வரிச்சலுகை

 நண்பர்களே...

சில நிமிடங்களுக்கு யோசித்து பாருங்கள்...

டிரைவர் வேலைக்கு வருபவர்கள் யாரும் கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி விட்டு வருவதில்லை...

பலர் தங்களின் குடும்பசூழல் நிலை மற்றும் தவிர்க்க இயலாத சில பொருளாதார நெருக்கடியின் 

காரணமாகவே டிரைவிங் வேலைக்கு வருகின்றனர்... அப்படி வருபவர்கள் அனைவரும் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். பல ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவரும் கூட மலிவு கார் ஆட்டோவில் செல்ல செல்ல ஆசைப்படுகின்றனர்......அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் அதனால்

குறைந்தபட்ச வாடகைக்கு வண்டி ஓட்டுவதால் ஏற்பட போகும் பொருளாதார சிக்கலை உணர்ந்து பாருங்கள்...

5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள கடைகளுக்கு வரிச்சலுகை கொடுத்தது போல....

வருடத்திற்கு 1000 km குறைவாக வண்டி ஒட்டியிருந்தால் அதில் சலுகை கொடுங்கள்....

ஆட்டோ, கார், வேன் மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஓவ்வொரு வருடமும் FC என்று தன் வருமானத்தில் பெரும்பகுதி செலவு செய்கின்றனர்... அவர்களின் கஷ்டத்தை உணருங்கள்...

பல ஆயிரம் சம்பளம் எதிர்பார்க்கும் நாம் வண்டி ஓட்டுபவருக்கு சில ஆயிரம் பயணக்கூலி கொடுப்பதை குறைக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்...


சீக்கிரம் நல்ல சேதி சொல்லுறேன்

அப்பா அம்மாவிடம்

கேட்டார் இன்னுமா

சமையல் ஆகவில்லை...

இந்தா சீக்கிரமே ஆகிவிடும்....

அம்மாவின் பதிலில் சுவாரசியமில்லை..

எப்போ தம்பி வேலைக்கு 

போக போறீங்க... பக்கத்து 

வீட்டுக்காரரின் அக்கறை கேள்வி....

அவன் பேங்க் பரீட்சை எழுதி இருக்கான்

முடிவு தெரிந்தவுடன் சீக்கிரம்

வேலைக்கு போய்விடுவான்....

அப்பாவின் பதில் தயக்கத்துடன்...

என்னம்மா கல்யாணமாகி ஐந்து வருடமாச்சு ஏதும் விஷயம் உண்டா..க

கைக்குழந்தையுடன் கேலிகலந்ந 

நையாண்டியில் பெரியம்மாவின்

கடைக்குட்டி மகளுக்கு ..........

அசட்டு புன்னகையில் அக்கா சொன்னாள்..... 

எல்லாம் விதிப்படி தானே

நடக்கும்.......

இத்தனையும் கேட்டு பழகிய

காரணத்தால். சீக்கிரம் சொல்வேன்...

என்று மலுப்பலாக பேசும் நண்பனின்

பதில் எனக்கு புதிதாக 

தோன்றவில்லை......

இது எதிர்பார்த்த ஒன்றுதான்...

ஆட்டுவிப்பவனுக்கு தானே

அனைத்தும் தெரியும்...

சூழலும் பம்பரம் தான் மனித வாழ்க்கை...

சுற்றும் வரை தான் அதற்கு மரியாதை...

புரிந்து கொண்டதால் அமைதியாக...

யோசித்து பார்க்கிறேன்.... அனைவருக்கும் அவசரம்.... அவர்களின்

மனதில் விதைக்கிறேன் வார்த்தை...

சீக்கிரம் நல்ல சேதி சொல்லுறேன்.....


கார்த்திகை தீபம்

 எத்தனை இடைஞ்சல்கள், கவலைகள் அத்தனையும் மறக்கவும், தன்னை வெறுத்து ஒதுக்கிய உறவுகளையும் பண்புகளையும் யாரிடமும் குறை சொல்ல நினையாமல்.

