ம்ம்மா.. ம்ம்மா.. அம்மா.. அம்மா

முகம் காணும்

முன்னாலே முகவரியை

தந்தவளே..என்புள்ள

வரமென்று

காத்திருந்த தருணத்தில்

கவலை மறந்து இருந்தாயே..

கண்கள்கலங்காமல் 

கண்ணிமை போல் 

காலமெல்லாம் காத்தவளே...

ஓலை குடிசையிலே வாழ்ந்த காலத்திலும்

நெஞ்சமதில் அன்பு அரண்மனை காட்டினானே.....

அப்பாவின் முகவரி கூட

நீ தந்த காதலென்றோ...

தலைநகரில் தன்னந்தனியாக

சொந்தமின்றி மழையில் தவித்தவளே...

பக்கத்தில் தவித்த ஏழை மக்களுக்கு

பரிவுடன் பாங்காய் பாசமான

வார்த்தையை சொன்னவளே....

மழை வெள்ளம் சூழ்ந்து நின்று

ஊரெல்லாம்  தவித்த போதும்

உள்ளத்தில் நீ சுமந்த 

அன்பு நெஞ்சத்தை

உன்னுள்ளே நானிருந்து

உணர்ந்த தருமெல்லாம்

வாழ்வின் தவக்காலம்..

பனிக்குடம் உடைத்து விட்டு

கதறி அழுதபோதும்

"புள்ள எப்படி இருக்கு"...

சிரித்த படியே கேட்டவளே...

என் சிரிப்பே உன் புன்னகை 

வேண்டித்தானே....

பொன்னகை தவிர்த்து

புன்னகை பூத்தவளே

என்னுயிர் நீ அம்மா...

முகவரியும் நீ அம்மா...

ம்ம்மா ம்ம்மா...

என்னுயிரே நீ அம்மா..


என்னுயிர் நீ அம்மா

ம்ம்மா... ம்ம்மா.....

அம்மா.... அம்மா...

அன்பை தான்

யாசித்தாயே..

அன்பையே 

யோசித்தாயே...

அன்பென்றே  

சொன்னவரெல்லாம்

பரிதவிக்க விட்ட போதும்

சொந்தங்கள் வேண்டுமென்று

சோகங்கள் மறைத்தாயே

 சுகமாக சிரித்தாயே..

சிந்தனையில் அன்பு

கொண்டு உதிரத்தை

கொட்டினாயே...... தாயென்று

சொல்லும்வரை 

பொறுமையாக

நின்றவளே... ஊர் போற்றும்

மனகென்றே பெயரெடுக்க வைத்தவளே

பத்து மாதம் சுமந்த உன்னை

பத்திரமாய் பார்த்திடும்

பாக்கியமே சொர்க்கத்தின்

வாசல் அன்றோ.

உன் தடியில் வீழ்ந்த என்னை

தலைவனென்று சொன்னாயே

தரணி பாடும் கூட்டத்தில்

பரணி பாட வைத்தவளே.

நீ தந்த அன்புதான் 

அமைதியின் பிறப்பிடமே..

உன் பெயரை சொல்லித்தானே

தினமும் வாழ்கிறேனே...

அம்மா.. அம்மா.. என்னுயிர்

நீ அம்மா...என்னுயிரே நீ அம்மா..

மழையின்

 மிகப்பெரிய மனப்போராட்டத்திற்கு பிறகு இந்த விஷயத்தை கடவுளிடம் சென்று முறையிடுவது தான் நல்லது என்று மழை ஆண்டவனிடம் சென்று முறையிட்டது..


கடவுள் தன் முன்னால் வருத்தமான முகத்துடன் வந்த மழையிடம் கேட்டார்.


ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார் என்று .

கடவுளே நான் உங்களின் ஆணைப்படி தான் செயல்படுகிற் ஆனால் மக்கள் என்னை மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் திட்டுகிறார்கள்...


இனிமேல் நான் வருடத்திற்கு ஓர் இரு முறை மட்டும் தான் பூமிக்கு போக நினைக்கிறேன்.

அப்படியே போனாலும் சில நிமிடங்களுக்கு தூரலாகவே செல்வேன் மழையாக பெய்ய விருப்பமில்லை...


கடவுளின் சபையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர்...


சில நொடிகளில் எல்லா தேவ தூதர்களும் இந்த கேள்வி பதில் நாடகம் கூட கடவுள் விருப்பத்தின் படி நடக்கிறது என்பதை உணராமல்.

ஆளாளுக்கு ஓர் கருத்தை முன் வைத்து மழையை குற்றம் சாட்டினர்....


உன்னை யார் விட்டாமல் பெய்ய சொன்னது.... நேத்து இரண்டு நாளில் மட்டும் ஆறுமாதம் பெய்ய வேண்டிய அளவை ஓர் நேரத்தில் பெய்து விட்டாய்..

பல நாட்களாக என்னுள் இருந்த வேதனையை மேக வெடிப்பாக பெய்து விட்டேன் என்று சாக்கு போக்கு சொல்கிறாயே.. இப்படி நீ செய்வதால் தான் மக்கள் உன்னை திட்டுகிறார்கள் ஓர் தேவதூதன் மக்களுக்காக பேசினார்..


நீங்கள் சொல்லுவது மிகவும் சரிதான் கடவுளின் உள்ளப்படி மாதம் ஓர் முறை எல்லா இடத்திலும் அளவாக மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த மழை வர வர ரொம்ப தன் இஷ்டப்படி நடக்கிறது.ஆறு மாதத்திற்கு ஓர் முறை ஓரே நாளில் பெய்து ஊரையே வெள்ளக்காடாக மாற்றி விடுகிறது...

நான் என்ன நண்பரே செய்ய முடியும். வெயில் சூடாக அடித்து கடலில் உள்ள காற்றை மேகத்திற்கு அனுப்புகிறான்.. நானும் அதை மேகமாக மாறி மரங்களை தேடுகிறேன்... ஏனென்றால் மரம்  இருக்கும் இடத்தில் தான் எங்களின் மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்ய முடியும்...

இது கடவுள் ஏற்படுத்திய இயற்கையின் முறை....

நீங்கள் தேவையில்லாமல் பேசாதீங்க... ஏன் இப்படி ஓரே நாளில் இத்தனை வேகத்தை மக்களிடம் காட்டிடீங்க அதுக்கு பதில் சொல்லுங்க....


பதில் எதுவுமே சொல்லாமல் மழை அமைதியாக நின்று கொண்டு இருந்தது...

கடவுள் மழையை நோக்கி கேட்டார்... அவர்களுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்.என்னால் தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும்....

மழைக்கு அவரின் பேச்சு தைரியமூட்டுவதாகவும் உன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லு என்பது போலவும் இருந்தது...

உலகை படைத்து காத்து வரும் கடவுளே தன் கருத்தை கேட்க விரும்புவதை நினைத்து பெருமையுடன் தைரியூஅதை வரவழைத்து கொண்டு சபையை நோக்கி திரும்பினார்.

அன்பான தேவதூதர்களே, மகான்களே, மனிதனாக பிறந்து உலகில் தான தருமங்களும் புண்ணிய செயல்களும் செய்து தேவ தூதர்களுக்கு இணையாக அமர்ந்திருக்கும் அனைவரையும் மனதார வணங்குகிறேன்...


உங்கள் அனைவருக்கும் நான் கடவுளின் ஆணைப்படி வெப்பக் காற்றை குளிர்ந்த மேகங்களாக மாற்றி மழை தருவிக்கிறேன்....


கால்நடை அபராதம் சற்றே யோசிப்போம்

ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை சொல்ல வழி சொல்வதே ஜனநாயகம்

காலையில் எழுந்தவுடன் காபி..டீ வேணும்.பால் தயிர்.. நெய் எல்லாமே வேணும் ஆனா அதை தரும் மாடுகள் மட்டும் வேண்டாம்..போல...

ஆடு மாடு கோழி போன்றவை இயற்கையின் படைப்பு.. மனிதன் மட்டும் தான் ஊரில் வாழ வேண்டும் என்றால் எப்படி... பலரும் ஏதோ ஆடு மாடு மேய்ப்பர்களை கேவலமாகவும் கேலியாக எழுதியுள்ளனர்...ஆடு மாடுகளால் ஏற்படும் விபத்தை விட Bike , Car Lorry , bus இவற்றில் ஏற்படும் விபத்துகள் அதிகம் அதற்காக அவற்றை தடை செய்ய முடியுமா..... கால்நடை இல்லாமல் விவசாயம் இல்லை...

மிருகங்களும் இயற்கையின் சமன்நிலைக்கு மிகவும் தேவை என்பதை உணருங்கள்...ஆடு மாடு வளர்க்கும் ஏழைகளின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

யார் இந்த ரஜினி ?


சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பாலும், ஸ்டைலான பாவனைகளாலும் ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தவர். ஆனால், யாராவது அவரிடம், "ஐயா, நீங்கள் அசாதாரண உயரங்களை அடைந்துள்ளீர்கள். இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டால்,


அவர் புன்னகைத்து, "எல்லாம் கடவுளின் கருணையும் என் பெற்றோரின் ஆசீர்வாதமும்தான்" என்று சொல்வார்

அதற்காக நீங்கள் சொல்லுவதை எல்லாம் அப்படியே சரியென்று ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்களின் சில கருத்துக்களில் மாறுபடுகிறேன்..

ரஜினி என்பவர் மாஸ் ஹீரோ என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ரஜினி மாஸ் ஹீரோவா.அல்லது எல்லோரையும் போல சாதாரண ஓர் நடிகரா......

ரஜினியின் பட வெற்றிகளை முத்து பணத்திற்கு முன்...முத்து வெற்றிக்கு பின் என்று இரண்டு விதமாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.

கவிதாலயாவின் அனைத்து படைப்புகளில்,  கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அதைப்போலவே பாலசந்தர் இயக்கிய படங்கள் எல்லாமே சாதாரண மனிதனின் வெளிப்பாடுகளே.

தனது எல்லா படைப்புகளிலும் புதுமையான கருத்துக்களை சொல்லி படங்களில் வித்தியாசம் காட்டியவர் K.B

எல்லோரும் ஊட்டி குத்தாலம் என்று அவுட்-டோர் போகும் காலத்தில்.

சில சுவர்களுக்குள் படத்திற்கான கதையை எழுதி குறைந்த செலவில் நாகேஷ் அவர்களை அறிமுகபடுத்தி, அவரின் திறமையை உலகறியச் செய்தவர் K.Balachander.


இந்த உலகில் மற்றவர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்துவிடும் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். இன்றுவரை திரு. ரஜினி தனக்கு வாய்ப்பளித்த தனது குருவான கே.பி.யை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.


ரஜினி தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நிறைய சாதித்துள்ளார் என்று அனைவரும் கூறலாம். ஆனால் என் பார்வையில், அவருடைய பணிவு, அடக்கம் மற்றும் தனது குருவுக்கு அவர் காட்டும் மரியாதை ஆகியவையே அவருடைய வெற்றிக்குத் தூண்களாகும் என்று நான் கூறுவேன்.

சித்தப்பா

தாயின் பாசம் 

தந்தையின் நேசம் 

சகோதரனின் அன்பு 

அக்காவின் அக்கறை 

தங்கையின் கேலியாக 

நகைசுவை பேச்சு நல்ல 

நண்பனின் அறிவுரை

இவையனைத்தும் கலந்த 

ஓர் அற்புதமான படைப்பு 

தான் சித்தப்பா 

ரக்க்ஷா பந்தன்

 போடி கிறுக்கி 

அடிக்கடி அவன் 

சொல்லும் வார்த்தை.. 

டியூஷன் க்ளாஸிலும் 

எனக்காக சண்டை செய்து 

கோபக்காரன் என்றே 

பெயரெடுத்த பாசக்கார 

அண்ணன் அவன்... 

ஆசையாக கேட்பதற்காக 

சுவர் ஏறி குதித்து 

பூவை பறித்து நாய் 

விரட்டி உருண்டு எழுந்து 

வந்தவரின் கையில் 

புத்தம் புதிதாக அந்த மலர்ந்த பூ... 

அம்மா கேட்டா சைக்கிள்ல 

இருந்து விழுந்தேன் சொல்லு...வெகுளியாக 

வெள்ளந்தியாக சிரித்தவன்...

கேட்கும் முன்பே 

எல்லாமும் வாங்கி தந்தான்... 

முதல் மாத சம்பளத்தில் 

வாங்கி கொடுத்த வாட்ச் 

அவனின் கைகளில் 

அணிவித்த போது இருவரும் உணர்ச்சியின் பிழம்பாய்

 எரிமலைபோலவே கண்ணில் எட்டிப்பார்த்த பனித்துளி.... 

தெருவில் சென்று 

நின்று கொண்டே 

அனைவரிடமும் காட்டி 

மகிழ்கிறான் அந்த சில 

நூறு ரூபாய் பொருளை 

கோடி ரூபாய் போலவே... 

இவனைப் போலவே 

ஓர் அண்ணன் கிடைப்பது அரிது..

.

.

Raman Sankar Qoutes

அன்பை விதைப்போம்

 அன்பை விதைப்போம்...

.


போர்களும் வேண்டாம்...

போர்களமும் வேண்டாம்...

போர்கள் ஏற்படுத்திய

வலிகளை சரித்திரம்

கண்டுவிட்டது....

மகாபாரதம் தொடங்கி...

கலிங்கம் தொண்டு....

சாம்ராஜ்யங்கள் சரிந்த

போர்க்களம் வேண்டாம்...

இன்று போய் நாளை வா 

என்றே அசுரனின் மனதை

மாற்ற நினைத்த தமிழர்களின்

குறிஞ்சி நில கடவுளாம்

கந்தனைப் போல 

பகையை வெறுப்போம் 

பகைவரை அல்ல....

அசுரனின் குணத்தையும்

மாற்றி சேவலும் 

மயிலுமாக அமர வைத்து

கடற்கரைக்கு அழகு சேர்த்த

குமரனைப் போலவே

அழகு பார்ப்போம்...

புத்தன் இயேசு வழியில்...

அன்பின் வழியில்

அன்பை விதைப்போம்...

Raman Sankar

 Hi to All,

I like to introduced myself a writer. (I think so, only others can confirm this)

It's always a great experience, while trying to capture thoughts through writings.

Sharing writings (hoping so)will provide more happiness to all

The every reason hidden behind indian culture with strong human values.

we invite more relatives and friends at our every functions, so that it will .

spread happines and  make others smile.

I'm not a saint nor moral teacher nor philosopher to changes on others life.

But  if my writings may make a small repercussion on viewer's mind. I'm writing what I felt are visualized.

Yes, in today's corporate work culture we are putting more and more pressure on ourselves and others, by comparing with others social, economic and other parameters.

My blogger aim is to make you realise your day to day acitvity, in very normal manner.

So that you may overcome your unwanted pressure,which was forced by external person or work.

Always be happy and spread happiness.

Thanks and Regards,

Raman Sankar

விஷ்ணு துர்க்கை

வர வேணும்

வர வேணும்

எங்க துர்க்கை அம்மா..

எங்கள் குலம் காத்திடவே

வர வேணும் வர வேணும்

எங்க துர்க்கை அம்மா..

பக்தர்களை காத்திடவே...

பரிவுடனே வர வேணும்

எங்க துர்க்கை அம்மா

விவசாயம் செழித்திடவே

வியாபார பெருகிடவே...

வர வேணும் வர வேணும்

எங்க துர்க்கை அம்மா

வாடியம்மா காக்கின்றே‌ தாயே

ஏழைகளை காத்திடவே

ஏற்றங்களை தந்திடவே

வர வேணும் வர வேணும்

சிரித்தபடி வந்திடம்மா

எங்க துர்க்கை அம்மா

கன்னி பெண்ணாக

எங்களை காத்திடும்

எங்க துர்க்கை அம்மா

ஆசையாக பாசமுடன்

நேசத்தையும் கலந்து 

வைத்து முளைப்பாரி

எடுத்து வந்தோம்

எங்க துர்க்கை அம்மா

எங்க துர்க்கை அம்மா

நல்வாழ்வு மலர்ந்திடவே

கவலைகளும் மறைந்திடவே

சீக்கிரமே நீ வந்திடம்மா

எங்க துர்க்கை அம்மா

சிங்கத்தின் மீதிமேறி 

புவனத்தை காத்திடவே

மகிழ்வுடனே வருபவளாம்

எங்க துர்க்கை அம்மா 

இவள் எங்களின் குலம் காக்கும் நடுக்கல்லூர் அமர்ந்தவளாம் 

எங்க துர்க்கை அம்மா

நம்பிக்கை வளர்த்திடவே

நம்பியின் தங்கையான

எங்க துர்க்கை அம்மா

இவ எங்க துர்க்கை அம்மா

ஆசையுடன் குலவையிட்டோம்

குலம் தழைக்க வைத்திடுவாய்

குற்றம் குறை அத்தனையும்

கனிவுடனே பொறுக்க வேணும்...

கனிஅமுத படைத்திடுவோம்...

அன்புடனே ஏற்றுக் கொண்டு

அருளாசி புரியவேணும்

இன்பங்களை தந்து நீயும்

இன்முகத்தை காட்டவேணும்

கண்ணிமைபோல் இரவு பகல் 

பாராமல் எங்களை காத்திடும்

துர்க்கையளே என் காலடியில்

வீழ்ந்து விட்டோம்.... முளைப்பாரி

எடுத்து விட்டோம்...நீயே சரணம் அம்மா

நடுக்கல்லூரில் வீற்றிருந்து 

அருளாட்சி செய்யும் எங்க 

துர்க்கை அம்மா.

எங்க துர்க்கை அம்மா....

குலவை சத்தம்...

தமிழ் மக்கள்

படவிமர்சனம்

படம் வெளியாகும்
முன்னர் அப்படி
இப்படி என்றனர்..
வெளிவந்தவுடன்
உலகிலேயே
சிறந்த படம் இது
என்றே கோஷமிடுவர்....
முதல் ஷோ வசூல்
பல கோடி என்பர்
சில வாரத்தில்
முதலுக்கு மோசமில்லை
என்றே கதையெழுதுவர்
அடுத்த சில மாதங்களில்
படமெடுத்து கற்றுக்கொண்டேன்
என்ற விரக்தியாக
பேசி காலம் கடத்துவர்
ஆறுமாதம் கழித்து
அந்த படத்தால்
எனக்கு பல கோடி
நஷ்டமென்பார்....
நஷ்டமென்றால்
எதற்காக படத்தொழிலில்
மூதலீடு செய்கிறார்
என்று யாரும் அவரிடம்
கேட்பதில்லை மக்களுக்கு
நன்றாகவே தெரியும்...
திரையின் நடிப்பை
மட்டுமே ரசிக்கும்
சில ரசிகர்கள் எமது
தமிழ் மக்கள்

நான் ஓர் அனாதை

Story writing @ Work-in-progress

 தனக்கு யாருமே இல்லை என்பவன் எப்படி தலைவனாக மாறுகிறான் என்பதே கதை களம்...

பேச்சியம்மா...

 Story writing @ Work-in-progress

ஓர் ஏழை சிறுமி ஆசையுடன் வாங்கும் செம்மறி ஆடு பற்றிய கதை...

I love my RAM

Story writing @ Work-in-progress

பல நாட்களுக்கு குழந்தை இல்லாத ஓர் பெண்ணின் படும் வேதனைகளை சொல்லும் கதை....

மலடி என்று அழைத்தவளை ராம் அம்மா இவங்க தான் என்று உலகம் அழைக்கும் ஓர் அற்புதமான கதை....

குளிக்க போறீயா...

தாயும் தந்தையின் இருவரின் உலகமான ஓர் குழந்தை.....

அவர்களின் அன்பை புரிந்து கொள்ளாமல் தன் செல்ல நாய்க்குட்டி மட்டும் போதும் என்பதே இந்த கதை...

தன்னை பெரிய மனுஷியா நினைக்கும் குழந்தையின் உன்னத உலகம்...


ஓர் சிறு குழந்தை தன் செல்ல நாய்க்குட்டிக்கு தன்னையே ஒர் தாய் என்று நினைக்கும் நினைவு கதை கரு..

இவ்வளவு தான் வாழ்க்கை

 வாழ்க்கை என்பது இரண்டு வகை ஓன்று விஷ்ணு தத்துவம்...

