716 - அக்கா

 தன் கவலைகளை 

எல்லாம் மறந்து விட்டு தனது பாசத்துக்குரிய 

தம்பியின் பிரச்சினைகளுக்கு 

தீர்வு சொல்கிறார் 

அன்பான அக்கா..

தன்னை விட தம்பியை யாராலும்

சிறப்பாக பார்க்கவில்லையோ 

என்ற கவல எப்போதும் அவள் மனதில்.. 

ஏனெனில் பத்து மாதங்களையும் தாண்டி 

ஓவ்வொரு நிமிடமும் தம்பியின் நேசத்தை 

மனதில் சுமக்கும் அன்பாக அக்கா 

714 அவன் ஓர் பிரம்மா

 தன்னுள் இருக்கும் 

எத்தனையோ சோகம் 

கவலை வருத்தம் அத்தனையும் 

மறந்து மறைத்து விட்டு 

படிப்பவர்களின் மனதில் 

எண்ணங்களில் வண்ணமும் 

 வாழும் நம்பிக்கை ஒளியையும் 

பிரகாசிக்கும் படியாக செய்து முகமறியாத யாரோ சிலரின் 

மனதில் நம்பிக்கை விதைக்கவே 

எழுதும் படைப்பாளி... அவன் 

கூலிக்காக எழுதவில்லை...கூலியாக 

இருப்பவரின் நிலைமையை உயரே..  எழுத்துக்களால் பிறரின் தலையெழுத்தை மாற்றும் அவன் ஓர் பிரம்மா 

713 - வேலனின் வள்ளி

யாரிடம் எப்படி 
பேசணும்...யாரை 
எங்கே எப்படி 
புகழ்ந்து பேசணும்..
என்பதை துளியும் 
அறியாத தத்தி அவன்...
போலியாக கூட 
ஓருவரை புகழ்ந்து 
பேச தெரியாமல் 
பலர் முன்னிலையில் 
உண்மையான கருத்தை 
சொல்லி விட்டு...
எதை பற்றியும் யாரை பற்றியும்
புரிதலின்றி புரியாத புதிராகவே 
கவலையின்றி செல்பவன்..
காதலும் அன்புமாய் காமத்தின் 
வசப்பட்டு உணர்ச்சி பெருக்கில் 
அவனருகில் வந்து கற்கண்டாக 
நின்றபடி அவனிடம் 
பேச துடித்தே பேச்சின்றி 
இளமையின் வடிவில் தவித்தாள்.. அந்த 
வடிவான அழகியிடம் 
கூட நீ எதுக்கு என்பக்கத்துல 
வந்து உரசுறே தள்ளிப்போ
என குழந்தை போல் 
பேசிய அவன்.. ஏனெனில் 
அவனை வளர்ந்தவள் அழியும் 
அழகை விட அழியாத அறிவும் 
திறமையும் தைரியமான
பேச்சுமே சிறந்த 
செல்வமென்று வாழ்ந்த 
குறிஞ்சி நிலத்தின் தலைவரான
வேலனின் வள்ளி

712 - சூரியகாந்தி

 



ஒவ்வொரு
வருடமும்
புத்தனும்
ஏசுவும்  பிறப்பதில்லை
அதனால்தானோ
என்னவோ
அன்பெனும்
விதையினை
ஒரு பெண்ணால்
மட்டுமே ஊன்ற முடியும்மென
பெண்ணினை படைத்தான்
ஆயிரம் தோல்விகள்
கண்டவனும்
உயிர்வாழ்வதும்
போராடுவதும்
அன்பென்னும்
துணையவள்
வரவுநோக்கியே
அனாதைகளாய்
கிடந்தவர்களுக்கு
மட்டும் தான்
அன்பின் வலிமை
புரியும் ஏனென்றால்
அன்பெனும்
கதிரவனை நினைத்து
காத்திருக்கும்
சூரியகாந்தி அவர்கள் 

711 - patalakaran story

workin progess about new wonderful emotional story of and military man. 
soon will be updating this amazing mindblowing story in our blogger.
Stay tuned until then :)-

710 - அரியணையின் ஆட்டம்

 தமிழ் நாட்டில் 

யாராலும் அசைக்க 

முடியாத சக்தியாக 

தன்னை நினைத்து

மார்தட்டி வாழ்ந்தனர்.