மனதின் சஞ்சலத்தை போக்க வேண்டி, தேடி அலைந்தேன் "குரு"...

ஏன்ப்பா, இவ்வளவு கஷ்டத்திலும் உன்னால் சிரிக்க முடியுது.. கேட்கும் மனிதருக்கு எல்லாம் புன்னகை பதிலாக கொடுத்து விட்டு.

மனதிற்குள் மருகினேன், தொல்லை தரும் வாழ்க்கை வேண்டாம்.மனிதப்பிறவியில் தான் வார்த்தையில் சொல்ல முடியா, சிக்கல்கள் ஏராளம்.

திக்கு தெரியாமல் அலைந்தவனுக்கு குருவாய் வந்தான்/ள்..(அண்ணாமலை, உண்ணாமுலை)..

ஓர் முறை திருவண்ணாமலை போய் விட்டு வா.நல்லதே நடக்கும்...

அடிக்கடி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்"நல்லதே நடக்க வேண்டி, திருவண்ணாமலை வந்தேன்..வந்த பின்னர் தான் தெரிகிறது.என்னைவிட அதிகம் பேர் இருக்கிறார்கள்...

பணத்திற்காக, பதவிக்காக, மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, பங்குதாரர்களால் ஏமாற்றப்பட்ட பின்பும்.. "அவன் நல்லவன் தான், ஏன் இப்படி செய்தார்.அது தான் தெரியணும்"...

இன்னும் பல தேடல்கள், இந்த மலையை சுற்றி அலைபவர்கள் ஏராளம்...

எப்படியாவது ஓர் நல்ல நிலைமைக்கு வர வேண்டி, துடிப்பவர்கள் ஆயிரம்...

அவனோ கண்களை மூடி தியானத்தில் இருக்கிறான்...

உலகத்தை படைத்தவனே, தன் பொறுப்புக்களை மனைவியின் வசம் கொடுத்து விட்ட பின்னர்..

அவளும் என்ன சளைத்தவளா??, தன் கணவனுக்காக அவனருகே அமர்ந்து விட்டவள்.

 தன் கணவனை தவிர உலகில் உயர்ந்தது ஏதுமில்லை என்பதை தனது செயல்களால் காட்டுபவள்....

எல்லாம் எனக்கு தெரியும், என்ற இறுமாப்பு உடைந்து விட்டது.

ரமணரும், சேஷாத்திரி மும், விசிறி சாமியாரும் பல பல ஜாம்பவான்கள் சுற்றிய மலையை நானும் சுற்றுகிறேன்...

அவர்கள் எல்லையில்லா இறைவனை தேடினார்கள், நானோ அற்பன் மனிதரில் மானுடம் தேடுகிறேன்..சொந்த பந்தகளுக்காக, நட்புக்காக, என்னையே நம்பி, எனது கம்பெனி தவிர வேறு ஏதும் தெரியாத எனது தொழிலாளர்களுக்குக்காக... மனமுருகி வேண்டுகிறேன்.... கம்பெனியின் பொருளாதாரம் மீள வேண்டும்...

வியாபாரத்தின் மீது கொண்ட அதீத காதலால், இன்று வங்கி மேலாளர்கள் தினமும் அழைத்து பேசும் போது.. மனம் பதறுகிறது...

ஆசையே துன்பத்திற்கு காரணம்...இனி மிகவும் கவனமாக நடக்க வேண்டும்..

என்னையே நம்பி வாழும் சில தொழிலாளர் குடும்பங்கள்.. என் பசியை விட, அவர்களின் எதிர்காலம் பற்றி பதறுகிறது......

அண்ணாமலையானே, உன்னை நம்பி இத்தனை பேர்.. அவர்களின் கோரிக்கை நான் அறியேன்...

அடுத்த முறை வரும் போது, பல கோடி லாபம் கிடைத்தால் கூட, இன்று வாழும் எளிமையான வாழ்க்கை வாழவே நினைக்கிறேன்... ஆடம்பரம் வாழ்க்கை வேண்டவே வேண்டாம்...


