யானையா...பூனையா...


யானையை வாங்கி

வீட்டில் கட்டி வளரக்கவே

ஆயிரம் ஆசை ஆயினும்

மனதில் ஆனந்த சஞ்சலம்..

சின்னஞ்சிறு வயதில் என்னை அள்ளி கொஞ்சிய நினைவுகளையே

சொல்லிச் சொல்லி

பூனையாக மாற்றி

வைத்திருக்கும் பெற்றவரும்

சொந்தமும் என்ன

செய்வது.. யோசித்தே

உறங்கிப்போனேன்

கனவில் வந்தது 

என்னை காதலித்த யானை

அல்ல அல்ல நான் காதலித்த

எனது கோபத்தை பாசமாக

மாற்றி மனிதனாக

வாழ வைத்த அன்பே உருவான 

ஆசை யானை அதிக உரிமையில் 

அருகேசென்றே வாரியணைத்து

முத்தமிட்டேன்.. மகிழ்ச்சியில்

காடே அதிரும் படி

ஆரவாரித்து பிளிறியது.

சுற்றி இருந்த பறவைகளும்

பட்சிகளும் விலங்குகளும்

பரிதவித்தது அலறி ஓடியது

ஆனால் நாங்கள் இருவரும்

அன்பில் ஒன்றுபட்டு கிடந்தோம்

விலங்கு மனிதனாகவும் மனிதன் 

மிருகமாவதும் மாறிய தருணமது.. என்னுடனே இருந்து விட

ஆசைபடுவது போல்

ஓலித்தது ஓசை...

கனவு கலைந்து எழுந்தேன்..

வீட்டின் முற்றத்தின்

வாசலில் இருந்த

வேப்ப மரத்தில் 

சுதந்திரமாக துள்ளி

ஓடி விளையாடிய அணிலை

லாவகமாக கவ்விப்பிடித்த

பக்கத்து வீட்டின் பூனை..ஏனோ

யானையை வளர்க்கும்

ஆசையை அசைபோடுகிறேன்..

நான்...யானையா..பூனையா..

இதில் எதன் வாழ்க்கை சிறந்தது

அன்பெனும் வட்டப்பாதை

 

உன்னை பார்க்கணும் போல இருக்கு என்று கெஞ்சலோடு மழலை மொழியோடு 

பேசும் குழந்தைகளின் வார்த்தை பெரியவர்களின் காதுகளில் விழுவதில்லை 

( மன்னிக்கவும் விழாத மாதிரி நடிக்கிறார்கள் அவ்வளவுதான்)

ஓர் அவர்கள் உண்மையான அன்பை தேடும் போது அந்த குழந்தைகளோ பெரியவர்களாக வளர்ந்து விடுகிறார்கள் அன்பெனும் வட்டப்பாதை

மயிலெறி வரவேணும்

 கோடி செல்வம் மாடு 

மனை  மக்கள் வீடெல்லாம்..

அதிகார பதவிகளும் 

சில நொடிகளில் ஆட்டம் 

கண்டு அதிர்ந்தே தரையிலே 

தலைகுப்புற வீழந்து விடுமே .

நிலையற்ற அவையெல்லாம் 

நிலையான உனதடிக்கு 

ஈடாகாது முடியுமோ...

ஈகை குணத்தை இயல்பிலே 

கொண்ட ஈசன் மகன் நீயன்றோ... 

அனைத்தும் அற்ப சுகமென்றே 

அறிவுச் சுடர் தந்தவனே... 

அழிவில்லா தமிழ் மொழியை 

தனதாக்கி சிரிக்கும் சிங்கார வேலனே... 

தமிழ் மொழியை தரணி தழைக்க 

வைத்த தணிகாசல மூலவனே... 

தஞ்சமெனறு வந்துவிட்டேன்..

நீ என்தன் தெய்வமென்றால்  

உன் தமிழை என்னுள் தந்த 

தரணிமெல்லாம் தளைக்க செய்வாய்யோ...

எங்கிருந்தோ வந்த மொழியை 

கற்றவும் முடியாமல் கற்றது போல் 

களிநடனமிடும் கூட்டப்பா...

தடைகள் எல்லாம் தகர வேண்டும்..

தரணியில் உன்புகழே பாடவேணும்..

கையெடுத்து தொழுகின்றேன்..

குறிஞ்சி நிலத்தலைவனே.. 

குறையெலலாம். களைந்திடப்பா

உன் மொழியை என் வழியே தந்திடப்பா..

தீந்தமிழ் சொல்லெடுத்து

இலக்கியம் படைத்திடவே

இன்முகமாய் வந்திடப்பா..

இரு மனைவி கட்டினாலும்..

இருறுமாப்பு உனக்கில்லை..