மற்றொன்று சிவ தத்துவம்....

பெண் ஆணை அதிகமாக காதலித்தால் கணவனின் எல்லா செயலையும் ஏற்று கொள்வாள்... ( அவர் சரியான தத்தி நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்)

ஆண் பெண்ணை அதிகமாக காதலித்தால் பெண்ணின் எல்லா செயலையும் ஏற்றுக்கொள்வான்...( என் வீட்டுக்காரி சரியான கோவக்காரி, என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும்) 

இவ்வளவு தான் சார் வாழ்க்கை... 


குட்டி தேவதை


வாகனங்கள்

வேகமாக செல்லும்

நாற்கர சாலையில்

வளைந்து நெளிந்த

சாலையின்

மேம்பாலத்தின் கீழே

வேப்பமரத்து நிழலில்

அப்பனுக்கு துணையாக

வியாபாரம் செய்கிறாள்

குட்டி தேவதை...

சின்னஞ்சிறு அரக்கு

பாவாடை மஞ்சள் நிற

ரவிக்கை சட்டை..

மெளனமாய் சிரித்தே

அனைவரின்

முகத்திலும்

அன்பை பரப்புகிறாள்

நெற்றியிலே குங்கும பொட்டு

இந்த குட்டி தேவதை...

மாபெரும் பங்களாவின்

அனைத்து சுகத்தையும்

அனுபவித்து விட்டு...

பால்கனியில் வந்து

நின்று கையசைக்கும்

வேடதாரி போல்

அல்லாமல் இயல்பாய்

பேசுகிறாள்...

பணக்கார தோரணையில்

இருக்கும் மனிதரின்

மனதிலும் பாசத்தை

விதைத்து விடும்...

ஆற்றல் கொண்டவள்

இந்த சின்னஞ்சிறு

குட்டி தேவதை...

கீச்சு குரலில்... கேட்கிறாள்...

தன் குடும்பத்தின் ஏழ்மை

மறந்து வாழ்ந்துவிட துடித்தபடியே

அடிவயிற்றில் இருந்தே

வருகிறது அந்த

அற்புதமான கீச்சு குரல்...

தனக்காக தகப்பன்

ஆசையாய் வாங்கி வந்த

கிரீம் பிஸ்கட்

பாக்கெட் டாமியுடன்

பகிர்ந்து சாப்பிட்டுகிறாள்

உனக்கு ரொம்பவே

பசிக்குதா "டாமி" என்றபடி

ஓற்றை பிஸ்கட்

விழுங்கி விட்டு

மீதியை டாமிக்கு

கொடுத்தபடியே....

தன் தாய்மையை

டாமிக்கும் புரியவைத்தாள்

அருகே வந்த கொகுசு

காரின் கண்ணாடிகள்

இறங்கும் முன்னே... தன்

கீச்சு குரலில் கேட்டாள்...

சார் இளநீர் வேணுமா

இளநீர் வேணுமா....

கீச்சு குரலுக்கு

ஒத்திசைவு தருகிறது

மரத்தின் மீதிருந்தே.

குயில்களும் ஏனென்றால்

பேசுவதே...

குட்டி தேவதை..

நான் ஆதரிக்கிறேன்

 நான் ஆதரிக்கிறேன்.

( அரசு கொண்டு வரும் சட்டத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும், கருத்துக்களை சொல்லுவதும் ஜனநாயகத்தின் உரிமை.உங்களுக்கு என் கருத்தில் மாறுபாடு இருந்தால் சொல்லுங்கள்.)

எந்த ஜாதியில் பிறந்தார் என்பது முக்கியம் அல்ல...

மனதூய்மையும், மன அமைதியும் தேடுவோரும்....

மக்கள் சேவையே மகேசன் சேவையாய் நினைப்போர் அனைவரும் கோவில் அர்ச்சகர் பணி செய்யலாம் பெண்களுக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பெண்களும் வழிபாடு செய்ய வழி வகுத்த மேல்மருவத்தூர்  கோவில்....

பெண்கள் கோவிலில் பூஜை செய்ய கூடாது என்ற விதி எங்கே உள்ளது....

மயிலை கற்பகாம்பாள் சிவபூஜை செய்தார்...

சீதா தேவி தன் கைகளால் செய்த மணல் லிங்கமே இராமேஸ்வரம் கோவில் கற்பக்கிரகத்தில் உள்ளது...

சிவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் ஓர் பெண் என்பதை மறக்க வேண்டாம்...

வீட்டில் விளக்கேற்ற மருமகள் வர வேண்டும், அப்போ தான் வீடு செழிக்கும் என்பதே பேச்சு வழக்கு...

பெண்களுக்கு போலீஸ் வேலை சரிவராத என்று முதலில் எதிர்ப்பு வந்தது....

இப்போது அந்த துறையில் அவர்கள் சாதித்து ராணுவத்தில் இடம் பெற்றனர்....

பெண் பூஜை செய்வது பாவம் என்பவர்களே... நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள்...

நிச்சயமாக சிறந்தவளே....

சாக்த வழிபாட்டில் எல்லா பெண்களையும் பராசக்தியின் வடிவாக கண்டவர் எழுதியதே அபிராமி அந்தாதி


By ...

Raman Sankar

https://dhenaliraman.blogspot.com

Kiss pannu

இப்போ நான் சொல்லுறதை கேட்க போறீயா இல்லையா... 

கோபத்துடன் அம்மா பேசும் பேச்சிற்கும் தனக்கும் எதுவுமே சம்பந்தம் இல்லை என்பது போல டி.வியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ..ஹேமா...

ஏண்டி உன்னை தானே கேட்குறேன்...

காது கேட்குதா இல்லையா....

நான் என்ன உங்க அப்பன் மாதிரி செவிடு போல நடிக்கிறவ இல்லை....

இந்த வார்த்தையை கேட்டவுடன் அவளுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறியது.... அருகே இருந்த தண்ணீர் டம்ளரை அவளை நோக்கி வீசினாள்.....

கையில் இருந்த துண்டால் சச்சின் சிக்ஸர் அடிப்பது போல துண்டை சூழற்றினாள்....

ஆனால் ஏனோ ஓப்பனிங் பேட்ஸ்மேன் போல டம்ளரை தடுக்க முடியவில்லை...அது வசமாக அவளின் காலில் பட்டது....

வரவர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா போச்சு.... பெத்த பிள்ளே மேலேயே வீசுறீயே...

3 வயது குழந்தைக்கு தன் பேசும் பேச்சில் உள்ள தவறு தெரியாமல்.. தன் அம்மாவிடம் சொல்லி காட்டிய வார்த்தை அனைத்தும் மாமியார் மருமகள் பேசிய பேச்சுக்கள்...

ஹேமா கோபத்தில் மேலும் கத்தினாள்... ஏண்டி எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம்..நீ இதுவும் பேசுவே.. இதுக்கு மேலேயும் பேசுவே......

அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு ஆபிஸ் முடிந்து வந்த களைப்பில் சோஃபாவில் அமர்ந்தான்....

அப்பா ஓடிப்போய் அவனின் முதுகில் சாய்ந்தாள்.... இன்னிக்கு எனக்கு என்ன ஸ்பெஷல் என்ற வைஷ்ணவியிடம்....

நீதான் செல்லும் ஸ்பெஷல் அன்று கன்னத்தில் முத்தமிட்டான்....உடனே தன் தாயை நோக்கி கைகளை நீட்டி உனக்கு தைரியம் இருந்தா..இதே மாதிரி செய் பார்ப்போம்..

டி.வியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா நமட்டு சிரிப்பு சிரித்தார்...

கவனிச்சியா..உமா...நீ பேசுற வசனத்தை ஓண்ணு விடாம மனப்பாடம் பண்ணி வைச்சுக்கிட்டு..உன்னை மாதிரியே அவள் கிட்ட சண்டை போடுறா பாரு....என்ன குழந்தைக்குஇ எதை எப்போ பேசணும்னு தெரியலை ஆனா உன்னை போல ...

நீங்க சும்மா இருங்க மாட்டீங்க போலையே.. நாங்க சண்டை போட்டு மூணு நாள் ஆச்சு....




மதம்..ஆ...மதமா...

 உலகின் இருப்பவர்கள் எல்லோரும் ஓரே மதத்தை தான் பின்பற்ற வேண்டும்..ஓரே மொழி தான் பேச வேண்டும் ..ஓரே உருவ அமைப்பில் தான் பிறக்க வேண்டும் .. ஓர் வகையான உணவை தான் சாப்பிட வேண்டும் என்று நடைமுறை படுத்த முடியா...சற்றே சிந்தனை செய்து பாருங்கள்.... நீங்கள் சார்ந்த மதத்தை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்ஊஉ விட்டால் வறுமை ஓழிந்தகவிடுமா... உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓரே மாதிரி இயங்கி விடுமா...

சற்றே யோசித்து பாருங்கள்....

இது ஓர் குறிப்பிட்ட மதம் சார்ந்த பதிவு அல்ல... கண்ணுக்கு தெரியாத கடவுள் என்பவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியும் அல்ல.... உலகம் தோன்றிய போது மதம் என்பது இல்லை... மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்று இன

சேமியுங்கள்

 ஊருக்கு தண்ணீர் சேமித்து வைக்கும் பெரிய தண்ணீர் தொட்டி... அதில் ஓர் சிறு கசிவு வந்தது... அங்கே வேலை பார்த்தவர் .அட சின்ன கசிவு தானே மெதுவாக சரி செய்யலாம்ன்னு...விட்டு விட்டான்... என் பொண்டாட்டி தப்பியோட கல்யாணுத்துக்கு போகணும் எப்படியும் 

இரண்டு நாள்ல எதுவும் பெரிசா சேதம் ஆகிடாது என்று சொன்னான்...

புதிதாக வேலைக்கு சேர்ந்த பையன் சார் பேசாம நாம இன்னிக்கே இதை சரி பண்ணிடலான்னு சொன்னவுடனே...

பெரிய அதிகாரிக்கு கோபம் வந்திருச்சு...

நீ இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கே.. இந்த புத்தி சொல்லுற வேலையை என்கிட்ட காட்டுனே ... உன் சீட்டை கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிச்சுறுவேன் .. ஜாக்கிரதை என்றான்...

பெரிய அதிகாரி இரண்டு நாள் கல்யாண வீட்டில் ஜாலி இருந்துட்டு ஊருக்குள் வந்தது தான் தாமதம்... எல்லோரும் அவரை சகட்டு மேனிக்கு திட்டினாங்க...

கூட்டத்தில் இருந்த வேலைக்காரனை கூப்பிட்டார்...

அப்போ தான் அவருக்கே விஷயம் தெரிச்சுது...முந்திய நாள் மழையில் தண்ணீர் தொட்டி உடைந்து விட்டது..அதற்கு காரணம் அந்த சிறு விரிசல் இடியின் வேகத்தை தாங்கமாட்டால் உடைப்பு கண்டது....

கல்யாண ஜாலியில் ஃபோனை சார்ஜ் வேற செய்யாத காரணத்தால் தகவலும் தெரியலை...

கலெக்டர் சில நேரங்களில் வந்தார்..காரணத்தை கேட்டார்... பெரிய அதிகாரி புதிய வேலைக்காரன் மீது பழி போட்டார்.. சார் இவன் தான் சரியான கவனிச்சு சொல்லியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்காது என்று... ஆனால் கலெக்டர் அந்த மேலதிகாரியை வேலை விட்டு நீக்கினார்...

இரண்டு நாளாக அவன் ஊரில் உள்ள பலரிடம் புலம்பியுள்ளான்...சில பெரிய மனிதரையும் பார்த்து பேசியுள்ளான்.. டேங்க் பற்றிய அவன் பேச்சை யாருக்கும் புரியவில்லை.. இப்போ அவன் சொன்னதை நினைத்து ..

கலெக்டர் அவனையே தண்ணீர் டேங்க் மேற்பார்வையாளர் என நியமித்தார்...

நீதி 1 - வேலை சிறிதோ பெரிதோ அந்த வேலையில் ஒருவர் காட்டும் ஆர்வமும் ஊக்கமும் அவசியம்...

நீதி 2 - பணமும் கூட சிறு தொகை தானே போனால் போகட்டும் என்று விடக்கூடாது.. ஏனெனில் நாம் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணம் ஓர் ரூபாயை கூட ஓர் கோடி போல நினைக்க வேண்டும்... ஏனெனில் 500 ரூபாய் ஹோட்டல் பில்லுக்கு 480 கொடுத்தால்... கஸ்டமர் உலகின் பெரும் பணக்காரர் என்பதற்காக யாரும் தள்ளுபடி தர மாட்டார்கள்....

மீதி 20 தந்தால் மட்டுமே மரியாதையாக நடத்துவார்கள்...

ஓர் சிறு துளி என்றாலும் பணத்தை மிகவும் பத்திரமாக சேமியுங்கள்...

.

.

டெய்சியின் காதல்

 விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் அதி அற்புதமான கதை...

வயதான முதியவருக்கும் நாய்க்குட்டிக்கும் நடக்கும் பாச போராட்டமே கதை களம்

டெய்சியின் காதல்...

Story on progress..

என்னங்க இப்போ நீங்க வரப்போறீங்களா இல்லையா...வந்து பாருங்க..வீட்டுல என்ன கூத்து நடக்குதுன்னு பாருங்க...

ஏண்டி படுத்துற... ராத்திரியிலே தான், என்னை  கொஞ்சுங்கன்னு சொல்லி படுத்துற... இப்போ பகல் நேரத்தில் கூடவா....

ராத்திரியிலே ஓரு பேச்சு, பகல்ல ஓரு பேச்சு...என்னை கொஞ்சும் போது ரொம்பவே கசந்துதா... கோபத்தில் பேசிய உமா...

ஓர் நாள் ஞாயிற்றுக்கிழமை லீவு கூட நிம்மதியா இருக்க விட மாட்டே போலையே....

ஆமாம், எப்பவுமே என்னையே மாத்திரமே குறை சொல்லுங்க... சீக்கிரமா எந்திருச்சு வாங்க...

மாமனார் ஆசையாக வாங்கி கொடுத்த கிங் சைஸ் கட்டிலில் படுத்து கிடந்தவன்...அருகே ஏ.சி காத்து இதமாக அடித்தது... சித்திரை வெயிலில் ஏசி போட்டா அந்த சுகமே தனி தான்...

எப்போ பாரு.. சுகம் சுகமுன்னு..... உங்களை கல்யாணம் பண்ணிண நாளில் இருந்தே என் உடம்பும் மனசும் வம்பா போச்சு....

சீக்கிரம் வந்து உங்க அப்பா சொல்லுற கதையை கேளூங்க....

"அப்பா ". என்ற வார்த்தை கேட்டவுடன் முருகனின் முகத்தில் எரிச்சல் வந்தது.... இன்னிக்கும் உன்னை அந்த ஆளூ நிம்மதியா இருக்க விட மாட்டாறா....

எழுந்திருந்து பல்லு கூட தேய்காமல் ஹாலுக்கு வந்தான்....

அங்கே ஓர் மஞ்சள் பையை எடுத்து மடியில் வைத்து கொண்டு சோபாவில் ஓர் ஓரமாக அமரந்திருந்தார்...

இப்போ உனக்கு என்ன பிரச்சினை... நேத்து தானே... ரேஷன் கடைக்கு போக ஜம்பது ரூபாய் கொடுத்தேன்.... அதுக்குள்ளே அது தீர்ந்து போச்சா....

என்னது ஜம்பது ரூபாயா.... அதுவும் ரேஷன் கடைக்கு...

அது வந்து ஏதோ சொல்ல வாயெடுத்தவரை வேண்டாம் என்று கையின் அசைவில் உத்தரவு போட்டான்...

ஏங்க டெய்லி சுவீட் கேட்க தெரியுதே . இந்த மூணு மாசத்துல எத்தனை தடவை... உங்களுக்கு நான் சம்பளமில்லாத......அலுப்புடன் தனது கழுத்தில் கிடந்த சக்கிலியை காட்டினாள்....

ஏண்டி இது இருபது பவுணு...என்றவனை...ஏதோ ஐம்பது மாதிரி பேசுறீங்க.. அவனுக்குள் உஷ்ணத்தை ஏற்றிவிட்டாள்...அவரை இன்னிக்கு வெளியே அனுப்புங்க...கண் சாடையில் அவனுக்கு வெறியை ஏற்றினாள்...

இன்பமான பகலுக்காக... வெயிலின் வேதனையில் பல நாட்களுக்கு தந்தையை அலைய விட்டவன்..  இன்றும் கூட அவரை வெளியே போக சொல்ல நினைத்தான்...

அதற்குள் அவரே பேச தொடங்கினார்...

அது வந்து முருகா... நான் ஓர் இரண்டு நாளூ தங்கச்சி வீட்டுலே போயி தங்கலாம்ன்னு நினைக்கிறேன்.. உங்க அம்மா போனதில் இருந்தே எனக்கு அவ நினைப்பாவே இருக்கு...அவ உங்க அம்மா சாயல். கனவில் மிதந்தவரை...

உங்களை ஒரு நாள் கடைக்கு போக சொன்னா...மறுநாள் இப்படி கதை சொல்லுறதே பொழப்பா போச்சு...

ஏன் மருமகளுக்கு வேலை செஞ்சா உங்க கெளரவம் குறைச்சு போகுமா???

அது எல்லாம் எங்கேயும் போக வேண்டாம்.. நாளைக்கு என் பைக் சர்வீஸ் விடணும்.. நீங்க வீட்டிலேயே தண்டச்சோறு தானே தின்னுறீங்க.... பொறுப்பா அந்த வேலையை பாருங்க....வர வர தோட்டத்து வேற சரியா தண்ணீர் பாச்சுறது இல்லையாம்....ஏதோ போனா போகுதுன்னு விட்டா.. ரொம்பவே படுத்துறீங்களே.... போங்க..போயி நேத்து நான் வாங்கிட்டு வந்ந தென்னங்கன்றை நட்டு வைங்க... எழுந்து பல் நேரம் கிளம்பினான்..

கடிகார மணி பத்தரை என்று காட்டியது...வேறு வழியின்றி தோட்டத்தில் சென்று மரத்தை நட்டினார்....

குளித்து விட்டு வந்தவன்... சமையலறையில் தனியாக இருந்த பொண்டாட்டியை கட்டிப்பிடித்து அவளின் கழுத்தில் முத்தமிட்டான்....

ஆமாம், இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை....

ஏன்டி காலையிலேயே புலம்புறே...

என்னது மணி 11.20 சாருக்கு நேத்து நைட்டு டூட்டி அதான் எல்லாமமறந்து போச்சு... அவனின் ஆசைகளை தனது அடித்தளமாக்கி வீட்டில் மகாராணியாக தன்னை நிலைநிறுத்தியவள்.... 

முத்தமிட்டு கொண்டிருந்தவன் முகத்தை ஜன்னல் வழியாக பார்க்க வைத்தாள்... பாருங்க.. நான் உங்களுக்கு பிடிக்குமேன்னு புடலங்காய் கூட்டு, பீட்ரூட் பொரியல், கார குழம்பு எல்லாம் கஷ்டப்பட்டு வைக்குறேன்....

உங்க அப்பா அழுது அழது நம்மை ......அவரு தான் உங்க தங்கச்சி வீட்டுக்கு போறேன்னு சொன்னாறே அவரை அனுப்பி தொலைக்க வேண்டி தானே... மதியம் அம்மா வருவதாக சொல்லி இருக்காங்க... உங்க பத்து நாள் லீவுக்கு நான் எப்படி எல்லாம் ப்ளான் போட்டு வைச்சேன்...

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கிழத்தை நாம சுமக்கணும்.. பேசாம அவரை அங்கே அனுப்புங்க... பிறகு தினமும் பகலில் கூட உங்களுக்கு... சேலையை சரி சய்வது. போல தனது உள்ளாடையின் நிறத்தை காட்டினான்...

சொன்னா புரியணும். ...சிவ பூசை பண்ணும் போது கரடி மாதிரி எதுக்கு....