ஏதோ தேடி வந்தவனுக்கு புரியாத விஷயம் பல உண்டு என்று உணர வைத்தான், இந்த ..... அத்தனையும்  உன் செயலே...

கொக்கு என்று நினைத்தாயோ

 கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

.

கானகத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோகப் பயிற்சிகளில் கொங்கண சித்தர் ஈடுபட்டபோது மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. அது 

கொங்கண சித்தர் மீது படவே, அவர் கோபத்தில் மரத்தில் இருந்த கொக்கை முறைத்துப் பார்க்க அந்தப் பார்வையின் வெம்மை தாளாமல் கொக்கு பொசுங்கிச் சாம்பலானது.

இறைவனின் ஆசை தனது அடியாரை அடிக்கடி பட்டை தீட்டுவது.. ஆம் தன் பக்தரின் ஆணவம் தலை தூக்கும் போது எல்லாம் அவரை விட சிறந்தவரை காட்டுவது அவன் செயல்..


ஓர் நாள்  பிச்சைக்காக கிராமத்திற்கு சென்று ஓர்  வீட்டில் பிச்சை கேட்டார். 


அது மதியவேளை கடையில் இருந்து வந்த கணவனுக்கு உணவு பரிமாறிக் கொள்ளும் தருணத்தில்.. வீட்டு வாசலில் யாசகம் கேட்டவரை கவனிக்கவில்லை...

.

வீட்டு திண்ணையில் அமர்ந்தார்...

.

.தனது தவ வலிமையை காட்டினால் தான் மக்கள் பயப்படுவார்கள்...


சற்று நேரம் கழித்து வந்து உணவிட்டாள்...

அவளை கோபமாக பார்த்தார், கொங்கணவர்...

அவளோ சிரித்து கொண்டே சொன்னாள்... நான் கொக்கு என்று நினைத்தாயோ...கொங்கணவா...

 இவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்.. குழப்பத்தில் ஆழ்ந்தார்.. அம்மா எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது... பதில் சொல்ல முடியுமா கேட்டார்...

.

ஜயா,  எனக்கு சில வேலை இருக்கு..உங்களை மாதிரி நான் ஒண்ணும் வேலை வெட்டி இல்லாமல் இல்லை.என்றாள்...

.

அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது...

.

உங்கள் குழப்பத்தை தீர்க்க ஒருவரால் தான் முடியும் என்று ஓர் ஊரில் வாழும் ஒருவன் பெயரை சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றாள்....

எங்கோ கானகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்திருக்கிறாளே என்று கொங்கணர் அதிர்ச்சியுற்றதோடு அந்தப்பெண்ணை வணங்கினார். .

ஆண்டவா, என் ஆணவம் அழிந்தது.ஆயினும் மனதில் உள்ள கேள்விக்கு பதில் வேணுமே....

.

.

மனிதனின் மனம் எதையும் எப்போதும் தவறாகக் சிந்தித்து குழப்பம் கொள்ளும்...இந்த அம்மா, ஏன் அவன் பெயரை சொல்கிறார்..


ஓரு வேளை இவரது சொந்தமா? நட்பா?

யோசித்தவாறே அந்த ஊரை சென்று அடைந்தார்....

.

. அந்த மனிதரின் பெயரை சொல்லி கேட்டார் சிலர் இவரை ஏறஇறங்க பார்த்தனர்...

இந்த சாமியாருக்கும் கசாப்புக்காரனுக்கும் என்ன சம்பந்தம்....

.

சிலர் கேள்வியாக கேட்டு விட்டனர்... அப்போது நினைத்தார் ஓரு வேளை இப்படித்தானே அந்த அம்மாவும் இருப்பாங்க...

.

அவங்களை தவறாக நினைத்தோம்.. இப்போது இவங்க என்னை தவறாக நினைக்கிறார்கள்... இறைவனின் கணக்கு சரியாக அமைகிறது..