உன்னை போல் மாறிடவே

துடிக்கின்றேன் தூய தமிழ்

எடுத்து பாமாலை கட்டிடவே

பாலமுருகனே மயிலெறி வரவேணும்

காதலிக்கும் அப்பா

 அவளுக்கு என்மீது

கொள்ளை ஆசை

எனக்கோ அவளின்

மீதான எல்லையற்ற காதல் - 

நல்ல விஷயத்தை கூட 

இழித்தும் திரித்தும் பேசும் 

இயந்திர உலகத்தில் நாங்கள் 

இருவரும் பிறந்து காரணமாக...

பாசத்தை கூட தள்ளி நின்றே தேடுகிறோம்.. இன்றும் கூட 

அவளின் நிழலை கூட 

தொடாமல் தள்ளி நின்றே ரசிக்கிறேன் அவள் பெறும் வெற்றிகளை..

அவளோ நீ என் பக்கத்தில் வந்து நில்லேன் என்றே தவிக்கிறாள்.

பதவியும் பணமும் வந்தவுடன்

ஓடிக்கொள்ளும் உறவா இது..

என்னை அவளும் அவளை

நானும் தாலாட்டிய நாட்கள் தான்

எத்தனை எத்தனையோ.

உன் வலி யாருக்கும்

புரியாதுப்பா..உன் மகளாக

நான் ஜெயிப்பேன்.. அடிக்கடி

அவள் சொன்ன தன்னம்பிக்கை

வார்த்தைகள் எவ்வளவோ 

என்னோட வெற்றிக்கெல்லாம் 

காரணம் நீதானே கலங்கியக கண்களில் வழங்கும் வழியே கண்சாடையில்

பாசமென்னும் சவுக்கடி தந்து சிரிக்கிறாள் நான் பெற்ற பெற்ற காதலி அவளோ சிணுங்குகிறாள் உன்னை பெத்த அம்மா நான் தானே.. நான் பெற்ற 

மகளின் கைகளை

மாத்திரமே தொட்டு வாழ்த்துகிறேன்..

அவளோ முன்னொரு காலத்தில்

மடியில் சிறுகுழந்தையாக

அவள் செய்த சேட்டைகளை

சொல்லி என்னை

சலனப்படுத்துகிறாள்.

தூரத்தில் நிற்கும்

மனைவியோ..அதிகார தோரணையில்

இன்னிக்கு கூடவா கண்ணீர் நாடகமென்றே முறைத்துப் பார்க்கிறாள்..

தந்தை மகளின்

பாசத்தை வார்த்தையில் விவரிப்பது இயலாத விஷயமே...

இப்படி அவளை

அதிகமாகவே

காதலிக்கும் அப்பா

இயற்கையை போற்றுவோம்

 நாலு சுவற்றின்

உள்ளே அடைத்து

வைக்க இயலாத

கடவுளை காட்சிப் பொருளாக

பார்க்காமல் எல்லா

இடத்தில் வியாபித்து

நிற்கின்ற இயற்கையாக

காண்பதே கடவுளின்

மீதான காதலின் தொடக்கம்

இயற்கையும் கடவுளும்

வேறல்ல.. கடவுள் படைத்த

இயற்கையை பேணாமல்

கடவுளின் அருளை மாத்திரம்

கோருவது எவ்விதத்தில்

சாத்தியமான சத்தியமாகும் 

இயற்கையை போற்றுவதும்

இயற்கையை பேணுவதையும் 

நாம் பழுது இன்றி செய்தாலே

பதிலுக்கு இயற்கையும்

காதலிக்கும் நம்மை

நன்மையாக கடவுளின்

வழியில் இயற்கையை

போற்றுவோம் 

பக்கத்து வீட்டு கிழவி

காதலியின் பணத்தை

மட்டுமே காதலித்தவன்

தாலி கட்ட பல இலட்சம்

வாங்கிவிட்டு தனது

வீட்டிற்கு அழைத்துச் சென்றான்

அவளை சம்பளமில்லாத

வேலைக்காரியாக

அன்பை மாத்திரமே

எதிர்பார்த்து காதலித்தவனோ.

உன்னை பெற்றவரும் 

என்னை பெற்றவரும்

நமக்கு தாய் தந்தை தானே

என்றே சொல்லி

ஆயிரம் கஷ்டங்களை

கடந்து காதலிக்கிறான்

அவளின் தாய் தந்தையினையும்

தன்னை பெற்ற தாய் தந்தை

போலவே - இப்படி ஓர்

மருமகன் கிடைச்சது

உனக்கு பூர்வ ஜென்ம

புண்ணியமென்றே

கேலி பேசுகிறாள்..