தமிழ் தமிழ் என்றே 

தரணியெங்கும் கூவிய 

காரணத்தால் தரணியாளும் 

வாய்ப்பை வழங்கினாள் 

தமிழகத்தின் அரியணையை 

அரியணை ஏறி பிறகு 

அதிகார மமதையில் 

கவுன்சிலர் பதவிக்கு கூட 

போட்டியிட தைரியமற்ற 

ராசியில்லாத தாடிக்காரனை 

புகழத் தொடங்கிய நேரத்தில் 

இருந்தே சரியத் தொடங்கிவிட்டது 

அரியணையின் ஆட்டம்...



யாதும் ஊரே யார் கேளீர்

எத்தனை ஆண்டுகள் 

ஆனாலென்ன 

எத்தனை ஆட்சியாளர்கள் 

மாறினால் தான் என்னவாம் 

எத்தனை முறை பல மேடைகளில் 

திராவிடமென்றே தீப்பொறி 

பறக்கும் வண்ணம் பிறரை 

உணர்ச்சிவசப்படுத்தினாலும்... 

திராவிடம் என்பது ஒரு கட்டுக்கதை

தமிழும் தமிழ் மொழி ஆர்வலர்களும்  

அமைதியாக வேண்டுகிறது 

ஏனெனில் தமிழ் மொழியை

எப்படி பாதுகாக்க வேண்டுமென்பதும்

எப்படி எங்கே தமிழை 

வளரச்செய்ய வேண்டுமென்றும் 

தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் 

யாதும் ஊரே யார் கேளீர் 

தரணியெங்கும் தரணியாளும் 

தமிழ் மொழியே முதல் மொழி...


சுதந்திர பறவை

ஆகாயத்தில் பறக்கும் 

பறவைகள் எத்தனை எத்தனையோ 

அத்தனையும் என்னை 

நோக்கியே வருகிறதென்றே 

உலகியல் யதார்த்தம் புரியாத 

சிறு குழந்தைகள் சிரித்தபடியே

நினைப்பதுண்டு.. ஆனால் அந்த பறவைகள் 

தங்களின் பாதையில் 

தினமும் நேர்கோட்டில் 

பறந்து செல்கின்றன...

அவைகளுக்கு என்று தனிபட்ட 

ஆசை அபிலாஷைகளை

ஆண்டவன் கொடுக்கவில்லை 

இறைவன் தேடி அவை அலைவதில்லை

ஏனெனில் இரை தேடி அலைந்தே வாழ்நாளில் பாதியை காற்றில் 

கரைத்து விடும் காக்கா 

கூட்டத்தை விட உயரம் பறக்கும் சுதந்திர பறவைகள் அவை...

இரையை இல்லாத நாட்களில் கூட 

இறைவனை மருந்துக்கு கூட 

கூப்பிட தெரியாத இயற்கை 

வாழ்விலை அதற்கு அமைத்தது 

கருணைவடிவான கடவுள் தானே

ஆர்பரிக்கும் அலை கடல் மீதும் 

சில நேரங்களில் பறப்பதுண்டு  

இரையை தேடியே.... ஏனெனில் 

அவைகள் யாருக்கும் கட்டுப்பாடாத

கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை வாழும் காட்டுப்பறவை 

பிறரின் சுதந்திரத்தையும் அவைகள் 

பறித்ததில்லை...தங்களை 

சுதந்திரத்தை பிறர் 

பறிப்பதையும் அவைகள் விரும்புவதில்லை 

எனவே கண்ணுக்கெட்டாத

உயரத்தில் மனிதரின் கண்ணில் 

குடுகை விட மெல்லிய அளவாக 

பறக்கிறது .. ஏகாந்த தனிமையில் 

சுதந்திர பறவை 




 


கடவுளை நாங்கள் நம்புகிறோம் .. கடவுள் இருக்கிறார்...