.

ஓரு வழியாக அவனின் இடத்தை அடைந்தார்...

அவனோ, இவரை சட்டை செய்யவில்லை...

.

.

ஏதோ சொல்ல வந்தவரை, பெயர் சொல்லி அழைத்தான்..

.

என் வேலையை முடித்து விட்டு தான் பேச முடியும்..அதுவரை இந்த கட்டையில் அமருங்கள்..கறி வெட்டும் பலகையை தூக்கி கொடுத்தான்..

.

.

அவருக்கோ சங்கடமாக இருந்தது.. குளித்து சிவ சின்னங்கள் அணிந்து சுத்தமான ஆடை உடுத்தி இருக்கும் நான் எப்படி.. இங்கே அமர முடியும்.

.

சுற்றிலும் பார்த்தால் இறைச்சி வெட்டிய கழிவுகள்.. அதற்காக சண்டை போடும் தெரு நாய்கள்... ஒருவேளை நம்மை கடித்து விட்டால்... அசுத்தமான இடத்தில் எப்படி அமருவது எண்ணியபடி இருந்தவரை....நிலைகுலைய வைத்தது.. அவனின் அடுத்த பதில்...

.

.

.

கொங்கணரே, உமது சிந்தனையை விட, இந்த இடம் தூய்மையானது தான்..

.

.

வேறு வழியின்றி அங்கே அமர்ந்தார்.இவன் சொல்லுவது எத்தனை சரியான பேச்சு...

உதட்டிலும் உடலிலும் இறைவனின் அடையாளங்கள், ஆனால் சிந்தனையோ மிகவும் தவறாக...

.

.

தனது வேலையை முடித்து வந்தவன்.. அந்த அம்மாவே பதில் சொல்லி இருக்கலாம்.. எதுக்காக என்னிடம் அனுப்பினாங்களோ....

.

.

சில வார்த்தைகள் சொன்னான்.அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

.

.

ஐயா, நானே குழப்பத்தில் உள்ளேன். உங்களின் பேச்சு எனக்கு ஆச்சரியமாக உள்ளது.. நான் இல்லறம் துறந்து பல வருடங்களுக்கு தவம் செய்தேன்.. அப்போது ஓர் கொக்கு தலையில் எச்சமிட்டது.. கோபமாக பார்த்தவுடன் அது எறிந்து போனது....

.

.

உங்களை பார்த்தால் பெரிய தவசீலர் போல இல்லை.ஆனால் எப்படி இந்த சித்துக்கள் உங்களுக்கு வந்தது...

.

.

அவன் அமைதியாக சிரித்தான்...

காடுகளில் சென்று தவமிருப்பது...கடவுளை காண அல்ல..தன்னை அறியவே.... ஏனென்றால் தன்னையறிவதே சிறந்தது...

தியானம், யோகம், மூச்சு பயிற்சி என்பது போன்ற பல வழிகள் சித்த சுத்தி ஏற்படுத்தி தன்னை அறிய ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் மட்டுமே....

.

இவற்றில் ஒன்று கூட தெரியாமல், தனது கடமையை செய்பவருக்கும் சித்த சுத்தி ஏற்படும்..

.

.

என்றுமே குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டு.. ஆயினும் தனக்கு வழிகாட்டிய மனிதரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது நமது குரு பரம்பரை...

குரு என்பவர் சிஷ்யனின் பக்குவத்தை பார்ப்பவர்... அவனின் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்ல...

.

மனிதருக்கு சில கடமைகள் உண்டு.அதை சரியாக செய்பவரை நாளும் கோளும் என்று இடைஞ்சல் செய்யாது...

.

.

அவற்றில் சில தனது தாய் தந்தை பேணுவது.

கணவனுக்கு உதவியாக இல்லற தர்மத்தின் படி வாழ்வது...

மனைவிக்கு உண்மையாக நடப்பது...