கடவுளையே நம்பாத

பக்கத்து வீட்டு கிழவி


கோடீஸ்வர யோகம்

கையில் காசில்லாத

அப்பன் ஆத்தாவையே

சுமையாக நினைக்கும்

இந்த கணிணி யுகத்தில்

நோயுற்ற வயதான 

கணவனின் தாயின்

மலத்தை மறுப்பேதும்

சொல்லாமல் தானாகவே

முன்வந்து சிரித்த முகத்துடன்

தனது குழந்தைக்கு 

செய்வதைப் போல

பார்த்துக் கொள்ளும்

மனைவியை பெறுவதே

கோடீஸ்வர யோகம் 


அன்பு

அன்பு மிகுதியான
இடத்தில் குறைகள்
தெரிவதில்லை- குறைகள்
தெரிய ஆரம்பித்த
இடத்தில் காதல் 
இருப்பதில்லை.
தந்தை தந்தை
காதலே என்றும்
மாறாத அன்பு

.. அவன் எந்த தப்புமே செய்யலையே..

ஏன்ப்பா இவன் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டான்னு இப்படி பண்ணுறீங்க..நீங்க எல்லோருமே யோக்கிய சிகாமணிகளா...அவன் எந்த தப்புமே செய்யலையே என்று ஓருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.. பாவம் யார் பெத்த பிள்ளையோ...பசி கொடுமையில் இரண்டு வடை தின்னுட்டான்...அவன் கையில் காசு இருந்திருந்தா கொடுத்திருக்க மாட்டான்னா... இன்றோ நாளையோ என்று தள்ளாடிக் கொண்டிருந்த பெருசு சத்தமாக பேசுவது பற்றிய கவலை இன்றி


சுற்றி இருந்த கூட்டத்தில் ஓர் உத்தமன் கத்தின்னான்.. இந்தா மாதிரி திருட்டு நாய்களை எல்லாம் போலீசுல பிடிச்சு கொடுக்கணும் அப்படி செஞ்சா தான் இந்த நாயீக்கு  புத்தி வரும்

ஆண்கள், பெண்கள்,படித்தவர் படிக்காதவர், ஜாதி, மதம் என்ற பேதமின்றி அந்த மக்கள் அனைவரும் இந்த ஓர் விஷயத்தில் மட்டும் ஓற்றுமையா தனது வேற்றுமைகளை எல்லாம் மறந்து அந்த நடுத்தர வயது இளைஞன் அடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஓற்றுமையாக இருந்தனர்.

கூட்டத்தில் விலகிக் கொண்டு.ஏதோ இமயமலயை தொட்ட டென்சிங்..யாருமே தொட முடியாது என்ற சந்திரனின் கால் பதித்த ஆம்ஸ்டாரங்க் போல நானும் அந்த கூட்டத்திற்குள் ஐக்கியமாக முயன்றேன்..

சின்னஞ்சிறு விஷயத்துக்கு கூட எளிதில் உணர்ச்சிவசப்படும் எனக்கே அந்த மனிதனின் முகத்தை பார்த்தவுடன் .. இரக்கமாக இருந்தது.. பணக்கார வீட்டு பையனோ அல்லது மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட மனிதனைப் போல இருந்தான்.

அவனை இரண்டு போடு போடுங்க என்றே இன்னும் ஆத்திரம் தீராமல் கத்திய கூட்டம்..

பரபரப்பான அந்த ரதவீதியில் மாலையில் தனது அதிகாரி வரும் நேரத்திலா இப்படி நடக்க வேண்டும்..ஆண்டவா..புதுசா வேலைக்கு சேரந்தவனை பாடாய் படுத்தும் இந்த போலீஸ் வேலைக்காக இந்த வருஷம்..ச்சே எப்படியெல்லாம் கனவு கண்டேன்.. இந்த உலகமே இப்படித்தானா..என்ற நினைப்பில் கோவிலில் இருந்து வெளியே வந்த போலீஸ்

சார் அங்கே ஏதோ பிரச்சினை போல தெரியுது போய் பாருங்க.. ராங்க் ரூட்டில் வந்த டூவீலர்காரன் தன்னை நல்லவனை போல காட்டிக் கொண்டு விரைந்து சென்றான்.

சற்று தள்ளி நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி வேகமாக ஓடினான்.புதிதாக வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதம் கூட நிறைவு பெறாத கேசவன்.. டேய் நீயும் கூட வாடா.. ஓர் தைரியமாக இருக்கும்.. செந்திலும் அவனுடன் சேர்ந்து அங்கே சென்றான்.

எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ..வந்துட்டானுங்க.. இந்த சண்டைய காரணம் காட்டி இரண்டு பக்கமும் சில்லறைய பார்த்துட்டு போவானுங்க பாரூ... புதிதாக கல்யாணமாகிய தனது புத்திசாலி மனைவிக்கு உலக அறிவை மெதுவாக அவளின் காதுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல முயற்சி செய்த இளைஞன் பேசியது செந்தில் காதில் விழுந்தது..

