யார் இந்த ரஜினி ?


சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பாலும், ஸ்டைலான பாவனைகளாலும் ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தவர். ஆனால், யாராவது அவரிடம், "ஐயா, நீங்கள் அசாதாரண உயரங்களை அடைந்துள்ளீர்கள். இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டால்,


அவர் புன்னகைத்து, "எல்லாம் கடவுளின் கருணையும் என் பெற்றோரின் ஆசீர்வாதமும்தான்" என்று சொல்வார்

அதற்காக நீங்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே சரியென்று ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்களின் சில கருத்துக்களில் மாறுபடுகிறேன்..

ரஜினி என்பவர் மாஸ் ஹீரோ என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ரஜினி மாஸ் ஹீரோவா.அல்லது எல்லோரையும் போல சாதாரண ஓர் நடிகரா......

ரஜினியின் பட வெற்றிகளை முத்து பணத்திற்கு முன்...முத்து வெற்றிக்கு பின் என்று இரண்டு விதமாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.

கவிதாலயாவின் அனைத்து படைப்புகளில்,  கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அதைப்போலவே பாலசந்தர் இயக்கிய படங்கள் எல்லாமே சாதாரண மனிதனின் வெளிப்பாடுகளே.

தனது எல்லா படைப்புகளிலும் புதுமையான கருத்துக்களை சொல்லி படங்களில் வித்தியாசம் காட்டியவர் K.B

எல்லோரும் ஊட்டி குத்தாலம் என்று அவுட்-டோர் போகும் காலத்தில்.

சில சுவர்களுக்குள் படத்திற்கான கதையை எழுதி குறைந்த செலவில் நாகேஷ் அவர்களை அறிமுகபடுத்தி, அவரின் திறமையை உலகறியச் செய்தவர் K.Balachander.


இந்த உலகில் மற்றவர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்துவிடும் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். இன்றுவரை திரு. ரஜினி தனக்கு வாய்ப்பளித்த தனது குருவான கே.பி.யை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.


ரஜினி தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நிறைய சாதித்துள்ளார் என்று அனைவரும் கூறலாம். ஆனால் என் பார்வையில், அவருடைய பணிவு, அடக்கம் மற்றும் தனது குருவுக்கு அவர் காட்டும் மரியாதை ஆகியவையே அவருடைய வெற்றிக்குத் தூண்களாகும் என்று நான் கூறுவேன்.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...