாய் புலம்புகிறேன் தாயே

வர வேண்டும் தேவியே

வர வேண்டும் தேவியே

அமைதியும் தூய்மையும்

எனதுள்ளத்தில் வர வேண்டும்

வர வேண்டும் தேவி...

உள்ளத்தில் இருக்கும்

கசடுகளை நீக்கிடவே

வர வேண்டும் வர வேண்டும்

தேவி நீ வர வேண்டும்

செயல்களில்

ஆணவம் நீக்கி 

அன்புடன் வாழ வழிசெய்ய

என்  இதயத்தில் நீயும் வாழ

வரம் கொடு தாயே..

உன்னையன்றி 

உலகில் நிதர்சனம் ஏது...

வர வேண்டும் வரவேண்டும்

நவராத்திரி தாயே...

இல்லத்தின் நடுவே

வீற்றிருக்க வாயேன்

வரமேதும் வேண்டாம்..

வரமேதும் வேண்டாம்

வரத்தின் தந்து நீ என்னை

புரம் தள்ள வேண்டாம்...

மாயையில் வீழ்ந்து

சகதியில் புரள

மனமில்லை தாயே

என் இதயத்தில் உன்

வரவை தந்து விடு தாயே

உன்னையன்றி 

உலகில் உகப்பேதும் 

உண்டோ...

சாரதி தொடங்கி

பாரதி வழியில்

தொழுகின்றேன் தாயே..

மாயா விளையாட்டின்.

வேதனை வேண்டாம்...

மனிதரில் மானுடம்

காணும் வல்லமை வந்தவளே

வர வேண்டும் வர வேண்டும்

நவராத்திரி தாயே...

முதியோர் இல்லம்..

 

.

.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றனர்.உங்களின் சிந்தனையை மிகவும் மதிக்கிறேன்.ஆனால் இந்த நாடு வல்லரசாக மாற நீங்கள் ஏதாவது செய்தது உண்டா?..


உங்களையும் உங்களுக்கு மிகவும் பிடித்தவரையும் அழைத்து சுற்றுலா செல்லும் மனிதர்களே..

நம்புங்கள் இது தான் நிதர்சனமான உண்மை. இன்னும் பல நகரங்களிலும் கிராமங்களிலும் தனது சொந்த பிள்ளைகளால் அனாதையாக தெருவில் விடப்படும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

வரதட்சணை கேட்டு நடந்த கொடுமை மற்றும் பெண்ணுரிமை பேசும் பெரிய மனிதர்களே. சற்றே நிதானமாக சிந்தனை செய்து பாருங்கள். தயவுசெய்து சொத்துக்களை பிள்ளைகளுக்கு பெயர் மாற்றி கொடுத்த பிறகு, அவர்களை வீட்டில் அனாதையாகவும் சம்பளம் இல்லா வேலைக்காரர் போலவும் நடத்தும் நிலைமை பற்றியும் பேசுங்கள்.

.

.

பெண்ணுரிமை, பலாத்காரம் பெண் சமத்துவம் என்று மேடையில் முழக்கம் இட்டது மட்டுமே போதாது.

வயதான காலத்தில் தன் பல வருட உழைப்பை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தன்மானம் இழந்து வாழும் இவர்களின் கஷ்டத்தையும் உணர்ந்து பேசுங்கள் எழுதுங்கள்..

.


நான் சில நாட்கள் மிகவும் புனிதமாக கருதப்படும் கோவில்களில் வேலை பார்த்ததுண்டு, அந்த சமயத்தில் அங்கே வரும் முதியவர்கள் சொல்லும் கதைகள் இறைவனின் காதுகளில் கேட்டதா தெரியவில்லை. ஆனால் அதை கேட்டு விட்டு அழுத நாட்கள் உண்டு.

.


அவர்களில் சிலர் மிகப்பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், இசை மேதைகள் இன்னும் பல அரசு பதவியில் உயர்ந்த நிலையில் பணிபுரிந்த மனிதரும் ஏழை விவசாயிகளும் உண்டு.

தன் குழந்தையை அவர்கள் வளர்த்த விதம் சொல்லும் அழகில், இவ்வளவு செல்லமாக தன் பொருளாதார கஷ்டத்தின் நிழலை கூட குழந்தைக்கு காட்டாமல் வளர்க்க முடியுமா, என்று அதிசயித்த நிமிடங்கள் உண்டு.

.

எனக்கு ஓரே மகன் அவனை நான் கொஞ்சம் நெஞ்சம் இல்லை, ரொம்பவே செல்லமா வளர்த்து விட்டேன். என் மனைவி கூட சொல்லுவா, தம்பி.

இது எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ ? என கோபமாக என்னை திட்டியதுண்டு.

இன்று அது என்னை இப்படி கோவில் கோவிலாக மனநிம்மதி தேடி, மேற்கொண்டு பேச இயலாமல் அவரின் நாக்கு மிகவும் குழறியது.

.

நீங்க இப்போ பேசாம இருக்க மாட்டீங்க, இந்த பையன் யாருன்னே தெரியவில்லை.

இவன்கிட்ட எல்லாம் நம்ம கதையை சொல்லிக்கிட்டு. வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்லை.

ஏதோ கோவில் வேலை பார்ப்பவரிடம் எல்லாம் நம்ம கஷ்டத்தை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். அந்த தாய்மையின் பக்குவம், தன் மகன் தன்னை கஷ்டப்படுத்திவிட்ட விஷயங்களை கூட அடுத்தவருக்கு தெரியாமல் வாழ முயலும் வாழ்வு தான் எத்தனை ஆச்சரியம்.

.


சில சுயநலத்திற்கார மனிதர்கள்.

தன் மகளை (முறை பெண்ணை) அவன் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தால் தன் அக்கா மகன் என்று கூட பாராமல். 

தனது உடன்பிறந்தவளிடன் மிகவும் பாசமாக இருப்பது போல் நடித்து, தாய் தந்தையை தெய்வம் போன்று பார்த்த மகனின் மனதை , தனது அரசியல் காய் நகர்த்தல் மூலம் அவனின் வாழ்வை நோகடித்து விடுகின்றனர்.

.

இரண்டு பக்கமும் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒற்றுமையாக இருந்த குடும்பங்களை பிரித்து விடுகின்றனர்.

.

.

"செய்த வினை செய்தாரை சாரும்",

தன்னை வினை தன்னை சூடும் என்பது பழமொழி.

.


யாருக்கும் தீமை செய்யாத அந்த அப்பாவிகளை துன்புறுத்தும், அவர்களை மறந்து மன்னித்து விட்டு, 

தன் சொந்தங்களை யாரும் காட்டிக் கொடுக்காமல், வீட்டிற்கு வெளியே நிம்மதி தேடும் அந்த தாய் தந்தை.

ஏனோ தனக்கும் மகன் மகள் இருப்பதை மறந்து விடுகிறார்கள்.

மனம் மிகவும் வலிக்கத்தான் செய்கின்றது.

பாரத பண்பாடு, கலாசாரம் என மார் தட்டுகிறோம்.

எத்தனையோ அவசர சட்டத்தை இயற்றும் அரசியல்வாதிகளே, ஓரே ஓர் சட்டத்தை இயற்றுங்கள்.

இந்தியாவில் இனி முதியோர் இல்லங்கள் கூடாது என்று, ஏனென்றால் இந்தியா என்பது கலாச்சாரத்தின் அடையாளம்.

வயதான காலத்தில் தன் ஆசை மகனையும் மகளையும் நினைத்து மனதில் அழுது விட்டு, வெளியே சிரிக்கும்.

ஏழை , பணக்கார மற்றும் நடுத்தர வீடுகள் அனைத்திலும் அரங்கேறுகிறது.


இந்த கொடுமைகள் இனியாவது மாற வேண்டும். அவர்கள் படும் வேதனைகளை வயதான போது உணரும் நிலை வேண்டாம்.

பல வீடுகளிலும், இந்த கதைகள் இருக்கின்றன. ஆனால் காட்சிகள் தான் வேறு.


.

வாருங்கள் அனைவரும் இணைந்து உருவாக்குவோம், பாசமான நேசமான உறவுகளை, சாதியும் மதமும் பேசி பிரிவினை வேண்டாம்.

அன்பை விதைப்போம்..

உருவாகட்டும் புதிய பாரதம். "பாசமான பாரதம், ஓளிரட்டும்".

காதல் கவிதை

பெண்ணின்

கண் நோக்கி

நேராக சொல்லும்

காதலுக்கு என்றுமே

வலிமை அதிகம்..

காதல் என்பது உணர்வு..

