என்றுமே அழகு....


ஓவியங்களில்
அழகு....வண்ணத்தால்
மிளிர்கின்றது
அதனை படைத்தவரின்
கைவண்ணத்தில்
படைப்புகள் பல...
எல்லாமும் சிறப்பு
என்று பொய் சொல்ல
மனது வரவில்லை...
ஏனென்றால்
எனக்கு ஓவியத்தை
ரசிக்க கூட தெரியாமல்
விழிக்கின்றேன்...
என்னருகில் அவள் வந்து
ஓவ்வொரு படைப்பையும்
விளக்கிச்சொன்னாள்....
பன்னிரெண்டு கலர்தாண்டி
எத்தனையோ விஷயங்கள்
அதில் பொதிந்து கிடந்தது....
உனக்கு எதை பிடித்தது
கேட்டாள்..... வெட்கம்
பிடுங்கி தின்றது...
கையில் ஏதோ கோப்பையுடன்
ஒவ்வொன்றையும்
ரசிக்கும் மனிதர் போல்
என்னால் ரசிக்க முடியவில்லை
என்பதே யதார்த்தம்...
தனியாக பேச வேண்டும்...
தனிமையில் வந்தாள்...
இப்போ சொல்லு "எது சூப்பர்"...
நீ கூப்பிட்டதால் வந்தேன்...
அந்த வாசல் அருகே இருக்கும்
படைப்பு தான் நல்லா இருக்கு.. என்றேன்...
எதனால் அப்படி வினவினாள்....
முதன்முதலில் அதை தானே பார்த்தேன்
ஏதோ வித்தியாசமாக இருந்தது
உள்ளே வந்தால் அனைத்தும்
ஓரே மாதிரி இருக்கு... சொல்லிவிட்டு
எதாவது தப்பா இருந்தால் மன்னித்து விடு...
எனக்கு உன்னை போல ரசிக்க தெரியாது..
ஏனோ பொய் சொல்லி உன்னை சிரிக்க வைக்க எனக்கு தெரியாது..
உண்மையான உருவம் தெரிந்தாலும் உன்னால் சிரித்து பேச முடியும்...
எனக்கு அப்படி கூட பேசத்தெரியவில்லை.....
சில நொடி இருவருக்கும் இடையே மெளனம்...
அருகே நெருங்கி வந்தவளின் பெர்ஃப்யூம்...
வாசனை ஆளை மயங்கியது சட்டென இறுக்கி அணைத்து முத்தமிட்டாள், கட்டியணைத்தபடி..
பல வருடங்களுக்கு பழகியவள்
முதன்முறையாக கொடுத்த இன்ப அதிர்ச்சி....
மீளமுடியாமல்... மிரட்சியுடன் இன்பத்தை
தாங்க முடியாமல் வியர்த்து கொட்டியது..
வெளியே ஆட்கள் என்றவனின் உதட்டை விரல்களால் கைது செய்தாள்... இங்கே யாரும் வர மாட்டாங்க...வேறு ஏதாவது சொல்ல இருக்குதா உங்ககிட்ட...இல்லை என்பதுபோல
சைகை செய்தேன்... உங்களுக்கு உண்மை
தெரியவில்லை அதான் இப்படி பேசுறீங்க...
இங்கே வந்தவர்களில் பாதிக்கு மேல்...
சொல்ல தொடங்கியவள் பேச்சை
நிறுத்தினாள்...விம்மி விம்மி பேச முடியாமல் தவித்தவளின் கண்ணீர் துளிகள் எனது மார்ப்பில் எதோ சொல்வது போல இருந்தது....
இப்போது சொல்லவா எது அழகு...
"ம்ம்ம் சொல்லுங்க"... தலைசாய்த்து முகம் பார்த்து கண்ணீர் விழிதாண்டி புன்னகைத்தாள்....
காதோர முடியை  வருடிவிட்டு சொன்னேன்...
மறுகையால் அவளின் துப்பட்டாவை அளந்து
உன் சுடிதார் கலர் மட்டுமே மிகவும் அழகு...
என் நாடியை உதடுகளால் வருடியபடி கேட்டாள்
முதுகில் விரல்களால் கோலமிட்டாள்..
இப்போது சொல்லுங்கள்....
"உன் சுடிதார் கலர் மட்டுமே மிகவும் அழகு"...
வெகுமதியாக மேலும் இறுக்கமாக கட்டினாள்..
ஊருக்கு பெரிய மனுஷியாக காட்டிக் கொண்டாலும் குழந்தையின் ஏக்கம்...
உண்மையை மட்டுமே தேடும் குணம்
அத்தனையும் மேலாக மனதில் அடக்கி வைத்த.
அவளின் அன்பு தான் என்றுமே அழகு....