தயவுசெய்து அமைச்சர் பெருமக்களே..
பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்பதை பேசும் நீங்கள் ஏன் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரை பற்றி பள்ளியில் பேசுறீங்க.
தமிழக அரசின் முத்திரையை நன்றாக பாருங்க அதில் கோவில் கோபுரம் இலச்சினையாக உள்ளது.
ஓர் வேளை உங்களுக்கு பெரியார் தான் எல்லோரையும் விட சிறந்தவர் என்றால் அண்ணா அறிவாலயத்தில் பெரியார் முழு உருவ சிலை அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.. இதுவரைக்கும் பெரியார் சிலை அங்கே இல்லை.. அல்லது தி.கவுடன் உங்களின் கட்சியை ஓருங்கிணைத்து.கி.வீரமணி அவர்களை முதலமைச்சராக முடிசூட்டுங்கள்...
எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை...
எங்களின் கொள்கை படி அண்ணாதுரை ஆரம்பிச்ச கட்சியே பெரியார் கொள்கை பிடிக்காமல் தான்...
அண்ணாவிற்கு பிறகு கலைஞர் ஓவ்வொரு மேடையிலும் நான் அண்ணாவின் தம்பி அண்ணாவின் இளவல்... அண்ணா வழங்கிய மோதிரம் தான் எனது மனதுக்கு பிடித்தமான பொருள் என்று பேசியவர் தான் கலைஞர் அவர்கள்..
எனது தந்தையே தி.மு.கவின் பயங்கரமான அனுதாபி தான், அதற்காக நீங்கள் கடவுளே இல்லை என்று சொன்னவரை பற்றி பள்ளியில் பேசுவது சரி அல்ல. உலகில் இருக்கும் எல்லா நாடுகளுமே கடவுள் இருப்பதை நம்புகிறது...உலக ன் ஒவ்வொரு பகுதியிலும் கூட மதத்தின் பெயரால் நடக்கிறது
தமிழக மக்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டு உள்ளனரே தவிர பெரியாருக்கு அல்ல.. நீங்கள் பள்ளி மேடையில் பேசுவதாக இருந்தால் கலைஞர் அண்ணாதுரை அவர்களை பற்றி பேசுங்கள்.அவர்கள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்..
ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வார்த்தைகள். அண்ணாதுரை அவர்களும் பேசியது தான்.
உங்களுக்காக இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்கிறேன், அதிகமான விநாயகர் கோவில் கட்ட அனுமதி தந்ததும் உங்களின் அரசு தான்.மேலும் சன்டிவி மற்றும் கலைஞர் டிவியில் பல ஆன்மீக நிகழ்ச்சிகள் தான் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
இந்து மத நம்பிக்கை தமிழர்களின் வாழ்வில் ஓன்றிப்போனது, அதை யாராலும் அசைக்க இயலாது.
இன்னும் சொல்லப் போனால் வாபரும் ஐயப்பனும் தோழர்கள் தான். கந்தூரி திருவிழாவில் இந்துக்கள் மற்றும் இசுலாமியர்களும் கலந்து கொள்கின்றனர்.
அன்பே உருவான வீரமான துர்க்கையும்.. தமிழ் கடவுள் முருகனும்... தைமாதம் நாங்கள் வணங்கும் சூரியனும்.. ஸ்ரீரங்கநாதரும்..தமிழரின் பெருமையை கடல் கடந்து பரவ செய்த சோழமன்னன்..ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் சிவனும் எங்களின் தெய்வம் தான்..எங்களின் தெய்வங்கள்..
நாங்கள் நடத்தும் கடை மற்றும் வியாபார நிலையங்களில் நுழைந்து பாருங்கள்.
அங்கே ஓரே புகைப்படத்தில் முருகனும்... அல்லாவும்... இயேசு இருக்கிறார்கள்...பணவசதி கம்மியா இருக்கிறது என்று ஓரே ஒரு மாலையை வாங்கி அந்த படத்திற்கு ஓன்றாக போட்டு வழிபடும் சாதாரண மக்கள் நாங்கள்..
நாங்கள் மதங்களை கடந்தும் மனித நேயத்துடன் சகோதரர்களாகவே வாழ்கிறோம்..
எங்களுக்கு எல்லா மதமும் சம்மதமே.. ஆனால் கடவுள் இல்லை என்பதை மாத்திரம் எங்களால் ஏற்க இயலாது..