சிற்றின்ப ஆசையை அவனுக்குள் விதைத்தாள்.... துணிக்கடையில் ஆறாயிரம் சம்பள வேலையில் கிடைத்த முப்பது வருட வருமானத்தில் தீபாவளிக்கு எடுக்கும் இரண்டு செட் வேட்டி சட்டை தவிர பெரிதாக எதுவுமே செய்து கொள்ளாத தகப்பனின் பாசத்தை.. பொண்டாட்டியின் உள்ளாடை பின்னுக்கு தள்ளியது..... பத்து மணிக்கு மேல் வீட்டு வந்தவருக்கு பாதி நாள் கிடைத்தது பழைய சோறும் பொரிகடலை துவையலும்....

ஏன் செண்பகம், குழத்தைங்க இதையா சாப்பிட்டாங்க....

இல்லைங்க, அவங்களுக்கு ரவை தோசையும் பாசிப்பருப்பு சாம்பாரும் வைச்சு கொடுத்தேன்...இது நம்ம இரண்டு பேருக்கு மட்டும் தான்..ஓரே ஒரு தோசை இருக்கு தரட்டுமா...

தட்டில் ஆறிப்போன தோசை .. அதில் பாதியை எடுத்து மனைவி செண்பகத்தின் தட்டில் வைத்தார்...

நீயும் நல்லா சாப்பிடுன்னு சொன்னா.கேட்டா தானே... பெரிய குந்தி தேவின்னு நினைப்பு...

அறுபது வயது கிழவிக்கு வெட்கம் வந்தது...சும்மா பேசாம சாப்பிடுங்க‌..

மாப்பிள்ளைக்கு நம்ம பழையது சாப்பிடுறது தெரிச்சா மனசு கஷ்டப்படும்...

காலையிலேயே இட்லி தான் நம்ம எல்லாருக்கும் .. உங்களுக்கு பிடிச்ச புதினா சட்னி....வாசல்ல ஒருத்தன் கொண்டு வந்தான்.. இரண்டு கட்டு பத்து ரூபாய்... அவளின் பேச்சில் குடும்பத்தின் பொருளாதாரமே அடங்கிப்போனது....

மரத்தை நட்டியவரின் கண்களில் நீர் தழுப்பியது... படிச்சு முடிச்சிட்டு நாலு வருஷமா கவர்மெண்ட் வேலைக்கு தான் போவேன் அடம் பிடித்தவனை செண்பகம் கேள்வி கேட்டாள்...

ஏன்டா, முதல்ல ஏதாவது ஓரு வேலைக்கு போ... கவர்மெண்ட் வேலை கிடைக்கும் போது கிடைக்கட்டும்....

செண்பகம் நமக்கு இருக்கிறது ஓரே பையன்... பொண்ணை நல்ல படியா கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... பொறுமையா இரு.. நம்ம பையன் கவர்மெண்ட் வேலைக்கு போனா நமக்கு தானே பெருமை.... ஏன் பையன் எதுக்காகவும் கஷ்டப்படக் கூடாது....

ரொம்பவே செல்லம் கொடுக்காதீங்க.. ஓர் நாள் அவன் உங்களை தண்டச்சோறுன்னு சொன்னாலும் சொல்வான்.... நினைத்து பார்த்தவருக்கு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை....

செண்பகம்.. செண்பகம்... வார்த்தைகள் கண்ணீருடன் போரிட்டன...

கதை தொடரும்....


கருவாச்சி...

கரியும் கூட

வெட்கத்தில் 

சிவந்து விடும்..

இந்த கருவாச்சியின்

முகத்தை கண்டால்...

ஆனால் கண்ணின் நிறமோ

வெள்ளை மீன் நடுவில்

துள்ளி விளையாடும்

மாநிற கோலிக்குண்டு...

செவ்வாயும் வெள்ளியும்

பட்டுச் சேலைகட்டி தங்கதாலியில்

மின்னுகிறாள்  முகத்திலே

எந்தவொரு சலனமுமில்லை

ஆயினும் சஞ்சலத்துடன்

வந்தவரை வாரியணைத்து

அருளென்னும் முத்தமிட்டு

அனுப்புகிறாள்... இந்த பாசக்கார

கருவாச்சி... ஊருக்கு எப்போதும்

இவளே தான் காவல் தெய்வம்...

பக்கத்தில் புருஷன் இருக்கும்

பெருமிதத்துடனே வந்தவருக்கு

எல்லாம் வாரி வழங்குகிறார்

அந்த புன்னகை சிரிப்புடன்

கற்சிலை மேனி கண்டே

மதிமயங்கி கண்ணீர் பெருகி...

தாயே நீயே துணை என்னும்

சரண கோஷம் கோவில் சுவரில்

பட்டு எதிரொலித்தது... ஆயினும்

அவளோ சிங்கப்பல் காட்டி

சினத்தையும் சீற்றத்தையும்

சிரித்தே அடக்குகிறாள்...

சிம்மத்தின் மீதே அமர்ந்து

சிறப்புடன் வாழுந்திடவே வழியை

மொழியாக தந்து விட்டாள்...

மன்னாதி மன்னவரின்....

வியாபாரத்தின் பெரு முதலைகளும்

பூனைக்குட்டி போல கைகட்டி

வாயை பொத்தி கரம் குவித்து

பக்தனாய் நடுங்குகின்றான்...

தாயே காப்பாத்து நீ துணையென்று.. 

லஞ்சத்திற்கு மயங்குவாளா????

லட்சியத்திற்கு துணைபுரியும்

லட்சுமியின் மறுவடிவம்..

இந்த பரமனின் வீட்டுக்காரி

என்றுமே பாசத்திற்கு மாத்திரமே மயங்கிடும் பரமனின் வீட்டுக்காரி... தூரத்தில் நடந்து வரும் ஏழை பக்தனின்

வரவிற்காக காத்திருந்து அவனையும் குபேரானாக மாற்றியே 

ஏழைக்கு உதவ வைத்தாள் 

இந்த பரமனின் பாசக்கார வீட்டுக்காரி

தேவியை கண்ணார கண்டு

வணங்கிடவே கூட்டத்தின் வரிசையில் நின்று கொண்டு புலம்புகிறான் 

அந்த ஏழை பக்தன்...

கையிலே காசுமில்லை...

நெஞ்சிலே சூதுவாது ஏதுமில்லை

படிப்பும் மண்டையில் இல்லை...

நடிப்போ வாழ்க்கையில் இல்லை...

உன்னை தானே நம்பி வாறேன்...

காசு பணம் கேட்கலையே...நீ

காட்டும் பாசம் போதும்...

வேஷக்கார உலகத்திலே...

நானும் கூட இப்போ பட்டினி விரதமிருந்து 

பக்தியின்னு சொல்லிகிட்டு

மடிப்பிச்சை ஏந்திய அந்த

காசுல தானே

வேஷத்தை கட்டி வாறேன்...

உன்மீது பாரம் போட்டு

நல்வாக்கு சொல்லிப்புட்டேன்

அத்தனையும் நடத்திவை 

எனது உயிரே மகமாயி...

எல்லாரையும் வாழவை...

நீ பேசும் பேச்சை எப்படித்தான்

புரிய வைப்பேன்...

சன்யாசி வேஷத்தை கலைச்சு

போட்டு பெரிய குடும்பியாக...

மாத்தி போட்டாயே...

வழிப்பாதை காட்டுவாயோ....

கடைக்கண் காட்டுவாயோ...

கண்ணீர் பெருக்குடனே....

பக்கத்தில் புதுபொண்டாட்டி

மஞ்சளுக்கு போட்டி போட்டு அவ

கழுத்திலே மஞ்சளில் தாலி.... 

தலைக்கு மேலே கைகூப்பி

விம்மி விம்மி அழுதுகொண்டே

உன்னை தானே நம்பி வந்தேன்...

சத்தமாய் கோஷமிட்டான்....

தாயே நீயே துணை...

கருவாச்சி ...தாயே...

கருவாகி வாயேன்...

வம்சம் வளர்ந்திடவே...

மங்களமும் பெருகிடவே...

விரைந்து நீ வந்திடம்மா...

பிறக்கும் போகும் குழந்தைக்கும்

ஏழு ஏழு தலைமுறைக்கும்

காவலாய் வந்திடம்மா....

ஏழைகளை காத்திடும்...

இனியவளே.... எங்க குல மகமாயி

காளி நீ தானே...

கனியமுதும் நீ தானே 

குலசை முத்தாரம்மா...

தூரத்தில் பாட்டு சத்தம்

ஓங்கியே ஓலித்தது...

சிவாஜியின் படப்பாடல்...

அம்பிகையே ஈஸ்வரியே 

எம்மை ஆளவந்து கோவில்

கொண்ட குங்குமகாரி...

காதல்

தந்தையும் தாயும் 
காட்டிய காதலை 
யாராலும் தரமுடியாது 
என்பதால் தான் 
உருவானது பழமொழி 
அன்னையும் பிதாவும் 
முன்னேறி தெய்வம் 

வேலைக்கு போகணும்...

 


ஏண்டா நீ வேலைக்கு போக மாட்ங்குறேன்னு...

எல்லோரும் என்னை கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க.

எனக்கு பயங்கரமா கோபம் வந்திருச்சு..

அதனால அம்மா ஆசையா தந்த மொறு மொறு நெய் தோசை திங்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்...( முரட்டு சிங்கம். அதான் எங்க நயினா...முதுகு தோலை உரிச்சுட்டாரு)..

அக்கா கூட நம்ம தம்பியை அடிக்காதீங்கன்னு சொல்லவரலை....

இரு இரு..‌அக்கா பிசாசு நாளை நீ ஐஸ்கிரீம் கேளூ.. அப்போ காட்டுறேன் என் வீரத்தை..

மச்சான் விளையாட வர்றீயாடா...

டேய் இன்னிக்கு நான் விளையாட வரலைடா...

நான் ரொம்ப சோகமா இருக்கேன்...

மச்சான் உன் பிரென்ட் பம்புளிபாஸ் உன்னை கூப்பிடுறா...

அவளுக்கு சைக்கிள் தள்ளி விட ஆள் இல்லையாம்..

அந்த லூசை கூப்பிடு..நல்லாவே பல்லை காட்டிக்கிட்டே வந்து உதவி செய்வான், அப்படின்னு சொன்னாடா...

.. சீக்கிரம் போடா.. எப்படியும் ம்ம் ம்ம்... அந்த பொண்ணு உனக்கு தான்...


டேய் இருக்குடா இந்த கதை சொல்லி முடிச்சுட்டு விளையாட வாரேன்...

அட டென்ஷன் ஆகாதீங்க நண்பா...

நம்மளை ஓர் கதை கூட நிம்மதியா சொல்ல விடுறாங்கங்களா... எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் தான்..என்னைய மாதிரியே தான்..

ஆங்.. எங்க விட்டேன்.. ஆங்....

அப்புறம் அம்மா நாலு முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணீனாங்க..அதனால வீட்டை விட்டு போற முடிவை மாத்திக்கிட்டேன்....

இப்போ சொல்லு தங்கம் உனக்கு என்ன பிரச்சினை...

அட என்னை விட சின்ன பசங்க எல்லாம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறான்னுங்க....

நான் இன்னும் எத்தனை நாளைக்கு தான் அப்பா சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறது....

எனக்கு வெளியே தலை காட்ட முடியலை. ..

ஓரே shyயா இருக்கு...

அட இது தான் செல்லம் உன் கோபமா....

உன்னை யாராவது வேலைக்கு சேர்த்து கிட்டா அவங்களை போலீஸ் பிடிச்சு போயிரும்....

ஏம்மா அப்படி...

அட மக்கு பயலே.... குழந்தையை வேலை செய்ய சொல்லகூடாதுடா.....

உனக்கு சந்தேகமா இருந்தா போய் கண்ணாடியில் போய் உன் முகத்தை பாரு...அப்படின்னு.  சொன்னாங்க....

நானும் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன்...ரொம்பவே சின்ன பையன் மாதிரியே தான் இருக்கேன்..


அட நீங்க ஏன் இப்போ இவ்வளவு சீரியஸ்யா முறைக்குறீங்க...

இது ஓர் கற்பனை கதை தானே..இதுக்கே இப்படின்னா... இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ....பாக்கி இருக்கு....

வாழ்க்கையில் இருக்கிற கவலையை சிரித்து மாற்றுங்க..

அப்புறம் பாருங்க..வாழ்க்கை சும்மா சூப்பரா இருக்கும்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நண்பா..

கவியின் காதல்

 பொறுப்பு துறப்பு....

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

இதில் வரும் சம்பவங்கள் யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்திருந்தால்.. அதற்கு கதாசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்....

இது முற்றிலும் ஓர் கற்பனை கதையை ...

.

.

கவியின் காதல்...

.

.

.

நீயும் யாரையாவது லவ் பண்ணவேண்டியது தானடா..., அக்கறையுடன்கேட்ட மேனேஜர் கவி...

அட அதுக்கெல்லாம் நம்மாளூக்கு திறமை ஏது.... நக்கலாக சிரித்த T.L. குமார்..

அட, ஏதாவது காதல் கவிதை எழுதி.உனக்கு தெரிஞ்ச பொண்ணு கிட்ட கொடுடா....

அதை படிச்சுட்டு உன்கிட்ட வந்துயாராவது ப்ரமோஷன் பண்ணிணா...

அந்த லவ் லெட்டர் உனக்காகவே தான் எழுதினதுன்னு பொய் சொல்லு.... மேனேஜர் கவியின் ஜடியா நன்றாகவே இருந்தது...

ஆனால் நம்ம ஹீரோ தான் சரியான வெங்காயம் ஆச்சே.... அவனுக்கு புராஜெக்ட் புரியவே இரண்டு மாசம் ஆச்சு...பிறகு ஒவ்வொரு வாரமும் ஸ்டார் அவார்ட் வாங்கினது வேற கதை...

அது எப்படி என்னால் பொய் சொல்ல முடியும்...

நீங்க தானே பல தடவை சொன்னீங்க.. உனக்கு பொய்யும் பேச தெரியாது..உண்மை மறைக்கவும் தெரியாது.. நல்லாவே கோபப்பட மட்டும் தெரியுதுன்னு..

கவி பார்த்தீங்களா, பையனுக்கு லவ் பண்ண ஐடியா கொடுத்தா.. இவன் நமக்கே ஐடியா சொல்லுவான் போலயே....

நான் ஏதும் தப்பா பேசலையே....கவி அடிக்கடி சொல்லி என்னை அப்படி தானே கிண்டல் பண்ணுவாரு....

ஓ.அப்போ நாங்க உன்னை கிண்டல் பண்ணுறது தெரிஞ்சும் அமைதியா இருந்தே அப்படித்தானே.... அலெக்ஸ் தன் பங்கிற்கு எண்ணெய் ஊற்றினான்...

டேய், டேய்.. நீங்க எல்லாம் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க... அவனுக்கு நான் சொல்லுறது புரியாம போயிட போகுது...

.

.

டேய் காமு ( காமேஸ்வரன் அவனை அப்படித்தான் எல்லோரும் ஆபிஸ்ல கூப்பிடுவாங்க)  என் காதல் கதையை உனக்கு ஓர் உதாரணமா சொல்லுறேன் கேளூ...

அப்போ நான் இரண்டும் கேட்ட வயசுல இருந்தேன்....

டேய் அலெக்ஸ், இப்பவும் அப்படி தானே தான் இவன் இருக்கான்...T.L குமாரின் மெதுவாக பேசிய வார்த்தைகளை கவனித்துவிட்ட காமு...

தொலைச்சு கட்டிருவேன்... விரல்களால் சைகை செய்த குமார்...

இது எதுவுமே புரியாமல் தனது கடந்த கால காதல் கதை சொல்வதில் ஆர்வமாக இருந்த கவி...

நான் நாலு மாசமா ஓரு பொண்ணை விடாம துரத்துன... கடைசில இப்போ இருக்காளே என் அருமை பொண்டாட்டி அவளை கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு....

.

எனக்கு ஒண்ணுமே புரியலையே தலை சொரிந்த காமு...

அண்ணே, அந்த வென்னீர் தண்ணியை எடுங்க... ஆபிஸ்ல தான் முந்திரி கொட்டை மாதிரி கேள்வி கேட்குறே.... டீக்கடையில் கூடவா....கதை சொல்லி முடிப்பதற்குள் இவனுக்கு அவசரத்தை பார்த்தீயா....குமாரு....

நக்கலாக தன்னை முன்னிலைபடுத்திய மேனேஜர்....

அவனை பத்தி உங்களுக்கு தான் கவி நல்லா தெரியும்.. எங்களுக்கு எல்லாம் அவனை புரிஞ்சுக்கவே முடியாது... நேரம் பார்த்து கவியின் வார்த்தைகளை வைத்தே அவரை மடக்கிய...T.L...

தல கலக்கிட்ட, அலெக்ஸ் குமாரின் காதை கடித்தான்....

இப்போ பாரு, அலெக்ஸ்...நம்ம காமுவை கவி வைச்சு செய்வான்...காதை போத்திக்கோ.. இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு கவி அட்வைஸ் மழை பொழியுவான் பாரு...

இது வரை சென்னையிலே கூட அப்படி ஒரு மழை பெய்து இருக்காது... இருவரும் மிகவும் மெலிதாகவே பேசினாலும் காமு வின் பாம்பு காதில் இவர் பேசியது அனைத்தும் விழுந்தன..

எப்படி இவர்களால் முகத்தில் ஓரு மாதிரியும் முதுகிற்கு பின்னால் வேறு மாதிரியாகவும் பேச முடிகிறது என்ற படி யோசித்த காமேஸ்வரன்...

பாருங்க கவி, நீங்க அவன் மேல் எவ்வளவு அக்கறை பட்டு பேசுறீங்க அவன் ஏதாவது சட்டை பண்ணுறானா.... குமார்...

ப்ளீஸ்டா டீ கடையிலே கூட என்னை ஏண்டா கடுப்படிக்க வைக்கீங்க....

அட, அது இல்லை கவி உங்க பேச்சுக்கு காமு, மதிப்பு குடுக்கலை அதைத் தான் குமார் சொல்லுறாரு.... அலெக்ஸ் உதவி செய்தான்....

.

.

அலெக்ஸ் காமு என் கூடப் பிறக்காத தம்பி அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், கொஞ்ச சும்மா இருங்க... நான் சொன்னதை அவன் யோசிக்கிறான்..... அப்படித்தானே காமு....

.

என்ன பேசுகிறோம்.. என்பது தெரியாமல் பேசிய கவியின் பேச்சுக்கு தலையாட்டிய காமு....

.

.

குமாரு.. இது கொஞ்சம் ஓவரா இல்ல.. ஓர் வார்த்தை கூட இந்த பரதேசி பய சொல்லலை.அதுக்குள்ளேயே அவனும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுறான்.....

இப்போ புரியுதா அலெக்ஸ் எதுக்கு கவி எப்போ பார்த்தாலும் காமு..காமு... புகழ்ந்து பேசுறான்னு.... நான் தான் தலையாட்டி பொம்மைன்னு நினைச்சேன்.இவன் என்னையவே தூக்கி சாப்பிட்டு விட்டான்டா....

கேட்டா என்ன சொல்லுவான்... எனக்கு ப்ரமோஷன் வேணும், அதுக்கு தான் நான் இப்படி எது சொன்னாலும் சரி சொல்லுறேன்... ஆனால் நான் நினைச்ச மாதிரி தான் எந்த வேலையும் பண்ணுவேன் அப்படின்னு சொன்னான் தெரியுமா....

வாயடைத்து போன அலெக்ஸ்... கிராமத்துகாரன் நினைச்சேன் இவன் உண்மையிலேயே பெரிய ஆளூதான்....

கவி நீங்க உங்க கதை சொல்லுங்க....காமு ஏதோ கட்டளையிட்டது போல பேசினான்....


ஆங்.எதுல விட்டேன்...லவ் லெட்டர்.... தானே...

ஆமாம் கவி....

அலெக்ஸ், குமார் மற்றும் இன்னொருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்...

அப்போ எங்க வீடு பெசன்ட் நகர் பக்கத்தில் இருந்தது...

நான் ஒருத்திக்கு லவ் லெட்டர் குடுத்து விட்டு ஒரு வாரம் காத்திருந்தேன்... லெட்டரை வாங்கும் போதே அவள் சொன்னா.. பத்து நாள் அலைய விடுவேன்.. அதுக்கு அப்புறம் உனக்கு நீயே எதிர்பார்க்காத அளவுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கு அப்படின்னு சொன்னா....