குழந்தைகளின் தேவைக்கு தனது தேவைகளை தியாகம் செய்வது...

விருந்தினரை பேணுவது...

எனவேதான் துறவறத்தை விட இல்லறம் சிறந்தது...என்றான்....

.

.

படவிமர்சனம்


படம் வெளியாகும்
முன்னர் அப்படி
இப்படி என்றனர்..
வெளிவந்தவுடன்
உலகிலேயே
சிறந்த படம் இது
என்றே கோஷமிடுவர்....
முதல் ஷோ வசூல்
பல கோடி என்பர்
சில வாரத்தில்
முதலுக்கு மோசமில்லை
என்றே கதையெழுதுவர்
அடுத்த சில மாதங்களில்
படமெடுத்து கற்றுக்கொண்டேன்
என்ற விரக்தியாக
பேசி காலம் கடத்துவர்
ஆறுமாதம் கழித்து
அந்த படத்தால்
எனக்கு பல கோடி
நஷ்டமென்பார்....
நஷ்டமென்றால்
எதற்காக படத்தொழிலில்
மூதலீடு செய்கிறார்
என்று யாரும் அவரிடம்
கேட்பதில்லை மக்களுக்கு
நன்றாகவே தெரியும்...
திரையின் நடிப்பை
மட்டுமே ரசிக்கும்
சில ரசிகர்கள் எமது
தமிழ் மக்கள்

உன்னத மகிழ்ச்சி

வேண்டாம் என்றே

விலகி ஓடுபவனை

பிடித்து மேடையில்

அமர வைத்து

தலையில் கிரீடம்

சூட்டி மகிழ்ந்துவிட 

உங்களுக்கு ஏன் இந்த

அவசரம்... மலர் மாலை

வேண்டி வரிசையில்

பல பேர்.... காத்திருக்க....

என்னை மேடைக்கு

அழைப்பது ஏன்...

நீங்கள் காட்டும்

பாதையை விட...

நான் நடைபழகிய

பாதை போதும்...

அதில் முட்களும் இல்லை...

மலர்களும் இல்லை.. ஆனால்

அதில் தான் எத்தனை எத்தனையோ

ஆனந்தம்... செயற்கை வேண்டாம்...

இயற்கை போதும் அதுவே என்

உன்னத மகிழ்ச்சி


பாசக்கயிறு

 பாசக்கயிறு...

.

.


அரசு இயல்

துறந்த அன்று

கிடைத்த பெயர்

புத்தர்....இன்றோ

இமயமலையின்

சாரலையும் பனிகளையும்

ரசிக்க முடியாமல்

பணிசுமை கொடுத்து

கூண்டில் அடைக்க நினைக்கும்

முதன்முறையாக 

பார்வையில் படும்

யார் யாரோ புதிய மனிதர்கள்...

உடன் இருப்பவர்களையும்

சகிக்க முடியாமல்

தவிக்கும் தவிப்பில்

மீண்டும் சென்று

விட துடிக்கிறேன்

அந்த கங்கைகரை

நதியோரம் அமைதியான

ஆள்அரவரமற்ற

ஏகாந்தம் தேடி...

பதவியும் பட்டமும்

சுகமல்ல...

தலைவனாக என்று

சொல்லி என்னை நெறிக்க

துடிக்கின்ற

பாசக்கயிறு...

ஆனந்தம் ஆன்மீகம்...

அரசியல் ஆர்பாட்டம்...

திசை நோக்கியே

 கடல் அளவுபாசத்தை 

வைத்து கொண்டு

பணத்தை தேடுகிறான்...

பணத்தை மூட்டையாக

வைத்து இருப்பவன்

உண்மையான உறவுகளை

தேடுகிறான்... இரண்டு

உலகில் இருந்தால்

ஏனோ வெவ்வேறு

திசை நோக்கியே....


மனித இயல்பு


கஷ்டமான 

நேரத்தில் 

சந்தோஷத்தை 

நினைப்பது 

மனித இயல்பு..