போலி போராளிகள்


பெண் விடுதலை பற்றி மேடையில் பேச காசு வாங்கி விட்டு..நல்ல ஹோட்டலில் சாப்பாடு சொல்லுங்க.போகும் போது ஸ்வீட் இரண்டு கிலோ வாங்கி கொடுங்கள் என்றே முடிந்தவரை வசூல் செய்தவன்.. மேடையில் சொன்னான் பெண்களை ஆண்கள் வீட்டில் அடிமையா நடத்தும் நிலை மாற வேண்டும்.. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது இதை கேட்டவள்.வீட்டில் வந்து அனைவரிடமும் கோபத்தை காட்டுகிறாள்.."நீங்க எல்லோரும் பெண்களை அடிமையாக நடத்துறீங்க"..என்றே எதுவுமே புரியாமல் கத்துகிறாள்..
எப்படி புரியவைப்பது..கஷ்டபட்டு வேலைக்கு போய் வயதான அம்மா அப்பா மனைவி குழந்தைகள் சொந்தகாரர் இவங்களை பற்றி அவனுக்கு என்ன தெரியும்.
பெண் விடுதலை பெண் விடுதலை என்ற பேசினா காசு தருவாங்க என்பதற்காக அவன் பேசுறான்..அவனை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் அந்த இயக்கம்.
அந்த இயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்தால் நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்திருக்கும் போலி ஊழல் தெரியவரும்..
கற்று எழுத்தறிவித்தாலும் பெண் புத்தி பின் புத்தி தான் என்ற ஔவையாரின் வரிகளை நினைத்து பார்க்கிறேன்... மேடையில் பெண் விடுதலை பேசும் அவனின் மனைவியும் மகளும் சமையலறையில் அடிமையாக வாழ்கின்றனர்... ஆனால் தன்னை முற்போக்கு வாதியாக காட்டிக் கொண்டு நன்றாகவே கல்லா கட்டுகிறான்...
பெண்ணை தனது வீட்டில் மகாராணியாகவே நடத்தும் அப்பா கணவன் மகன்.. இவர்களை விட காசு வாங்கி விட்டு மேடையில் பெண் விடுதலை பேசுபவன் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை... இங்கே பெண்கள் யாரும் அடிமையாக இல்லை.ஆண்கள் தான் பெண்களின் அடிமையாக கணவன் மகன் என்ற பெயரில் வாழ்கின்றனர்..
இனியோர் விதி செய்வோம்... பெண் விடுதலை என்ற யாராவது பேசினால் தைரியமாக சொல்லுங்கள்... எங்களின் அப்பனும் கணவனும் மகன் உண்மையானவர். என்றே காசு வாங்கி பேசும் மனிதரை புறந்தள்ளுங்கள்