டேய் அலெக்ஸ் இப்போ...செமி கதையை நிப்பாட்டி விட்டு பூரிச்சுதா அப்படின்னு கேட்பான் அதுக்கு காமு நல்லா புரிஞ்சதுன்னு தலையாட்டுவான் பாரு என்றான் குமார்...

அதை போல நடக்கவும் ஆச்சரியமாக பார்த்த அலெக்ஸிடம்...

டேய் இதை பார்த்து பார்த்து எனக்கு வயித்தெரிச்சல் தாங்கலைடா....

போன வாரம் டீம் லீடர் Feedback reviewல இந்த காமு பய கூட என் compareபண்ணி பேசுறான்டா....

கவி, என்ன சொன்னான் தெரியுமா...நீ இப்பவே வேலையை ராஜினாமா பண்ணினா, நாளை சாயங்காலத்துல இருந்து காமுவைT.L. ஆக்கி உன்னை திறமை இல்லாதவன் போல காட்டி விடுவேன்... என் திறமை பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமேன்னு சவால் விடுறான்டா.... குமாரின் கண்கலங்கியது....

கவலைபடாதீங்க குமார் இந்த காமு பயலே ஆபிஸ் விட்டு துரத்தினா தான் நமக்கு நிம்மதி...

ஏறிட்டு பார்த்த குமாரிடம் same blooy, same story என்று சிரித்தான்.. சரி சரி கதையை கேளூ தீடீரென நம்மகிட்ட கிராஸ் கேள்வி கேட்டுட போனான்...

லூசு செஞ்சாலும் செய்யும்....

ஓரு வாரம் கழிச்சு பார்த்தா.....விஜிலா வந்தா.... எனக்கு ஒண்ணுமே புரியலை....

எப்பவுமே அவங்க கூட்டமா போனது எனக்கு வசதியா போச்சு... இவளும் என்னை லவ் பண்ணுறதா சொன்னா...பிறகு என்ன அடிக்கடி பீச்ல சந்திச்சு லவ் வளர்ந்து. இப்போ ...கதை முடித்தான்...

அப்போ நீங்க உங்க மனைவிக்கு லவ் லெட்டர் கொடுக்கலையா....

டேய் குமார், இவன் இப்பவும் சந்தேகம் கேட்டு கொல்லுறானேடா...

கவி, கொஞ்சம் இருங்க அவனுக்கு நான் புரிய வைக்கிறேன்....

அடேய் காமு, உங்க அண்ணன்.. லவ் பண்ணின அண்ணி வேற, இப்போ கல்யாணம் பண்ணிருக்கிற அண்ணி வேற..... இப்போ புரியுதா...

இந்த விஷயம் உங்க மனைவிக்கு தெரியுமா...

லூசு மாங்கான்.... நான் இதுவரை நாலு பேர்கிட்ட லவ் லெட்டர் கொடுத்து இருக்கேன்....

இப்போ கட்டியிருக்கிற பொண்டாட்டி என்னோட அஞ்சாவது லவ்வர் போதுமா......

கவி ஓரு சந்தேகங.. ஓரு வேளை இவங்க உங்க லவ் ஏதுக்காம இருந்தா என்ன செஞ்சு இரூப்பீங்க....

ஆறாவதாக இன்னொருத்திகிட்ட லெட்டர் கொடுத்து இருப்பேன்... இயல்பாக சொன்ன கவி....

இது மனசாட்சி படி தப்பு, நீங்க உங்க மனைவிகிட்ட உண்மையை சொல்லியே ஆகணும் இல்லாட்டி....

மேனேஜர் கண்கள் சிவந்தது.இது வரை நீ இந்த பத்து வருஷத்தில் எத்தனை கம்பெனிகளில் வேலை பார்த்த இருப்பே...

யோசித்து பார்த்த காமு சொன்னான், மூன்று கம்பெனி ஒவ்வொரு இடத்திலும் இரண்டு வருடங்கள் கணக்கு....

இதை மாதிரி தான்டா நானும்.நம்பிக்கையோட தான் லெட்டர் கொடுத்தேன்... பெரிசா பேச வந்துட்டான்....

இவனுக்கு எல்லாம் நல்லது பண்ணவேண்டும் என்று நினைச்சேன் பாரு என் புத்தியை..........

நிலைமை மோசமாவதை உணர்ந்த குமார் , டேய் காமு நீ கிளம்பு என்றார்

.

.

அவன் அவரின் பேச்சை அப்போது அப்படியே கேட்டு நகர்ந்தான்.....

காமு, போன சில நிமிடங்களுக்கு பிறகு கவி சொன்னார்.... குமார் நாளை வந்தவுடனே இவன் மேலே சில டேட்டாவை அடுத்த கம்பெனிக்கு அனுப்புறதா..நீ ஓர் கேஸ் H.R கிட்ட மெயில் அனுப்பு.........

மெளனமாக இருந்த குமார்... ஏன் நீ அனுப்பமாட்டே அப்படிதானே...

இல்ல, அது வந்து இந்த சின்ன விஷயத்துக்கு போயி அவன் கேரியரை வம்பாக்குறது சரியில்லை....

எது சாதாரண விஷயம்.அடுத்த மாசம் நம்ம ஆபிஸ்ல ஃபேமிலி பக்தன் இருக்கு... அப்போ இவன் மட்டும் இப்போ நடந்த விஷயத்தை என் பொண்டாட்டிகிட்ட சொல்லி விட்டால் என் ஃபேமிலி லைஃப் யோசித்து பாரு....

காமு, இந்த விஷயத்தில் அப்படி எல்லாம் செய்ய மாட்டான்... எனக்கு அவனை நல்லா தெரியும் என்று அவனுக்காக பரிந்துரை செய்த குமார்....

அலெக்ஸ் கண்களில் வியப்பு மேலிட்டது... உண்மையில் குமார்க்கு காமு மேல பாசம் அதான் இப்படி நடந்துகிறாரு.... இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் .....

நீங்க சொல்லுவதை நான் செய்றேன்...கவி....

எதுவும் பேசமுடியாமல் தவித்தT.L...

கூட்டம் கலைந்து வீட்டிற்கு சென்றனர்....

மனதில் பாரத்தை வைத்து கொண்டு தூங்க முடியாமல் தவித்த குமார்... எப்படியாவது அந்த அப்பாவியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து போன் செய்தார்...

ஆண்டவா.. இந்த லூசு போனை எடுத்து பேசணுமே....

காமு எடுத்தான்.... நான் சொன்னா, நீ கேப்பீயா...

சொல்லுங்க குமார்... உங்க நல்ல மனசு எனக்கு புரியும்..உங்க பெயரை சொல்லி எல்லோரையும் கஷ்டப்படுத்துறாங்க அதைதான் என்னால் தாங்க முடியலை ராம்.....

அவனின் வீட்டில் கூப்பிடும் செல்ல பெயரை சொன்னவுடன் குமாரின் கண்கலங்கியது.. இவ்வளவு நல்லவனுக்கு எதுக்கு ஆண்டவா இப்படி ஓர் கஷ்டம்....

சில நிமிட மெளனம்....

டேய் காமு.. திங்கட்கிழமை நீ வந்தவுடனே வேலையை ராஜினாமா பண்ணு.... இதுக்கு மேலே எதுவும் கேட்காதே... எல்லாம் உன் நன்மைக்கு தான்...

சாரி , என்னை மன்னிச்சுடுங்க... என்னால் இந்த கம்பெனி வேலை விட்டு போக விருப்பமில்லை..ஏன்னா பத்து வருஷ போராட்டமான வாழ்க்கைக்கு பிறகு கிடைச்ச வேலை இது...... மேலும் உங்களை மாதிரி என்னை புரிஞ்சுகிட்ட டீம் இனிமேல் கிடைக்குமா தெரியாது...உங்களை கூட நான் திட்டி இருக்கேன்.. ஆனால் நீங்க T.L அப்படின்னு ஈகோ பார்க்கவே இல்லை...

உண்மையா சொன்ன கவி என்னை நம்பி, தம்பின்னு எல்லோருக்கும் முன்னால் சொல்லியே ஏமாத்துறான்.... ஆனால் நீங்களும் கிருஷ்ணாவும் அப்படி நடிக்க தெரியா நல்ல மனசோட பழகுறீங்க.எனக்கு இது போதும் ராம்....

டேய் காமு நீ ரொம்பவே புத்திசால, ஆனால் உன் கேரியரை பாழக்குற மாதிரி யாராவது எதுவும் பண்ணிட்டா.. பிறகு நீ எங்கேயும் ஆன்லைன் வேலைக்கு போகவே முடியாது... உன் கனவு அது தானேடா.....

நான் கிளம்பின பிறகு என் மேல கேஸ் கொடுக்க சொன்னதை நினைச்சு பீல் பண்ணாதீங்க குமார்... எனக்கு எல்லாம் தெரியும்....

குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.. நம்முடன் இருந்தது நாலு பேர் இதில் இதில் எப்படி....

எனக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்காதீங்க....

.

.

அடுத்த வாரம் என்னை under performer அப்படின்னு முத்திரை குத்த சில வேலை தொடங்கியாச்சு.... ஆனால் நான் கூப்பிடுற கருப்பண்ணசாமி எனக்கு துணை செஞ்சு காப்பாத்தும் நீங்க கவலையே படாம தூங்குங்க....

.

.

போனை வைத்தான்... குமாருக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது... இவன் கிளம்பி போன பிறகு பேசிய விஷயங்களை எப்படி நேரில் பார்த்தது மாதிரியே சொல்லுறான்....

.

.

திங்கட்கிழமை வேலைக்கு வந்த காமு முகத்தில் ஓர் சந்தோஷம் தெரிந்தது... டேய் உனக்கு எப்படி எல்லாம் தெரிஞ்சது...டீகுடிக்க அழைத்து சென்று கேட்டான்....

உங்க ஆள என்மேல் பொய் கேஸீ போடுவான்னு எங்க கருப்பண்ணசாமி இரண்டு மாசம் முன்னாடியே சொல்லிருச்சு....

பிறகு எதுக்குடா.நீ வேலை பார்குறே.வேற இடத்திற்கு போக வேண்டி தானே... இல்லை கருப்பு என்னை பிரமோஷன் பேப்பர் கைக்கு வந்து பிறகு தான் போக சொல்லி இருக்காரு....

உனக்கு எதுவும் ஆகவிட்டால்...

பிரச்சினை சமாளிக்க என்னால முடியாதுன்னு தான்.எனக்கு துணைக்கு சாமி ஆளூ அனுப்புறதா சொல்லச்சு.....

சரியான கிராமத்துகாரன் போல பேசிய காமேஸ்வரன் முகத்தின் ஒளியும் பேச்சின் கம்பீரமும் தான் .பேசுவது வேறு ஓர் நபரிடம் என்ற உணர்வை கொடுத்தது....

தோரணையாக பேசினான், நான் சீக்கிரம் வேலையை விட்டு விட்டு போய்விடுவேன்.ஆனால் அதுக்கு பிறகு அவனால் உனக்கு எந்த இடைஞ்சலும் வராது....

உன் வீட்டு சாஸ்தா உனக்கு துணையா இருப்பாரு.......

இன்னும் ஓர் விஷயம் தெரிஞ்சுக்கோ.....கவி உண்மையில் காதலிச்ச பொண்ணு வேற...பெயரை சொன்னவுடன் ஆடித்தான் போனார்....

ஸ்டார் ஹோட்டலில் தன்னிடம் மட்டுமே சொன்ன ரகசிய பெயர்....இது எனக்கு மூணு மாசம் முன்னாடி தான் தெரியும்....

குமாரின் வாய் முணுமுணுப்பு செய்தது.... கவியின்  காதல்... உண்மையா...போலியானதா....

காதல் மனைவி...

 கடற்கரையில்

கால் நனைக்க

பயந்து ஓடும்

பெரிய மணுஷி..

ஐந்து வயது

தம்பியின் கைகளை

பிடித்துக்கொண்டு

வலுக்கட்டாயமாக அவனை

கடலுக்குள் இழுத்தாள்....

அவனோ பயத்தில் கத்தினான்...

அக்கா இருக்கேன்.....

கவலைபடாதே....

தூரத்தில் இருந்து

சகோதர பாசத்தை

ரசிக்கும் பெற்றவர்கள்....

அனாதையாக உலகை

வெறுத்து சுற்றியவனை

இருந்தவனை

இப்படித்தானேடி கண்களால்

வலைவீசி கவலை துடைத்து

காதலுக்குள் இழுத்தாய்...என்றவனின்

தோள்களில் சாய்ந்தாள்...

அவனின் காதல் மனைவி...

சித்தி

 பத்து மாதம்

சுமந்து பெறவில்லை

குடும்பத்தின் கவலைகள்

புரியாத வயது....

பாவாடை தாவணியில்

ஆனாலும் அக்காவின்

குழந்தையை இடையில்

தூக்கி வைத்துக் கொண்டு

வீதியை சுற்றிக்காட்டுவாள்

 சிறிதாக சிணுங்கினாலும்

 தாய்மையின் வேதனையில்

தவித்து போவாள்...

என் புள்ள கர்வமாக சொல்லுவாள்

ஆசையும் ஆசிர்வாதமும் கலந்தே

ஊட்டிய நிலாச்சோறு...

அம்மாவின் மறுஉருவம்...

அன்பான சித்தி...




பீச்

 சின்ன வயசுல ஓர் தடவை பீச்ல விளையாடிய நினைவு.. என்னை பீச்க்கு கூட்டிக்கிட்டு போவீங்களா.. பரிமளா கேசவ் இடம் கேட்டாள்... உங்க அம்மா அப்பாவிடம் கேட்க வேண்டியது தானே.. அவங்க ஆபிஸ்ல இருந்து 20 நாள் வடஇந்திய  டூர் போய்விட்டாங்க... காலேஜ் படிக்கிற வயசு பொண்ணுகளை வீட்டில் விட்டு விட்டா.. ஆச்சரியமாக கேட்டான்.. ஏன் வயசான காலத்துல Honeymoon போறது தப்பா.. எதையும் வெட்கப்பட்டு பேசும் பரிமளாவா இது விக்கித்து போனான்.... மெளனமாக இருந்தவரிடன் மீண்டும் கேட்டாள்.. ..என்ன பதிலையே காணும்... பதில் சொல்ல முடியாமல் இந்த முறை கேசவ் வெட்கப்பட்டான்..

அப்போ நீ மட்டும் தனியாவா வீட்டில் இருக்க கவலையும் பதட்டமும் இணைந்த குரலில் கேட்டான்..

அம்மா வயித்துல கூட தனியா தானே இருந்தேன்.சில நிமிட கவலை தோய்த்த முகத்தில் புன்னகையை வரவழைக்க கஷ்டப்பட்டான்...

நாளைக்கு மதியம் சாப்பாடு வந்திடுங்க.. உங்களுக்கு பிடிச்ச மோர் குழம்பும்,  கத்திரிக்காய் பொரியலும் செய்து வைக்கிறேன்...

கேசவ் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றான்...

உனக்கு எப்படி இது தெரியும் என்றவனிடம்... அதான் டீக்கடையில் போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையாக சொன்னீங்களே....

ஓண்ணு புரியாமல் விழித்தான்.. நேத்து நீங்க இல்லாத நேரத்தில் உங்களை மோர் குழம்பு அப்படின்னு கேலி பேசிட்டு இருந்தாங்க..புரியுதா

இரவு எல்லாம் தூக்கம் வராமல் தவித்தான்.ச்சே பெத்தவங்க ஊருக்கு போயாச்சு.. தங்கச்சியோ பரீட்சை எழுத சென்னை போயிருக்கா.... பாவம் பரிமளாவின் நிலையை நினைத்த படியே தூங்கி போனான்... சீக்கிரமா, வீட்டிற்கு போனாள் அவளுக்கு ஏதாவது உதவி செய்யலாம்..11.00 மணியளவில் பரிமளா வீட்டிற்கு சென்றான்... வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினான்... ஏண்டி உன் ஆளூ சீக்கிரமா வந்துட்டான் போல யாரோ கேலி பேசும் சத்தம் கேட்டது...அட அவரு சரியான மெஷின் சரியான மதிய சாப்பாட்டுக்கு தாண்டி வருவாருன்னு பெருசா பீத்திக்கிட்டு இருந்தே.....

கதவு திறந்தது, மார்டன் டிரஸில் பரிமளா.

வந்து நின்றாள்...

ஏண்டி உன் ஆளூ வந்துட்டாரா....கேட்ட படி வாசல் அருகே வந்த மீனா..

இருவரின் முகத்திலும் வெட்கம் படர்ந்தது...சரி, சரி புது பொண்ணு வெட்கப்பட்டது போது.போய் ட்ரஸ் சேச் பண்ணிட்டு வா... அதுவரை நான் பார்த்துக்கிறேன் என்றவளை பரிமளா முறைத்து பார்த்து...செல்வியோ கண்ணை சிமிட்டி சிரித்தாள்...

கேசவன் நடுஹாலில் சென்று அமர்ந்தான். வீடு சிறிதாக இருந்தாலும் மிகவும் சுத்தமாக இருந்தது...வீட்டை ரொம்ப சுத்தமாக வைச்சீருக்கீங்க...என்ற கேசவ்... எல்லாம் உங்க ஆளூ வேலைதான்.. என்றவள் சுதாரித்து கொண்டு அதாவது உங்க ப்ரெண்ட்.. என்றாள்...பட்டுசேலை உடுத்தி புதுப்பெண் போல வந்த பரிமளா... ஏண்டி அந்த கல் நெக்லஸ் போட்டுக் வேண்டிதானே....

நீ உன் வாயை மூடிக்கிட்டு இரு மெதுவாக மீனா...

கொஞ்ச நேரம் டி.வி பார்த்துகிட்டு இருங்க.. நான் சமையல் பண்ணி முடிச்சிட்டுவேன்... ஒண்ணும் அவசியமில்லை என்றவனின் பேச்சை இடைமறித்து அப்போ ராத்திரி சாப்பாடு தான் கிடைக்கும் பரவாயில்லையா துடுக்காக கேட்ட மீனா..

கேசவ் அசடு வழிந்தான்... நீங்க தனியா இருப்பதா சொன்னதால் தான் நான் சீக்கிரம் வந்தேன்.. நான் வேணும்னா ஏதாவது காய்வாங்கிட்டு வரட்டுமா அக்கறையுடன் விசாரித்தான்...

என்னமோ வஜ்ஜிர மீன் வாங்கு மாதிரி பேசுறீங்க... சாதாரண வெண்டைக்காய், கத்திரிக்காய் தானே.. மீண்டும் சீண்டிய மீனா.. கேசவ் எரிச்சலாக உணர்ந்தான்.. அவனின் முகமாறுதல் கண்டு கவலையுற்ற பரிமளா...

ஏய் நீ மாடியில் போய் துணியெல்லாம் காயப்போடு.. என்றாள் பரிமளா...

ஹலோ சார், நீங்களும் வாங்க... வந்து மாடியில் எங்க அக்காவோட தோட்டத்தை பாருங்க...
கேசவ் பரிமளாவை பார்த்தான்...அவளோ...சரி என்பது போல் கண்சாடை காட்டினாள்.....

மீனாவின் பின்னால் பூனைக்குட்டி போல் கேசவ் போவதை பார்த்து பரிமளாவுக்கு சந்தோஷமாக இருந்தது...
ஏய், மங்குணி உன்னோட ஆளூ உன்னை விட சரியான அமுக்குறா தான்... தன் மனதுக்குள் சொல்லி சிரித்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

உங்களுக்கு இன்னிக்கு தான் பெரிய பரீட்சை இருக்கு. இதில் பாஸ் ஆயிட்டா.. நீங்க தான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலி...பொடி வைத்து பேசியவளின் பேச்சு, அவனுக்குள்ளே எதோ ஓர் வித பயத்தை உண்டாக்கியது....
.
எங்க அம்மாவும் அப்பாவும் பாட்டி வீட்டிற்கு போயிருகாங்க.... கிராமத்தில் திருவிழா நடக்குது.... எனக்கு கூட போக ஆசைதான்.. ஆனால் இவளுக்கு துணையாக இருக்க வேண்டியதா போச்சு...
பத்து நாள் கழிச்சு வேலைக்கு சேர சொன்ன அப்பாவிடம் எப்படி கோபப்பட்டா தெரியுமா... இந்த கம்பெனி தான் அருமையான இடம் என்று பேசி அப்பாவை சம்மதிக்க வைத்தாள்....
.
இதுல பெரிய காமெடி என்ன தெரியுமா..
நான் எதுக்கு வேலைக்கு போகணும் அப்படி சொன்னவள், மதினியோட வற்புறுத்தல் காரணமாக தான் இண்டர்வீயூவுக்கே போனா....
.