மரகதப்புறா

 தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று இந்த மரகதப்புறா..

ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டை மீட்டு எடுக்கும் இளைய சமுதாய மக்களே.இந்த மரகதப்புறா என்னும் வகை புறா பாதுகாக்க முயற்சி செய்தால் மிக்க மகிழ்ச்சி....

ஏனென்றால் இளைய தலைமுறை ஏற்று செய்யும் காரியங்கள் தனது அடுத்த தலைமுறைக்கு மிகவும் பயன்படும்..

கடல் ஏரிப்பு

பனைமரங்களை கரை ஓரங்களில் நடுவது மட்டுமே நல்ல தீர்வு..

பனை சல்லிவேர் வகை சார்ந்த மரம். எனவே ஆயிரக்கணக்கில் பனைமரங்களை நடுவதே சாலங் சிறந்தது.. மேலும் அவை புயல் காற்றின் வேகத்தை குறைக்க உதவும்.இதனால் புயலால் ஊருக்குள் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்

கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் நடுவது தான் நல்ல தீர்வு. உயர்ந்த பனைமரங்கள் வேகத்தடை போல் செயல்பட்டு காற்றின் வேகத்தை குறைக்கும்...

கோவிலும் அது சார்ந்த பொருளாதாரமும்

 கிராமங்களில் மிகப்பெரிய சொத்து என்பது கோவில்களே.

கோவிலில் இறைவனின் பெயரால் மாதம் ஓர் முறை அபிஷேகம் ஆராதனை நிகழ்கிறது.

ஓர் கிராமத்தில் சிவன் கோவில் இருப்பதால் மாதமிருமுறை பிரதோஷம் நடைபெறுகிறது.

அப்போது நந்திக்கு அபிஷேக பொருட்கள் என்று அரிசிமாவு, மஞ்சள், திரவிய பொடிகளும் மற்றும் மலர் மாலைகளும் சூடம் பத்தி என்ற பொருட்களும் வியாபாரம் செய்யப்படுகிறது.

பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத விஷேச நிகழ்கிறது.

இது தவிர வெளியூர் மக்கள் அந்த ஊருக்கு வந்து செல்வதால் பொருளாதார சூழ்ச்சி நடைபெறுகிறது.

அதாவது பணத்தை செலவழிப்பதால் உண்டாகும் சூழற்சி.

பகுத்தறிவு என்னும் பெயரால் கோவில் மீது ஏனோ வெறுப்பு உண்டியல் உணர்வைமீது சிலர் ஏற்படுத்த முயன்றனர்.ஆயினும் பல கோவில்கள் கட்டப்பட்டன.இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

இந்து மதத்தின் ஓவ்வொரு நிகழ்வும் அறிவியலோடு சேர்ந்த ஆன்மீகம். சாதாரண மக்களிடம் பிள்ளையாருக்கு உக்கி போட்டால் நல்லது தருவார் என்று தான் பொதுவாக சொல்ல முடியும்.

இப்படி செய்வதால் உங்களின் மூளை நரம்புகள் வலுப்பெறும், மூளை சார்ந்த நோய் வராது, தேவையற்ற படபடப்பு குறையும் என்று எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.

ஏனென்றால் இந்து மதத்தின் ஓவ்வொரு நடைமுறைக்கு பின்னாலும் பல அறிவியல் மூடிச்சுக்கள் உண்டு.

அரசமர காற்றும் வாழையின் பலனும் வார்த்தைகளில் சொல்வதானால் பலருக்கும் எரிச்சல் தான் வரும்.

எனவே தான் வெள்ளி கிழமை துர்க்கை, சனிக்கிழமை ஈஸ்வரன், செவ்வாய் கிழமை முருகன், சதுர்த்தி விநாயகர் என்று வகுத்து வைத்தனர்.

வருடத்திற்கு ஓர் முறை தேர் திருவிழா என்ற பெயரிலும் மாபெரும் விழா கோலம் கண்டு ஊரில் வியாபாரம் செழிக்கிறது...