முறைத்த படி அவனை நோக்கி திரும்பியவனை.. டேய் இங்கேயும் உன் சண்டை புத்திய காட்டாதேடா..நாம வேலைக்கு புதுசு நாம லஞ்சமே வாங்க கூடாது என்று நினைச்சு வாழுறது அவங்களுக்கு புரியாதுடா வந்த வேலைய மட்டும் பாரூ..

இவர்களின் பேச்சை கேட்டு பயத்தில் நடுங்கிய புதுமாப்பிள்ளை...தனது ஆசை மனைவியிடம் சொன்னான்.. எல்லாம் அந்த எதிர்த்த வீட்டுக்காரி பார்த்த பார்வைதான்..நாம டூவீலரில் வீட்டை விட்டு கிளம்பும்போதே எங்கே போறீங்கன்னு கேட்டாளே.. தரித்திரம் பிடிச்சவ ... தனது குறையை யாரோ ஒருவர் மீது போட்டு மனைவியிடம் அன்பை எதிர்பார்த்த படி நின்ற இளைஞன்.

ஆமாம்.. ஆமாம்... எனக்கு இப்படி நிறைய சம்பவம் நடந்திருக்கு வாங்க போகலாம் நமக்கு எதுக்கு ஊர் பொல்லாப்பு..அவனை இழுத்த படி கூட்டத்தில் இருந்து வெளியேறினர் அந்த புதுமண தம்பதி..

ஏய்..தள்ளு..தள்ளு.....என்னைய்யா இங்கே ஓரே கூட்டமா இருக்கு..யாருய்யா இவன் எதுக்கு இப்படி மயங்கிப் போய் கிடக்கிறான்...

சார் இந்த பயலை பிடிச்சு உள்ள போடுங்க..பரபரப்பான இந்த ரோட்டு கடையிலையே வடையை திருடி தின்னா எவ்வளவு திமிரூ பிடிச்சவனா.. இருப்பான்.. யாரோ ஓருத்தர் சொல்லவும்..

ம்க்கும் இப்படி வடை திருடியவன்.. செருப்பு திருடியவனை எல்லாம் பிடிக்க சொல்லுங்க..கோடி கோடியா கொள்ளை அடிக்கிறவனை கையெடுத்து கூப்பிடுங்க எரிச்சலாக சொன்ன கேசவன்..

டேய் நீ வாயை வைச்சுகிட்டு சும்மா இரு.. இந்த கூட்டத்தில் ஏதாவது ஓர் போலீஸ் இருந்தாலும் நமக்கு எதிரா ஓர் ரிப்போர்ட் எழுதினாலும் நம்ம சீட்டை கிழிச்சுடுவாங்க.. ஆமா பொல்லாத உத்தியோகம் ..சம்பளத்தை தவிர என்ன கிடைக்குது.. நான் ஏதோ லஞ்சம் வாங்குற மாதிரியே எல்லாவனும் பார்க்கும் போது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..

ஊர்ல ஆடு மேய்க்கும் போது கூட இந்த அளவுக்கு மன அழுத்தம் கிடையாது..

சரி..சரி.. உன் உணர்ச்சியை எல்லாம் இங்கே காட்டாதே.. இந்த ஜனங்களை பொறுத்த வரை நாம போலீஸ்காரன் அதுக்கு ஏத்த மாதிரி கெத்தா நடந்துக்கோ.. இல்லாட்டி கையை கட்டிகிட்டு விறைப்பா நில்லு மத்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் கேசவன் சொன்னான்...

அவனை 

வாழ்ந்து காட்டு ஏளனம் செய்பவர் முன்னால்...

இவன்,... ஏன் காதல் கவிதை கதைகளை அதிகம் எழுதுகிறான்.


ஏன்னா GH-ல்  உயிருக்கு போராடிய ஓருவன் சொன்னான்..என்னை யாரும் புரிச்சுக்கலை அதான் இப்படி என்றான்..அவனை ஆட்டோவில் கொண்டு செல்லவதை பார்த்து அவனின் பிஸ்கட் வாங்கி சாப்பிட நாய் GH வரை ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து ஜன்னல் வழியாக அவனிருந்த கட்டிலை வெறித்த படி பார்த்துக் கொண்டே இருந்தது.. தயவுசெய்து நண்பர்களே காதல் கிடைக்க வில்லை என்றாலோ உன் அன்பு யாருக்கும் புரியவில்லை என்றாலோ கலங்காதே... இறைவனின் அன்பையே புரிந்து கொள்ள இயலாத மனிதர்கள் தான் இந்த உலகில் ஏராளம். இந்த உலகில் நீ உதாசீனம் செய்யபட்டதாக உணரலாம்.ஆனால் உனக்கான தேவையும் சேவையும் உனது அன்பும் நிச்சயமாக உலகம் ஓர் நாள் புகழும் அது வரை பொறுமையாக இரு 


ஓர் நண்பன் சொன்ன உண்மை கதை-கூட ஓர் நாள் சிலரின் அவமானகரமான பேச்சுக்களால் தற்கொலைக்கு முயன்றது உண்மையே.. பாலில் விஷத்தை கலந்து குடிக்க நினைத்த நேரத்தில் ஓர் போன் கால்.. சார் credit card -வேணுமா.என்ற ஓர் பெண்மணி எதிர் முனையில் கெஞ்சுவது போல் இருந்தது அவளின் குரல்.