அதனை அடுத்துவரும்

சரியாக புரிந்து கொண்டால்

தான் காதல் இனிமையாகும்...

காதலெனும் அன்பு 

புரிந்து கொண்டவர்கள்

மிகவும் அதிர்ஷ்டசாலி

கவலை

 உனக்காக உண்மையாக கவலைபடும் நண்பரிடம் மட்டுமே உன் கவலைகளை கூற, அவர்களால் அறிவுரை கூற முடியாவிட்டாலும், உதவ முடியாவிட்டாலும் கூட உனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.. மற்றவர்கள் உன் முகத்திற்கு நேரே அக்கறையாக பேசி விட்டு, நீ இல்லாத சமயத்தில் உன் வாழ்க்கையில் நீ படும் கஷ்டங்களை சொல்லி சிரிக்கவே செய்வார்கள்

Farmers

Farmers are also like god.
They create, protect the nature.
They are people, who converted harder land as soft soil and brought up productivity for general public.

I Love You

Words are silver, thoughts are gold, imaginations are diamond.

Diamonds are more valuable, diamonds has it's different dimensions with greater values.

It requires more hard work and patience to taken out from earth.

Love is also the same at sometime.  Understanding between two people cannot be taken at few seconds.

Everyone is more willing to hear the treasury word, "I Love You" from their loved ones.

Because love generate creativity, trust bounding among people's.

Pure hearts are brought together in the name of love, as per God's wish.

Entire world like this mesmerizingword a lot. Everyone like to share these diamonds with their liked and loved ones and also with their kids.

When words are louder, these words were used to break the iceberg of ego between two.

Love is not a sin.

Love is a feel, it can't be understood by everybody at the same level of commitment. 

There are somany untold love stories exist,f different parts of the entire world.

When one express his love, it's not just a word.

Because he/ she may have been had a great level of expectations from other person.

Somewhere in the world,  love continue in some other ways, between human and nature.

Love is also type of communication language between great higher souls, to create a lovable family in this world.

Speak the language of love with great enthusiasm. Because love is also a creature of nature.

நான் யார்

 ஆயிரம் பேரிடம் திரைமறைவில்  

விசாரித்து அறிந்து கொள்ளும் 

அளவிற்கு நான் ஒன்றும் பெரியவன் இல்லை..

என்னை பற்றி என்னிடமே கேட்டு இருக்கலாம்.....

என்னை பற்றி அறிந்து கொண்ட நீங்கள்.. 

உங்களுக்கு ஏது தேவை என்பதை பற்றி 

சிறு நிமிடங்கள் சிந்தித்து இருந்தால் கூட போதும்..

விதியை பழி சொல்லும் நிலை வராது... 

பல வருடங்களுக்கு முன்பே நல்ல நிலைக்கு 

முன்னேறி இருக்கலாம்

நகைச்சுவை நடிகன்


கண்ணில் வரும் கண்ணீரை சிரிப்பாக மாற்றும் தன்மை சிலருக்கு மிகவும் கை வந்த கலை.உலகம் அவனை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று புகழ்கிறது.ஏனோ யாருமே அவனின் கவலைகள் காது கொடுத்து கேட்கவில்லை, இருந்தாலும்  தொடர்ந்து தன் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் சிரிக்க வைக்கிறான். தன்னை பற்றிய சிந்தனை இல்லாமல் உதட்டில் சிரித்து உள்ளத்தின் காயங்களை மறைக்கும் உன்னத நடிகன் அவன்.

உண்மையான நட்பு.

உண்மையான நட்பு என்றால் கண்ணீரை துடைப்பது மட்டுமல்ல.

ஓர் முறை தெரியாமல் மனத்தை காயப்படுத்தி அழ வைத்து விட்டோம் என்று நினைத்து மீண்டும் பல முறை நண்பன் எத்தனையோ கேலி கிண்டல் வம்பு செய்தாலும் பொறுமையாக இருப்பது... மீண்டும் கோபமாக பேசி அவன் கண்ணீர் விட கூடாது என நினைப்பது தான்.. உண்மையான நட்பு...

நட்பு என்பது விட்டுக் கொடுப்பது, தனது நண்பனின் வளர்ச்சி கண்டு சந்தோஷம் கொள்வது. தனது நண்பன் தவறான முடிவு எடுக்கும் போது, அதை அவனுக்கு புரியும் படி சொல்லி நல்வழிப்படுத்த முயற்சி செய்வது.

நட்பின் இலக்கணம் என்பது திருவள்ளுவர் சொல்வது போல,

உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

ஏனோ இவை இப்போது எல்லாம் மேடை பேச்சுக்களுடன் முடிந்து போகிறது, சில மேல் தட்டு வர்க்கத்தினர் மத்தியில்.

பாராட்டு விழா மேடையில் உடன் இருப்பவரை, வானளாவிய புகழை அடைந்தது போல பேசி முடித்து விட்டு காரில் வரும் போது. தனக்கு நெருக்கமானவர்களிடம் இவனுக என்னத்தை சாதிச்சு விட்டான் தெரியலை. அவன் கையில் காசு இருக்கிறதாலே பத்து பேர் புகழ்ந்து பேசுறானுங்க.

ஜயா, உங்க கையிலும் நாலு காசு இருந்தா, இப்படி பத்து பேரு மேடை ஏறி பேசுவாங்க. கலிகாலம் என்ன செய்ய சொல்லுறீங்க ஜயா.உண்மையை சொன்னா, உங்களுக்கு தான் இந்த பட்டம் கொடுக்கணும். நேத்து வந்த சின்னப்பையனுக்கு மாலை மரியாதை கிடைப்பது பார்த்தால் எனக்கே கோபம் கோபமாக வருது. நான் இப்படி நியாயம் பேசுவதால் தான், ஜயா என்னை யாரும் உடன் சேர்ப்பதே இல்லை.. என்கிறார் காரில் உடன் வந்தவர்.


இதே போல ஓர் நிகழ்வு எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் நடந்தது. தன் நண்பரை தவறாக பேசியவர்களை காரில் இருந்து இறங்கி விட்டார்.அதற்கு காரணம், ஒருத்தர் இல்லாத போது அவரை குறை சொல்பவர்கள் தவறு என்ற சிந்தனை.

இப்படி பல உதாரணங்கள் நண்பர்கள் வாழ்வில் ஏராளம்.

நட்பிற்காக சுயநலம் இல்லாமல் பழகும் மனிதர்கள் உலகில் உண்டு.ஆனால் உலகம் பொதுவாக அவர்களை இளிச்சவாயன் என்றே அழைக்கிறது.

நட்பில் வெறுப்பு, எரிச்சல் வருவதில்லை, ஆனால் அதில் அக்கறை அதிகமுண்டு எனவேதான் நண்பர்களுக்கு இடையே சச்சரவு வருகிறது, ஆனால் அது சண்டையாக மாறாமல் பாசமாக மாறுகிறது.

"நான் சொல்வது போல் கேளு", என்ற அன்பின் அதிகாரம் நட்பின் பலத்தை அசைத்து பார்க்கிறது.


ஆயினும் நட்பே வெல்கிறது...


சமர்ப்பணம்

 மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட ஓன்று, ஆனால் அது என்று நிகழும் என்பது தெரியாத காரணத்தால் மனிதன் ஆணவத்தில் அலைகிறான்.

மனிதனின் ஆயுள் தெரிந்து விட்டால், வாழ்வின் சுவாரசியமானது, மிகவும் குறைந்து போகும். 

இறைவன் இருக்கிறாரா? இல்லையா என்ற விவாதம் தாண்டி யோசித்தால் புரியும்.

கடவுளை விழுந்து விழுந்து கூப்பிட்டவரும், இறைவனே இல்லை என்று வாதிட்டவரும் மரணத்திற்கு பின் என்ன நிகழும். அதிகமாக பேசவில்லை.

விடை இல்லா கேள்வி இது.

பூமியின் மடியில் வாழும் சில வருட வாழ்வில், முடிந்தால் நன்மை செய்யுங்கள். முடியாவிட்டால் அடுத்தவரை சாதி மத இனத்தின் பெயரால் உதாசீனம் செய்யாதே என்பதே பலரின் உணர்வுகள்.

நிலையற்ற உலகில் நிலையான இடம் ஓரு சிலருக்கு மாத்திரமே கிடைக்கிறது.

ஏனென்றால் அவர்கள் தனக்காக வாழவில்லை, தன்னை சார்ந்த மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

அவர்கள் இறைவனை பார்த்தார்களா? பேசினார்களா? 

அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஆயினும் ஏழைகளின் முகத்தில் இறைவனை காண வேண்டி, அவர்கள் செய்த தவம். இன்று மனிதனை மனிதனாக மதிக்கும் நிலை உருவானது.

தனக்காக எதுவுமே பணம் சேர்க்காமல் வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்.

நிச்சயமாக இப்படி பொது நலனுக்காக வாழ்க்கை வாழ்ந்த காரணம்.

இயற்கை வழி வரும் மரணம்.

உலகில் பிறந்து விட்டோம், என்பதற்காக வாழாமல். குறுகிய காலத்தில் மனித உயிரை உலகுக்கு தந்து விட்டு சென்ற அவர்கள். இன்றும் அவர்கள் மரணத்தை தாண்டியும் வாழ அவர்கள் செய்த அளப்பரிய பணியே காரணம்..

மரணத்தை பற்றிய சிந்தனை தான், மனிதனை சாதிக்க வைக்கின்றது.

ஓட்டம் என்று நிற்கும் என தெரியாத நிலையில், ஓவ்வொரு நாளும் நன்மை செய்ய தூண்டுகோலாக அமைந்தது.

நீர்க்குமிழி வாழ்வு, வாழும் நாளில் பிறருக்காக வாழும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்

 

மகனும் மருமகளும்

மகனும் மருமகளும்..

.


குண்டு பாப்பா என்று  சொல்லி அவளின் கன்னங்களில்


முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தும்


பாட்டி.


சில நிமிடங்களில்  குழந்தை போல மாறி விடுகிறாள்.


பேத்தியின் பிள்ளைத்தனமான செல்லமான செயலை கண்டு..


ஏய் குண்டம்மா, என்ற சொல்லை பாசமுடன் ரசிக்கும் குண்டு பாட்டி..


பாட்டி பேத்தி உறவில் கூட தினமும் சண்டைகள் உண்டு.ஆனாலும் யாரும் கோவித்து கொண்டு, தனது அம்மாவிடம் குறை சொல்வதில்லை..


உடன் படிக்கும் நட்பை போலத்தான் இந்த உறவுகள்...


கோவிலுக்கு போனவள் திருப்பி வர தாமதமாகும் நாட்களில், ஏன் கிழத்தை தனியா அனுப்பின..நீ சும்மா தானே வீட்டில் இருக்கே கூட போனா, உனக்கு பவிசு குறைச்சா போகும்...


உன் மாமியார் கூட போக வேண்டியது தானே...ஏன்தான் என்உசுர வாங்குறே..


இவள் எங்கேயாவது கீழே விழுந்து தொலைச்சா, நம்ம எல்லாருக்கும் தானே கஷ்டம், அப்பாவுக்கு தலைவலி அதிகமாகும்..


.

அவளுக்கு எவ்வளவு சொன்னாலும் அறிவே இல்லை... இந்த மழை நேரத்தில் கோவிலுக்கு போக வேண்டிய கட்டாயமா???


.


வீட்டிற்குள் பாட்டி நுழையும் போது, பேச்சை மாற்றினாள்... நீ வயசான காலத்துல வீட்டில் அடங்கி ஒடுங்கி கிடக்க வேண்டியது தானே...


பாரு உன்னால அம்மாவுக்கு எவ்வளவு மனசு கஷ்டம் என்று அம்மாவின் மீது பழி போடுவாள்..


.


.


பேத்தி கல்லூரியில் இருந்து வர நேரமானாலும் பாட்டியின் பாடு திண்டாட்டம்...


இவனுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது..

எல்லாம் என் மகனைத் தான் சொல்லுறேன்...

அப்படி இவ என்ன பொல்லாத படிப்பு படிக்குறா???

ஈஸ்வரா, ஏன்ப்பா என் வயித்துல புளியை கரைக்காதே..அவளை சீக்கிரம் வீட்டில் கொண்டு வந்து விடு.இந்த முறை உனக்கு பிரதோஷத்துக்கு பால் அபிஷேகம் பண்ணுறேன்..


ஊர் உலகம் எப்படி இருக்கும்...


எதுக்கு இப்போ ஸ்பெஷல் க்ளாஸ்...


வீட்டில் இருந்து படிச்சா, படிப்பு மண்டையில் ஏறாதா???


என் கவலை இங்கே யாருக்கு புரியுது...


வராண்டாவில் அவள் வரும் வரை வாசல் படியில் அமர்ந்து கொண்டு இருக்கும் பாட்டி...


.


.


.


ஏய்,  குண்டு நேரத்துக்கு மாத்திரை மருந்து சாப்பிட்டு விட்டு படுத்து தூங்க வேண்டிதான்...


வரும் போதே சீண்டுவாள்..


.


.


மழைகாலத்தில் எதிர்பாராமல் வந்த காய்ச்சல், இரண்டு நாள் ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்ட பாட்டி...


வெளியே எங்கேயும் செல்லாமல் கட்டில் கிழவி தூங்குவதை பார்த்தபடி கவலையுடன் ...


.


.


கண்விழித்து பாட்டியின் அருகே சென்று காதோரமாக சொன்னாள்...


உனக்கு நல்லபடியா காய்ச்சல் சரியான பிறகு, நீ நினைச்ச மாதிரியே அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்... சொல்லும் போது வார்த்தை உடைபட்டது...


.


.


ஏய் லூசு, நான் நல்லா தான்டி, இருக்கேன்...


உன் கல்யாணத்தை பார்க்காமல் போக மாட்டேன்.கவலைபடாதே.என்றாள் குண்டு பாட்டி..


.


.


ஜன்னலோரமாக நின்ற படி இதை பார்த்து ரசித்தனர் பாட்டியம்மாவின் மகனும் மருமகளும்...

Sorry Daddy

 

கல்யாண வீட்டிற்கு

போய்விட்ட அம்மா...

போவதற்கு முன்பாக

எச்சரிக்கை மணியை

அப்பாவின் தலையில்

அடிக்காத குறையாக

சொல்லிவிட்டு போனாள்...

வயசுப் பொண்ணு...

நீங்க எதுவும் லூசுதனமா

"படம் பார்க்காதீங்க".

பெண் பிள்ளைகள் 

பெரிசு ஆயிருச்சு.......

அதுங்களுக்கு இப்போ

எல்லோமே புரியும்..

கல்லூரியில் இந்தமுறை

இறுதியாண்டு தேர்வு..

அக்கறையாக கட்டில்

படுத்த படி ஆடை கலைந்து

படித்துக்கொண்டு 

இருந்தவளுக்கு 

காபி கலந்து வந்தவர்...

ஏண்டி அம்மா சொல்லுற

மாதிரி நீ இன்னும் குழந்தை தான்....

வீட்டிற்குள் கூட ஒழுங்காக

இருந்து பழகு என்றபடி

அவளின் சுடிதாரை தாண்டி

வந்த உள்ளாடையை

சரி செய்தார்... அதில்

காமம் இல்லை...

தன் குழந்தையின்

அறியாமை நினைத்த

கவலை தெரிந்தது...

அப்பாவை கட்டியணைத்தாள்

"Sorry Daddy" என்ற

அவளின் விரல்களோ

தன் தோழி அனுப்பிய

"அந்த ஜோக்" அழித்தது...

சத்தியமா இனி படிப்பில்

மட்டும் கவனம் செலுத்துவேன்

இனி ஒழுங்கா இருப்பேன்...

தோளில் அவள் 

சிந்திய கண்ணீருக்கு

காரணம் அவள்

மட்டுமே அறிவாள்...

உன்னையே நீ அறிவாய்..

தியானத்தை பற்றியும், ஆன்மீகத்தின் சில விஷயத்தையும் சொல்லும் போதும் பலர் கேட்க தயாராக இல்லை. 

காதல் கதைகளையும், கவிதைகளையும் காமத்தின் பொடி தூவி எழுதும் போது ஏனோ அனைவருக்கும் பிடித்துப்போகிறது..

விற்கும் பொருளை கடையாக விரிப்பது தான் புத்திசாலிதனம்..

அந்த பித்து பிடித்த பரதேசி சாமியார் , சொன்னதை நினைத்து சிரிக்கிறேன்....

சிற்றின்ப உலகில் நொடிப் பொழுது ஆனந்தம் அதற்கு திருப்தி அடைவது தான், மனிதரின் மனப்பாங்கு.....

நிலையற்ற உலகில் நிலையான இன்பம் தேடுபவன் பைத்தியக்காரன்..

இந்த பைத்தியக்காரனுக்கு உள்ளே நடக்கும் வித்தையும் வினோதமும்.. வார்த்தைகளில்  சொல்லிப் புரியாது...