கணையாழி

குட்டி கருவாச்சி....

குட்டி கருவாச்சி......

விழியாலே மொழி பேசும் குட்டி கருவாச்சி..

வீதியில் நீ நடக்கும் போது

விண்ணில் தான் பறக்கின்றேனே...

உதட்டின் மொழியாலே...

உண்மையை சொல்வாரோ...

கல்லூரி போகும்  முன்னே

கருவிழியில் உன்னைக் கண்டேனே

நேரம் போகாமல் வீதியில் திரிந்தேனே

நேரம் போதாமல் விழிமொழியை தந்தாயே

நொடிப்பொழுதில் நீ வந்து கடற்காற்று

வீசியதென்ன....

விழிகளின் மொழியாலே தவிக்க விடுவதென்ன ..

ஓர் நொடியில் பார்த்துவிட்டு

மனதினுள் பூகம்பம் கொடுத்து ஏனோ...

சொல்லடி கருவாச்சி...

நெஞ்சில் உன்நினைப்பே இருப்பாச்சு..‌

அங்கே பூச்செடியாய் உன்னை வைத்தேன்...

பூச்சோலையாக நீ மாறியது எப்படியோ கண்மணி

இன்னும் ஏணடி இந்த மெளனம் ...

விழியசைத்து ஓராயிரம் கதை சொன்னாயே.....

வீதியில் உனக்காக வீற்றிருக்கும் வேளையிலே...

ஊருக்கு முன்னால் நீ சிறுபெண்ணாய் தெரிகின்றாய்...

என் கண்ணில் ஏனோ அழகியாய் மாறியதென்ன...

மர்ம புன்னகை மத்தாப்பாய் கொடுத்தாயா...

விரல்களை தொட்டு முத்தவிட துடிக்கின்றேன் கண்மணி...

கல்லூரி முடிந்த பின்பே கல்யாணம் செய்து கொள்வோம்..

பக்கத்தில் நீவாடி என்தருமை கருவாச்சி...

உயிருக்கு உரமூட்டி எத்தனை நாளாச்சு...

ஓர் முத்தம் தந்துவிட்டு... தவிக்க விட்டதென்ன...‌‌

விழியாலே மொழி பேசி தவிக்கவிடாதே...

தள்ளியே நிற்கின்றேன்...

மொழி போதும் கண்மணியே...

மொழியால் வழி காட்டு வாழ்க்கைக்கு வரம் கொடு...

குட்டி கருவாச்சி..இந்த சின்ன கருப்பனுக்கு...

வாழ வழிசொல்லு....

வயற்காட்டில் மாடுமேய்க்கும் இந்த கண்ணணை தேடிவருவோயோ...

ராதையோ ...கோதையோ...

உன் பெயரை சொல்லி விடு...

முன்னாலே வந்து நின்று தந்துவிடு கணையாழி

வயற்காட்டில் வேலை செய்யும் ஓர் விவசாயி தன் காதலியை நினைத்து பாடுவது போல் அமைந்த பாடல்... அவன் தான் வணங்கும் கண்ணாக தன்னை நினைத்து பாடும் கற்பனை பாடல்...


மகாலட்சுமி பிறந்திருக்கா..


நேற்று வரை

குடிகாரனாக

தெருவில்

அலைந்தவன்..

பொண்டாட்டி

ஆபிஸ்பத்திரியில்

சேர்ந்தது கூட

நினைவுயின்றி....

மதுபோதையில்

அந்த அரசமர

விநாயகரிடமும்

புலம்பித் தள்ளினான்

என்னை யாருமே

புரிஞ்சுக்கலை

அதனால தானே

குடிக்கிறேன்....

அருகில் ஓடிவந்த

அக்காவின் மொழி

காதில் விழுந்தது

ஏறிட்டு பார்த்தான்

ஏலே உனக்கு

பொம்பள பிள்ளை

பிறந்திருக்கு....

தட்டுத்தடுமாறி

தள்ளாடியபடி

நடந்து சென்ற

குடிகார இளைஞன்...

கட்டிலில் மனைவி

வெட்கப் புன்னகையுடன்

இங்க வாய்யா....

உன் புள்ளயும்

உன்னை போலவே

கைநடுக்கத்துடன்

அருகே சென்றவனை

பார்த்து சிரித்தாள் அந்த

சின்னச்சிறு தேவதை....

இனிமேல் சத்தியமா

குடிக்க மாட்டேன் 

"பாப்பா" கண்கலங்கி

இருகரம் கூப்பி

குழந்தையை 

வணங்கினான்....

பக்கத்து வார்டில்

கிழவி பேச்சு

சுத்தமாக கேட்டது

அந்த குடிகாரப்பயலுக்கு

மகாலட்சுமி பிறந்திருக்கு...

தேவை

எல்லோருக்கும் 

அவர்கள் 

எதிர்பார்த்த அன்பு 

கிடைத்தால் 

உலகமே ஓர் 

சொர்க்கம் தான்... 

சிலருக்கு பணம் தேவை... 

ஆனால் ஏழை மனிதருக்கு 

தனது  குழந்தைகளின் 

பாச மொழியே தேவை

அன்புக்காதலன்

கண்ணுடன் 

கண் சேர்த்து

தன் காதலை 

ஆணுக்குள் 

செலுத்திய 

பெண்மை... 

அவளின் 

கண்ணுக்குள் 

தன்னை தேடி...

அவளுக்குள் 

கரைந்து போனான் 

அவளின் தன்னிகரற்ற

அன்புக்காதலன்

கண் பாராயோ தாயே

கடைக்கண் பாராயோ..

கவலைகள் தீராயோ...

கனியமுது தந்திடவே

விரைந்து நீ வாராயோ...

வெற்றியை தந்திடவே

கவலைகள் அத்தனையும்

சிரித்து மாற்றிய சிங்காரியே

மாயக்கூத்தனையும்

மயக்கிடும் மோகினியே

உனதழகு மாயைகளை காட்டி

மர்மமாய் சிரிப்பதென்ன

சிற்றின்ப வெள்ளத்தில்

திளைக்க விடுவதென்ன....

உன்னை மட்டுமே சதமாய்

நினைத்தவனுக்கு...

சொந்தமும் பந்தமும்

சொகுசு வசதியும் 

தந்து விட்டு அமைதியாய்

இருப்பதென்ன...

விரைந்து நீ வா தாயே...

உன் அருளாலே கனிவுடனே

கனியமுது தந்திடவே

விரைந்து நீ வா தாயே..

என்னை கண் பாராயோ....

குறிப்பு -

அம்பாள் கோவிலில் பாடும் படி எழுதப்பட்ட பாடல்

பரிமளா....

 கோபத்தில் அவன் ஆசையாய் வாங்கிய விலையுயர்ந்த பட்டு புடவையுடன் தரையில் படுத்து கொண்டு விம்மி அழுதாள்...

இப்படி ஓர் நிகழ்வு ஏற்படும் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை...

ஏய் புள்ள...

பதில் எதுவும் சொல்லாமல் வலது கையை தலைக்கு வைத்து தரையில் முகம்படும் படியாக இருந்தாள்...

எரிச்சலாக வந்தது.. இந்த பெண்ணை புரிந்து கொள்ளவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுமோ...

இவள் தானே காலையில் கேலி பேச்சை தொடங்கினாள்....

இந்த சட்டை நல்லா இருக்கா என்றபோது.. உங்க அண்ணன் சட்டை மாதிரி இருக்கு என்றாளே....

அப்படித்தானே நானும் சொன்னேன்... எப்படி இது மட்டும் தப்பாகும்...

மிகவும் சங்கடமாக உணர்ந்தான்.. திருமணத்திற்கு பிறகு வரும் அவளின் முதல் பிறந்தநாள்..ஆறு மாதமாக போட்ட திட்டம்... ஓர் சிறிய கேலி வார்த்தைகளில் திணறி நின்றது... அவள் தான் முதலில் கேட்டாள்.. இந்த புடவையில் நான் அழகா இருக்கேனா....ம்ம்.என்றவனிடம்...என் தங்கையை விடவா என்ற கேள்வியின் விஷமம் தெரியாமல்.. அவளுக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் என்ற வார்த்தையின் விளைவு... பேசிய பிறகு தானே தவறு தெரிகிறது...

அவள் இன்று அணிந்திருக்கும் ஒவ்வொன்றும் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள்.. தன் அரை மாத சம்பளம், அது கூட பரவாயில்லை... எத்தனை கடை ஏறி இறங்கி வாங்கியவை இவை.....

அவளுக்கே தெரியாமல் அவளுக்கு பிடித்த கலர் பிராண்ட்.. மாம்பழ கலர் பட்டு புடவை... வண்ணமயமாக ஸ்டிக்கர் பொட்டு... மல்லிகையும் பிச்சியும் ஓரு சேர கட்டிய பூ சரம்

அவளின் பேச்சு அவனை நிலைகுலைய வைத்தது


அப்போ அவளையே நீ கட்டியிருக்க வேண்டி தானே.. எதுக்கு என் பின்னால் சுத்துனே...

( தொடரும் )

வள்ளி

கல்யாண வீட்டில்

அதிக வேலையை

வலிந்து சென்று

செய்தவனை ஏனோ

நொடிப்பொழுதில் 

சிலருக்காக சிலரின் 

மனதை சந்தோஷப்படுத்த

நினைத்த அற்பமான

சில்லறை சொந்தங்கள்...

அவனை வார்த்தைகளில்

வறுத்தெடுத்து கோபத்தின்

உச்சிக்கு அழைத்த 

உடன்பிறவா உறவுகள்...

பீரங்கி குண்டு போல்

உணர்ச்சியின் வேகத்தில்

வார்த்தைகளை வீசி

தனது எல்லா நல்ல செயல்களையும்

பின்னுக்கு தள்ளிவிடும்...

போலியாய் பாசாங்கு

தெரியாத அப்பாவி ஏழை....

இன்றும் கூட அப்படித்தான்

ஆனால் அருகிலே தேவதை...

கோபத்தில் பேச நினைத்தவனை

தனது மலர் கரத்தால்..

தீண்டினாள்.....

சேலையின் முந்தானை 

மறைவில் விரல்களால்

வருடி கண்களில் பேசினாள்

உன்னை நான் அறிவேன்

ஊரின் கேலி பேச்சுக்கள்

நமக்கு எதற்காக...

உதட்டின் புன்னகையில்...

சண்டையை தவிர்த்து விட்டாள்....

சமாதானத்தை மாத்திரமே

வேண்டுகின்ற யதார்த்தவாதி

சேவலின் சண்டை எதிர்பார்த்த...

உறவுகளுக்கு முன்னால்....

அவனை தலை நிமிரச்செய்து

அவனின் குணத்தை

பலர் புகழ வழிசெய்தாள்....

வேலனின் கரம் பிடித்த

வள்ளி....





தாய் அன்பு

 பெரிய மணுஷியாக

மாறிவிட்ட கல்லூரி

பயிலும் அக்கா...

அவளின் துப்பட்டாவை

எடுத்து முகம் துடைத்து

அதை அவளின் முகத்தில்

வீசி எறிந்தான்...

ஆயினும் அவளின்

முகத்தில் பாசம் ததும்பியது

அருகில் அவனை இழுத்து

அவனின் தோளில் தலைசாய்ந்தவள்

கேள்விகளால் துளைத்தெடுத்தாள்

டேய் பஸ் எப்போடா வரும்

எனக்கு கால் ரொம்ப வலிக்குதுடா

என்கென்ன ஜோசியமா தெரியும்

என்றே அலுத்து கொண்டவன்

மீண்டும் மீண்டும் அவனை

கேள்விகளால் சீண்டினால்.

ஏய் லூசூ வாயை மூடிக்கிட்டு கிட

சத்தமான பேச்சு சுற்றுபுறத்தில்

அதிர்வலைகளை உண்டாக்கியது

அவளோ யாரை பற்றியும் கவலை படாமல் அவனின் கன்னத்தில்

ஓப்பனை செய்தாள்.

ஏண்டா இரண்டு வருஷத்துல 

காலேஜ் போகாணும் 

இன்னும் பவுடர் கூட போட தெரியலை 

அங்கலாயத்து கொண்டவள்..

சீப்பை எடுத தலைவாரி விட்டாள்

பேருந்து நிலையத்தில்

சுற்றி இருப்பவர்கள்

பற்றிய கவலைகள் இன்றி

அம்மாவை பற்றியே குறை

சொன்னான்.அதுக்கென்னடா

அதான் உனக்கு நானிருக்கேன்..

கல்யாணத்துக்கு பிறகும் என்மேல பாசமா இருப்பீயா... ஏக்கத்துடன் கேட்ட கேள்விக்கு பதிலுயைத்தாள்

நீ என்னோட 

பாசக்கார அருமை தம்பிடா...

சாலையை கடக்கும்

அனைவரும் வாய்குள்ளே

முணுமுணுத்தனர்....

காதல் படுத்தும் பாடு....

உலகம் எதைத்தான்

சரியாக புரிந்து கொண்டது

சகோதர சகோதரிகளின்

காதலில் என்றுமே

தலையீடு செய்யாத

காமம்....

விரகதாபத்தில்

துடிப்பவர்களுக்கு...

புரிய இயலாது

இந்த தாய் அன்பு

பேருந்து நிறுத்தத்தில்

ஒரமாக இருந்த கிழவி

கண்களை துடைத்து

ஆகாயத்தை பார்த்து

வேண்டிக்கொண்டாள்..

ஆண்டவா இந்த அக்கா தங்கச்சி உறவையாவது கடைசி காலம் வரை

பிரிவில்லாமல் ஓண்ணா வாழ வை

எதிர் சுவற்றில் சிரித்தபடி பாசமலர்

சிவாஜியின் பட விளம்பரம் 




ஆனந்தம்

கைகளை

பிடித்து

நடைபழக்கிய

தந்தையும்...

கன்னத்தை

அடிக்கடி கிள்ளி

முத்தமிட்டு இது

என்னோட தம்பி

பூரித்துப் போன

சகோதரிகள்...

கைகளை பற்றி

காதலை 

உணர்த்திய

காதலன்/லி

என்றுமே 

நினைவில்

சுகமாக தாலாட்டும்

நினைவுகள் 

ஆனந்தம்


காதல் சுகமானது

மறக்க

நினைப்பதை

மறக்க முடியாமல்

தவிக்கும் மனம்...

எத்தனை முறையோ

காதலில் தவித்து

ஊருக்கு பயந்து

போலியாய் வாழுகிறேன்

காதலை வெறுப்பவள் போல

ஆனால் மனமோ காதலை

நினைத்து ஏங்குகிறது...

ஏனெனில் காதல் 

சுகமானது





முதல் காதல்

வயதான

காலத்தில்

மரணத்தின்

தருவாயில்

படுக்கையில்

விழுந்த பிறகும்

ஏனோ முதன்முதலாக

மனதில் பூவாய்

பூத்த காதலை

மறக்க முடியவில்லை...

சுற்றி நின்று அழும்

மனைவி மக்கள்...

ஆயினும் மனமோ

தேடுகிறது அந்த

அத்தை மகளை...

அவளோ தள்ளாடி

 நடக்கமுடியாமல்

பேத்தியின் கைபிடித்து

ஆஸ்பத்திரிக்கு

நடந்து வருகிறாள்...

இருவரின் மனதிலும்

வெளியே சொல்லாமல்

பேணி வளர்த்து 

யாருக்கும் தெரியாமல்

பாதுகாத்த மெலிதான

முதல் காதல்







அச்சாணி

வாழ்க்கை 

வெறுத்து போகும்

சமயத்தில்.. 

எங்கிருந்தோ வரும் 

ஓர் சிறிய வெளிச்சம் தான்

 வாழ்க்கையின் அச்சாணி...

Calibre

 Never and Ever

Underestimate

Anyone because

Everyone has their own

Calibre

திறமைசாலியே

 யாரையும் 

குறைத்து மதிப்பீடாதீர்கள்..... 

கடுகு சிறிது ஆனாலும் 

காரம் குறையாது.. 

இறைவனின் படைப்பில் 

அனைவரும் 

ஏதோ ஓர் விதத்தில்

திறைமைசாலியே......

அரசியல் அதிகாரம்.. .


பலரின்

அடிமனதில்

அரசியல் ஆசை

துயில் கொள்கின்றது...

அதில் சிலரே துயில் கடந்து

விழிப்பு நிலைபெற்று

விழிப்புடன் தேர்த்திருவிழாவும்

தோற்றுவிடும் தேர்தல் கூட்டத்தில்

அவர்களில் சிலரால்

மட்டுமே சரித்திரத்தில்

இடம்பெற முடிகிறது.....

பதவியில் அமரவும்...

அமர்ந்த பின்னரும்

வெளியே சொல்ல முடியா

வேதனை கதைகளை

மனதில் போட்டு

புதைத்து விட்டு

அடுத்தவருக்காக உழைத்து

சிரிக்கும் யதார்த்தமே

அடைய நினைக்கும்..

அடைந்து விட்ட...பதவியே

அரசியல் அதிகாரம்..

காதல்

அன்பெனும் காதல் 
எதை வேண்டுகிறது
புரியாமல் தவிப்பது
மனிதனின் இயல்பு தானே...
உள்ளத்தில் தோன்றிய
உவப்பில்லா உணர்சிகளை
உண்டாகும் காதல் உணர்வு
பணம் சார்ந்ததா...
மனம் சார்ந்ததா....
உடல் சார்ந்ததா...
குணம் சார்ந்ததா...
குலம் சார்ந்ததா....
இனம் சார்ந்ததா...

அலுவலக நாகரீகம்..

 அலுவலக நாகரீகம்...

.

.

.

பல வருட உழைப்பில்

ஓரு நாள் கூட 

புகழாமல் 

ஏசியும் பேசியும்..

வேலைவாங்கிய

மேலதிகாரிகள்..

இன்றோ அனைவரும்

புகழ்ந்து தள்ளுகிறார்கள்..

வார்த்தைக்கு வார்த்தை

திறமைசாலி..பொறுமைசாலி...

பொறுப்பானவர்.....

இவரைப்போல 

ஓருவர் உண்டா....

ஏனென்றால் 

வழியனுப்பும் போது

வலிக்காமல் அனுப்புவது

அனைவரும் செய்யும்

அலுவலக நாகரீகம்

என் காதல் கண்ணா.


.

.

யாதவனாக பிறக்காத என்னை கண்இமை மணி போல காப்பாற்றும் யதுகுல கிருஷ்ணா...என் இதயம் நித்தமும் நினைத்து துடிக்கிறது உன் வரவிற்காக...

வா..வா...கண்ணா...

உன் நெஞ்சில் சாய்ந்து கொஞ்சிடவே கெஞ்சலுடன் 

துடிக்கிறேன் கண்ணா....

உன் வாய்மொழி கேட்க

ஆசையில் தவிக்கிறேன்...

கீதையின் போதனைகள் 

எனக்கு உதவாது.... புரியவும் முடியாது..

உன்னை காணும் பேறு

எப்போது கிட்டும்...

வா..வா...கண்ணா....

கீதை சொன்ன மன்னவனே...

ஏழைகளின் காவலனே...

உனக்காக வெண்ணெய்.....

ஏறிட்டுப் பாரடா... ஏழைகள் துயர் தீர...

இன்னும் ஏன் சோதனை...

உன் தொடவில்லையா என் சாதனை...

மயிலறகு சிந்தனை தந்தவனே...

மாதவா என்றேன்..ருத்ரனும்

நான் என்றாய்...

சர்வமும் நீ என்றால்....

உன்னை கண்டு விட முடியாமல்..

ஏழை பேதையாய்....

மனமெனும் குதிரை அடங்க மறுக்கின்றது..

