மிகப்பெரிய மனப்போராட்டத்திற்கு பிறகு இந்த விஷயத்தை கடவுளிடம் சென்று முறையிடுவது தான் நல்லது என்று மழை ஆண்டவனிடம் சென்று முறையிட்டது..
கடவுள் தன் முன்னால் வருத்தமான முகத்துடன் வந்த மழையிடம் கேட்டார்.
ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார் என்று .
கடவுளே நான் உங்களின் ஆணைப்படி தான் செயல்படுகிற் ஆனால் மக்கள் என்னை மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் திட்டுகிறார்கள்...
இனிமேல் நான் வருடத்திற்கு ஓர் இரு முறை மட்டும் தான் பூமிக்கு போக நினைக்கிறேன்.
அப்படியே போனாலும் சில நிமிடங்களுக்கு தூரலாகவே செல்வேன் மழையாக பெய்ய விருப்பமில்லை...
கடவுளின் சபையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர்...
சில நொடிகளில் எல்லா தேவ தூதர்களும் இந்த கேள்வி பதில் நாடகம் கூட கடவுள் விருப்பத்தின் படி நடக்கிறது என்பதை உணராமல்.
ஆளாளுக்கு ஓர் கருத்தை முன் வைத்து மழையை குற்றம் சாட்டினர்....
உன்னை யார் விட்டாமல் பெய்ய சொன்னது.... நேத்து இரண்டு நாளில் மட்டும் ஆறுமாதம் பெய்ய வேண்டிய அளவை ஓர் நேரத்தில் பெய்து விட்டாய்..
பல நாட்களாக என்னுள் இருந்த வேதனையை மேக வெடிப்பாக பெய்து விட்டேன் என்று சாக்கு போக்கு சொல்கிறாயே.. இப்படி நீ செய்வதால் தான் மக்கள் உன்னை திட்டுகிறார்கள் ஓர் தேவதூதன் மக்களுக்காக பேசினார்..
நீங்கள் சொல்லுவது மிகவும் சரிதான் கடவுளின் உள்ளப்படி மாதம் ஓர் முறை எல்லா இடத்திலும் அளவாக மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த மழை வர வர ரொம்ப தன் இஷ்டப்படி நடக்கிறது.ஆறு மாதத்திற்கு ஓர் முறை ஓரே நாளில் பெய்து ஊரையே வெள்ளக்காடாக மாற்றி விடுகிறது...
நான் என்ன நண்பரே செய்ய முடியும். வெயில் சூடாக அடித்து கடலில் உள்ள காற்றை மேகத்திற்கு அனுப்புகிறான்.. நானும் அதை மேகமாக மாறி மரங்களை தேடுகிறேன்... ஏனென்றால் மரம் இருக்கும் இடத்தில் தான் எங்களின் மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்ய முடியும்...
இது கடவுள் ஏற்படுத்திய இயற்கையின் முறை....
நீங்கள் தேவையில்லாமல் பேசாதீங்க... ஏன் இப்படி ஓரே நாளில் இத்தனை வேகத்தை மக்களிடம் காட்டிடீங்க அதுக்கு பதில் சொல்லுங்க....
பதில் எதுவுமே சொல்லாமல் மழை அமைதியாக நின்று கொண்டு இருந்தது...
கடவுள் மழையை நோக்கி கேட்டார்... அவர்களுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்.என்னால் தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும்....
மழைக்கு அவரின் பேச்சு தைரியமூட்டுவதாகவும் உன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லு என்பது போலவும் இருந்தது...
உலகை படைத்து காத்து வரும் கடவுளே தன் கருத்தை கேட்க விரும்புவதை நினைத்து பெருமையுடன் தைரியூஅதை வரவழைத்து கொண்டு சபையை நோக்கி திரும்பினார்.
அன்பான தேவதூதர்களே, மகான்களே, மனிதனாக பிறந்து உலகில் தான தருமங்களும் புண்ணிய செயல்களும் செய்து தேவ தூதர்களுக்கு இணையாக அமர்ந்திருக்கும் அனைவரையும் மனதார வணங்குகிறேன்...
உங்கள் அனைவருக்கும் நான் கடவுளின் ஆணைப்படி வெப்பக் காற்றை குளிர்ந்த மேகங்களாக மாற்றி மழை தருவிக்கிறேன்....