மழையின்

 மிகப்பெரிய மனப்போராட்டத்திற்கு பிறகு இந்த விஷயத்தை கடவுளிடம் சென்று முறையிடுவது தான் நல்லது என்று மழை ஆண்டவனிடம் சென்று முறையிட்டது..


கடவுள் தன் முன்னால் வருத்தமான முகத்துடன் வந்த மழையிடம் கேட்டார்.


ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார் என்று .

கடவுளே நான் உங்களின் ஆணைப்படி தான் செயல்படுகிற் ஆனால் மக்கள் என்னை மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் திட்டுகிறார்கள்...


இனிமேல் நான் வருடத்திற்கு ஓர் இரு முறை மட்டும் தான் பூமிக்கு போக நினைக்கிறேன்.

அப்படியே போனாலும் சில நிமிடங்களுக்கு தூரலாகவே செல்வேன் மழையாக பெய்ய விருப்பமில்லை...


கடவுளின் சபையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர்...


சில நொடிகளில் எல்லா தேவ தூதர்களும் இந்த கேள்வி பதில் நாடகம் கூட கடவுள் விருப்பத்தின் படி நடக்கிறது என்பதை உணராமல்.

ஆளாளுக்கு ஓர் கருத்தை முன் வைத்து மழையை குற்றம் சாட்டினர்....


உன்னை யார் விட்டாமல் பெய்ய சொன்னது.... நேத்து இரண்டு நாளில் மட்டும் ஆறுமாதம் பெய்ய வேண்டிய அளவை ஓர் நேரத்தில் பெய்து விட்டாய்..

பல நாட்களாக என்னுள் இருந்த வேதனையை மேக வெடிப்பாக பெய்து விட்டேன் என்று சாக்கு போக்கு சொல்கிறாயே.. இப்படி நீ செய்வதால் தான் மக்கள் உன்னை திட்டுகிறார்கள் ஓர் தேவதூதன் மக்களுக்காக பேசினார்..


நீங்கள் சொல்லுவது மிகவும் சரிதான் கடவுளின் உள்ளப்படி மாதம் ஓர் முறை எல்லா இடத்திலும் அளவாக மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த மழை வர வர ரொம்ப தன் இஷ்டப்படி நடக்கிறது.ஆறு மாதத்திற்கு ஓர் முறை ஓரே நாளில் பெய்து ஊரையே வெள்ளக்காடாக மாற்றி விடுகிறது...

நான் என்ன நண்பரே செய்ய முடியும். வெயில் சூடாக அடித்து கடலில் உள்ள காற்றை மேகத்திற்கு அனுப்புகிறான்.. நானும் அதை மேகமாக மாறி மரங்களை தேடுகிறேன்... ஏனென்றால் மரம்  இருக்கும் இடத்தில் தான் எங்களின் மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்ய முடியும்...

இது கடவுள் ஏற்படுத்திய இயற்கையின் முறை....

நீங்கள் தேவையில்லாமல் பேசாதீங்க... ஏன் இப்படி ஓரே நாளில் இத்தனை வேகத்தை மக்களிடம் காட்டிடீங்க அதுக்கு பதில் சொல்லுங்க....


பதில் எதுவுமே சொல்லாமல் மழை அமைதியாக நின்று கொண்டு இருந்தது...

கடவுள் மழையை நோக்கி கேட்டார்... அவர்களுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்.என்னால் தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும்....

மழைக்கு அவரின் பேச்சு தைரியமூட்டுவதாகவும் உன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லு என்பது போலவும் இருந்தது...

உலகை படைத்து காத்து வரும் கடவுளே தன் கருத்தை கேட்க விரும்புவதை நினைத்து பெருமையுடன் தைரியூஅதை வரவழைத்து கொண்டு சபையை நோக்கி திரும்பினார்.

அன்பான தேவதூதர்களே, மகான்களே, மனிதனாக பிறந்து உலகில் தான தருமங்களும் புண்ணிய செயல்களும் செய்து தேவ தூதர்களுக்கு இணையாக அமர்ந்திருக்கும் அனைவரையும் மனதார வணங்குகிறேன்...