இல்லறத்தில் உண்மை

சில வரிகள்
.

உலகம் என்றுமே வழக்கமாக தனது பாணியில் இயங்கி கொண்டு தான் இருக்கிறது...
வாழ்க்கையும் கூட ஒரு வகையில் படம் பார்ப்பது போலத்தான்...
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பவே உலகம் காட்சிப்படுகிறது....
ஓருவர் பணக்காரன் வேஷத்தில் இருப்பதாலும்..
அவர் பணக்காரன் என வேறு ஓர் மனிதர் சொல்லுவதாலும்...
அவரை பணக்காரன் என்று நம்பி பழகும் பல நபர்கள்....என்றாவது நமக்கு நல்லது செய்வார் என்று....
பழகும் நபர்களுக்கு தனது பொருளாதார நிலை தெரிந்தால் பயந்தபடி பணக்கார வேஷம் தொடர்கிறார்....
பேங்க் சென்று கடன் கேட்டு அலைந்தாலும், நண்பர்களிடம் டெப்பாசிட் பண்ண போனதாக சொல்லி பெருமை தேடுகிறார்...
.
.
வீட்டில் மனைவி நம்ம கையில் காசு இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லுங்க அப்போதுதான் உண்மையான நண்பர்கள் கிடைப்பாங்க...
ஏனோ அவளின் சொல்லில் இருக்கும் நியாயம் பிடிக்காமல் போலியாகவே கூட்டம் சேர்த்து பழகியவர்.. மாறுவதில்லை..
.
.
.
பணம் என்னும் காகிதம் போலியான உறவுகளை தான் காட்டும்..அன்பு மட்டுமே உண்மையான உறவு சொல்லும்.
.
எத்தனையோ வசதிகள் இருந்தாலும் மனதின் நிம்மதி மிகவும் அவசியம்..
.
.
யாரோ ஒருவர் என்னை நீங்கள் சாமியார் போல பெரிய பக்திமான் என்பதால் நான் சாமியாராக மாற முடியாது.
போலியாக வேஷம் போடலாம்...
ஆனால் அதை உலகம் ஏற்றுக் கொள்ளும்....
உண்மையில் என்னை நானே ஏமாற்றுகிறேன், என்பதே நிதர்சனமான உண்மை.
.
சின்னஞ்சிறு ஆசைகள் கூட இல்லாமல் பிறர் நலனுக்காக வாழ்வது தான் சாமியார் இலக்கணம்.
.
இறைவனின் பெயரை சொல்லி பல ஏக்கர் வளைத்துப் போட்டு பலமாடிகளுக்கு கட்டிடங்கள் கட்டி. ஏதோ இறைவன் தான் மட்டுமே கண்டுவிட்டதாகவும்.
.
அறியாமையின் பிடியில் மக்கள் கஷ்டப்படுவதாகவும் மைக் பிடித்து பேசும் போலிகள் கண்டு ஏமாறும் கூட்டம்...
.
.
ஓவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்பே...
இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் எவருமே இல்லை....இதை சொல்பவர் சிலரே...அவர்களை நான் வணங்குகிறேன்.
"எந்தரு மகாணுபவரோ..அந்தரிக்கு நமஸ்காரம்"
.
.
.
தியானம் யோகம் சொல்லி தருகிறேன் பேர் வழி என்று அனைவர் கையிலும் தனது முத்திரை மோதிரத்தை பதிப்பது எப்படி...
.
.
.
.
.
.
.
துறவறத்தை விட இல்லறமே சிறந்தது...
.
.
உன்னில் உன்னை தேடு என்பதே ஆன்மீகம்
அமிர்தானந்தமயி என்னும் துறவியை நான் மிகவும் மதிக்கிறேன்..
.
.
என்னுள்ளே என்னை தேடச் செய்த குரு அவர்...
ஏனென்றால் அவர் அனைவரையும் கடவுளின் குழந்தை என்கிறார்... யாரையும் சோதிப்பதில்லை.
.
.