Sorry madam, எனக்கு credit card வேண்டாம் என்றவுடன்.. சார் இந்த மாதம்  ஓர் கார்டு கூட விற்பனை செய்யலை என்று மேனேஜர் திட்டுறார்..எல்லோருமே Credit card வேண்டாம் என்று தான் சொல்லுறாங்க

.ப்ளிஸ் சார் நீங்க கார்டு பயன்படத்தா கூட பரவாயில்லை..எனக்கா ஓரே ஓர் கார்டு எடுத்துகோங்க சார்..

ஹலோ மேடம் நீங்க யாருன்னே தெரியாது.. நான் எதுக்கு உங்களுக்காக எடுக்கணும். எரிச்சலாக பேசியதை கூட பொருட்படுத்தாமல்

அவள் மேலும் சொன்னாள்.. சார் எங்க அப்பா நோய்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காரூ நா அடுத்த மாசமும் வேலையில் இருந்தா தான் சம்பளம் தருவாங்க..என்னை மாதிரி ஏழைக்கு நீங்களாவது ஹெல்ப் பண்ணுங்க சார் என்ற போது சார்ஜ் குறைந்த காரணமாக போன் கட் ஆனது..

அதன் பிறகு அவருக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தததாம்.. இன்றோ ஓர் மாபெரும் சாதனையாளர் அவரை நம்பி ஆயிரம் பேர் அந்த நிறுவனத்தை பல கோடி ரூபாய் வருமானத்தை அடையச் செய்த வெற்றியாளர்.

நம்புங்கள் நண்பர்களே உங்களின் அன்போ..பாசமோ..நேசமோ... குடும்ப பிரச்சினையோ... யாருக்கும் புரியவில்லை என்று கலங்காதீர்கள்...

வாழந்து காட்டுங்கள்... யாராலும் பிறருக்கு கொடுக்க இயலாத மாசற்ற அன்பையும் நேசத்தையும்... வெற்றியையும் நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும்.. ஏனென்றால் உங்களின் கஷ்டமே உங்களை புடம் போட கடவுள் வைத்த சோதனே..அதை சாதனையாக மாற்று..நல்லதே நினை நல்லதே நடக்கும் 


தங்கப்பதக்கம்

பணத்தையும்

பாசத்தையும்

சரியாக சேர்க்க

தெரியாமல்

சுயநல சொந்தங்களுக்கு

இடையே மாட்டிக் கொண்டு 

தன்னலமற்று உதவிசெய்து

இளிச்சவாயன் பட்டம்

பெற்ற அப்பாவி அப்பா..

"கடவுளுக்கு தெரியும்"

என்னோட அன்பான

மனசும் அக்கறையும்

அம்மாவுக்காக

மனைவியிடமும்

மனைவிக்காக

அம்மாவிடமும்

ஏசசு வாங்கிய

அப்பாவி அப்பா...

தன்னை தோற்றக்கடிக்க

துடித்தவருக்கும்

துள்ளியோடி பிறரின்

மனம் துவண்டு விடாமல்

பாதுகாத்த அப்பாவி அப்பா

இன்று மேடையெறி

பட்டம் வாங்குகிறேன் 

அவரின் செல்ல மகளாக .. 

தக்கபதக்கத்தை தந்தையிடமிருந்தே 

வாங்க நினைத்து சொன்னேன். 

மரபுகள் பழக்கவழக்கங்கள் என்றே 

ஆயிரம் காரணம் பேசினர்..சற்றே

சிரித்தேன் சுற்றியிருந்த

காக்கிகளும் கட்சி நிர்வாகியும்

அதிகார பலமிக்க அரசியல்

தலைவர்களும் அதிர்ந்தே 

போயினர்.. அவர்களுக்கு 

தெரியாதே பலநாள்கள் பட்டினியோடு

பரிதவித்தாலும் முகத்தில் 

கவவையை காட்டாமல் சிரித்தபடியே

படிக்க வைத்த தந்தையின் 

பாசமும் நேசமும் அளப்பரியது

பல்கலை கழக விழாவில்

மரபுகளையும் மாண்புகளையும்

உடைத்துப் போட்டு

பட்டமளிப்பு விழாவில்

அவரிடம் பெற்ற பட்டத்தை 

அவருக்கே பட்டமளித்து

மிழ்கிறேன்...ஆடையில்

கூட நடிக்க தெரியாமல்

சிரிக்கும் அவரின் ஏழ்மைக்கு

மகுடம் சுட்டுகிறேன் 

நான் பெற்ற கல்வியால்

கல்லூரியே அதிரந்தாலும்

எனக்கென்ன கவலை

அப்பாவி அப்பனுக்கு நான்

செய்யும் மரியாதை..

