இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.

 


ஆற்றின் ஓர் கரையில் இருப்பவர் மற்றொரு கரையில் இருப்பவரை பார்த்து நாம் இருக்கும் இடத்தை விட அவர்கள் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது என நினைப்பதே மனித இயல்பு.


ஓர் வேளை நீங்கள் மறுகரைக்கு சென்றால் அங்கும் இதே போன்ற வாழ்வும் சூழலும் தான் இருக்கும். வெளிநாடு போனால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் போனவர்கள் சில நாட்களில் தனது சொந்த ஊரை சிறந்தது என நினைப்பது போன்றதே.

வாழ்வில் யாருக்கும் தான் பிரச்சினை இல்லை.இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் எப்படி சமாளிக்க முயற்சி செய்து வெற்றி பெறுவது என்பதே வாழ்க்கை.


உண்மையை சொன்னால் மனித வாழ்க்கை நீர் குமிழ் போன்றது.இதை அறியாத மனிதரே இது எனது அது உனது என பணத்திற்கும் வேலைக்கும் அடுத்தவன் முதுகில் குத்தி தன்னை முன் நிறுத்துகிறான்.

மனிதன் படைத்த பணத்திற்காக முயல் போல் ஓடும் மனிதன்,தனது ஓட்டத்தின் வேகத்தில் கடவுள் படைத்த அன்பு பாசம் சக உயிருக்கு உதவி செய்தல்... வயதான தனது பெற்றவரை கவனிப்பது தன் சார்ந்த சொந்த பந்தங்களை பேணுவது போன்ற உயர்ந்த மனித இயல்புகளை மறந்து விடுகிறான்.


இந்த உலகில் யாரும் 1,000 வருடங்களுக்கு வாழப் போவதில்லை.

அதிகபட்சம் 80 வயது வாழத்தாலே ஆச்சரியம்.


மனித வாழ்வில் கடவுள் உனக்கு தந்த சிறந்த விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

ஏன்னா உங்களுக்கு இறைவன் எல்வளவோ சிறந்த விஷயங்கள் தந்து இருக்கிறார்.அப்படி இருந்து நிம்மதியே இல்லாதது போல் நீங்கள் வாழும் போது.


உங்களிடம் இருப்பது கூட இல்லாத இன்னொரு மனிதர் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்.

உங்களிடம் இருக்கும் பணம் பங்களா பேங்க் பேலன்ஸ் அல்ல வாழ்க்கை.. வாழ்க்கை என்பது நிம்மதியா வாழ்வது.


மனிதன் படைத்த பணத்தை விட கடவுள் படைத்த பாசமே உயர்ந்தது.


வாழுங்கள் உங்களின் சொந்த பந்தங்களுடன் அன்பான பாசமான வாழ்வை..


ஏன்னா எல்லோரின் மனதிலும் தனக்கு கிடைத்த விஷயங்களை விட கிடைக்காத விஷயங்களின் மீதே ஈர்ப்பு இருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை..


இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.

உனது நண்பன்

 

தலைவனாக மாறும் ஓவ்வொரு மனிதனின் மனதிலும் அதிகப்படியான அன்பும் ஆசைகள் பாசமும் எண்ணற்றதாக இருக்ககறது...அவற்றை சுற்றி இருப்பவர்கள் புரிந்தும் அவனுக்கு எதையுமே செய்து கொடுக்காத காரணமாக..பிறரை தண்டிக்க மனமின்றி தன்னை தானே தனிமைச்சிறை அடைத்து கொண்டான்.. அவனுக்கு காலம் தரும் பேர் தான் தலைவன்.


தலைவனாக மாறும் ஓவ்வொரு மனிதனும் மிகவும் இளகிய மனம் படைத்தவன். தனது பேச்சோ செயலோ பிறரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணரும் ஓவ்வொரு மனிதனும் அமைதியாகிறான் 

நீங்க ஏன் இப்படி நடந்து கிட்டே... நீங்க இப்படியெல்லாம் செய்வே என்று நாங்க நினைச்சு கூட பார்க்கலை என்று அந்த பெரிய மனுஷனை சுற்றி நின்று பேசுபவர்களுக்கு.. எப்படி சொல்லி புரிய வைப்பது.

இருவரின் வாழ்வில் அவர்களுக்குள் ஏற்பட்ட அன்பின் வெளிப்பாடு....

இவன் நமக்கு தருவான் என்று நம்பிக்கையில் கேட்கிறான்.ஆனால் தாமதமாக தான் புரிகிறது.

எவ்வளவோ நம்பிக்கையான வார்த்தைகளை எல்லாம் பேசியவர்கள் சுயநலவாதிகள் என்பது காலம் தானே காட்டுகிறது.


இந்த உலகில் பணம் மட்டும் தான் வாழ்க்கை.அந்த பணத்தை எப்படியெல்லாமோ சம்பாதிக்க துடிக்கும் அவசர கதி கூட்டம்..

அவசரகதி கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி... கஷ்டப்படுவது மனிதாபிமானமும் உண்மை அன்பும் தான்.

பணத்தை சம்பாதிக்க போலியாக சிரித்து போலியாக பேசி நடிக்கும் மனிதர்களின் மனதில் எதிராளியும் அப்படித்தானே என நினைக்கிறான்.

உண்மையான கள்ளமில்லாத அன்பும் பாசமும் நேசமும் தேடியவனோ, பிறரை தண்டிக்க மனமின்றி தன்னை தானே தனிமைச்சிறை அடைத்து கொள்கிறான்.


பல நேரங்களில் தனிமையில் தன்னை தானே அடைத்துக் கொண்டு உதட்டில் புன்னகையுடன் சிரிக்கிறான்...உனது அன்பை உண்மை என்று நம்பி ஏமாந்த உனது நண்பன்.


இறைவன் உலகில்

 

கை காசு நிறைய 

கிடைத்தவுடன் தனது 

பெற்றோரை முதியோர் 

இல்லத்தில் சேர்த்து விடும் 

பல மக்கள் இருக்கின்றனர்...

ஏனோ ஏழை மற்றும் 

நடுத்தர குடும்ப மக்கள் தான் 

வயதான பெற்றவரை 

வேறு வழியின்றி பராமரிப்பு செய்கின்றனர்.. 

தினமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு ...

ஏனெனில் தனக்காக பாடுபட்டவரை 

பாதுகாக்க நினைக்கும் சிலரையும் 

இறைவன் உலகில் படைத்து இருக்கிறானே

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...