நீங்கள் என்னை மதிப்பது உண்மை என்றால் அது உங்களின் மந்திரத்தையோ இறைவனின் நாமாவளியோ மீண்டும் மீண்டும் உச்சரிப்பது தான்..
"அதுவே இந்த அம்மா உங்களிடம் கேட்கிறேன்".
எத்தனை அற்புதமான பேச்சு.....
உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்...
.
முதலில் உங்களுக்கே நீங்கள் பதில் சொல்லுங்கள்... உண்மையாக இருங்கள்...
இறைவனின் முன் போலித்தனம் எடுபடாது...

மகராசன்.

தருதலை பயலே...உன்னை படிக்க வச்சதுக்கு..எருமை மாடு வாங்கி இருந்தா கூட நல்ல பிரயோஜனம் கிடைச்சு இருக்கும்.
.
.
என் சொத்தை அழிக்கணும் அப்படின்னு பிரம்மா உன் தலையில் எழுதி இருககான் போல...
.
சனியனே போ நாயே... போய் தெருத்தெருவா பிச்சையெடு.. அப்போ தான் பணத்தோட அருமை தெரியும்...
உன்னை வைச்சு தண்ட சோறு போடுறா பாரு உன் ஆத்தகாரி..
.
.
.
படித்து முடித்த எல்லாருக்கும் வேலை கிடைத்து விட்ட மாதிரி பேசிய அப்பா...
அவருக்கு எப்படி என் வேதனை தெரியும்????
.
.
ஜவுளி கடையில் வேலை பார்க்க ஈகோ தடுக்கிறது... ஆனால் அவரோ ஏதாவது ஓர் வேலைக்கு போ என்கிறார்...
.
.
அம்மா ராத்திரி சாப்பாடு போடும் போது எல்லாம் சொல்கிறாள்.
 உங்க கூட படிச்ச கணேசன் சொன்னான்டா..... ஜவுளி கடையில் வேலை பார்த்தா வேறு வேலை தேட கூட நேரம் கிடைக்காதாம்...தம்பிய பொறுமையாக இருக்க சொல்லுங்க..
அவன் நல்ல மனசுக்கு நல்ல வேலை கிடைக்கும்....
.
.
.
ஏய், பரதேசி பயலே இன்னுமா..கிளம்ப வில்லை.. சீக்கிரம் போய் தொலை...
.
.
போன் அடித்தது...ஆங்...செல்வியா.. ஆமாம் எல்லாரும் வீட்டில் தான் இருக்கோம்..உன் மருமகளனுக்கு ஏதோ பெரிய இடத்து interview கிளம்பி போய் விட்டான்...ஏம்மா ஓரு இரண்டு மணிநேரந்தானா.. பத்து நாள் தங்குற மாதிரி எப்போ வருவே.... பேசி முடித்து போனை வைத்து விட்டு திரும்பினார்.
.
.
கோபத்தின் உச்சிக்கே சென்று பக்கத்தில் இருந்த டம்ளரை எடுத்து வீசி எறிந்தார்...அதுசரியாக கையில் வந்து விழுந்தது...
.
.
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...
.
.

