சித்தனாகிறான்


வாழ்நாளில்

என்றோ ஓர்

சித்தர் சமாதி

என்றே பெயர்

பொறித்த கோவிலை

பார்த்து விட்டு

வந்த ஓரே காரணமாக

வீட்டிற்கு வந்தது முதல்

அடிக்கடி விட்டத்தை

வெறித்து பார்த்து விட்டு

ஆகாயத்தில் சித்தர்

உலவுவுகிறார் என்தாய்

பரிபாஷையில் பிதற்றினான்

உன்மத்தம் பிடித்தவன் போல்

உத்தமாக நடைஉடை பாவனை...

சித்தன் தன்நிலையை

யாரிடமும் வெளிப்படுத்தாமல்

எழுதி வைத்த பரிபாடல்

படிக்க நேரமில்லா மக்கள்...

சென்ற மாதம் சதுரகிரி

சென்று வந்து நேற்று முதல்

ஆன்மீகத்தில் திளைத்த

சித்தரின் மொழியாம்

"உலகமே மாயை" 

யாருக்கும் புரியும்...

சித்தன் தன்னை

யாருக்கும் காட்டுவதில்லை...

உணர வைப்பவனே..

அந்த தில்லை வாழ்

சித்தன்...

உணர்ந்தவன்

தன்னுள்ளே 

பித்தனாகிறான்...

உணராதவன் பிறர்

கண்ணுக்கு மட்டும்

சித்தனாகிறான்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...