ஆயிரம் கெடு பிடி

கருவறையில் இருக்கும் சிலையை கல் என்றனர்.. ஆனால் கூரையே இல்லாத சிலையை ரோட்டின் நடுவே நிறுவி ஓவ்வொரு ஆண்டும் அந்த சிலைக்கு மாலை போட்டு போட்டோ எடுக்க மாபெரும் போட்டி..பகுத்தறிவை சற்று நேரம் தலையில் இருந்து கழற்றி வைத்தனர் போலும்...என்றோ இறந்த போன மனிதனின் பெயரால் போக்குவரத்து நெரிசல்...பிரசவ வலியில் ஆம்புலன்ஸ் உள்ளே துடிக்கும் பெண்.... நேரத்துக்கு அலுவலகம் செல்ல இயலாமல் தவிக்கும் பலர்.. ஏற்கனவே ஊர்ந்து செல்லும் சாலையில் எதற்காக யாரை திருப்தி படுத்த இந்த போலியான நாடகம் என்றே தெரியவில்லை...ஏனோ அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் சிலையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இதுவரையில் வந்ததில்லை... ஓரே ஓர் நாள் வீதியில் வலம் விநாயகருக்கு ஆயிரம் கெடு பிடி...

உட்கட்சி பூசல்


மாபெரும் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலை பூசி மொழுகின்றனர்...கட்சியை விட்டே விலகி போக நினைத்து விலகி நின்றவரை அழைத்து மாலை மரியாதை செய்கின்றனர்.
ஏனோ அவர்களும் கூட ஒப்புக்கு சிரித்து...சித்தனையின்றி சிதறி விட்டு செல்கின்றனர் மேடையில் சில வார்த்தைகளை.... முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அதீத கற்பனையில் கனவு கண்டவர் கூட கட்சியில் பல வருடங்களாக இருப்பவனுக்கு அறிவரை என்ற பெயரில் பேசுவதை கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது.. அடுத்த மாதம் தானே தேர்தல்... இரண்டு நாளைக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்சா சரியாக இருக்கும் தேர்தலில் போட்டியிட..அப்படியே சி.எம் ஆயிடலாம் என்றே பகல் கனவு கண்ட சிலர்.. இன்றும் கூட கட்சிக்கு உதவுவது போல் இருக்கும் பலரால் கட்சியின் கோட்பாடுகள் சிதைந்து கொண்டு இருக்கிறது..உங்களை இந்த பதவிக்கு வரவிடாமல் செய்வதற்கு பிரயத்தனங்கள் செய்தவரே உங்களுக்கு அருகில் அமர்ந்து பல ஆண்டுகளாக விசுவாசமாக இருக்கும் உண்மை தொண்டனுக்கு குட்டி கதையில் பாடம் நடத்துகிறார்.. ஓர் வேளை அவர் கட்சி ஆரம்பித்திருந்தால என்னவாக இருந்திருக்கும் நினைக்கும் போதே உள்ளூர சிரிப்பு வருகிறது.. அந்த
தன்னையும் தனது பணத்தையும் பாதுகாத்து கொள்ள நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது மட்டும் வந்து ஓட்டிக் கொள்ளும் கூட்டத்தை நம்பும் தலைவரும் அவரோடு சேர்ந்து ஜால்ரா தட்டும் சிலரும்
அதிக கூட்டத்தில் அனைவருமே நன்றாக நடித்த படி சிரிக்கும் போது.மனசாட்சியை அடக்கமுடியாத உண்மை தொண்டன்.பக்கத்தில் இருப்பவரிடம் சொல்கிறான்.... அடுத்த மாசம் வரைக்கும் இவனுங்க கட்சியில் இருந்தாலே அதிசயம் தான்...ஏனோ தலைவரின் காதுகளில் விழ இயலாத வகையில் முழங்கிறது மேளதாளம் மேடையில்.... உண்மை தொண்டன் வலியில் துடிக்கிறான்.... உண்மை தொண்டனை போல் நடிப்பவனை நம்பினால் கட்சி கரையான் புற்று மழையில் கரைவது போல் கரைந்து போகும் என்பதை கூட கேட்கவும் நினைக்காத சில தலைவர்களால்... தொண்டர்கள் விலகி செல்கின்றனர் கட்சியை விட்டே.... இப்படிக்கு கட்சியின் அனுதாபியாக இருந்து விமர்சகனாக மாறிப்போன பல தொண்டர்களில் யாரோ ஒருவன் மனசாட்சியை அடமானம் வைக்க இயலவில்லையே

களிமண்ணா...கடவுளா...