உங்கள் அனைவருக்கும் நான் கடவுளின் ஆணைப்படி வெப்பக் காற்றை குளிர்ந்த மேகங்களாக மாற்றி மழை தருவிக்கிறேன்....


கால்நடை அபராதம் சற்றே யோசிப்போம்

ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை சொல்ல வழி சொல்வதே ஜனநாயகம்

காலையில் எழுந்தவுடன் காபி..டீ வேணும்.பால் தயிர்.. நெய் எல்லாமே வேணும் ஆனா அதை தரும் மாடுகள் மட்டும் வேண்டாம்..போல...

ஆடு மாடு கோழி போன்றவை இயற்கையின் படைப்பு.. மனிதன் மட்டும் தான் ஊரில் வாழ வேண்டும் என்றால் எப்படி... பலரும் ஏதோ ஆடு மாடு மேய்ப்பர்களை கேவலமாகவும் கேலியாக எழுதியுள்ளனர்...ஆடு மாடுகளால் ஏற்படும் விபத்தை விட Bike , Car Lorry , bus இவற்றில் ஏற்படும் விபத்துகள் அதிகம் அதற்காக அவற்றை தடை செய்ய முடியுமா..... கால்நடை இல்லாமல் விவசாயம் இல்லை...

மிருகங்களும் இயற்கையின் சமன்நிலைக்கு மிகவும் தேவை என்பதை உணருங்கள்...ஆடு மாடு வளர்க்கும் ஏழைகளின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

யார் இந்த ரஜினி ?


சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பாலும், ஸ்டைலான பாவனைகளாலும் ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தவர். ஆனால், யாராவது அவரிடம், "ஐயா, நீங்கள் அசாதாரண உயரங்களை அடைந்துள்ளீர்கள். இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டால்,


அவர் புன்னகைத்து, "எல்லாம் கடவுளின் கருணையும் என் பெற்றோரின் ஆசீர்வாதமும்தான்" என்று சொல்வார்

அதற்காக நீங்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே சரியென்று ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்களின் சில கருத்துக்களில் மாறுபடுகிறேன்..

ரஜினி என்பவர் மாஸ் ஹீரோ என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ரஜினி மாஸ் ஹீரோவா.அல்லது எல்லோரையும் போல சாதாரண ஓர் நடிகரா......

ரஜினியின் பட வெற்றிகளை முத்து பணத்திற்கு முன்...முத்து வெற்றிக்கு பின் என்று இரண்டு விதமாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.

கவிதாலயாவின் அனைத்து படைப்புகளில்,  கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அதைப்போலவே பாலசந்தர் இயக்கிய படங்கள் எல்லாமே சாதாரண மனிதனின் வெளிப்பாடுகளே.

தனது எல்லா படைப்புகளிலும் புதுமையான கருத்துக்களை சொல்லி படங்களில் வித்தியாசம் காட்டியவர் K.B

எல்லோரும் ஊட்டி குத்தாலம் என்று அவுட்-டோர் போகும் காலத்தில்.

சில சுவர்களுக்குள் படத்திற்கான கதையை எழுதி குறைந்த செலவில் நாகேஷ் அவர்களை அறிமுகபடுத்தி, அவரின் திறமையை உலகறியச் செய்தவர் K.Balachander.


இந்த உலகில் மற்றவர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்துவிடும் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். இன்றுவரை திரு. ரஜினி தனக்கு வாய்ப்பளித்த தனது குருவான கே.பி.யை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.


ரஜினி தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நிறைய சாதித்துள்ளார் என்று அனைவரும் கூறலாம். ஆனால் என் பார்வையில், அவருடைய பணிவு, அடக்கம் மற்றும் தனது குருவுக்கு அவர் காட்டும் மரியாதை ஆகியவையே அவருடைய வெற்றிக்குத் தூண்களாகும் என்று நான் கூறுவேன்.

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...