713 - வேலனின் வள்ளி

யாரிடம் எப்படி 
பேசணும்...யாரை 
எங்கே எப்படி 
புகழ்ந்து பேசணும்..
என்பதை துளியும் 
அறியாத தத்தி அவன்...
போலியாக கூட 
ஓருவரை புகழ்ந்து 
பேச தெரியாமல் 
பலர் முன்னிலையில் 
உண்மையான கருத்தை 
சொல்லி விட்டு...
எதை பற்றியும் யாரை பற்றியும்
புரிதலின்றி புரியாத புதிராகவே 
கவலையின்றி செல்பவன்..
காதலும் அன்புமாய் காமத்தின் 
வசப்பட்டு உணர்ச்சி பெருக்கில் 
அவனருகில் வந்து கற்கண்டாக 
நின்றபடி அவனிடம் 
பேச துடித்தே பேச்சின்றி 
இளமையின் வடிவில் தவித்தாள்.. அந்த 
வடிவான அழகியிடம் 
கூட நீ எதுக்கு என்பக்கத்துல 
வந்து உரசுறே தள்ளிப்போ
என குழந்தை போல் 
பேசிய அவன்.. ஏனெனில் 
அவனை வளர்ந்தவள் அழியும் 
அழகை விட அழியாத அறிவும் 
திறமையும் தைரியமான
பேச்சுமே சிறந்த 
செல்வமென்று வாழ்ந்த 
குறிஞ்சி நிலத்தின் தலைவரான
வேலனின் வள்ளி

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...