வீட்டை விட்டு கிளம்பும் போது தங்கச்சி வந்து உள்ளங்கையில் எதையோ அழுத்தினாள்...
இந்தா காலையிலேயே, அப்பாகிட்ட இழவு இழுத்து கிட்ட.. எப்படியும் ராத்திரி 10 மணிக்கு மேல் தானே வருவே....
பத்திரமா இரு.. ராத்திரி வந்துரு.... அம்மாவும் நானும் உனக்காக சாப்பிடாம காத்துகிட்டு இருப்போம்.
.
.
.
இடுப்பு உயரம் கூட இன்னும் வரவில்லை. கொஞ்சம் குனி...
குனிந்தேன்... கன்னத்தில் முத்தமிட்டாள்...
உணர்ச்சி வசப்பட்டு ஆத்துல,குளத்தில விழுந்துராதே... ப்ளீஸ்டா பைத்தியக்காரா...
உணர்ச்சிமயமான என்னை மாற்றிவிட்டு உணர்ச்சி இல்லாதவனாக இருக்க சொல்லும் வாயாடி மாலா....
.
.
.
.
உள்ளங்கையில் ஜந்து ரூபாய்...
.
.
.
.
.
பசிக்கிறது ஏதாவது சாப்பிடா நல்லா இருக்கும் என்று நினைத்து டீக்கடை பக்கம் போனான்...
டீ 6ரூபாய் என்றான் கடைக்காரன்..
நேத்து இருந்து விலைவாசி கூடி போச்சு..
சட்டை பையில் இருப்பது 5 ரூபாய் தான்.
.
.
.
சரி இதிலும் பிரச்சினை...
.
.
எவ்வளவோ பார்த்து விட்டோம், இதையும் பார்ப்போம்..
.
.
சற்று தூரம் சென்றவுடன், எதிர்பட்ட ஓர் பிச்சைக்காரன்..
.
.
'ஐயா தர்மம்" கேட்டான்.
.

இந்த 5ரூபாய் கொடுக்கலாமா வேண்டாமா..நம்மளை தப்பா நினைத்து விட்டால் என்ன செய்வது யோசித்தான்...
.


அவன் சொன்னான், சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு. 65 ரூபாய் தான் இருக்கு.....ஓரு 5 ரூபாய் கொடுத்தால் கூட போதும்.. அந்த கடையில் சாப்பாடு வாங்கி என் பொண்டாட்டி பிள்ளையோடு உங்க பெயரை சொல்லி சாப்பிடுவேன்...
மகராசன் நீங்க தான் மனசு வைக்கணும்.
.
.
.
.

துப்பட்டா

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே..
.
.
தங்கையை தொட்டால் கூட கோபப்பட்டு சண்டை பிடிப்பேன்..
.
.
.
ஏண்டி, கவிதா உன் தங்கச்சி தானே.அவ அதை தொடக்கூடாதா??
அம்மா, நீ குறுக்கே பேசாதே என் பொருளை யாரும் தொடக்கூடாது.
.
.
.
அம்மா, இவ ஓரு பெரிய மனுஷியாக நினைத்து பேசுற பாரு... ஏய் உனக்கு இந்த கலர் நல்லா இருக்கும் என்று சொன்னதே நான் தான் தெரியுமாடி...
.
.
.
நீ என்னுடைய பொருளை தொடக்கூடாது.. இதுக்கு மேல பேசுன நடக்குறதே வேற...
. வாசலில் அப்பா வரும் சத்தம் கேட்டதும் வீட்டில் அமைதி நிலவியது.
.
.
.
என்ன எல்லோருக்கும் சிரிச்சு பேசி சந்தோஷமாக இருக்குற மாதிரி தெரியுது???
.
.
அது வந்து அப்பா.உங்களுக்கு ஜீன்ஸ் பேண்ட் தீபாவளிக்கு எடுக்க வேண்டும் அப்படின்னு தான் பேசிகிட்டு இருந்தோம் நீங்க வந்துட்டீங்க... ஏய் பரிமளா உன் புருஷன்கிட்ட சொல்லு
.
.
.
நீ எப்போ தான் அவளை பரிமளான்னு சொல்லுறதை நிறுத்துவே கவிதா.மத்தவங்க கேட்டால் தப்பா நினைப்பாங்க...


