சேமியுங்கள்

 ஊருக்கு தண்ணீர் சேமித்து வைக்கும் பெரிய தண்ணீர் தொட்டி... அதில் ஓர் சிறு கசிவு வந்தது... அங்கே வேலை பார்த்தவர் .அட சின்ன கசிவு தானே மெதுவாக சரி செய்யலாம்ன்னு...விட்டு விட்டான்... என் பொண்டாட்டி தப்பியோட கல்யாணுத்துக்கு போகணும் எப்படியும் 

இரண்டு நாள்ல எதுவும் பெரிசா சேதம் ஆகிடாது என்று சொன்னான்...

புதிதாக வேலைக்கு சேர்ந்த பையன் சார் பேசாம நாம இன்னிக்கே இதை சரி பண்ணிடலான்னு சொன்னவுடனே...

பெரிய அதிகாரிக்கு கோபம் வந்திருச்சு...

நீ இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கே.. இந்த புத்தி சொல்லுற வேலையை என்கிட்ட காட்டுனே ... உன் சீட்டை கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிச்சுறுவேன் .. ஜாக்கிரதை என்றான்...

பெரிய அதிகாரி இரண்டு நாள் கல்யாண வீட்டில் ஜாலி இருந்துட்டு ஊருக்குள் வந்தது தான் தாமதம்... எல்லோரும் அவரை சகட்டு மேனிக்கு திட்டினாங்க...

கூட்டத்தில் இருந்த வேலைக்காரனை கூப்பிட்டார்...

அப்போ தான் அவருக்கே விஷயம் தெரிச்சுது...முந்திய நாள் மழையில் தண்ணீர் தொட்டி உடைந்து விட்டது..அதற்கு காரணம் அந்த சிறு விரிசல் இடியின் வேகத்தை தாங்கமாட்டால் உடைப்பு கண்டது....

கல்யாண ஜாலியில் ஃபோனை சார்ஜ் வேற செய்யாத காரணத்தால் தகவலும் தெரியலை...

கலெக்டர் சில நேரங்களில் வந்தார்..காரணத்தை கேட்டார்... பெரிய அதிகாரி புதிய வேலைக்காரன் மீது பழி போட்டார்.. சார் இவன் தான் சரியான கவனிச்சு சொல்லியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்காது என்று... ஆனால் கலெக்டர் அந்த மேலதிகாரியை வேலை விட்டு நீக்கினார்...

இரண்டு நாளாக அவன் ஊரில் உள்ள பலரிடம் புலம்பியுள்ளான்...சில பெரிய மனிதரையும் பார்த்து பேசியுள்ளான்.. டேங்க் பற்றிய அவன் பேச்சை யாருக்கும் புரியவில்லை.. இப்போ அவன் சொன்னதை நினைத்து ..

கலெக்டர் அவனையே தண்ணீர் டேங்க் மேற்பார்வையாளர் என நியமித்தார்...

நீதி 1 - வேலை சிறிதோ பெரிதோ அந்த வேலையில் ஒருவர் காட்டும் ஆர்வமும் ஊக்கமும் அவசியம்...

நீதி 2 - பணமும் கூட சிறு தொகை தானே போனால் போகட்டும் என்று விடக்கூடாது.. ஏனெனில் நாம் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணம் ஓர் ரூபாயை கூட ஓர் கோடி போல நினைக்க வேண்டும்... ஏனெனில் 500 ரூபாய் ஹோட்டல் பில்லுக்கு 480 கொடுத்தால்... கஸ்டமர் உலகின் பெரும் பணக்காரர் என்பதற்காக யாரும் தள்ளுபடி தர மாட்டார்கள்....

மீதி 20 தந்தால் மட்டுமே மரியாதையாக நடத்துவார்கள்...

ஓர் சிறு துளி என்றாலும் பணத்தை மிகவும் பத்திரமாக சேமியுங்கள்...

.

.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...