அங்கே உன் வரவு எப்போது.... 

அன்போடு அழைக்கிறேன்...

பஞ்சணையில் பெண்மையை 

அடக்கி துயிலசொல்லும்....

மன்னவர் வேண்டாம்...

புல்லாங்குழல் இசை போதும்...

உன் தோளில் சாயும்

சில நொடி இன்பம் போதும்...

மாயையில் மயங்குகிறேன்...

மாதவனே...மலையரசியின்

தமையனே.... 

சிவனையும் மயங்கிடும் 

மாயா மோகினியே வந்து விடு...

மனித காதலில் தோற்றவளுக்கு

தெய்வீக காதலை காட்டியவனே..

விரல்களும் பட வில்லை...

விரக தாபம் எனக்கில்லை...

உண்மை காதலைத் தானே நித்தமும்

தேடித் தேடி அலைந்து பின்னர்...

உன்னருகே அமர வைத்து அன்பும்

அமைதியை காட்டியவா....

கட்டியணைத்து முத்தமும் இடவில்லை...

ஆடைகளை சரித்தே சோதித்த போதும்...

கண்களில் சலனமில்லை...

பரந்தாமன் சிந்தனையை

பரமனும் பார்வதியும் கூட 

அறியாமல் வைத்தவனே

தள்ளியே நின்றாய்... தவிக்க விட்டாயே...

உனது விரல்களுடன் விரல் கோர்த்து...

வீதியில் நடைபயில அனுமதி கொடுப்பாயா..

பூட்டி வைத்த இதயத்தில் எப்படித்தான்

விருப்பத்துடன் நுழைந்தாயோ..

கோட்டைகளும் சிலநொடியில்

தகர்ந்திடுமே உன் கண்இமையில்த்

எத்தனை வல்லமையா.‌‌

பணத்தை விட பெரிய அதீதமான

பாசத்தை காட்டிவிட்டாய்..

எப்போதும் நீயே என் காதல் கண்ணா...

கோமாளி உலகம்


நல்லவனாக,

பாசக்காரனாக,

அன்பானவனாக,

இருந்தால் 

உலகம் மதிக்காது

பணக்காரனாகக்கும்

பதவிக்கும் பட்டத்திற்கும்

மாத்திரமே ஆராதனை

செய்யும் போலின

கோமாளி உலகம்

அன்பு அம்மா...

 உலகத்தை

வென்று

காலடியில்

சரித்தவள்...

கடைக்கு குட்டியின்

துடுக்கு பேச்சில்

வாயடைத்து போய்

பதில் தெரியாமல்

தவிக்கும் போது அவளும்

ஓர் சாமானியனின்

அன்பு அம்மா...

காதல் முடிச்சு

 காதல் முடிச்சு..

.


அவளின்

வியர்வை

அவனின் மீதும்.‌

அவனின் வாசனை

அவளின் மீதும்

எதிர்பாராமல்

உரசிய போது

கட்டி இழுத்து

போட்டது 

அவர்களை

காதல் முடிச்சு..

பத்திரம்


பணம்

வாழ்க்கைக்கு

தேவை தான்...

அதை காட்டிலும்

பாசமும் அன்பும்

அதிகமாகவே தேவை

மனித அன்பினை...

மூலதனமாக

வருங்கால சந்ததியினர்

சொத்து பத்திரம்...

சொந்தங்களும் 

பத்திரம்...

வேகத்தை

பணத்தை

தேடி ஓடும்

போட்டியில்....

மனிதன் ஓடும் 

ஓட்டத்தின் வேகம்....

ஒளியின் வேகத்தை

கண்டுவிட்ட மனிதனும்

கணிக்க முடியவில்லை...

சில நேரங்களில் 

சொந்தகளையும் 

நண்பர்களையும்...

பிடித்து தள்ளி விட்டு

தொடருகிறான் மனிதன்...

கணிணி யுகத்தில்...

கணிக்க முடியாத

பணத்தின் மீதான ஓட்ட

வேகத்தை...


கனவு உலகம்

 வென்றவன்

சொன்னால் 

வேதம்....சாஸ்திரம்..

வெற்றி மொழி 

இன்னும் அடைமொழி..

பலப்பல.. தோற்றவன்

வாழ்வில் தான் 

சிதறிக்கிடக்கிறது

அனுபவங்கள் பல...

வென்று விட்ட ஓருவனை

பின்தொடர ஆயிரம் நபர்கள்

தோற்றவனின் அனுபவத்தை

ஏனோ கேட்க மறுக்கிறது

கனவு உலகம்....

வாழ்வில் தோற்றவனின் 

புலம்பல்களே

நான் கண்ட பேட்டிகள்....

போட்டி உலகில் தனிமை

தேடும் உயர்ந்த பிறவிகள்..

கவிதையாய் கதையாய்

சிறகு விரிக்கிறது எனது

எழுத்துக்களில் ... அவர்கள்

தோல்வியடைவில்லை....

அவர்களின் உண்மையே

வென்றது..... ஏகாந்தம் தரும்

உணர்வும் உணர்ச்சியும்...

காதலின் மேன்மையும்..

வார்த்தைகளில் வடிப்பது கடினம்

பலகோடிபணத்தை விட பாசத்தை

சேர்த்து விட்ட சொந்தங்கள் இவர்கள்

எண்ணற்ற நிம்மதி இன்றும்

அவர்களின் வசத்தில்









நாரதர் வரவில்லை

பிறர் பசியை

போக்க

பிக்பாக்கெட்

அடித்தவனை

மரத்தின் கட்டி 

அடித்தனர்...ஏனோ

அடுத்தவரின் பலவருட

உழைப்பை 

வரதட்சணையாக 

சுரண்டியவனை 

வாய்நிறைய 

புன்னகையுடன்

அழைக்கிறார்கள்

மாப்பிள்ளை வாங்க....

சீர்சனம் போதுமா....

வரதட்சணை வாங்க

தெரியாத அந்த நல்லவன்

வறுமையின் 

கொடுமையால் 

குடும்பத்தை காக்க 

மாறிவிட்டான்.....

தன் பிள்ளையின்

பசியாக திருடியவன்...

அவனுக்கு ராமநாமம்

சொல்லி கொடுக்க

ஏனோ இன்னும் 

நாரதர் வரவில்லை...



சாப்பாடு

 

நினைத்தை

மட்டுமே 

சாப்பிடுபவர் - பணக்காரன்

பிடித்ததை 

காத்திருந்து

சாப்பிடுபவர் - நடுத்தர வர்க்கம்

கிடைத்ததை 

மட்டுமே 

சாப்பிட வேண்டிய

கட்டாயத்தில் - ஏழைகள்..


அர்த்தம்

 

என்னடா

வாழ்க்கை என்றே

அலுப்பு தட்டினால்

சரியான பாதையில்

வாழ்க்கை பாதையில்

சராசரி மனிதனாய் நீ

நடை பழகிவிட்டாயென்றே

அர்த்தம்..


கன்னியாகுமரி

 காலை நேரத்தில்

சூரியனின் கற்றைகள்

அந்த ஆரவார அலையின்

அசைவில் பட்டு எதிரொளிப்பு

சிகப்பு நிறத்தில்....

கடலின் ஓர் புறத்தில்

அந்த ஓற்றை விசைபடகில்

எதிர் எதிராக

இரண்டு பேரும்

துடுப்பு போட அசைந்து

செல்லும் சிறுபடகு....

வைத்த கண் மாறாமல்

ரசிக்கும் செல்வமகள்

கடற்கரை அழகுதான்

அமைதியும் தந்துவிட்டது

கன்னியாகுமரி கடற்கரை


குற்றாலம்

 

நேற்றைய பற்றிய

கவலைகளும்‌...

இன்றைய

மனதின் போராட்டமும்

நாளை பற்றிய

பயமும்......

மறைந்து போய்

மனம் சந்தோஷமானது

ஆர்ப்பரித்து வரும்

குற்றாலத்தின்

அருவிகரையில்



பரிமளா கேசவ்

 கதை எழுத்துருவாக்கத்தில் .. மிகவும் அருமையாக கதை படிக்க தவறாதீர்கள்..

கூடிய விரைவில் பதிப்பு...

உண்மையை சொல்லிடுங்க, இல்லாட்டி...அதிகாரமும் ஆணவமும் கலந்த குரலில் எதிரில் நின்று கொண்டிருந்த பரிமளா பயப்படும் படியாக ரவீந்திரன்... 

சார், அந்த பொண்ணு நிச்சயமாக தப்பு பண்ணியிருக்க மாட்டா...பரிமளாவுக்காக இரக்கத்துடன் பேசிய கிரிஜா....

இங்க, பாருங்க கிரிஜா நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. ஆனால் இன்று ராத்திரி எட்டு மணிக்குள் எனக்கு அஞ்சு பவுன் சங்கிலி வரணும் இல்லாட்டி... நான் சொன்ன மாதிரி நடந்துங்க சொல்லுங்க...மத்த விஷயத்தை நான் பாத்துக்கிறேன்...

வெறுப்பாக பேசிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்த ரவீந்திரன்...

என்னப்பா, காலையிலேயே பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்ட போல.... தினமும் யாரையாவது ஓருத்தரை பிடிச்சு அரைமணிநேரம் அட்வைஸ் பண்ணாம உனக்கு தூக்கம் வராதா????

இல்ல முதலாளி, அடுத்த வாரம் பொங்கல் வருது.. இந்த பொம்பள பிள்ளைக்க எல்லாம்...போனஸ் பத்தி நேத்து சாப்பாட்டு நேரத்துல பேசிக்கொண்டு இருந்தார்களாம்.... அப்போ இந்த பரிமளா, எட்டு வருஷமா உழைச்சு எந்த பிரோஜனமும் இல்லை... அப்படின்னு கூட இருக்கிற பொண்ணுகள்கிட்ட சொல்லிட்டு இருந்திருக்கா....

அதுக்கு என்னையா இப்போ, வழக்கமான அவங்க எல்லாம் பேசுற பேச்சுதானே....

ஐயா, இன்னிக்கு சாயங்காலம், அமெரிக்கா படிச்சுட்டு வர்ற சின்னவர் பாராட்டு விழா நடக்க போனதில்லை....

ஆமா, என் பொண்டாட்டி தொந்தரவு தாங்க தான்னய்யா...இந்த ஏற்பாடு எல்லாம்...அதுக்கு வேற தண்ட செலவு இரண்டு லட்சம்... பெரிய கடைக்கு முதலாளியா இருந்து என்ன பிரயோஜனம் வீட்டில் பொண்டாட்டி பிள்ளை மதிக்க மாட்டேங்குது.... விரக்தியாக பேசிய சமுத்திரகனி..

ரவீந்திரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.... இந்த மாதிரி ஆளுங்க இருக்கிற வரை நம்ம மேனேஜர் பதவிக்கு ஆபத்து இல்லை...அட, கலக்குற ரவி, அடுத்தவங்களை சரியா இடை போட்டு அவங்க வீக்னஸ் பார்த்து கேம் விளையாடுறே...நீ பெரிய ஆளுதாண்டா..... மனதிஐஅ தன்னை தானே புகழ்ந்து கொண்டான்...

உங்க அப்பனை விட, நீ பெரிய புத்திசாலி... கடைசி வரை அவர் மனசுலே இருக்கிறதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது...அப்பனுகங பிள்ளை தப்பா பிறந்திருக்கே..... பாட்டி இருளாயி சொன்னது நினைவுக்கு வந்தது...


ஏன்னையா, கல்லாய நிக்குறே.. மேலும் சொல்லு ரவீந்திரனை சுயநினைவுக்கு இழுத்து வந்த முதலாளி சமுத்திர கனி...

இந்த பரிமளா பொண்ணு.. எல்லார் முன்னாடியும் சம்பள உயர்வு பத்தி பேச போறாளாம்...

யோவ், என் மகனே நேத்து தானே வந்திருக்கான்... அவனுக்கு வியாபார நெளிவு சுழிவு தெரியாதுய்யா...

ஆனா, அவர் ரொம்பவே இளகிய மனசுகாரர்... ஏதாவது சம்பளத்தை அதிகமாக கொடுக்கிறதா.. சொல்லிட்டா...

யோவ், எதுக்கு இப்போ என் வயித்துல புளியை கரைக்கிறே... இப்படி எல்லாம் வரும்ணு தெரிஞ்சு தான்..ஏழை வீட்டில் பிள்ளைகளை வேலைக்கு சேர்த்திருக்கேன்....

தந்தையின் இழப்பு

தந்தை இறந்து விட்டார், என்பதை இன்னும் நம்ப முடியாமல் நேரமும் கடந்து கொண்டு தான் இருக்கிறது

இருந்த போதிலும் அவர் ஏற்படுத்திய நிகழ்வுகள் எத்தனை எத்தனையோ...

முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து சென்ற நாள் தொடங்கி சைக்கிள் ஓட்டுவதற்காக பின்னால் ஓடி வந்து மூச்சிறைக்க நின்றதும், கல்லூரியில் சேரும் போது தன் குழந்தை பெரியவனாக வளர்ந்து விட்டதையும் மறந்து, பச்சிளம் குழந்தைக்கு அறிவுரை சொல்வது போல கல்லூரியின் மரத்தடியில் அமர்ந்து பேசிய கதைகளும்.

வேலைக்கு சேர்ந்து பெற்ற முதல் சம்பளத்தை அவர் கையில் கொடுக்க நினைத்து, அவரிடம் நீட்டிய தருணத்தில் உன் பணத்தை நான் கையால் தொட மாட்டேன்.

உன் உழைப்பில் கிடைத்த பணம், அதை நீ எப்படி வேண்டுமானாலும் செலவழித்து கொள்.ஆனால் உனக்கு ஏதாவது பணம் தேவை என்றால் யாரிடமும் கை நீட்டி கடன் வாங்கி விடாதே, தன் வாழ்நாளின் அனுபவத்தை வார்த்தைகளில் வார்த்தெடுத்த நாள்...

திருமணமான புதிதில் மனைவியின் சொல்லையும் தவிர்க்க முடியாமல், அம்மா, தங்கையின் சந்தோஷத்தையும் நினைத்து தடுமாறி நின்ற போது..

உன் மனைவி சொல்வதில் நியாயம் இருந்தால், அவள் சொற்படி நடப்பதில்லை தவறில்லையே.

மிகவும் யதார்த்தமாக கஷ்டமான தருணத்தை அது அனுபவத்தால் அனுசரித்து போக சொல்லும் அனுபவசாலி.


 *கவலைபடாதே சகோதரா*...

.

நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வாழ்வை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்..

தந்தை இருக்கும் போது அவர் சொல்லிய ஆயிரம் சொற்கள் நினைவில் பசுமரத்தாணி போல் பதிந்து தான் இருக்கும்

தன் வலிகளை மறந்து, அவற்றை புன்னகையில் மறைத்து குடும்பத்தின்  உறுப்பினர்கள் அனைவரையும் சம நோக்குடன் அன்பு செலுத்திய தந்தை என்றுமே போற்றுதலுக்குரியவர்.

எத்தனை வலிகளை சுமந்து வாழ்ந்தார், என்பதை தனது பிள்ளைகளுக்கு தெரியாமல் சிரித்த படியே தேவைகளை நிறைவேற்றும் கடமையே அவரின் வாழ்வு..

இவற்றை எல்லாம் நினைத்து பார்த்தால் பிரமிப்பு ஏற்பட்டுவது இயல்பு..

அவர் மறைந்தாலும் அவர் மாபெரும் பொறுப்பை உங்களில் கைகளில் தந்துவிட்டே சென்றுள்ளார் சகோதரா...

தனது குடும்பத்தலைவன் என்னும் மிகப்பெரிய சுமையை உங்களின் முதுகில் இறங்கி வைத்து விட்டு இளையாறுகிறார்.

தன்னிடம் பழகிய போலிகளை வெறுத்து உண்மைகளை தேடிய பாசத்தில் உழன்ற சாதாரண மனிதனே அன்பான தகப்பன்...

.

.

அவர் மறைந்தாலும் அவரின் ஆன்மா உங்களுக்கு பக்கபலமாக இருந்து உங்களுக்கு உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை...

கவலைகளை புறந்தள்ளி விட்டு தைரியமாக வாழ்வை எதிர்நோக்குங்கள்...

.

.

என்னால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது.

ஆனால் உங்களின் நண்பனாக, உங்களை தூரத்தில் இருந்து ரசிக்கும் ஓர் ரசிகனாக   உங்களுக்கு ஆறுதல் சொல்லும் ஓர் அன்பு தம்பிகளில் நானும் ஒருவன்...

என்றும் அன்புடன்

*ராமன் ஷங்கர்*

ஆப்பிள்

 ஆப்பிள் கதை ,:):(';";""-*-"+_-₹-*("(-


தயிர் சோறு...

 டேய் நில்லுடா.... இங்கே இப்படி வாடி செல்லக்குட்டி... ஏன் தங்கம் உனக்கு என்ன கோபம்... மாம்பழகலர் பட்டுச்சேலை வெளிர் பச்சையும் மஞ்சளும் கலந்த ரவிக்கை அதில் தான் பலவகையில் ஜிகினா வேலைப்பாடு... இரண்டு வருஷமாச்சு போன வாரம் தான் உங்க அண்ணன் எடுத்து கொடுத்தாரு என்று கேசவனின் தங்கையிடம் அண்ணன் பற்றி குற்றம் சாட்டிய காயத்ரி...

பக்கத்தில் வேகமாக ஓடி வந்த மகனை பிடித்த இழுத்தாள்...

ஏம்மா... ப்ளீஸ்.. இன்னிக்கு ஓரு நாளாவது என்னையை இடைஞ்சல் பண்ணாம இரு.. அதான் உன் இஷ்டப்பட்ட மாதிரியே கோடாசூட் போட்டுகிட்டேனே.... பாரு எப்படி வேர்வை எரிச்சலா இருக்கு....

அம்மா உனக்கு ஓரு ரகசியம் வைச்சிருக்கேன்...நீ தனியா வந்தா மட்டும் தான் தருவேன்.. தங்கச்சி ரம்யாவுக்கு அது கண்டிப்பா கொடுக்கவே கூடாது...

மஞ்சள் நிறத்தில் இரண்டி உயரத்தில் நின்று கொண்டிருந்த பெரிய மனுஷனின், உதடுகளில் எச்சில் வடிந்தது... அம்மாவின் சேலை முந்தானையை பிடித்து கொண்டு, கணவன் கூட தொடபபயப்படும் அவளின் இடையில் முகத்தை அழுத்தி கேட்டான்... எனக்கு வெட்கமா இருக்கு...

அதுக்கு தானேடா செல்லம், அம்மா உன்னை தனியாக வர சொல்லுறேன்...

திருமண மண்டபத்தில் சில நிமிடங்களில் அனைவரும் அறிய தனது தாய் பாசத்தை அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, சுற்றி இருந்த அனைவரையும் வெட்கத்தில் முகம் சிவக்க வைத்தான்... ராகுல்...

ஏய் சனியனே, நல்லா பாரு.. உன் வயசு பையன் அவங்க அம்மா மேல எவ்வளவு பாசமா இருக்கான்.. நீயும் தான் இருக்கீயே...எப்ப பாரு...ஏதையாவது வாங்கி கொடுக்க சொல்லி உயிரை எடுக்கிறே...

நீ கொஞ்சம் சும்மா இருக்கீயா, நாலு பேர் முன்னாடி என் இமேஜ் கெடுக்கிறதே உன் வேலயா போச்சு.... உன் ஏச்சு பேச்சுக்கு எல்லாம் நான் அப்பா மாதிரி தலையாட்டுவேன்னு நினைக்காதே...ஏதோ கூட்டமாக இருக்கேன் பார்த்தா ...ரொம்பதான் திமிரா பேசுறே....கெளசல்யா தன் மகனின் பதிலால் நிலை குலைநது போனாள்...

என் வீட்டுக்காரர் தான் எல்லா முடிவு எடுப்பார், என்னை அவர் மதிப்பதே இல்லை என்று சற்று நேரத்திற்கு முன்பு தான் அத்தை மீனாவிடமும் தாத்தா பாட்டியிடம் சொல்லி கண்ணை கசக்கினாள்..