.
"கோவிச்சுக்காதீங்கப்பா."..வந்து கழுத்தை கட்டிக்கொண்டு.
மத்தவங்க முன்னாடி அம்மான்னு மரியாதையுடன் தான் கூப்பிடுவேன்..
.
.
ஆமாம், பெரிய கெளரவம் பாரு.. என்னத்தை சொல்ல
உங்க அம்மா கொடுத்த செல்லம் தான்... சின்ன பிள்ளையா இருந்த போது தெரியவில்லை போல உங்களுக்கு.‌நானும் எத்தனை தடவை அத்தைகிட்டயும் சொல்லி பார்த்தேன்..
.
.
.
ஏண்டி உனக்கு எங்க அம்மாவ குறை
சொன்னால் தான் தூக்கம் வருமா.அடுத்த மாசம் வந்தா மூணாவது வருஷம் திதி...
.
.
அதுசரி எனக்கு ஜீன்ஸ் வேண்டாம் ஐம்பது வயசுக்கு பிறகு இதுவே அதிகம்.. காட்டன் பேண்ட். சட்டை போதும்.. நீங்க உங்களுக்கு வேண்டியதை எடுங்க....
.
.
.

அப்பா அருகில் வந்து அவரின் வழுக்கை தலையை தடவிய படி கேட்டாள்.. ராசி.
.
.
நீங்க ஓரு விக் வாங்கி தலையில் மாட்டுங்கப்பா.. என் பிரண்ட்ஸ் கேலி செய்யுறாங்க.... உங்க அப்பா ஆயிரம் அடி தள்ளி வந்தாலும் தலையை பார்த்தா கண்டுபிடிக்க சுலபமன்னு.....
.
.
.
அட, சொல்லுறவங்க சொல்லட்டும் இது பரம்பரை வழுக்கை தனது சுயபுராணம் தொடங்கியவரை....
.
.
ஏங்க, உலகம் புரியாத ஆளாவே இருக்கீங்க... இந்த இரண்டு மூச்சிகளும் தீபாவளிக்கு பணம் புடுங்க அலையுது....
அப்பாவும் பொண்ணுங்களும் சேர்ந்து அடிக்கிற கூத்து சகிக்கவில்லை.. அப்படி ஒரு பாச டிராமா..
.
.
சீச்சீ, தப்பா பேசாதேடி. என்னுடைய சம்பாத்தியம் எல்லாம் என் செல்ல பொண்ணுகளுக்கு மட்டும் தான் தருவேன்... உனக்கு கூட கிடையாது
.
.
ஜயா சாமி நீங்க என்னவேணா பண்ணுங்க...முதல்ல என்ன வேணும்ணு கேளுங்கள்.. எனக்கு எதுக்கு உங்க கூட சண்டை.பிறகு என் தம்பியையும் அம்மாவையும் ஏசுவீங்க.. போதும்ப்பா சாமி...
.
.
.
பரிமளா சொல்லி முடிக்கும் முன்னால் கவிதா கேட்டாள்...அப்பா இந்த தீபாவளிக்கு எனக்கு ஓர் ஸ்கூட்டி போதும்.. மத்தபடி டிரஸ் கூட உங்க இஷ்டம் தான்...
.
.
ஆமாண்டி வண்டியும் வாங்கி கொடுத்து டிரஸ் வேறயா???
.
.
ஏய், நீ வாயை மூடு.நான் எங்க டாடி கிட்ட கேட்டேன் வாங்குறேன். உன்னை மாதிரியா போன் போட்டு...
.
.
அடுத்த வார்த்தை சொல்லுவதற்குள். இரண்டு கைகளையும் கூப்பி கும்பிட்டாள் நான் உன் வழிக்கு வரவில்லை, நீயும் எனக்கு இடைஞ்சல் பண்ணாதே..
.
.
எதுவுமே புரியாத அப்பாவும் அம்மாவும்..சண்டை போடாதீங்க...
.
.
உனக்கு என்ன வேணும் சொல்லு ராசி.
.
.
.
ப்ளீஸ்ப்பா, எனக்கு ரம்யான்னு பெயர் வைச்சுட்டு ஏன் ராசி, ராசின்னு சொல்லிகிட்டு.. சிணுங்கினாள்.
.
.
அட, என்ன வேணும் அடம்பிடிக்காம சொல்லு பாப்பா...
.
.
.
அது வந்து அப்பா நம்ம ஊர்ல ஓர் நல்ல கலெக்ஷன் வந்து இருக்கு..வேறு பத்தாயிரம் கொடுங்க போதும்.
.
.
பரிமளா திடுக்கிட்டு விழித்தாள்.
.
.
.
கவிதா சொன்னாள்..நீ ஏன் பரிமளா வாயை பிளக்குறே.... உனக்குத்தான் தெரியுமே அவள் ஆசை....
.
.
.
என்னடி சொல்லுறே.. வயித்துல புளியை கரைக்காதே...
.
.
.
என்னம்மா வாங்க போறே பாசமாகவும் பரிவாகவும் கேட்டார்..
.
.
அது வந்தப்பா ஓர் கலெக்ஷன்ல 25 வகை இருக்கும் பீடிகை போட்டாள்.
.
.
.
சீக்கிரம் சொல்லித் தொலை சனியனே...
எனக்கு இப்பவே தலை சுத்துது. பரிமளா கத்தினாள்.
.
.
தலையை அசைச்சு கண்களால் கேட்ட அப்பாவிடம் தன் கையில் இருந்ததை ஆட்டிக் காட்டி சிரித்தாள்.
.
.
.
பரிமளா எரிச்சலாக சொன்னாள்.
பைத்தியம்.. பைத்தியம்.. சரியான துப்பட்டா பைத்தியம்... இன்னும் எத்ஞ தாண்டி வாங்குவே...