கள்ளம் கபடமில்லாத 

பாசமான அப்பனின் காலடியில் 

எனது தங்கப்பதக்கத்தை 

மேடையில் இருந்து இருவரும் 

இறக்கிய போது மொத்த அரங்கமும் 

எழுந்து நின்று கைகளை கூப்பிய

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் என்னும் சொல்.. மன்னிக்கவும் "மகள் தந்தைக்கு" 



ஆடு மேய்ப்பது ஓர் பொருளாதார சுதந்திரம்

 

 



ஆடுகள் கிராமத்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து ஓர் பொருளாதார மேம்பாடு.

இன்னும் எளிதாக சொல்லப் போனால் ஆடுகள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் பணம்.


நகரத்தில் இருப்பவர்களுக்கு பணம் என்று சொன்னால் தான் புரிகிறது.


ஆடு என்பது எங்களின் வளர்ப்பு பிராணி, அதை நாங்க மிகவும் பாசத்துடன் வளர்க்கிறோம் என்றால் பலருக்கு புரிவதே இல்லை 



ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மாவட்டத்தில் ஆடு விற்பனை நடைபெறுகிறது. அதனால் கிராமப் பொருளாதாரம் எவ்வளவு என்பதை அறியாமல் பேசும் மக்கள் ஏராளம்.


I.T கம்பெனியோ..அரசு நிறுவனத்திலோ கூட உங்களால் மாத சம்பளமாக இவ்வளவு சம்பாதிக்க இயலுமா என்பது கேள்விக்குறி.


வெயிலும் மழையும் பனியும் எப்படி இருந்தாலும் அந்த உயிரினங்களுக்கு உணவு கொடுக்க நினைத்து தான் வளர்க்கும் பிராணி மீது மிகுந்த அக்கறை செலுத்தும் ஆடு மேய்பவனுக்கு தான் அதன் வலியும் வேதனையும் புரியும்.


ஆடு -ஓர் பொருளாதார சுதந்திரம்


ஏசி அறையில் இருந்து கொண்டு உலக விஞ்ஞானம் பேசுபவர்களுக்கு வயல் வெளியில் எனது நண்பர்கள் படும் கஷ்டம் எப்படி புரியும்.


ஓர் மாதம் சம்பளம் வராவிட்டால் நகரத்தில் வாழ்பவர்கள்,வேறு வேலை தேடி போய்விடுவர்.

ஆனால் விவசாயி எத்தனை வருசத்துக்கு தனது நிலத்தில் இழப்பு ஏற்பட்டாலும், தான் உண்மையான நேசிக்கும் வயலை பாதுகாக்க பாடாத பாடு படுகிறான்.

பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யவே ஆடு மாடு மற்றும் இன்ன பிற உயிர்களை வளர்க்கிறான்.


கிராமத்தில் இருப்பவர்களுக்கு உதட்டில் தேனை வைத்து பேசத் தெரியாது என்பது உண்மை தான்.ஆனால் ஓவ்வொரு கிராமத்துகாரனின் மனதிலும் இருக்கும் பாசமும் நேசமும் அளப்பரியது.


பத்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் வந்துவிட்டு போனதை கூட பெருமையா நினைத்து பேசும் பாசமிக்க உறவுகள் எமது கிராம மக்கள்.


எங்களின் பொருளாதார சுதந்திரம் வேண்டிய ஆடுகளை மேய்கிறோம்.


ஆடு மேய்ப்பது ஓன்று கேவலமான செயல் அல்ல. 

யாரிடமும் சென்று கைகட்டி வாய் பொத்தி தன்மானத்தை இழந்து வேலை பார்க்க நினைக்காமல் சுயமாக வேலை பார்க்கிறான் எனது சக சகோதரன்.

ஓர் குறிப்பிட்ட கட்சியை சார்ந்த தலைவரை பற்றி விமர்சனம் செய்ய நினைத்தால் அவரின் செயல்பாடுகளை பற்றி பேசுங்கள்.


ஓருவரை ஆட்டுக்குட்டி ஆடு என்று பேசுவதன் மூலம் உங்களால் யாரையும் மட்டம் தட்டி விட முடியாது.



ஓருவரை நீங்கள் குறைவாக பேசுவதன் மூலமாக், அவரின் செயல்பாடுகளை கண்டு அச்சமடைவது தெரிகிறது.