ஏகாந்தம் ஓன்றே ...

பரமானந்தம்...

தன்னை நன்கு உணர்ந்த பின்னர் யாரும் ஆன்மீகம் பேசுவதில்லை...

உடல் நலத்தை மறந்து பணத்தை மாத்திரமே இயந்திரதனமாய் அல்லும் பகலும் தேடி ஓடி பணத்தை சம்பாதிக்க நினைக்கும் மக்கள் கூட்டத்திற்கு தியானம் ஓர் அலுப்பு தரும் விஷயம்.

தியானத்தை உலகிற்கு சொன்னால் புரியாது வாழ்ந்து காட்டு..உன்னை பின்பற்ற ஆயிரம் பேர் வருவார்கள்.ஆன்மீகம் காசுக்கு கிடைப்பதில்லை.. ஆனால் காசின் மீதான பற்று விலகும் போது, ஆன்மீகம் உன்னுள் அதன் வேலலயை தொடங்கும். எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஓர் அணு துகளே நான் என்ற நினைப்பே அகங்காரம் அழித்து அமைதியில் அமரும்.

இயற்கையை வணங்குவதும் இறைவனை வணங்குவதும் ஓன்றே 

எளிதாக சொன்னால் திருமண வீட்டில் மணமக்கள் பற்றி மற்றவர்கள் தான் அதிகம் பேசுபவர்..அவர்களோ எந்த கவலையும் இல்லாமல் வருங்கால கனவில் மிதப்பது போல...

... எண்ணற்ற ஜீவராசிகளில் நான்.. நான் என்று அலையும் அதிகார ஆணவத்தின் திமிர் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரை தானே.ஆண்டவனை பற்றி அறியாமல் ஆண்டவனை ஓவ்வொரு மதமும் தனக்கானது என அற்ப அலப்பறை செய்யும் குழந்தைத்தனமான அட்டகாசங்கள் அத்தனையும் வீண் ஜம்பமே..

கண்களை மூடி.. தனிமையில் அமர்ந்தால்.. அது தரும் அமைதி... பிரபஞ்சத்தின் உள்ளுணர்வு வருங்காலத்தின் நடைமுறைகள்

உணர்ந்து பார்..

உன்னையே நீ அறிவாய்..

பெற்றவருக்கு பெருமை.....


தான் பெற்ற பரிசுகளும் பட்டங்களும் தந்த இன்பத்தை விட அதிகமாக தனது குழந்தைகளின் வெற்றி தரும் சந்தோஷம் வார்த்தைகளில் விவரிப்பது இயலாத காரியம்.... தாயும் தந்தையும் பட்ட பல சிரமங்களை மறந்து முகத்திலும் மனதிலும் அவை ஏற்படுத்தும் அமைதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா....

அவர்கள் மேடை ஏறி பரிசுகள் வாங்கும் போது

தன்னையறியாமல் உணர்ச்சியின் வேகத்தில் சிறு துளிகள் கண்களில் எட்டிப் பார்ப்பதுண்டு..

அன்று அவை ஏற்படும் எண்ணங்கள் வலிமையானது

இன்னும் இன்னும் இவர்களுக்காக 

உழைக்க வேண்டும் என்று உயர்ந்த சிந்தனை தந்து....

பெற்றவர்களையும் மேன்மையின் பாதைக்கு இட்டுச் செல்கின்றது.... பிள்ளைகளின் வெற்றியால் பெற்றவருக்கு பெருமை...

Communication

 Communication is more important..


In today's culture most of the people have opportunities to learn more languages.

Learning more languages are truly good. At the same time, we have to be very clear. Are we capable in good communication even at normal situations.

Language were born at different places over the world according to civilization.

It should be used as a medium to convey our thoughts clearly without hurting other's feeling. Whereas some people using it, to divide peoples. Because of that entire human harmony is facing threads.


Every natural beings communicate in their way, even in jungles.

Science has proven that elephants transfer their signals from far distance too..

We have the capacity to learn more languages, our human brain has it's power.

Anyhow communication is more important than language.

Even at home, in some times, we are not ready to convey our thoughts properly.

Because we have already created an image about ourselves.

From which we are not supposed to came out..

We aren't willing to express our normal feelings or thought process to kith and kin.

They may also facing same issues..Sit with them and chat, so you will came to know. 

They are not against you. Only against your way of approach.

Parents always dream more about their children.

Whether you will fulfill them or not? But still their wishes has greater heights.

Sometimes their emotions may burst in words. 

Try to understand the emotional bonding, which they are expecting more, like you the same.

Communication should be very clear, it should convey our thoughts correctly in proper manner.

Spoken words are only taken in to account, not about your imaginations...

Imagination can drive you to inventions. 

Whereas all human relationships are based on emotions.

For example.

If a person invite your for a marriage or any other function.It might be simply a courtesy call. 

Thinking that he/ she might remember you as good friend, so he is waving his hands...

Your past experience, may make you aware of situations..

One invitation but thought process are many...

Why he / she is calling...

What is the purpose of calling me...

Is he / she trying to get benefits out of me...

Are they want me to help them...

Are they expecting any monetary benefits...

Is he / she irritating me....

Is he / she willing business proposal.......

And many more unwanted thoughts may filled up in mind..

There's always different aspects at every circumstances. He may think you as a good friend..

If you say anything as philosophy...

Your philosophy thoughts may be right..

World has different kinds of people with different cultural backgrounds.. They may always be, same like you.

_Same feathers flock together".

There's is well known word, most of the people are aware of it.

"She is a girl, so she is my friend"

" I have a good friend, but she is a girl"

Not everyone can understand above said words correctly.

Because imagination and communication has it's own dimension.

Learning more languages are best. But communication is more important than language

Mind

Mind always travels towards happiness.

It's searching all possibilities to be happy.

Happiness may differ from person to person...

It depends on particular person wish...

For achieving happiness, hard work and stress is put in place..

When everyone is running towards a place, with more enthusiasm.

It was filled by......

Whereas without any efforts and hardwork, someone has been raised from bottom to greater heights by others.

Because pure hearts are blessed by God.

விநாயகர்

மிகப்பெரிய வயிறு...

கைகளில் சிறு இனிப்பு...

யானையின் முகம்...

குழந்தையின் குணம்...

எளிமையான வழிபாடு..

பல நல்ல தொடக்கத்தின்

தலைவன்  ....

அமைதியின் உருவகம்...

அன்பின் வெளிப்பாடு...

ஆசைகள் ஏதுமின்றி

இருந்தவனை கல்யாணம்

செய்யச் சொல்லி 

வற்புறுத்திய சொந்த பந்தங்கள்

சில சந்தர்ப்பங்களில்

அதிகமாகவே கோபம் 

காட்டும் அப்பா... அவரின்

மென்மையான மனதும்.

கேட்டதை விட அதிகமாக

அள்ளிக் கொடுக்கும் தன்மையும்

அனைவருக்கும் தெரியாது...

பித்தன் என்று கேலி பேசும்

அவரின் நிலை புரியாத பலர்

பணத்தை கேட்ட குபேரனிடம்

தனது எல்லா செல்வத்தையும்

எடுத்துக் கொடுத்து விட்டு

தியானத்தில் அமர்ந்தவர்

அந்த பணத்தைத் தான்

பிற்காலத்தில் 

திருப்பதியில் கோவில்

கொண்ட பெருமாளுக்கே

வட்டிக்கு கொடுத்தான்

சிலருக்கே புரியும்...

அம்மாவும் அப்பாவும்...

தான் இவருக்கு எல்லாமும்...... 

மயில் மீதேறி உலகை

நொடியில் வலம் வரும்....

வள்ளி தெய்வானையின்

மணவாளன் 

மருதமலை முருகனின்

பாசக்கார அண்ணன்..

கல்யாணத்தின் தேவை அறிந்து

மரத்தடியில் அமர்ந்தவன்...

ஆற்றின் கரையிலும்...

அரச மர நிழலிலும்

அன்பிலும் பண்பிலும்

சிறந்த தனது

அம்மாவை போலவே

பெண்ணை தேடியதாக 

என்றுமே பாட்டி சொல்லும் 

கதைகளின் கதாநாயகன்...

ஒளவையின் இஷ்டதெய்வம்...

வியாசரிடம் போட்டியிட்டு

தனது தந்தம் ஓடித்து...

எழுதிய மகாபாரதம்...

அத்தனைக்கும்

சொந்தக்காரன்

இந்த விநாயகர்

யானையும் பாகனும்


யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது...

கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை... அதுவே அமைதியாக பாகனின் கட்டுப்பாட்டில் நிற்கும் போது அதிக மரியாதை... இறைவனை தனது முதுகில் சுமந்து செல்லும் அரிய வாய்ப்பு அதற்குத்தான்..

உலகில் முடி சூடிய அரசர்ளுக்கும் கூட கிடைக்காத பாக்கியம் யானைக்களுக்கே கிடைக்கிறது....

யானைக்கு வந்த வாழ்வு பார்த்தாயா??...கேலியாக சிரிக்கும் ஓர் மனிதர், கூட்டத்தின் ஓர் ஓரத்தில்...

அவருக்கு தெரியாது யாருக்கும் அடங்காமல் காட்டில் சுதந்திரமாக அது சுற்றிய நாட்கள் எத்தனையோ... 

வகைவகையான உணவுகள், ஆயினும் அது உணவு தேடவில்லை.பல நாட்கள் உணவை வெறுத்து பட்டினியில் கிடந்தது....உண்மை அன்பை தேடி மதம் கொண்டது... மலையும்,காடும், அருவிக்கரையும், ஆற்றின் ஓரங்களிலும் எத்தனை எத்தனையோ.....இடைஞ்சல்கள்

யானை தான் உண்ணும் தென்னை மட்டைகளை கூட பல முறை தரையில் தட்டும்.. ஏனென்றால் அதில் இருக்கும் எறும்புகளின் வேதனை கூட அறிந்து செயல்படும் ஓர் புத்திசாலி மிருகம் யானை...

பல கடினமான போராட்டங்களுடன் வாழ்ந்த அந்த மிருகம்.

கூட்டத்தில் இருந்து வெளியேறிய வெறியில்.. போகும் இடம் தெரியாமல் பல இடங்களில் தனிமையில் சுற்றி திரிந்தது. தன்னை போலவே அனாதையாக சுற்றி திரிந்து அன்பு தேடும் இன்னொரு யானை எங்கேயும் உள்ளதா என தேடியது..

அதன் அமைதியான தேடலை புரியாமல்... உனக்கு பசிக்குதா இந்தா பழம் சாப்பிடும் என்றே தனது கெட்ட எண்ணங்களை மனதில் மறைத்து வைத்து இனிமையான சொற்களை சொல்லி சாப்பிடும் பழத்தில் வெடி வைத்து விளையாடிய கயவர்கள் சிலர்.

யாரோ ஒருவர் செய்த செயலுக்காக மனித இனத்தை கண்டாலே கோபத்தில் கொப்பளித்து அந்த கொம்பன் யானை ரொம்ப பயங்கரமானவன் என்று பெயர் வாங்கியது 

அதை படைத்த இறைவனுக்கு மாத்திரமே புரிந்தது கொம்பன் கோபக்காரன் தான் ஆனால் அவனின் கோபம் கயவர்களின் மீது தானே தவிர நல்லவர்களின் மீது அல்லவே

யாருக்கும் தீங்கு செய்ய விரும்பாத அன்பே உருவான மிருகம்...ஏனோ மதம் பிடித்து காடுகளில் அலைந்த காலங்களில் தெரிந்து கொண்டது... தனக்கு துணையில்லை என்பது தான் பிரச்சினை என்று...பல விதமான கடினமான போராட்டங்களை கடந்து புரிந்து கொண்டது.. இந்த உலகில் எதிர்பார்ப்பே இல்லாமல் பழகும் மனிதர்கள் மிகவும் சிலரே..

அப்படிப்பட்ட சிலரை தேடி அலைந்தது.. ஆமாம் அதன் தேடலில் தனக்கு இணையான தன்னைப் போன்ற குணத்திலும் அன்பிலும் சிறந்த ஓருவனை கண்டது 

தனக்கு யாருமில்லை என்று தனித்து அலைந்த யானையின் அருகே இன்று நிற்கும் அதன் பாகன்.. 


யானை காட்டில் அலைந்து அன்பு தேடியது... 

பாகன் நாட்டில் அலைந்து மனிதரில் அன்பு தேடினான்...

இருவருக்கும் தேவை ஓன்று தான்.. .

அது அன்பு ...

எனவேதான் "அன்பே சிவம்" என்று எழுதப்பட்ட ஊரின் மிகப்பெரிய ஆலயத்தில் இருவரும் வாழ்கின்றனர் போலும்...

.

.

கொடுப்பதில் சிவனுக்கு நிகர் யார்..

"நாயிற் கிடையாய் கிடைந்த அடியாருக்கு தாயிற் சிறந்த தயவான தத்துவம் அவன்"...

.

.

அந்த பாகனுக்கும் யானை மட்டும் தான் சொந்தம்...

யானைக்கும் பாகன் மட்டுமே சொந்தம்...

ஆயிரம் பேர் வந்து அவர்களை பார்த்து விட்டு போனாலும் இருவரும் இடையே உருவான பந்தம் நிலையானது.... விசித்திரமான வரலாறும் கூட.......

.

.

.

யானையால் பாகனும், பாகனால் யானையும் அன்பில் ஒன்றுபட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை பரப்புகின்றனர்...

.

.

இருவரின் குணங்கள் கூட ஒன்றே...

.

என்றாவது ஓர் நாள் தனது கடந்த கால வலிகளை நினைத்து அவனையும் மீறி கண்கள் கலங்கும் போது, தனது தும்பிக்கையால் அது அவனிடம் விளையாடும்...

உனக்காக நான் இருக்கும் போது உனக்கு ஏன் கவலை என்பது போல... 

.

.


யானையும் கூட சில நேரங்களில் தனது கடந்த காலத்தை நினைத்து அழும் போதும்.. அதன் அருகே சென்று தும்பிக்கையை தடவிக் கொடுத்து அன்புடன் ஆறுதல் சொல்லுவான்...

.

யானை விநாயகரின் அன்பான உருவம்.

இருபது ரூபாய்.

 சாமி என் பிரண்ட் நல்லா இருக்கணும் அர்ச்சனை பண்ணுங்க ஆனால் நட்சத்திரம் தெரியாதே.. என்று சொல்லும் பல நல்ல மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்...20  ரூபாய் பணத்தை முதலில் தட்டில் வைத்து சூப்பரா பண்ணுங்க.. சீக்கிரம் அவன் வாழ்க்கையில் செட்டில் ஆகணும்... அப்பாவியாக சொல்லும் ஏழைகள்... அவர்களின் கள்ளமில்லா உள்ளம் தான் கடவுள் வாழும் இடம்

காலை டிபன்

 லாக்-டவுண் கதை...

.

.

காலை டிபன்.....


.

சமையலறையில் நேற்றைய நிகழ்வுகளை நினைத்து பார்த்து எரிச்சலாக வந்தது..

.

நேற்றைய இரவில் கட்டிலில் அவளை கட்டித் தழுவும் போது, கேட்டான்.. ஏண்டி உன் பிளவுஸ் கிழிச்சிருக்கு...வேற நல்ல சட்டை போட்டா என்ன???. 

.

.

ஏன் இதுக்கு என்ன குறைச்சல்...

.

.

உனக்கு இந்த கலர் நல்லா இல்லடி....

.

.

.

நீங்க தானே வாங்கி தந்தீங்க...இப்போ நல்லா இல்லை அப்படின்னா, நான் என்ன செய்ய

.

வர வர நீ நல்லா எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டே....

.

ஏங்க, நீங்க கேள்வி கேட்டா, பதில் சொல்லுறது தப்பா....எஜமானுக்கு கோபம் பொத்துகிட்டு ஏன் வருது... உண்மை கசக்குதோ

.

ஏய் லூசு நான் சொல்லுறது புரியுதா...லவ் பண்ணும் போது.நான் பத்து வார்த்தை பேசுனா.நீ ஓரு வார்த்தை பேசுவே... இப்போ உனக்கு திமிர் கூடிப் போச்சு

.

.

நல்லா யோசிச்சு பாருங்க.நான் உங்க பெயரை மட்டும் தானே கேட்டேன்... நீங்க தான் ஒருமணிநேரம் பேசுனீங்க...எப்பா... எவ்வளவு புழுகு.... இன்னும் நீங்க மாறவே இல்லை..

அவனின் மார்ப்பில் சாய்ந்தாள்..

.

ஏண்டி நல்லா கத்து வைச்சிருக்கே....என்னை அடிமைபடுத்துற மாதிரி

.

பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க... நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுறேன்...

.

உங்க அம்மா வீட்டுக்கு அடிக்கடி போறதுக்குக்கா....கல்யாணம் பண்ணுன..லூசு...

.

.

