தடுங்கோள் மனத்தை விடுங்கோள் - கந்தர் அலங்காரம்



தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடுங் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே.



மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடைசெய்யுங்கள்; கோபத்தை அறவே விட்டுவிடுங்கள்; எப்போதும் ஏழைகளுக்குத் தானம் கொடுத்துக் கொண்டிருங்கள்; இருந்தபடியே அசைவற்றுப் பேசாமல் இருங்கள். இவ்வாறு செய்வீர்களானால் ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்ச மலையையும் பிளந்து துகள்பட்டு அழியும்படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப் பெருந்தலைவராகிய திருமுருகப்பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு உங்களை ஆட்கொள்ளும்.

களிமண்

 களிமண்

குயவன் கையில் மண்பானை.. குழந்தை கையில்  பொம்மை

விவசாயின் கையில் பொன் விளையும் பூமி

குடிகாரன் கையில் கிடைத்தால், குடிபோதையில் அறிவிழந்து தனக்கு நல்ல வாழ்க்கை அமையாதது சமூகத்தின் தவறு என்று பிதற்றுவான்...


அப்படியே புலம்பினாலும் பரவாயில்லை யாருக்கும் எந்த கெடுதலும் இருக்காது... ஆனால் ஓர் வயதான ஏழை கிழவன் பொம்மை செய்து விற்பதற்காக கஷ்டப்பட்டு தேடிக் கொண்டு வந்த களிமண்ணை எடுத்து வீதியில் விரைந்து செல்லும் வாகனத்தின் மீதே வீசுகிறான்... சரியான 

களிமண் என் கையை அசிங்கம் பண்ணிடுச்சு என்றே போதையில் புலம்புகிறான்

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...