கோவிலுக்கு 



நவகைலாயம்


வரிசை                ஊர் பெயர்                       தெய்வம் பெயர்                    கிரக தத்துவம்


1                            பாபநாசம்                         பாபநாசநாதர்                         சூரியன்


2                            சேரன்மாதேவி            கைலாசநாதர்                        சந்திரன்


3                            கோடகநல்லூர்           கைலாசநாதர்                       செவ்வாய்.


4                           குன்னத்தூர்                    கோத பரமேசுவரர்             இராகு


5                           முறப்பநாடு                    கைலாசநாதர்                       குரு


6                           திருவைகுண்டம்          கைலாசநாதர்                      சனி


7                           தென்திருப்பேரை           கைலாசநாதர்                    புதன்


8                           ராஜபதி                                கைலாசநாதர்                   கேது


9                           சேர்ந்த பூமங்கலம்            கைலாசநாதர்                  சுக்கிரன்



எங்கள் தேனாலிராமன் வலைப்பதிவைப் பார்வையிட்டதற்கு நன்றி. எங்கள் தேனாலிராமன் வலைப்பதிவில் கவிதை கதைகள் போன்ற பிற தலைப்புகளைப் படிக்கவும்



தேடல்

சிலருக்கு

பணத்தின் தேடல்...

சிலருக்கு

பதவி தேடல்....

சிலருக்கு

பாசத்தின் தேடல்...

சிலருக்கு

பசியின் விளைவால் தேடல்....

சிலருக்கு

ஆரோக்கிய தேடல்...

சிலருக்கு

ஆன்மிக தேடல்....

சிலருக்கு உண்மையான

உறவினர்களின் தேடல்....

சிலருக்கு

நட்பின் தேடல்....

சிலருக்கு

சொத்துக்களின் மீது தேடல்.....

சிலருக்கு 

சொந்த தேடல்....

சிலருக்கு

சொந்தங்களே தேடல்....

தேடல் என்னும் தேடலே

இன்றி பலர் சுயதேவைக்கு

இயந்திரமாய் வாழ்வது 

கண்டு சிலருக்கு

மனிதனுக்குள் புதைந்து போன

மனிதாபிமானத்தின் தேடல்...



உலகில் உண்டு

 உலகில் உண்டு..




தவறே

செய்யாத

மனிதன்

உலகில் இல்லை...

ஆனால்

செய்த தவறை

மறைக்காமல்

வாழும்

தைரியம் 

ஓரு சிலருக்ககே

உலகில் உண்டு

கவலை

பிள்ளைகளை

பற்றி எப்போதும்

பெற்றவருக்கு கவலை...

பெற்றவரை நினைத்து

பிள்ளைகளுக்கு கவலை...

அனைவருக்கும் மீண்டும்

குழந்தையாய் மாறி

குதூகலிக்க ஆசை... 

ஆனாலும் யதார்த்தம்

ஆசைப்பட கூட 

நேரமின்றி இயந்திரத்துடன்

இயந்திர மாய் போட்டி

போட்டு மறந்து போகிறது

வெளியே சொன்ன

முடியாத பலரின் கவலை...

பணம்

 யாரிடமும்

கோபமாக

பேசிவீடாதீர்கள்...

உறவுகள் முறிந்து விடும்..

இறைவன் படைத்த எல்லா

உயிரிகளுக்கும் சுதந்திரமாக

கோபப்பட உரிமையுண்டு...

மனிதன் மாத்திரமே அதில்

விதிவிலக்கு ஏனென்றால்

மனிதனிடம் மட்டும் தான்

இருக்கிறது அவன் படைத்த

பணம்

வெற்றி

 ஒருவனே 

பத்து தோசை

சாப்பிடும் போட்டியை

மனிதன் நடத்துகிறான்..

இறைவனோ பத்து

பேருக்கு பகிர்ந்து

உண்ணச் சொல்கிறான்

இருவருக்குமான

போட்டியில் யாருக்கு

வெற்றி...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...