அவர்கள் கூட தன் பங்கிற்கு மாப்பிள்ளை சரவணனுக்கு புத்திமதி சொல்லியது நினைத்து கைக்குட்டையை முகத்தில் வைத்து மறைத்தபடி சிரிப்பை அடக்க முடியாமல், எதிர் வரிசையில் தனது மதினியிடம் கண்களால் சாடை செய்தாள் கல்லூரி படிக்கும் பார்வதி...

பக்கத்தில் இருந்த கெளசல்யாவின் கணவன் ரங்கராஜன் கூட எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார்.

இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், இந்த அரிச்சந்திரன் மகாராஜா முன்னாடி எல்லாம் உன் வேஷம் பல்லை காட்டி விடும்... என் பையன் என்னை விட ரொம்ப தைரியசாலி... சந்தர்ப்பம் பார்த்து ஊசியால் குத்தி காட்டினான் ரங்கராஜன்..

அதற்குள் ராகுல் தனது அம்மாவின் முந்தானையை பிடித்தபடி மணமகன் அறைக்குள் சென்றான்...

பார்த்தியா, உங்க மதினி தன் பிள்ளையை எவ்வளவு பாசமா பார்த்துகிறா... நம்ம வைஷ்ணவி ரொம்பவே கொடுத்து வைச்சவதான்.....

மணமகளின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.....

ஏன் பையன் கூட அதிர்ஷ்டசாலிஷ தானே.. வைஷ்ணவி மாதிரி தங்கசிலை எங்களுக்கு கிடைச்சிருக்கே.... மணமகன் அருண் பற்றி பேசி பெருமைபட்டாள் புது மாமியார் ராகினி...

டேய் கதவை மூடிவிட்டு வா.... அறைக்குள் வந்தவுடன் குரலில் கொடூரம் தெரிந்தது..

தான் வசமாக சிக்கி கொண்டது நினைத்து வயிற்றில் புளியை கரைத்தது...

இங்கே ஏதாவது சத்தம் போட்டு ஊரை கூட்டினே, அவனின் தொடையை பிடித்து கிள்ளினாள்...

அம்மா, வலிக்குது...ப்ளீஸ்மா... நான் தான் எதுவுமே தப்பு பண்ணலையே... எதுக்கு கிள்ளுறே..... சொல்லு....கதறினான் கண்ணீர் மல்க ராகுல்...

செருப்பு பிஞ்சுரும், நாயே.....எதிர்த்தா பேசுற... வீட்டுக்கு வா.... இரண்டு நாள் பட்டினி போட்டா தான் நீ எல்லாம் அடங்குவே... கோபம் மேலும் அதிகமானது .....

கதவு தட்டப்பட்டது, வெளியே ஏதாவது சொன்ன, நீ எப்படியும் வீட்டுக்கு தான் வரணும்.மனசில வைச்சுக்கோ......

கதவை திறந்தவுடன் எதிர்ப்பட்ட செல்வி...அண்ணி சின்னவருக்கு ரிசப்ஷன் டிரஸ் பீரோவில் இருக்காம், எடுத்து தாங்க....

டேய் ராகுல், இங்க என்னடா பண்ற.. எங்க என் புள்ளை உன்னை கேட்டு தேடிக்கிட்டு இருக்கான்... சீக்கிரம் கீழே போ....



will continue


பட்ஜெட் 2021

எதிர்பார்ப்பா???

ஏமாற்றமா??

ஏற்றமா????

மாற்றமா????

இனிய அறிவிப்பா????

இதயத்தின் துடிப்பா????

சாமானிய இந்திய

பிரஜையாக காத்திருக்கிறேன்...

எதிர்பார்ப்புடன் இந்திய

பட்ஜெட் 2021..



நேதாஜி....

 சுபாஷ்..... டெல்லி சலோ...

.

.

.

இவரை பற்றி எழுதக்கூட தகுதியற்றவன் நான்... சாதாரண மனிதனின் வாழ்வு அல்ல, இவரின் வாழ்வு....

தன்னலமற்ற தலைவர் இவர்...

இவரின் சரித்திரத்தை படித்து பார்த்தால் அது ஓர் அலாதி அனுபவம்...

ஏனென்றால் தியாகத்தையே வாழ்வாக கொண்டு வாழ்ந்த பலரில் இவர் குறிப்பிடத்தக்கவர்...


அமைதி வழியில் அனைவரும் போராடும் போது.. இன்னும் எதற்காக அகிம்சை எத்தனை காலம் என்று வினவியவர்...

முள்ளை முள்ளால் எடுக்க சொன்னது மட்டுமன்றி, செயல்படுத்தி காட்டியவர்...

.

.

தந்தை ஆசைப்பட்ட காரணத்தால் I.C.S , தேர்வில் கலந்து கொண்டு வென்றவர்... ஆயினும் உங்களின் ஆசைக்காக பரீட்சை எழுதினேன்..எனது ஆசை இந்திய விடுதலை என்று அந்த பதவியை துறந்து தேச சேவை ஆற்றிவர்....

கட்சியின் பதவியை கூட ஆறு மாதங்களில் தள்ளி வைத்த மாமனிதர்....

உடன் இருப்பவரின் தேவையை நிறைவேற்ற தலைவர் பதவி அல்ல...தேச நலனை காப்பதே தலைமை பதவி என்று வாழ்ந்த தலைவர்....

நேதாஜி...

அவர் சொன்ன வார்த்தைகள் தான் அனைவருக்கும் கனவு.... டெல்லி சலோ....

ரேஷன் கடை

 வாழ்க்கை பற்றிய

கனவு காண 

சொல்பவர்கள் 

ரேஷன் கடை

பக்கமாக சற்றே

வாருங்கள்....

உங்களின்

கனவு கால்கடுக்க

வரிசையில் நின்றால்...

தொடர்கிறதா பார்க்கலாம்...









திருடன்

 நடுநிசி நேரம் மணி ஒரு மணியை நெருங்கி கொண்டு இருந்தது....

இயற்கையின் உபாதை செய்த விளைவு... வீட்டின் உள்ளே அட்டாச் பாத்ரூம் கட்டி வைத்தோம்.. இரண்டு பெட்ரூம்....இன்றோ அது மருமகன், மருமகள் வந்த பின்னர் அவர்களின் அறையாக மாறிப்போனது....

வயசான நீங்க ஹால்ல படுத்தா  என்ன குறைஞ்சா போவீங்க....செல்ல மகன் கேட்ட கேள்வி கூட நியாயமாகவேபட்டது..

ஏண்டி, விஜயா... நீ போகும் போது என்னை கூட அழைச்சிட்டு போயிருக்கலாம்...... போட்டோவை பார்த்து சில நேரம் புலம்புவார்....

ஏதோ காயத்திரி, ஆசை பட்டதால் வாங்கி போட்ட மூங்கில் சாய்வு நாற்காலி, இன்று கேசவனுக்கே படுக்கையாக இருந்தது...... உனக்குத் தான் என்மேல எவ்வளவு பிரியம் மனதில் சில நேரங்களில் நினைத்து கொள்வார்.

காலை எழுந்தவுடன தாத்தா என்று ஓடி வந்து கன்னத்தை முத்தமிடும் பேரன் ஆதித்யா பேத்தி சங்கவி..... இந்த இருவரும் காட்டும் பாசத்தால் எங்கும் போக முடியாமல் தவித்தார்....


ஆண்டவா, நான் செத்து போய் விட்டால் இந்த குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படும்.... நினைத்து பார்த்தால் அவரின் கண்களில் மழை பெய்யும்.....

எப்போ பாருங்க.... உங்க அப்பா வாசல்ல உக்காந்து அழுகிட்டு இருக்காரு....யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க....

மருமகள் கொடுமைபடுத்துறா... அப்படின்னு சொல்லுவாங்க.... மனைவியின் புடவையில் சுகம் கண்ட பிறகு பெற்றவர்கள், ஏனோ அந்நியமாகவே தெரிகிறார்கள்....

ஓரு வேளை நம்ம அப்பா, அம்மாவும் இப்படி தான் நினைச்சு இருப்பாங்களோ.... திருமணமான புதிதில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைத்து அதில் மனம் சஞ்சலப்பட்டது....


கிழத்துக்கு அறிவே இல்லை.... அதான் அம்மா போன பிறகு இவருக்கு இங்கே என்ன வேலை பேசமா....காசி ... ராமேஸ்வரம்ன்னு ஊர் சுத்த வேண்டியது தானே....

அருமை மகன் புருஷோத்தமன் தன் ஆசை மனைவி சரஸ்வதியிடம் சொல்லுவது அவரின் காதில் கேட்டது.... இருந்தாலும் காது கேட்காத மாதிரி இருந்தார்....


சரிடி, இன்னிக்கு ஏதாவது ஸ்வீட் கிடைக்குமா? ஏக்கமாகவே கேட்ட புருஷோத்தமன் கெஞ்சினான்....

உங்க அப்பனை வீட்டை விட்டு விரட்டுங்க.... அவர் கொடுக்கிற பென்ஷன் பணத்தை விட நமக்கு அதிகமாகவே இருக்கு....

முதல்ல அதை செய்யுங்க.... அன்னிக்கு பிள்ளைகளை எங்க அம்மாவுக்கு அனுப்பிட்டு, நீ எதிர்பார்க்கிற மாதிரி நாள் முழுக்கவே இந்த ஸ்வீட் ஸ்டால் உங்களுக்கு தான்....

இருவரும் கொஞ்சுவது கூட காதில் விழுந்தது.....

ஆண்டவா, வயசான காலத்துல ஏன் காதில் மெல்லியதான சத்தம் கூட கேட்டு விடுகிறது..... சாய்வு நாற்காலியில் இரவு நேரத்தில் மனம் புண்பட்டு வேதனையில் துவண்டது....

பேரன் பேத்தியை பார்த்து ஓரு மாதம் ஆச்சு, தினமும் வந்து கட்டிபிடித்து முத்தம் கொடுத்து சொல்லுவாளே.....சங்கவி..."தாத்தா", நீ இல்லாம என்னால வாழவே முடியாது.... அத்தை வீட்டுக்கு போனவுடன் இந்த தாத்தாவை மறந்துவிட்டாளா? இத்தனை நாளில் ஓரு தடவை கூட போன் பேசவே இல்லையே......

என்னடா இந்த வாழ்க்கை, எந்த விஷயத்தை நினைக்க கூடாது என்று நினைத்தாரோ... அதைப்பற்றிய நினைவே மீண்டும் மீண்டும் வந்து சோகத்தை கூட்டியது.....

மேஜை மீது இருந்த போட்டோவை எடுத்தார்... அதில் தன் மனைவியுடன் பேரன் பேத்தி சகிதமாக எடுத்த கடற்கரை திருச்செந்தூர் முருகன் கோயில் புகைப்படம்.. நெஞ்சில் வைத்து அணைத்து கொண்டார்.....


சீக்கிரம் வந்து கூட்டிகிட்டு போடி..... விரக்தியாக இருந்தார்.....

பல நாட்கள், பள்ளி விட்டு வந்த குழந்தைகள் அவரிடம் அன்றுநடந்த கதைகளை அவரின் மடியில் அமர்ந்து கொண்டு சொன்னார்கள்....

தாத்தா, இன்னிக்கு ஸ்கூல்ல ராகவ் என்னா சேட்டை பண்ணினான் தெரியுமா என்றாள் கவிதா..... மூன்றாவதாக பிறந்த இரண்டாவது செல்லப்பெண்....

ஏண்டி உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே கிடையாதா.....வேர்வை நாத்தம்... போய் டிரஸ் மாத்தி விட்டு வாங்க..... என்றாள் சரஸ்வதி....

தாத்தா, என் வேர்வை அப்படியா நாறுது...என்ற கவிதாவை கட்டி பிடித்து சொன்னார்...

என் செல்லக்குட்டி, உன் உடம்புல எப்பவுமே உங்க பாட்டி வாசம் தாண்டி வீசுது என்று கொஞ்சினார்...

மருமகளோ..... எரிச்சலாக அதிகார பார்வை செலுத்தினாள்....சாகுற வயசுல பேசுற பேச்சை பாரு.....

மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்தார்..... பின் வாசல் கதவை திறந்து கொண்டு பாத்ரூமுக்கு போக நினைத்தவரின் கழுத்தில் ஓர் கத்தியை வைத்து அழுத்தினான் ஒருவன்....

ஏய் கிழம் , சத்தம் போடாதே மரியாதையா நீ நடந்து கிட்டா, நானும் மரியாதையா நடப்பேன்.நீ ஏதாவது சத்தம் போட்டே, இப்பவே உன் கழுத்தை அறுத்து விடுவேன்.....

35 வருட சி.பி.சி.ஜ.டி அதிகாரி என்பத தெரியாது, தெரிந்தால் இப்படி பேசவே மாட்டான்... சிரித்தார்....

யோவ், கிழட்டு பயலே, உனக்கு உயிர் மேல பயமா இல்லையா... மிரட்டும் தோணியில் கேட்டான்....

கொஞ்சம் தள்ளு, நான் பாத்ரூம் போகணும்.... ஆத்திரத்தை அடக்கலாம்.....

அவனுக்கு அவரை கண்டு பயம் வந்தது, ஓர் நிமிடம் யோசித்தான்.....

டேய், திருட போற வீட்டில் யாருக்காவது உன் இரக்க சுபாவம் தெரிஞ்சுது... பிறகு நம்ககு களிச்சோறு தான்.... எப்பவுமே விரப்பா இருக்கணும்.....

முதல் திருட்டுக்கு போன நாளில், மச்சான் மணி சொன்ன வசனம் நினைவு வந்தது....

யோவ், என்னையே எதிர்த்து பேசுற,  குத்திடுவேன்......

அப்படி நீ குத்தினாலும் நான் கத்தி, உன்னை காட்டி கொடுக்க மாட்டேன்....நீ திருட தானே வந்தே...கொலை செஞ்சு ஏன் பாவத்தை சேர்க்கணும்....

அவரின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தது......

மனதில் ஆயிரம் சந்தேகம், அவரோ பாத்ரூம் நோக்கி நடந்தார்......

இப்படியே ஓடிப்போய் விடலாமா???

ஓரு வேளை இவர் நாளைக்கு போலீசில் புகார் கொடுத்தால்..... இல்லாத கேஸ் எல்லாம் நம்ம தலையில் வைச்சு கட்டிருவாங்க.....ஓரே குழப்பமாக இருந்தது......

ஓர் நிமிட நினைத்து பார்த்தான், அப்பா நேத்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஓர் கேக் கொடுத்தாங்க...எவ்வளவு ருசியாக இருந்துச்சு தெரியுமா.... உனக்காக நான் பாதி மிச்சம் வைச்சிருந்தேன்....

அப்புறம், அதை என்ன பண்ணின குட்டியா....

ஆமா, நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தியே, என்னை பெத்த அந்த லூசு அவ.. தான் காரணம்.. என் ஆசையை கெடுத்துட்டா.....

அம்மாவை அப்படியே எல்லாம் சொல்லகூடாது.அவ, என்ன செஞ்சா சொல்லு.....

அவளா, அவ வந்து மாமா சாயங்காலம் வீட்டுக்கு வந்த போது, நான் உனக்கு கொண்டு வந்த கேக் எடுத்து அவனுக்கு கொடுத்துட்டா......தம்பி மேல அவ்வளவு பாசமாம்....குண்டம்மா..பேச்சி...

பேரை பாரு...பேச்சி...பூச்சின்னு....

அவளின் கன்னத்தை முத்தமிட்டான்.... என் ராசாத்தி... உனக்கு என்ன வேணும் கேளு தங்ககுட்டி... அப்பா உனக்கு வாங்கியாந்து தாரேன்....

எனக்கு நீ எப்பவும் என் கூடவே இருக்கணும், நீ ஏன் ஆந்திரா போய் வேலை பார்குற... இங்கேயே வேலை பாரு....

அவளின் பேச்சில் தனது அன்னையின் வார்த்தைகள் வெளிப்பட்டது.....

உங்க தாத்தா படிக்க சொன்னபோது மண்டையில் ஏறலை.. அதான் இப்படி நீயாவது நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும்.... அதுக்கு தான் அப்பா இவ்வளவு கஷ்டப்படுறேன்....

சரி, உனக்கு என்ன வேணும் சொல்லு.....

அப்பா, எனக்கு எதுவும் வேண்டாம்... ஆனால் என் பிரண்ட் பிச்சம்மா,அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க... அவருக்கு மூளையில் ஏதோ கட்டியாம்... ஆப்ரேஷன் பண்ண நாற்பதாயிரம் வேணும்...


என்கிட்ட கேட்டா, நான் எங்க அப்பா ஆந்திராவுல வேலை பார்க்கிறாரு... அவர் வந்தா வாங்கி தாரேன் சொன்னேன்.... இப்போ, சாமியே அனுப்பிச்ச மாதிரி நீ இன்னிக்கு வந்துட்டே......


நீ சொன்ன மாதிரி, அடுத்தவங்களுக்காக வேண்டுனா, அது கடவுளுக்கு கேட்கும் போல.......

குழந்தைகளுக்கு எப்படி பொருளாதார கஷ்டம் தெரியும்..‌‌வாங்கி ஓரு லட்சம் கடன் அடைக்கவே கப்பல் வேலைக்கு போவது...‌....

ப்ளீஸ்ப்பா, அடுத்த வாரம் அவங்களுக்கு ஆபரேஷன் அதுக்குள்ள நீ எப்படியாவது பணம் ரெடி பண்ணு... அவளின் கண்ணில் அப்பாவிடம் சொல்லியாச்சு.. அவர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை ஒளி.....

எங்க, அதுதான் லூசு மாதிரி ஊளறுது, நீங்களும் அவளுக்கு சரியா பேசிக்கிட்டு....உண்டான கடனையே அடைக்க வழியை காணும்....

அவ்வளவு பணம் வேண்ணும்னா கொள்ளை தான் அடிக்கணும்.... மறுபடியும் ஏதோ சொல்ல வந்தவளின் கன்னங்களில் அவர் விரல் பதித்தது..









கோபம்

 தனக்கு எதுவுமே கிடைக்காது என்று நினைத்தால் கோபம் வரும்.... இந்த உலகத்தை ஆளும் தகுதி சிலருக்கே உள்ளது.... கோபம் தான் அன்பாக இரக்கமாக.... மாறுகிறது.... அடுத்தவரின் கஷ்டத்தை நினைத்து ஓர் முறை கண்ணீர் சிந்தி இருந்தாலும் போதும்...உன்னை இறைவன் ஓர் உன்னத வேலைக்காக தேர்வு செய்து விட்டார் என்றே அர்த்தம்


ஆயிரம் ரூபாய் தேவை என்றாய், ஆனால் தெருவில் கிடந்த பத்து ரூபாய் எடுக்க மனமில்லையே... ஏன் அது என் பணமில்லை...

நான் உழைச்ச காசு எனக்கு போதும்....என்பவரே சராசரி மனிதன்...

ஏனென்றால் உன்னை ஓவ்வொரு நொடியும் சோதிப்பது இறைவன்... அவன் உன்னை தலைவனாக மாற்றவே இத்தனை இடைஞ்சல் தருகிறான்.....




அபிராமி அந்தாதி.....

இன்று அமாவாசை நிலவு வருமா?  கேட்டது மன்னவன்....

எல்லோரும் பைத்தியக்காரன் என்று புறம் பேசி அவனை இகழ்ந்து உரைத்த போதிலும் ஏதாவது ஓர் எண்ணத்தில் அவன் அருகே போய் விசாரித்தார்...

சுவாமி இன்று என்ன திதி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....

மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லி பொற்காசுகள் பெற துடிக்கும் கூட்டம் கைகளை பிசைந்து நின்று கொண்டு இருந்தது...

இந்த கேள்விக்கான பதிலை நம்மிடம் கேட்டு இருந்தால் பதில் சொன்ன காரணத்திற்காக பொற்காசு கிடைத்திருக்கும்...

ஒருவேளை மன்னர் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்தால் ஓரு கிராமத்தை நம் பெயருக்கு தானமாக தந்தும் இருக்கலாம்.... சுற்றி நின்ற அடிபொடிகளில் மனதில் எண்ணற்ற ஆசை பொங்கி எழுந்தது....