டீச்சர் பாத்ரூம்-ல் பையன்

  Small boy emotional story

பொறுப்பு துறப்பு


(கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாராவது ஒருவரின் வாழ்வில் இதை போன்ற சம்பவம் நிகழ்ந்திருந்தால் அது தற்செயலானதே.. அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்)

உங்க பையன் டீச்சர் பாத்ரூம் போகும் போது பின்னாடியே போய் எட்டிப் பார்த்து இருக்கான்..இனிமே இவனை எங்க ஸ்கூலில் படிக்க வைச்சா எங்களுக்கு தான் கெட்ட பேரு என்ற நிர்வாகம்..

சொற்களை கேட்ட மாத்திரமே.நாலு பேர் சுற்றி இருக்கிறார்களே என்று கூட பாராமல் அந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்து நொறுக்கினாள் அவனை பத்து மாதம் சுமந்தவள்..

Aunty - மாதவனை அடிக்காதீங்க அவன் எந்த தப்புமே செய்யலை.. அவனுக்கு எதையுமே ஓழுங்கா படிக்கவும் தெரியலை பேசவும் தெரியலை..ஆனா நாம எதையாவது மனசுல நினைச்சா அதை அப்படியே பேசி நீ இதை தானே இப்போ நினைச்சே என்கிறான்...

மேடம் பாருங்க முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ளே இவனுக்கு லவ்வு கேட்குது..

அவன் கிளாஸ்ல நான் பாடம் நடத்தும் போதும் கூட அவன் அந்த பொண்ணையே தான் பார்த்துவிட்டு இருப்பான் மேடம்..

குறை சொன்ன கிளாஸ் டீச்சர்.

 

ஏய் நீ தூர போயிடு என்னோட மகனை கண்டிகிற அதிகாரம் எனக்கு இருக்கு..உன்னை உங்க அப்பாகிட்ட சொல்லவா...

நீங்க எங்க வீட்டுக்கே வந்து கூட சொல்லுங்க.ஆனா எங்க அப்பா நம்ப மாட்டாரூ..ஏன்னா அவருக்கு என்மேல் அவ்வளவு பாசம் நான் தப்பே பன்னியிருக்க மாட்டேன் என்று அவருக்கு தெரியும்..

அவனே பக்கத்து கிளாஸ் வாத்தியார் நாதன் தர தரவென்று இழுத்து ன்றார்.. மேடம் எனக்கு எல்லோரும் ஓழுக்கமா இருக்கணும் அது தான் முக்கியம்..

டேய் இன்னும் என்னடா அமைதியா இருக்கே..வாயில கொழுகட்டையா இருக்கு.. மேடம் அவன் டவுசர் பாக்கெட்டை தேடிப் பாருங்க.. அவனுக்கு திருடன் பட்டமும் சேர்த்து கொடுங்க.. இளிச்சவாய் பய எல்லாத்தையும் தாங்குவான்..ஏன்னா நேத்து சண்டே வீட்டில சண்டைன்னு பக்கத்துல சர்ச்- இயேசுநாதர் கதை கேட்டு மதிய கேக் வாங்கி சாப்பிட்டான்.. பாருங்க அதான் அவரை மாதிரியே எல்லா கஷடத்தை தாங்குவான்.. Aunty - இன்னிக்கு இவனை அடிக்கிற உங்களால உங்க புருஷன் கிட்ட வீரத்தை காட்ட வேண்டி தானே.. வயசுக்கு மீறிய பேச்சை பேசியவளை அனைவருமே அதிரச்சியாக பார்த்தனர்..

 

இப்போது ராதாவை விட்டு விலகி அனைவருமே அவனை சூழ்ந்து நின்று முறைந்தனர்

 

அவனோ என் பக்கத்தில் யாரும் வராதீங்க என மேஜை மீது இருந்த பிரம்பை எடுத்த அனைவரையும் அடித்து விடுவது போல சுற்றினான்..

 

டேய் லூசூ புயலே மாதவா இந்த பைத்தியங்களுக்கு உன்னோட அன்பு புரியாதுடா...உன் மீது பழி சுமத்துவங்க செஞ்ச தப்பை கூட யாருக்கு சொல்லிட கூடாதுன்னு நினைக்கிற நல்ல மனசு இங்கே இருக்கிற எவனுக்குமே புரியாது...

 

மாதவன் அருகே சென்றால் அடித்து விடுவான் என்று பயந்த படி அனைவரும் இருக்க.

 

சின்னஞ்சிறு தேவதையோ எந்த விதமான பதட்டமோ படபடப்போ இல்லாமல் அவன் கையில் இருந்த பிரம்பை வாங்கி தூக்கி வீசினாள்..

அது தெருவில் சென்று விழுந்தது..

 ப்ளீஸ் வேண்டாம் ‌‌யாரையும் காட்டிக் கொடுக்காதே..அவங்க ரொம்ப பாவம்..என்னடா பாவம் அவனின் டவுசர் பாக்கெட்டில் இருந்து தூக்கி ஏறிந்தாள்..