தங்கச்சங்கிலி

மருமகள்
கழுத்தில்
பத்து பவுன்
இருந்தால் தானே
மரியாதை கழுத்தில்
மாட்டிவிட்டார்
மாமியார் 
புத்தம்புது
தங்கச்சங்கிலி....
தினமும் பலமுறை
சொல்லி நினைவூட்டினார்
அடிக்கடி வாசல் பக்கம்
போகாதே மருமகளே...
திருட்டுப்பயலுக 
சங்கிலி போனா போகுது
உன் உயிர் ரொம்ப முக்கியம்மா
சிறை செய்த சங்கிலி

ப்ரெண்ட்


தெருவில்
சந்தோஷமாக
இருந்தவனை 
வீட்டிற்குள் 
அழைத்து அடைத்து
வைத்தாள் அம்மா
ஜன்னல் வழியே
முகம் பார்த்து
வாடா வெளியே 
விளையாடலாம்
கூப்பிட்டாள் 
பக்கத்து வீட்டு
ப்ரெண்ட்

இதயத்தை தேடி

மஞ்சள் நிற சுடிதாரில்
சாதாரணமாக வந்தவள்...
சாமானியரும் கேட்க நினையாத
அவளின் தேடுதலே கேள்வியாய்..
இதயமற்று திரிந்தவனிடம்
இதமாக பேசி கேள்வியென்னும்
கணை தொடுத்து... விடையில்லா
கேள்வியால் சிந்தனையை 
தொட்டவள்...இறைவனை
தேடுவதாக சொல்லி விட்டு
இல்லறத்தின் தேவையை
நன்றாகவே உணர்த்தியபடி
உடன் நடந்து வந்தாள்...
நிழல் கூட மேலே படவில்லை
சில நிமிட சந்திப்பில்
சிரிக்கவும் இல்லை..
சிலாகிக்கவும் இல்லை
கைகளையும் கோர்க்கவில்லை...
முகவரியும் கேட்கவில்லை
எப்படித்தான் நுழைந்தாளோ...
இதயத்தின் உள்ளே...
துணை ஏதுமின்றி திரிந்தவன்..
ஏகாந்தமே இனிமை என்று
கழித்த நாட்களை நொடியில்
கிழித்துப் போட்டாள்....
ஏகாந்தம் எரிச்சலானது...
அதுவரையிலும் சுற்றிய
மலையும் காடுகளும்
அருவிக்கரையும்
ஆற்றின் கரைகளும்...
அவளேயே யோசிக்க வைத்தது..
அவளை சந்தித்த இடத்தை
கடந்து செல்லும் ஓவ்வொரு
தருணத்திலும் தேடுகிறேன்.. 
உடலின் ஓர் பாகமல்ல நெஞ்சம்
உயிர்வாழ்வதே அதனால் தான்
உணர்த்தி விட்டாள்... 
துடிக்கும் இதயங்கள் எதிர்பார்ப்பது
அவளின் நட்பை மட்டுமல்ல
அவள் மனதில் வரைந்து சென்ற
கள்ளம் கபடமற்ற குழந்தைதனமான
இதயத்தை தேடி...