ஒருவேளை இவன் பதில் சொல்லாவிட்டால் நாமே முன்னே சென்று பதில் சொல்லி பரிசு பெறலாம் என்ற நம்பிக்கை.......

ஆனாலும் எல்லோர் மனதிலும் சந்தேகம் இருந்தது, ஓரு வேளை இந்த சுப்பிரமணியன் விடை சொன்னால், இவனை போய் பைத்தியக்காரன் என்று சொன்னீர்களே  என நம்து சிரத்தை கொய்து விடுவாரே மன்னர்.....

அம்மா, தாயே அபிராமி அவனை ஏதாவது தப்பான பதிலை சொல்லவைத்து விடு உனக்கு ஆயிரம் குடத்தில் பால் அபிஷேகம் பண்ணுறேன்.... யாருக்கும் தெரியாமல் மனதில் வேண்டுதல் வைத்த சிலர்...

.

.

.

.

.

.

கதை தொடரும்....


குடும்பத்தின் ஓற்றுமை

 ஓரு தோசையை

பத்து பேருடன்

பகிர்ந்து தின்னும்

ஏழைகளின் வேதனை....

யாருக்கு புரியும்....

பத்து தோசையும்

பரோட்டா குருமாவும்

சிக்கன் கறியும் தட்டில் 

எத்தனையோ  வசதிகள்

செய்துதந்த பின்னரும்...

வெறுமையாக உணரும் சிலர்

பாசத்திற்கு ஏங்கி நிற்கும்

ஆசை பெற்றவர்களின்

வலியை உணர நேரமின்றி

எங்கோ விரைந்து 

செல்கிறார் எதையோ தேடி

ஆண்டவன் படைப்பில்

தான் எத்தனை அதிசயம்

ஏழையின் வீட்டில் 

பணமில்லை ஆயினும்

கோடிகளை தாண்டிய

பாசத்தின் நேசம்....

ஓர் தோசை குறைந்த

விட்டதாக சொன்னவனுக்கு.

பகிர்ந்து அளித்து உண்ணும்

அம்மாவும் அப்பாவும்

ஆசை அக்கா...

தோசைக்குள்ளே 

குடும்பத்தின் ஓற்றுமை





வித்யா கர்வம்

 

வணக்கம் நண்பரே,
இது வரையில் நான்  கவி சோலை என்று  சென்று என் கவிதைகளை  படித்ததில்லை..


ஏனென்றால் என் நாவில் குடியிருக்கும் சரஸ்வதியை விற்க எனக்கு இஷ்டமில்லை...


கிரகங்களின் பிடியில் வேதனையில் தவித்து வேண்டி அழுத போது,....

நானிருக்க அழுவதேன்??? 

ஆசையாய் வந்து எனது நாவில் அமர்ந்தவள்.... 

இன்று எனக்கு வெள்ளை பட்டுடை.. திரைச்சீலை விலகும் முன்பே தரிசனம் தந்தவள்....

சொன்னால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவான்....

கற்சிலை மனதை கரைத்து தமிழென்று கனிவுடன் அமுதம் தந்தவள்....

அன்புடன் கேட்டால் கவிதைகள்  அள்ளித்தருவதில் அவளுக்கு தான் எத்தனையோ இன்பம்..... என் தேவியின் குணம்...

எழுதுவது நானல்ல என்னுள் இருந்து என்னை இயக்கும் கலைவாணி....

அவளின் பாதத்தை விட பெரிய சுகம் ஏதும் உண்டோ இப்பாரில்.......
எனக்கு *வித்யா கர்வம்* அதிகம் தான்...
எனக்கு நிகர் நான் மட்டுமே....



எது காதல்


இருபதின் காதல்

உடலை ரசிக்கிறது....

முப்பதின் காதல்

இல்லாத இடத்தில்

ஓர் இடம் நில்லாமல்...

அன்பை தேடுகிறது

நாற்பதின் காதல்

அணில் போல சேர்த்த

காசை காப்பாற்ற 

துடிக்கின்றது........

ஜம்பதின் காதல்

பிள்ளைக்காவே

பரிதவித்து அலைகிறது....

அறுபதின் காதலோ

ஆசையை கடந்து

உடன் இருப்பருக்காகவே

வாழ வைக்கிறது....

கடல் கடந்து சென்ற

குழந்தைகளை தெருவில்

போகும் அனைவரிடமும்

தேடிப் பார்த்து 

வெறுமையாக சிரிக்கிறது

விட்டுக் கொடுப்பதும்

தட்டிக் கொடுப்பதும்

என்றே வயதான பருவத்தில்

உயிரின் உணர்வாய்

மாறிவிட்ட பொய்மை

தவிர்த்து கோபம் 

கடந்து அன்பில்

செழித்த காதல் -

எழுத வரிகள் இல்லை....

கிழவனுக்கு கிழவியும்....

கிழவிக்கு கிழவனும்....

அன்பு வழிந்தோடும்....

முதிர்ந்த காதல்....

பித்தா பிறை சூடி பெருமாளே

கடந்த காலத்து

கவலையும் இல்லை...

எதிர்காலத்தை கண்டு

பயமும் இல்லை....

கடந்த நூற்றாண்டின்

ஏடுகளை தேடி எடுத்து

நிகழ்காலத்துடன் 

ஒப்பிட்டு வாழ ஆசையில்லை

நான் ஒன்றும் இலக்கணம்

கற்று தலைகனத்தில் 

சுற்றும் போலி கவிஞன் அல்லவே....

கிடைத்த பேனாவை 

கொண்டு கிழிந்த

காகிதத்தில் பார்த்த

விஷயங்களை பொதிந்து

வைக்கும் பைத்தியக்கார

ஜோல்னா பையனின்

ஓர் சாதாரண ரசிகன்.....

ஆணவமும் வேண்டாம்....

அதிகாரமும் வேண்டாம்....

போலியாய் புகழும் 

மேடைகளும் வேண்டாம்....

காகித பூக்கள் கசந்து விடும்...

சில நாட்கள் மலர்ந்து மணம்

பரப்பும் மலர்களே போதும்

போலியான பொய்யுரைகளும்

ஜிகினா போன்றவைகளும்

சராசரி மனிதனையும்

சந்திர மண்டலத்துக்கு

இழத்து சென்று விடும்....

மக்களுடன் மக்களாய்

வாழ்ந்து அவர்களின்

வாழ்க்கையை எழுத்தில்

பிதற்றும் நான் சாமானிய

பித்தன்....... ஏனென்றால்

நான் வணங்கும் கடவுளையும்

சுந்தர தமிழில் அழைத்தான் 

அன்புடன் அந்த சடாமுனிக்கு

மிகவும் பிடித்தமான பெயரில்

பித்தன்... அன்புடன் கோபத்தில்

அழைத்த பெயரை ஆசையாய் 

சூட்டிக் கொண்டார்...

தமிழ் எடுத்து பாடச்செய்தார்....

உலகத்தை நாட்டமுடன் நாடச்செய்தான்

பித்தா...பிறை சூடி ..

பெருமானே.... அருளாளா...


வாடிவாசலில் இளம்காளைகள்

 சீறிப்பாயும்

காளைகளை

அடக்கிவிட

ஆசையுடன்

ஆக்ரோஷமாய் 

வாடிவாசலில்

தைரியமான 

இளம்காளைகள்



ஆசை... தோசை.. அப்பளம்.. வடை...

     அலுவலகத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஊதா நிறமாருதி கார்.அந்த கார் நகரும் வரை வெறித்த படி ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தான் கேசவன்...

"ஹலோ சார், என்ன பயங்கரமா யோசனை" பரிகசித்தாள் பரிமளா.

 எல்லோரிடமும் அதிகார தோரணையில் பேசுபவள், அவனிடம் ஏனோ அதிகாரத்தில் பேசுவதை தவிர்த்தாள்.

சில நேரங்களில் அவளையும் மீறி சில வார்த்தைகள் அதிகார தோரணையில் வந்து விழும் அவளின் பேச்சில்..

அந்த நாள் முழுவதும் ஏதோ குற்றம் செய்து விட்டு பாவனையில் அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்வாள்..

நமக்கு எதுக்கு வம்பு, அதுவும் ஓர் பொண்ணு கிட்ட. ஓரு நாள் தெரியாதனமா கோபத்தில் பேசியதற்கே அழுது விட்டாள்.

நான் ரொம்பவே தைரியமான பொண்ணு. தன்னை பற்றி பெருமை பேசியது பொய்தானா... குழப்பமாக இருந்தது.... அவனின் மனதில்....

"வேலை பார்க்க வந்த இடத்தில் எதுக்கு இந்த கேலி கிண்டல் எல்லாம்..பேசாம வந்தோமா, வேலை பார்த்தாமோ என்று இல்லாமல் எதற்காக எல்லோரிடமும் சிரித்து பேசணும், சாரி என்னை மன்னிச்சிடுங்க... நீங்க அழுவீங்கண்ணு எனக்கு தெரியாது, கோபத்தில் கத்தி விட்டேன் நான் ஒரு சரியான சிடுமூஞ்சி, ஓரு தண்டச்சோறு வேற.. .. எனக்கு யார் கிட்டேயும் சிரித்து பேசவே தெரியாது... அதுவும் பொண்ணு கிட்ட சுத்தமா பேசவே தெரியாது....விரக்தியா சொன்னான்"....

அவனின் வார்த்தை பகவத் கீதை போல இருந்தது.... நாம் தான் இவனை சீண்டி விட்டோம்.. அவளின் பெண்மையை அவனுக்கு உணர தெரியவில்லையா?அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறாரா?!!! குழப்பித்தான் போனாள்...

சின்ன பொண்ணு போல அழுதுகொண்டு இருந்தவளின், முகத்தில் சற்றே சிரிப்பு எட்டிப் பார்த்தது....

"சரியான லூசு தான் போல", எல்லோருமே ஓர் பொண்ணு எப்படா தனியா இருப்பா... ஏதாவது பேசி சிரிக்க வைக்கலாம், அவளுடைய குடும்ப  விஷயத்தை பேசலாம்ன்னு நினைப்பானுங்க.. இவன் என்னடா இப்படி இருக்கான்...

தன்னையே "சிடுமூஞ்சி" " தண்டச்சோறு" என்று விமர்சனம் வேற சென்றான்.... நினைத்து சிரித்தாள்.... இன்னும் குழந்தையாவே இருக்கான் போல... நினைத்து ரசித்தாள்... அவளுக்குள் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் துப்பாட்டாவை எடுத்து முகத்தை மூடி அழுவது போல பாசாங்கு செய்தாள்.....

அவனோ அதை கவனிக்கவில்லை....

அவனுக்கோ வேறு ஏதோ கவலை....

வாய்க்குள்ளே முணுமுணுத்தான், "அவ சரியா தான் சொன்னா, எனக்கு ஓரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும் தெரியலை",... வீட்டிலேயும் பேச தெரியலை வெளியேவும் பேச தெரியலை... இந்த உலகத்திலே நடிக்கவும் தெரியலை... நான் பேசாம செத்து போனா கூட எனக்காக யாருமே அழமாட்டாங்க.... ச்சே.... என்னடா வாழ்க்கை இது..

யாருக்குமே கேட்காத வகையில் சொன்ன வார்த்தைகள், அவளின் பாம்பு செவிகள் உள்வாங்கின....

கலங்கிய கண்களை சாமி கும்பிட்டு வந்து போல செய்து கண்ணீரை மறைந்தான்....

வெள்ளை நிற கண்கள், நொடியில் சற்றே சிவந்து போனது....

அவனின் மனதிற்குள் இருக்கும் ரணங்களை மறைத்து வாழ்கிறான் என்பது மாத்திரமே அவளுக்கு புரிந்தது...

நம்ம கம்யூட்டரா, அது சரியான விளக்கெண்ணெய்... அடுத்தவங்க உணர்ச்சியை புரிந்து கொள்ள தெரியாத மரமண்டு....கேசவனை பற்றி உடன் இருப்பவர்களின் கூற்று பொய் என்பதற்கு அவனின் கண்ணீரே சாட்சி...

இருவரின் நெஞ்சிலும் ஓரே மாதிரியான எண்ண ஓட்டம்....பழைய நாளை நினைத்து இருவருக்கும் உள்ளே பயமிருந்தாலும், அதை மீறி அவள் கேலி பேசினாள்.... மறுபடியும் ஓர் முறை கோபப்படுவாரா எதிர்பார்ப்பு அவளுக்குள்...

இன்னும் எத்தனை நாட்களோ இருக்கிற வரை தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி விட்டு போகணும் மனதில் அவன் எடுத்த சபதம்...

எதுக்காக மத்தவங்க மனசை கஷ்டப்படுத்தணும்.....அமைதியாக இருந்தான்

 ஏதோ உங்க கார் மாதிரி இப்படி வெறிச்சு பார்க்குறீங்க, மீண்டும் கேலியாக சிரித்தாள் உடன் பணிபுரியும் பரிமளா...

இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் எரிச்சலாக சொன்னான்.. ஆபிஸ் விஷயம் தவிர தயவுசெய்து வேற எதுவும் பேசாதீங்க....

பிறகு நான் எதாவது கோபத்தில் சொல்லுவேன்...அதை நீங்க எல்லார்கிட்டயும் சொல்லி, என்னை பலபேர் முன்னாடி கேலி பேசி நக்கல் பண்ணுவீங்க...

நீங்க உங்க வேலை பாருங்க.. நான் என் வேலை பார்க்குறேன்...

தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று அப்போது தான் அவளுக்கு புரிந்தது.. 

ஓர் பெண் தனக்கு பிடித்த ஆடவனை மற்றவர்களுடன் முன் கேலி பேசி ரசிப்பதை கூட உணர தெரியவில்லையே...

அப்படி கேலி பேசுவதன் மூலம் அடுத்தவர்கள் அவனை பற்றி சொல்லும் விமர்சனங்களால் அவனை அறிந்து கொள்ள முயல்கிறாள்....

சரியான மரமண்டை உதட்டின் உள்ளே சிறை பட்டது வார்த்தைகள்...

அவள் ஏதோ சொல்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது, ஆனால் என்ன சொன்னாள் கவனிக்கவில்லை....

இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை அதை சொல்லுங்க எரிச்சல்பட்டான்...

தனியாக இருக்கும் பெண்ணிடம் எரிச்சல்படும் முதல் ஆள் சிரிப்பை அடக்க முடியவில்லை.....

எதுக்கு சிரிப்பு.....

தன்னை உணர்வுகளை அவன் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதை நினைத்து அவளுக்கு ஆசை அதிகரித்தது... இதுவே மற்றவர்களாக இருந்தால் கதையே வேறு....

அருகே வந்து கைகளை பிடித்து பேசி இருப்பான்... வெட்கத்தில் அவளின் மாநிற கன்னங்கள் சிவந்தன.... கால்கள் தரையில் வட்டமிட்டது... விரல்களால் தனது துப்பட்டாவை சுற்றி சுற்றி விளையாடினாள்....

சீக்கிரம் சொல்லுங்க......‌எனக்குநேரமாகுது....

ஏன் அடுத்த கார் வருதா... மீண்டும் சீண்டினாள்.....

ஓர் முறையாவது அவனையும் மனிதனாக மாற்ற முயற்சி செய்து அவனின் முகத்தில் புன்னகை மலர விரும்பினாள்...ஆண்டவா, இவனை போல் நல்லனா... இல்லை இல்லை இவனையே..... மனதிலோ பிராத்தனை


எங்க அம்மாகிட்ட கூட நான் இவ்வளவு பொறுமையா பேசினது கிடையாது... எதுக்காக என்கிட்டயே வந்து பேசுறீங்க....அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க...

சிவா வந்திடுவாரு... அவர்கிட்ட பேசுங்க.... பேசிக்கொண்டே இருப்பாரு.....

சேல்ஸ் வேலை தெரியாது, ஆனால் வெட்டி கதை பேச சொன்னா போதும்....

முதலாளி என்ன வெட்டி கதை பேசவா... சம்பளம் தருகிறார்........

இப்போது அவளுக்கு எரிச்சலாக இருந்தது... சரியான மரமண்டு தான்‌ நினைத்து கொண்டாள்...

நாளைக்கு நீங்க வருவீங்களா...

லீவு போட்டா ஓரு நாள் சம்பளம் போயிரும்..... ஆமா எதுக்கு கேட்குறீங்க.....

எங்க வீட்டில் நாளைக்கு கோவிலுக்கு போக போறாம் அதான்....

அப்போ நீங்க லீவுன்னு சொல்லுங்க...

அட, நீங்க வேற  11.00 மணி போல வந்திருவேன்....என்னால ஆபீஸ்க்கு லீவு எல்லாம் போட முடியாது....

சரி, எதுக்கும் முதலாளிகிட்ட சொல்லிருங்க.....

அதான் சொல்லிட்டேனே....

எப்போ சொன்னீங்க......

உங்கிட்ட சொல்லியாச்சு அவ்வளவுதான்...

கேசவன் பதட்டமடைந்தான்.... ஏங்க நான் ஓனர் இல்லை.... நானும் உங்களைப் போல சாதாரண வேலைக்காரன் தான்....

சரி... சரி. பதட்டமாகாதீங்க...மதியமே ஓனர்கிட்ட சொல்லியாச்சு.....அவரு தான் உங்ககிட்டேயும் சொல் சொன்னாரு..... நீங்க தானே மேனேஜர்.......

"....."அமைதியாக இருந்தான்.. அவனின் மனதில் இவள் நல்லவள் தான்.... மத்தவங்க சொன்ன மாதிரி இல்லை என்று நினைத்து நிம்மதியடைந்தான்

நாளைக்கு நான் வரும் போது ஓர் சர்ப்ரைஸ் இருக்கு...

அவளின் கண்கள் மின்னியது....

தன்னையறியாமல் உடனடியாக உணர்ச்சி வசப்பட்டு கேட்டான், எதாவது விஷேசமா.....

ஆமாம், எனக்கு நிச்சயதார்த்தம்.... கோவிலில் வைத்து

அவனின் முகத்தில் முதன் முறையாக வாட்டத்தை பார்த்தவள், சுதாரித்து கொண்டு சொன்னாள்.... சும்மா சொன்னேன்.... அண்ணன் பையனுக்கு பெயர் சூட்டு விழா..

அப்படியா ரொம்ப சந்தோஷம் சுவீட் கொண்டு வாங்க........ முகத்தில் சந்தோஷம் குடிகொண்டது.....

முதன்முறையாக அவளிடம் இயல்பாக பேசியது கண்டு அவளின் மனம் பூரித்துப் போனது

திருட்டு பயலே இவ்வளவு நாளா, இது தெரியாம போச்சே... மனதில் பட்டாம்பூச்சி பறந்தது அவளுக்கு....

நாளைக்கு நான் எப்படி வருவேன் தெரியுமா... அவனின் முகத்தில் சந்தோஷத்தை கூட்டினாள்.....

எப்படி வருவீங்க..... அண்ணன் கொண்டு வந்து விடுவாரா.....யதார்த்தமாக கேட்டான்....

ஊதா நிற பட்டுப்புடவையில், கழுத்தில் தங்க அட்டிகை போட்டு, கைக்கு நெளிவு வளையல் தலை கவிழ்ந்து சிரித்தபடி  ஓரக்கண்களால் பார்த்தாள்......

எதுக்கு வேற கலர் புடவை இல்லையா.....

இருக்கு, ஆனா அந்த கலர் தானே உங்களுக்கு பிடிக்கும்....

நீங்க என்னை கேலி பண்ணலேயே... மீண்டும் குழந்தையாக  கேட்டான்....

அவள் தனக்கே உரிய பாணியில் கேலி அவனின் விரல்களை மெதுவாக தொட்டு விட்டு சொன்னாள்...

ஆசை.. தோசை.... அப்பளம்....வடை...... 

அவனும் மெதுவாக அவளுக்கு கேட்கும் படி சொன்னான்....நீ பயங்கரமா ரன் புத்திசாலி தான்..... என்னால் உன் முன்னால் நடிக்க முடியலை......

என்னாச்சு இப்படி சொல்லுறீங்க......பிரமிளா கேட்டாள்....

அவன் சிரித்துக் கொண்டே உதிர்த்தான் முத்துக்களை....

ஆசை.... தோசை..... அப்பளம்....வடை.......

இருவரின் கண்களும் ஓன்று சேர்த்தன.....




100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...