களிமண்ணால் செய்த கடவுளின் உருவத்தை கடலில் கரைத்து விட்டோம் என்பதற்காக நாங்கள் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தமில்லை.
கணபதி என்பது களிமண் பொம்மை அல்ல அது எங்களின் உணர்வில் கலந்ந ஓர் உன்னத கடவுள்.
நீங்கள் எத்தனை முறை ஊரெல்லாம் கூவி கூவி சொன்னாலும் நாங்கள் கடவுள் இருக்கிறார் என்பதை முழுவதுமாக நம்புகிறோம்..கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களால் நோய்களே இல்லை என்றோ மனிதனுக்கு மரணம் இல்லை என்றோ சொல்ல இயலுமா..
மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை என்னவென்பதை சொல்வதே மதம்.
எல்லா மதங்களும் மக்களை நல்வழிபடுத்தவே தோன்றியது.
காசு வாங்காமல் சொல்வதோ செய்வதோ தான் பக்தி.
நீ எவ்வளவு நெல் விதைக்கிறாயோ அவ்வளவு நெல்மணி தான் கடவுள் தருவார்.. நீங்க எவ்வளவு காணிக்கை கொடுக்குறீங்களோ... அதற்கு தகுந்த மாதிரி தான் கடவுள் உங்களை ஆசிர்வதிக்க முடியும் என சொல்லும் கார்ப்பரேட் கடவுளின் தூதர் அல்ல எங்களின் விநாயகர்.
வினை தீர்த்து வல்வினே போக்கும் விநாயகன்... எங்களிடம் கோடி கோடியாக பணத்தை லாங்கி விட்டு கடவுளின் பெயரால் நாடகம் நடத்தும் நபர் அல்ல இந்த விநாயகர்.
சின்னஞ்சிறு அருகம் புல் போதும் என்றே எங்களின் உண்மையான எளிமையான வழிபாட்டை ஏற்று ஏற்றம் தரும் வாழ்வை எங்களுக்கு வழங்கும் வள்ளல் இந்த வல்வினை போக்கும் விநாயகர்.

மனித வாழ்வை

 நதிகள் நேராக செல்வதில்லை..

மேடு பள்ளம் இல்லாத பாதைகள் 

உலகில் இல்லை 

மலைகளில் கூட ஏற்ற தாழ்வுகள் 

அரிசியில் கூட எத்தனையோ வகைகள்..

இப்படி காணும் இடத்தில் எல்லாம் 

பேதங்கள் இருக்கும் போது.. 

வீட்டில் இருப்பவர்கள் மட்டும் 

என்னை போலவே இருக்க வேண்டும்.. 

நான் சொல்வதை தான் கேட்க வேண்டுமென்று

நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்.. 

மாறுபட்ட கருத்துகளும் 

மாறுபட்ட சிந்தனைகளும் தான் 

 வளமாக்குகிறது..

மனித வாழ்வை 

ழ்வை..

தீபாவளி

 தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்றே விவாதம் செய்வது சிலர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை வந்ததாகவும் இந்துக் மத நம்பிக்கையை குலைக்கும் வகையிலும் பேசும் சிலர்.. தீபாவளி பண்டிகை வியாபாரம் மதிப்பு 7,000 கோடி என பத்திரிகை செய்தி சொல்கிறது.. ஓர் மாதமாக நடந்த வியாபார மதிப்பு... கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள், தங்களின் கவலைகளை எல்லாம் மறந்து சந்தோஷமாக கொண்டாடும் பண்டிகையே தீபாவளி.. பட்டாசு வெடிப்பதும் இனிப்புகள் வழங்கி சுற்றம் சூழலுடன் சந்தோஷமாக வாழவே பண்டிகைகள்.

ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும் உன்னதமான நாளே இனிய தீபாவளி

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...