முடியும்

என்னால் முடியும்
என்பது தன்னம்பிக்கை
என்னால் தான் முடியும்
என்பது ஆணவம்
உன்னால் முடியும்
என்பது பாசம்/நட்பு
உங்களால் முடியும்
என்பது மரியாதை
அவரால் முடியும்
என்பது ஆச்சரியம்

கொரோனா...

பேசப்படாத கொரோனா விளைவுகள்.
.
.
.
.
எல்லா ஊடகங்களும் கொரானா ஏற்படுத்தும் மரணங்கள் குறித்து செய்தி சொல்கிறது..
இங்கே சொல்லப்படாத விஷயம் நடந்து கொண்டு இருக்கிறது.அதை ஏனோ ஊடகங்கள் நினைவு கொள்ளவில்லை போல...
.
நான் ஊடகத்தில் வேலை பார்க்கவில்லை எனவே தைரியமாக சில கருத்துக்களை முன் வைக்கிறேன்..
இதனை படித்து விட்டு ஏதாவது ஓர் நிருபர் இந்த தகவலை முன்னெடுத்து சென்றால் அதுவே சிறப்பான வெற்றி.
.
.

முதல் இரண்டு உலகப் போரில் ஆயுதங்கள் பயன்படுத்தபட்டது...இப்போ நடப்பதும் உலகம் போர் தான் கொரோனாவிற்கு எதிரான உலகளாவிய போர்.
இது என்று முடிவுக்கு வரும் என்பதில் இன்னும் தெளிவான பதில் இல்லை..
எல்லா நாடுகளிலும் மருத்துவர்களும் அரசு பணியாளர்களும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கும் வேளை இது.
.
சாதாரணமாக யாரும் மயானத்திற்கு அடிக்கடி போவது இல்லை... ஆனால் நான் கடந்து போகும் சாலை அருகே தான் மயானம்.

என் மனதில் பட்ட வலிகளை எழுதுகிறேன்...ஏனவே தான் இதனை சொல்லுகிறேன்....
.
எல்லாரும் பல ஆண்டுகள் வாழப்போவதாக நினைத்து தான் படித்து வேலையில் சேர்ந்து திருமணம் என்னும் பந்தம் கொண்டு வாழ்க்கை வாழ்கிறோம்...
.
ஊரில் வாழும் பாதி பேர் தான் பார்க்கும் வேலையை நம்பித்தான் காலம் தள்ளுகிறோம்.
அதில் ஏற்படும் சிற்சில மாற்றங்கள் கூட பலரின் வாழ்வை திருப்பி போடுகிறது...
அப்படிப்பட்ட ஓர் சூழ்நிலை இன்று பலரின் வாழ்வை கேள்வி குறியாக மாற்றி விட்டது....
.
.
ஓர் மாத வருமானம் பெறும் தனி மனிதனின் மரணம் என்பது அவர் சார்ந்துள்ள குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி மீதான தாக்குதலுக்கு வழி செய்துவிடும்..
.
.
மயானத்திற்கு மாதத்தில் என்றாவது ஓர் சில நாட்கள் தான் வேலை.. ஆனால் கடந்த சில மாதங்களாக அங்கு புதைக்கப்பட்ட உடல் எத்தனை என்பது சரியான புள்ளி விவரங்கள் அரசாங்கம் மட்டுமே அறிந்த விஷயம்..