நான் எங்கே தாலி கட்டுனேன்...‌நீங்த தானே என் கழுத்துல கட்டுனீங்க... உங்க ஆத்தாகாரி அஞ்சு பவுன் செயின் செஞ்சு கொடுத்துட்டு என்னை சிறையில் போட்ட மாதிரி இங்கேயே அடைச்சு வைச்சிருங்காங்க.... ஓர் இடத்துக்கு வெளியே போக முடியலை..... இரண்டு தெரு தள்ளி இருக்கிற அம்மா வீட்டுக்கு போறதுக்கு கூட அவங்க துணையில்லாம போக கூடாது...

. ரொம்பவும் கண்டிஷன்...

.


எப்பவுமே, அவங்க பத்தி தான்.பேசுவியா..

.

பிறகு யாரை பத்தி பேசணும். மகராசா..நீங்களேசொல்லுங்க. அவங்களை பத்தி மாத்திரமே பேசுறேன்...

.

நான் என்ன சொல்ல வந்தேனோ.அதுவே மறந்து போச்சு...

.

ம்ம்ம்..சட்டை...

.

.

இந்த கிழிச்சதை போட்டு கிட்டு தான்.வெளியே போனியா....

.

இப்படி தெளிவா.கேட்க வேண்டி தானே.. அதைவிட்டு விட்டு...

.

ஏய் பதில் சொல்லுடி...சிரிக்காதே எனக்கு வயிறு எரியுது...

‌.

கொஞ்சம் இருங்க ஜஸ் வாட்டர் எடுத்துகிட்டு வர்றேன்.. ஜில்லுன்னு குடிங்க சுடு குறையும்...

.

.

முந்தானையை பிடித்து இழுத்தான்... கொஞ்சம் கூட வெட்கமின்றி. ஜஸ் வாட்டர் எடுத்து வந்தவள்.டம்ளரில் அதை நீட்டினாள்...

.

கொஞ்சமாவது உனக்கு வெட்கமாக இல்லையா...

.

நான் எதுக்கு வெட்கப்படணும்... என் புருஷன் கிட்ட. இருக்கும் போது...என்ன வெட்கம் வேண்டியிருக்கு.....

.

டம்ளரை வாங்கியவன் அதில் இருந்த தண்ணீரை அவளின் முகத்தில் வீசி எறிந்தான்...

.

அவளுக்கு தான் பெரிய தவறு செய்து விட்டோம் என்று தோன்றியது...தன் முந்தானையை சரிசெய்த படி தலையணை எடுத்துக் கொண்டு..பீரோ அருகில் சென்று படுத்துக் கொண்டாள்..

.

.

இப்போ ஏண்டி முரண்டு பிடிக்கிறே...வா வந்து கட்டிலில் படு...

.

.

எனக்கு எதுவும் வேண்டாம்... சத்தம் போடாதீங்க... உங்க அம்மா காதுல விழுந்தா.. ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க.... நம்ம கஷ்டம் நம்மோட... பாதியில் உதடுகளை கடித்து வார்த்தைகளை அணை கட்டினாள்..

.

.

ஏய் புரிகிற மாதிரி பேசுடி.... எரிச்சல் உண்டாக்காதே...

அவள் மெளனமாக இருந்தாள்...

.

.

அவளது முதுகை தடவிவிட்டான்.... நா.....எழுதிக்காட்டினான்.... பிஸ்கட் டேபிள்ல இருக்கு எடுத்து போடுங்க......

உங்க ஜிம்மிக்கு தூக்கம் வருது....பிறகு கோபத்தில் கடிச்சுடும்....

அவன் எதுவுமே அலட்டவில்லை.....  அருகே கிழித்த இடத்தை தொட்டான்...

.

.

போர்வை எடுத்து மூடிக்கொண்டாள்... அவளுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியது...

.

அவன் கொஞ்சி கெஞ்ச வேண்டும் என்று ஏங்கினாள்...எதிர்பார்த்தாள்...

.

.

அவனுக்கு கோபம் கோபமாக வந்தது...உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா.எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்...போய்யும் போய் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன் பாரு.. என் புத்தியை....

.

.

அவசரத்தில் வார்த்தைகளை கொட்டினான்..

.

.

அவள் தூங்கிவிட்டது போல இருந்தது...

.

கட்டிலில் வந்து அமர்ந்தான்... இரண்டு அடி தள்ளி இருப்பவளின் இருப்பு ஏதோ வானத்து நட்சத்திரம் போல தோன்றியது...

.

.

அவளோ தூங்கவில்லை.போர்வைக்கு அடியில் தன்னை மறைத்துக் கொண்டாள்... பீரோவில் இருவரும் முதன்முதலாக ஒட்டிய குட்டி பாலமுருகன் படத்தை ரசித்தாள்...இதை பார்த்து கொண்டே இரு.. கூடிய சீக்கிரம். .... வந்து பிறப்பான்.. அவளின் காதில் உதடுகளால் பேசி இரண்டு மாதங்கள் ... சந்தோஷமாக உணர்ந்தவள்.திரும்ப நினைத்தாள்... அப்போது..

.

அவளின் கால்கள் போர்வைக்கு வெளியே தெரிந்தது கண்டு அருகே வந்து போர்வையை விலக்கினான்... அவள் கண்களை நன்கு மூடிக்கொண்டு தூங்குவது போல செய்கை செய்தாள்...

.

.

போர்வை எடுத்து நன்றாக போர்த்தி விட்டு...தூங்கி விட்டாள் என நினைத்து தலைவருடினான்....

.


நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணுறேன் தெரியுமா...புஜ்ஜிம்மா....

தன்னை படாதபாடுபட்டு கட்டுப்பத்தியபடி இருந்தாள்..

.

மீண்டும் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

.

அவள் திருப்பி பார்த்தாள்.அவனோ சுவரை பார்த்தவாறு படுத்திருந்தான்...

.

சரியாக இன்றுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேதியில் தான் அந்த கருப்பு பிளவுஸ் எடுத்து கொடுத்தான்... இந்த கலர் உனக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும்..... இன்று கூட எல்லாம் நினைவில் இருந்தது அவளுக்கு...

.

ஏனோ கல்யாணத்திற்கு பின் மரியாதை குறைந்து போச்சு...லூசு.. வாயாடி..மக்கு பாப்பா.. இன்னும் எத்தனையோ பட்டங்கள் சூட்டி மகிழ்ந்தான்..

.

.

கோபத்தில் ஏதாவது கேட்டால் அவ்வளவு தான்... காதின் ஓரத்தில் விரல்களால் கோலமிட்டு புதிய உலகத்தை காட்டிவிடுவான்....

.

மறுநாள் காலை சத்தமாக கூப்பிடுவான்.. ஏய் லூசு...மக்கு பொண்டாட்டி...சீக்கிரமா....காப்பி கொண்டு வா... நாய்குட்டி.....புஜ்ஜிம்மா.....

.

.

அவனின் பேச்சில் அன்புடன் கலந்த கேலியை ரசிப்பாள்...

.

.

காப்பி டம்ளரை நீட்டியவளிடம்...வர்ணனை போதுமா..இல்லையென்றால்....கேட்டபவனிடம்.

.

உங்க இஷ்டப்படியே கூப்பிடுங்க...தனது காது ஓரத்து முடியை வருடியவளை அணைக்க நிறைந்தவனை......

.

உங்க மாமனார் வர்றார்...என்று சொல்லி விட்டு சிரிப்பாள்..அவனோ அசடு வழிந்தான்... 


சொந்தக்காரங்க யாராவது வந்து

குழந்தை பத்தி பேச ஆரம்பித்தால் அது யாராக இருந்தாலும்..வேற ஏதாவது இருந்தா பேசுங்க.... கடவுள் எப்போ தருவாரோ.. அப்போது தான் கிடைக்கும்... என்பான்..

.

.

இதை பற்றி அவள் கேட்டபோது... இப்படித்தான் எங்க அத்தைக்கு குழந்தை இல்லை என்று சொல்லி மாமாவுக்கு இன்னோர் கல்யாணம் செஞ்சு வைப்பாங்க...அத்தை எவ்வளவு கஷ்டப்பட்டுது தெரியுமாடி உனக்கு...

.

.

அவனின் இந்த பதிலில் அவனின் பயத்தை உணர்ந்தாள்... குழந்தை பிறந்தா ஓர் குழந்தை .. இப்போ இரண்டு குழந்தைகள் என்று கட்டிப்பிடித்து முத்தமிடுவான்...

.

.

நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது..கேவி கேவி அழுதாள்....

.

.