அதில் இரண்டு தங்க வளையலும்..நாதன்அடிக்கடி பேசி பெருமைபடும் "அவரின் 50,000 மதிப்புள்ள  கல்யாண வாட்ச் சிதறி உடைந்தது..

 இப்போவாச்சு சொல்லி தொலையேன்டா...இதை மறந்து வைச்சுட்டு போனதை கொடுக்கத்தான் பின்னாடியே போனேன்..ஆனா....

மாதவனின் அம்மா அவனை என்னை மன்னிச்சிடு என்ற கேட்டாள்.. அனைவரின் முன்பும் சற்று நேரத்துக்கு முன்பு அனைவரும் பார்த்த நோக்கம் முற்றிலும் மாறியிருந்தது...

டேய் வாடா நாம போகலாம்...... ஹீரோவின் கையை பிடித்து இழுத்து கொண்டு போனாள் அந்த ஹீரோயின்...

இருவரும் தள்ளி சென்று தனிமையில் அமர்ந்தனர்...

அவனோ அந்த வேப்ப மரத்தை வெறித்த படி பார்த்துக் கொண்டே இருந்தான்...

டேய் நீ என்னதுடா பார்க்கிறே எனக்கும் காட்டேன்.... இங்கே வா அவன் காட்டிய திசையில் கன்னத்தோடு கன்னம் உரசிய படி பார்த்தாள் அங்கே ஓர் சிறு அணில் அருகில் புறா அமர்ந்திருந்தது....

ஆம் அவர்களுள் எந்ந பேதமும் இல்லை...

வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டு அணில் பதறி ஓடியது..

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த காவேரியின் அப்பா ஓர் தலைமை ஆசிரியர் அறை வாசலில் கூட்டமாக இருக்கிறது என புரியாமல் யோசித்தார்..


அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு சங்கோஜமாக தெளிந்தனர்

ஏன்ம்மா எதுவும் பிரச்சினையா ...அது வந்து சார்....தலைமை ஆசிரியர் பேச தொடங்க இருந்த நேரத்தில்.. காவேரி சொன்னாள்...

அப்பா உனக்கு சுத்தமான அறிவே இல்லை... உன்னோட கார் ஹாரன் சத்தம் கேட்டு அந்த அணில் எப்படி பதறிப்போச்சு தெரியுமா...


காவேரியும் மாதவனின் கையை பிடித்து கொண்டு ஏதோ தேவலோகத்தில் தேவதை போல் நடந்து வந்தவள்...

அந்த இருவரையும் பார்த்து உத்தரவு போல் சொன்னாள்.. சார் மேடம் ஸ்கூல் விட்டாச்சு நீங்க வீட்டுக்கு போகலாம் ‌.. நாளைக்கு பெரிய கிளாஸ் பரீட்சை இருக்கு... சீக்கிரமா வந்திடுங்க...


ஆன்ட்டி நாளைக்கு எங்களுக்கு லீவு தான் மாதவனை எங்க வீட்டுக்கு விளையாட அனுப்புவீங்களா....கெஞ்சுவது போல் கேட்டாள்...

மாதவனின் அம்மா தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள்...

சரிடா நாம நாளைக்கு பார்க்கலாம்.. உனக்கு பிடிச்ச பெங்களூர் கத்திரிக்காய் பச்சடியும் மோர் குழம்பும் சரிதானா அப்பா..

அவளின் கன்னத்தை கிள்ளி அவனுக்கு டாட்டா சொல்லு நாம போகலாம் என்றார்...


எல்லோரும் ஓருவருயோருவர் வியப்பாக பார்த்தபடி இருந்தனர்..


தூரத்தில் காவேரி தன் அப்பாவிடம் பேசும் சத்தம் அனைவரின் காதுகளிலும் விழுந்தது... அப்பா நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே தப்பு பண்ணியவனை மன்னிசுட்டா அதை விட பெரிய தண்டனையை யாராலும் அவனுக்கு கொடுக்கவே முடியாது அப்படின்னு அதை தான் நானும் இன்னிக்கு செஞ்சேன் தெரியுமா என்றாள்...

நீ தான் டீ என்னோட வாரிசு எனக்கு பிறகு இந்த ஸ்கூலுக்கு நீ தான் correspondence..நீ என்ன செஞ்சாலும் அது நம்ம ஸ்கூல் நல்ல பெயரோடு இருக்கு என்று தான் செய்வே எனக்கு நல்லா தெரியும்...என்ற படி அவளை கொஞ்சினாள்...


போதும் போதும் இப்பவே எல்லா பாப்பாவுக்கு கொடுக்காதே... வீட்டுக்கு போன பிறகும் இந்தா பாப்பாவுக்கு கொடுக்க கொஞ்சம் மிச்சம் வை...கேலி பேசிய காவேரியை....எங்க அம்மாவே தான் நீ என்ற அவளை பாராட்டினார்... இன்றைய correspondence...

*******முற்றும்*****





100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...