நான் அதை பற்றி பேசவில்லை, ஆனால் புதைக்கப்பட்ட மனிதரின் குடும்ப பொருளாதாரத்தை யாரால் சரி செய்ய முடியும் என்பதே கேள்வி...
.
இறந்த மனிதர் இல்லை என்பதும் அவர் விட்டுச்சென்ற வலிகளும் ஏராளம்.
.
இன்று நம் சமுதாயம் கொரானா வந்தவர்களின் குடும்பத்தை நடத்தும் விதம் மிகவும் மனதில் ரணம் தருகிறது.
அவர்களின் வீட்டிற்கு யாரும் சென்று துக்கம் கேட்பதில்லை....ஓரு பத்து நாட்கள் கழிச்சு போகலாம் என்று உரக்கவே பேசுகின்றனர்...
அறிவியல் பூர்வமாக அது சரியாக இருக்கலாம்... போன் மூலமாக பேசினால் என்ன குறை வந்து விடும்...
.
.
வயதான மனித மரணம் என்பதை மனம் ஓரளவு ஏற்றுக்கொள்ள பழகிவிட்டது.ஆனால் நடுத்ஙவயதிலும். ஏனோ எழுதுவதில் கூட மனம் சஞ்சலபடுகிறது..
.
நல்ல இதயங்களுக்கு என் வேதனை புரியும்...
அந்த வீட்டில் மரணித்தவர் ஏற்கனவே வேலை இன்றி சில மாதங்களில் கையிருப்பு காசு செலவு முடிந்தது...
.
. வங்கிகள் கடன் வசூல் செய்வதில் நெருக்கடி காட்டவில்லை... ஆனாலும் அவர் வாங்கி வைத்த கடன் யாரால் கட்டம முடியும்.. வீட்டின் ஓரே வருமானம் அது அவர் தந்தது தான்.. அவர் போய்விட்டார்... ஆயினும் அவர் தன் குடும்பத்திற்காக வாங்கிய வீட்டு லோன், கார் லோன் மற்றும் சிற்சில தவணை கடன்...இதை எப்படி சரி செய்யப் போகிறோம்..
.
.
சென்ற தலைமுறை கூட்டுக்குடும்பம் வாழ்வில் பல இடைஞ்சல் இல்லாமல் இல்லை.
ஆனால் ஓருவர் இறந்து விட்டால் அந்த வீட்டின் மற்ற பெரியவர்கள் பொருளாதாரத்தை சரிசெய்ய முடிந்தது.
இன்றோ எல்லோரும் தனித்தனியாக வாழ்கிறோம்....
.
நண்பர்களே யோசியுங்கள்... எல்லோரும் L.I.C பாலிசி எடுக்க வில்லை என்பதே நிதர்சனமான உண்மை...
.
பணத்தை விட மேலாக கொரோனாவால் உறவுகள் இழந்து தவிப்பவர்களுக்கு தேவையானது. சொந்தங்களின் அன்பும் அரவணைப்பும்.. பொருளாதாரம் மெல்ல மெல்லத் தான் மீண்டு எழும்... அதுவரை பொறுமையாக இருப்பது தவிர வேறுவழியில்லை...

நினைவுகளில்.. காலம்.....


எதிர்காலம் பற்றிய பயத்தில்
சில பேர்...
எதிர்காலம் பற்றிய கனவில்
சில பேர்....
நிகழ்காலம் தந்த தவிப்பில்
சில பேர்...
நிகழ்காலத்தின் யதார்த்தம்
புரிந்து எதிர்காலத்தை
திட்டமிடும் சில பேர்....
இறந்த காலத்தில் நடத்த
தவறை திருத்த முடியாமல்....
உறவினர்களின் பாசத்தில்
சிக்கி தவிக்கும் சில பேர்...
இறந்த காலத்தை நினைத்து
வாழும் சில பேர்.....
தனிமையான காலத்தில்.
காலனின் நினைவு....
எழுத வேண்டியதும்...
சொல்ல வேண்டியதும்
செய்யத்தவறியதும்
எத்தனை எத்தனையோ
இப்போது நினைவுகளில்
செய்திருக்க வேண்டும்....
அல்லது சொல்லி இருக்க வேண்டும்...
...................

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...