இவளின் சத்தம் கேட்டது... இப்போது பேசாமல் இருப்பதே நல்லது என்று அவனுக்கு தோன்றியது.... நேத்து பெரிய மாமாவும் அத்தையும் வந்தாங்க.அந்த கிழவி...வயசான காலத்தில் சும்மா இருக்க வேண்டியது தானே...

நம்ம இல்லாத போது எதாவது குழந்தை பத்தி கேட்டு இவளை .....நினைக்கும் போது எழுந்து போய் அடிக்கணும் போல இருந்தது.... யோவ் மாமா உன் பொண்ணை கட்டவில்லை என்று தானே இப்படி பண்ணுறே... நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு....பல நினைவுகளுடன் தூங்கி போனான்....

.

காலை எழுந்தவுடன் அருகே பார்த்தான்.. பாய் சுருட்டி அழகாக அதன் இடத்தில் இருந்தது...

.

.

"ஏய் லூசு ஆசையா கூப்பிட வேண்டும்" போல இருந்தது..ஏதோ நம்மகிட்ட மறைக்கிறா...அதை கண்டுபிடிக்கணும்...ஏதோ சொல்ல வந்தா.. "நம்ம கஷ்டம் நம்மோடு" தலைவலியா இருந்தது....

.

அருகே காப்பி டம்ளருடன் வந்தவளிடம்... இன்னும் பல் தேய்க்க வில்லை...


எத்தனை நாளைக்கு இந்த புது பழக்கம்....

.

.

இனிமேல் அப்படித்தான்... எனக்கும் ரோஷம் வரும்...எழுந்து வாசலுக்கு போனான்...

.

.

அந்த கருப்பு கலர் பிளவுஸ் வாசலில் கைப்பிடி துணியாக கிடைத்தது...

.

.

அம்மா... புது துணி எதுக்கு இங்கே கிடக்கு...

.

.

எனக்கு என்னப்பா தெரியும்...உன் பொண்டாட்டி கிட்டே போய் கேளூ.... நேத்து சாயங்காலம் நீ வருவதற்கு கொஞ்சம் நிமிஷம் முன்னாடி குளிச்சுட்டு வந்து அதை எடுத்து உடுத்துனா...ஏதோ கைக்குள் கிழிச்ச மாதிரி இருக்குன்னு சொன்னதை கூட கவனிக்கவில்லை....சரி நான் பெரிய மாமா வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் வருகிறேன்... அவன் பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னிக்கு வர்றதா...வந்து சொல்லிட்டு போனான்...

.

.


.

அவனின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அதில் இருந்தது...

.

நேராக சமையலறை பக்கம் போனான்..காபி மேஜையில் இருக்கு...ஏதோ ஓர் பாவனையில்..

.

.

அந்த கருப்பு பிளவுஸ்...ஏதோ சொல்ல தொடங்கியவனை..... அதான் உங்களுக்கு பிடிக்கலையே.பிறகு எனக்கு எதுக்கு அது....

.

.

இல்லடி.. அது நான் உனக்கு வாங்கி கொடுத்த முதல் பொருள்....

.

.

அது எனக்கு நல்லாவே நினைவு இருக்கு.. நேத்து தேதி உங்களுக்கு மறந்து போச்சு....

.

.

காலண்டர் பார்த்து விட்டு தலையில் கைவைத்தான்....

.

.

உங்களுக்கு எப்போதும் பொறுமை . கிடையாது...

.

மெதுவாக அவளை பின்புறமிருந்து அணைத்து தாலியை தொட்டு சொன்னான்.. அது உனக்கு இப்போ தான் தெரியுதா...

.

.

அவனின் முகத்தில் முகத்தை சாய்த்தபடி கேட்டாள்.. காலைக்கு .என்ன டிபன் செய்யணும்...

சிகப்பு பேனா

 சிகப்பு பேனா.

.

.


சாப்பிட மறந்தியா... ஹோம் ஓர்க் செய்யலை.. பென்சில் டப்பா மறந்து வீட்டில் வைச்சுட்டு வந்துடுட்டேன்... இந்த காலாண்டு பரீட்சையில் மட்டும் தான் நீ  எல்லாம் பாடத்திலும் பாஸ், அதுவும் 45% தான். என்னவோ பள்ளிக்கூடத்தில் பர்ஸ்ட் ரேங்க் எடுத்த மாதிரி திரியாதே... 

.

நீயெல்லாம் எதுக்குடா பள்ளிகூடத்துக்கு வரணும்... 2ம் வகுப்பு டீச்சர் எல்லோருக்கும் முன்னால் திட்டினார்கள்....

.

போடா போ... போய் வாசலில் முட்டி போட்டு நில்லு..நாலு பேரு உன் பார்த்து சிரிச்சா தான் புத்தி வரும்... அடைமழை போல சொல்லி முடித்தாள் இங்கிலீஷ் டீச்சர் விஜி மேடம்...

இல்லை மேடம், ஏதோ அவசரத்தில் மறந்து விட்டேன்...

டீச்சர், "என்கிட்ட இரண்டு பேனா இருக்கு'.. சொல்லிக்கொண்டே டீச்சரின் அனுமதியை கூட எதிர்பாராமல், ராம் நீ வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்...

.

.

இதை கவனித்த டீச்சருக்கு இன்னும் கோபம் அதிகமானது...முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள நீயெல்லாம் குரூப் சேர்க்க அரம்பிச்சுட்டே...உன்னை எல்லாம் சீர்திருத்த பள்ளிகூடத்திலே கொண்டு சேர்க்கணும்... என் உயிரை வாங்கணும் வந்து சேர்ந்த மாதிரி இருக்கு...

.

கவிதா நீயெல்லாம் இவன் கூட சேராதே... இவனுக்கு இரக்கமே காட்டக்கூடாது...

.

போடா, போ...

..


மெதுவாக அந்த பள்ளியில் நடுவே அமைந்த ப்ரேயர் இடத்தில் சென்று முட்டிக்கால் போட்டு நின்றான்....

.

.

.பாடத்தை நடத்த தொடங்கிய டீச்சர்....

.

.

வெயிலில் மண்டை காய்ந்து தலைசுற்றுவது போல இருந்தது... சொன்னால் நல்லா நடிக்கிறேன்னு சொல்லுவாங்க...

.

.

ஜன்னல் ஓரத்தில் இருந்து கவிதா செய்கை காட்டினாள்..

அந்த குரோட்டஸ் இலையை பிச்சு அது மேல் முட்டி போட்டு நில்லு.கால் வலிக்காது.. நான் உனக்கும் எழுதி தருகிறேன்.

.

சற்று நேரம் கழித்து அந்த வழியாக பள்ளிக்கூடத்தின். ஆயா பேச்சியம்மா வந்தாள்

செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல நின்று கொண்டு மெதுவான குரலில் கேட்டாள்....


.

விஷயத்தை சொன்னான். லஞ்ச் பாக்ஸ் கூட மறந்து வைச்சுட்டு வந்துட்டேன் பேச்சிம்மா...


.

கவலைப்படாதே கண்ணா... நான் வேணா  மதிய சாப்பாட்டு  கொண்டு வரவா..ஆனால பழையது தான் இருக்கு. ???

.


வேண்டாம், பேச்சிம்மா...... ஓரு நாள் பட்டினி கிடந்தால் பரவாயில்லை.. எனக்கு பழக்கம் தான்... வயதான கிழவன் போல பேசினான்.

.

.

பேச்சிம்மா, அவன் கன்னத்தை தடவியபடி சொன்னாள்.. "உனக்கு எல்லாம் புரியுது... சின்ன வயசுல உனக்கு ஏன் தான் இத்தனை பெரிய கவலை...பேசுடா செல்லக்குட்டி....இந்த உலகத்துல பேசுற பிள்ளை தான் பிழைக்கும்"...

சொல்லி விட்டு போனாள்...


.

பெல் அடித்தவுடன் விஜி டீச்சர் அடுத்த க்ளாஸ் போகும் போது எதோ சண்டைக்காரனை முறைப்பது போல சென்றார்....

.

.

வேகமாக ஓடி வந்த கவிதா கேட்டாள்.. ஏண்டா ரொம்ப வலிக்குது தா...

.

.

ம்ம்ம்....

.

.

இந்தா, பேனா...எங்க அப்பா எனக்கு இரண்டு பேனா கொடுக்குறதே.அடுத்தவங்களுக்கு கொடுக்கத்தான்...

.

.

அடுத்த இரண்டு க்ளாஸ் அமைதியாக போனது...

.


மதிய வேளையில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்....

.

.

தனியாக ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு, வேப்பமரத்தின் மீது விளையாடும் அணில்கள் பார்த்து சிரித்தபடி இருந்தான்.


.

டேய், சாப்பிட வா... என்னுடைய லஞ்ச் பாக்ஸ் நம்ம ஷேர் பண்ணி சாப்பிடலாம்... இன்னிக்கு எங்க அம்மா இடியாப்பம் செஞ்சாங்க.. ரொம்பவே நல்லா இருக்கும்..


.

இல்லை கவிதா..நீ போய் சாப்பிடு..

.

நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்... பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்..

.

நேத்து உங்க வீட்டில் பெரியவங்க சண்டைய???


.

ஆமாம்  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.. இரண்டு பேரில் ஒருத்தனை நான் வளர்த்துக்கிறேன்.. நீ அவனை கூட்டிக்கொண்டு உன் அம்மா வீட்டுக்கு போ..அப்போ தான் அறிவு வரும்..எது பேசுனாலும். எதிர்த்து எதிர்த்து பேசுறே... அப்படின்னு அப்பா சொன்னார்..எதற்காக சண்டை என்றே தெரியலை... நான் தான் பாஸ் பண்ணிடேனே.பிறகு எதுக்கு அவங்க சண்டை போட்டாங்க..  

.

பெரிய மணுஷி போல கதை கேட்டவள் பதில் இன்றி இருந்தாள்..



அந்த அணில் எவ்வளவு வேகமாக போகுது பாரு... என்று சந்தோஷமாக சொன்னான்..

.

எப்படி இவ்வளவு கஷ்டத்தில் சிரிக்க முடியுது...

எப்போதும் வீட்டை பத்தி நினைச்சு தான் உனக்கு படிப்பு வரலையா??

.

அது எல்லாம் தெரியாது..... எனக்கு படிப்பே  வேண்டாம் கவிதா... படிச்சவங்க தான் சண்டை போடுறாங்க...படிக்காதவங்க சண்டை போடாம சந்தோஷமாக இருக்காங்க... எங்க அம்மாவும் அப்பாவும் எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கணும்... எனக்கு அதுவே போதும்... ஆனா நான் என்ன செய்யணும்..அது தான் தெரியலை...


கேட் வாசலில், அவனின் பெரியம்மா லஞ்ச் பாக்ஸ் மற்றும் பென்சில் பாக்ஸ் சகிதம் வந்து நின்றாள்..

.

நீ எதுக்கு இப்படி கஷ்டப்படுறே.. நீ வீட்டில் படுற கஷ்டம் போதாதா.. எரிச்சலாக..


.

நீ கூட என்மேல் கோபப்படுறே.... உனக்கு பிடிக்கலை என்றால் சொல்லு அம்மா...செத்து போறேன்...வர வர யாருக்கும் என்னை பிடிக்கவில்லை... விஷம் வாங்க கூட அப்பா காசு தரமாட்டார்... உனக்கு தெரியாதா??.

கை வேற கரண்ட் பட்டு நொண்டியா போச்சு...

என்ன செய்ய, என் வயித்துலஎதுவுமே பிள்ளை பிறக்கவில்லை.. நான் செஞ்ச பாவம்... புலம்பினாள்..


.

நீ செத்து போனா, எல்லாரும் என்னை அடிப்பாங்க.நீ எங்கேயும் போகாதே...

.

வாணியம்மா கைகளில் முத்தமிட்டான்.. இந்த கையை குறை சொல்லாதே வாணிம்மா......இது தான் கேசவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கு...

அப்பா என்ன திட்டினாலும் பொறுத்துக்கோ.... நேத்து தான் கதை சொல்லை.. இன்னிக்கு ராத்திரி நீ அந்த யானை கதை எனக்கு சொல்லுவியா...

.

நான் உயிரோடு இருக்கிறதே, உன் அன்புக்கு தானே கேசவ குட்டி...

.

சரி, நீ பத்திரமாக வீட்டிக்கு போ...ரோட்டுல நிறைய பஸ்ஸு போகும்...


.

லஞ்ச் பாக்ஸ் திறந்து பார்த்தால், வெண்டைக்காய் பொரியல்... புளிக்குழம்பு... கொஞ்சம் கூழுவத்தல்...இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.... தெரியுமா உனக்கு???

.

கவிதா கேட்டாள்... இப்போது வந்துட்டு போறது யாரு ராம்...

.

எங்க அம்மா...

.

அப்போ போன வாரம் வந்தது...

.

அதுவும் எங்க அம்மா தான்...

.

உனக்கு எத்தனை அம்மா... 

.

எனக்கு இரண்டு அம்மா.. அவங்களுக்கு நான் என்ன பெயர் வைச்சு இருக்கேன் தெரியுமா???.

.

உதடுகளை பிதுங்கி தெரியாது என்றாள்.

.

ஓரு அம்மா சிகப்பு ருக்மணி...

இன்னொரு அம்மா கருப்பு ருக்மணி...

எங்க அப்பா தான் கிருஷ்ண பகவான்.....

.

ஜன்னல் வழியாக இதை வேடிக்கை பார்த்த  விஜி மேடம்.அவன் அருகே வந்து அவனிடம் கொடுத்தாள் தனது சிகப்பு பேனா....

.

.

இதில் இருந்த வாசகம் "HERO"

ராம் ஏன் புகழப்படுகிறார்...

பல்லாயிரக்கணக்கான

வருடங்களுக்கான

வரலாற்றை தன்னகத்தே கொண்டது

பாரத நாடு.. இந்த நாட்டை எத்தனை எத்தனையோ

அரசர்ள் ஆண்டுவிட்டனர்.

ஆயினும் அத்தனை அரசர்களையும்

வரலாறு தன்னுள் சேர்த்து வைக்கவில்லை.

மிகச் சில அரசர்களையும்

மக்களின் தேவையை புரிந்து மக்களுக்காகவே 

வாழ்ந்த அரசர்களையும்

வரலாறு மறக்காமல் தன்னுள் பத்திரப்படுத்திக் கொண்டது.

அப்படிப்பட்ட அரசர்களில் ஒருவர் தான் இந்த ராம்.

கடவுளின் அவதாரமாக அனைவரும் கொண்டாடினாலும் 

தனது வாழ்நாளில் தனது எந்த விதமான ஆன்மீக சக்திகளையும்

சாமானிய மனிதரிடம் கூட காட்டிக்கொள்ளாமல்

யதார்த்தமான மனிதராக தசரதனின் புதல்வனாக பிறந்து

சாதாரண மனிதனின் வாழ்நாளில் சந்திக்கும்

எல்லா இன்ப துன்பங்களையும்

கடந்து மக்களின் மனதில் மன்னராக உயர்ந்து நின்ற தசரதராமன்.

 இந்த நேரத்தில் எல்லோரின் மனதில் எழும் 

ஓர் சாதாரணமான கேள்வி தான் இது..

தம்பி பரதன்,

அண்ணா, "நீயே நாட்டை ஆள தகுதியானவன் "

என்று அரியணையை தந்த போதும்..

தந்தைக்கு தாய் கொடுத்த வாக்கை

காப்பாற்ற கானகம் சென்று பஞ்சவடியில்

தங்கியவன்.....ராம்...ராம்...ராம்...

இந்த  ராம் ஏன் புகழப்படுகிறார் ... ???

இதை யோசித்துப்

பார்த்தால் உண்மை புரியும்..

அரசின் தலைமை பீடம் தேடி வந்த போதும்..

ஆட்சி அதிகாரத்தை,

பதவியை விரும்பாதவர்....

தன்னை விட பிறரால் சிறந்த

ஆட்சியை கொடுக்க முடியும் 

என்று வாழ்ந்து காட்டியவர்...

அனைவரும் அழைத்தாலும்

14 வருடங்களுக்கு காட்டில் வாழ்ந்தவர்...

ஆடம்பரத்தை துறந்தவர்....

தந்தை கொடுத்த வாக்குறுதியை

காப்பாற்றியவர்....

காடுகளில் சென்று கஷ்டத்தை அனுபவித்தவர்...

கஷ்டத்தை கூட சுகமாக நினைத்தவர்..

தன் மனைவியை தவிர பிறர்

பெண்களை ஏறிட்டு பார்க்காதவர்...

ஜனகனின் மகள் ஜானகியை

மணந்த தசரத புதல்வன்

காதலில் மயங்கும் ஓவ்வொரு

மனிதரின் மனதிற்குள்...

வெளியே சொல்லாத எதிர்பார்ப்பு...

ராமனும் சீதையும்...

 

 

 


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...