இல்லறத்தில் உண்மை

சில வரிகள்
.

உலகம் என்றுமே வழக்கமாக தனது பாணியில் இயங்கி கொண்டு தான் இருக்கிறது...
வாழ்க்கையும் கூட ஒரு வகையில் படம் பார்ப்பது போலத்தான்...
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பவே உலகம் காட்சிப்படுகிறது....
ஓருவர் பணக்காரன் வேஷத்தில் இருப்பதாலும்..
அவர் பணக்காரன் என வேறு ஓர் மனிதர் சொல்லுவதாலும்...
அவரை பணக்காரன் என்று நம்பி பழகும் பல நபர்கள்....என்றாவது நமக்கு நல்லது செய்வார் என்று....
பழகும் நபர்களுக்கு தனது பொருளாதார நிலை தெரிந்தால் பயந்தபடி பணக்கார வேஷம் தொடர்கிறார்....
பேங்க் சென்று கடன் கேட்டு அலைந்தாலும், நண்பர்களிடம் டெப்பாசிட் பண்ண போனதாக சொல்லி பெருமை தேடுகிறார்...
.
.
வீட்டில் மனைவி நம்ம கையில் காசு இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லுங்க அப்போதுதான் உண்மையான நண்பர்கள் கிடைப்பாங்க...
ஏனோ அவளின் சொல்லில் இருக்கும் நியாயம் பிடிக்காமல் போலியாகவே கூட்டம் சேர்த்து பழகியவர்.. மாறுவதில்லை..
.
.
.
பணம் என்னும் காகிதம் போலியான உறவுகளை தான் காட்டும்..அன்பு மட்டுமே உண்மையான உறவு சொல்லும்.
.
எத்தனையோ வசதிகள் இருந்தாலும் மனதின் நிம்மதி மிகவும் அவசியம்..
.
.
யாரோ ஒருவர் என்னை நீங்கள் சாமியார் போல பெரிய பக்திமான் என்பதால் நான் சாமியாராக மாற முடியாது.
போலியாக வேஷம் போடலாம்...
ஆனால் அதை உலகம் ஏற்றுக் கொள்ளும்....
உண்மையில் என்னை நானே ஏமாற்றுகிறேன், என்பதே நிதர்சனமான உண்மை.
.
சின்னஞ்சிறு ஆசைகள் கூட இல்லாமல் பிறர் நலனுக்காக வாழ்வது தான் சாமியார் இலக்கணம்.
.
இறைவனின் பெயரை சொல்லி பல ஏக்கர் வளைத்துப் போட்டு பலமாடிகளுக்கு கட்டிடங்கள் கட்டி. ஏதோ இறைவன் தான் மட்டுமே கண்டுவிட்டதாகவும்.
.
அறியாமையின் பிடியில் மக்கள் கஷ்டப்படுவதாகவும் மைக் பிடித்து பேசும் போலிகள் கண்டு ஏமாறும் கூட்டம்...
.
.
ஓவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்பே...
இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் எவருமே இல்லை....இதை சொல்பவர் சிலரே...அவர்களை நான் வணங்குகிறேன்.
"எந்தரு மகாணுபவரோ..அந்தரிக்கு நமஸ்காரம்"
.
.
.
தியானம் யோகம் சொல்லி தருகிறேன் பேர் வழி என்று அனைவர் கையிலும் தனது முத்திரை மோதிரத்தை பதிப்பது எப்படி...
.
.
.
.
.
.
.
துறவறத்தை விட இல்லறமே சிறந்தது...
.
.
உன்னில் உன்னை தேடு என்பதே ஆன்மீகம்
அமிர்தானந்தமயி என்னும் துறவியை நான் மிகவும் மதிக்கிறேன்..
.
.
என்னுள்ளே என்னை தேடச் செய்த குரு அவர்...
ஏனென்றால் அவர் அனைவரையும் கடவுளின் குழந்தை என்கிறார்... யாரையும் சோதிப்பதில்லை.
.
.

நீங்கள் என்னை மதிப்பது உண்மை என்றால் அது உங்களின் மந்திரத்தையோ இறைவனின் நாமாவளியோ மீண்டும் மீண்டும் உச்சரிப்பது தான்..
"அதுவே இந்த அம்மா உங்களிடம் கேட்கிறேன்".
எத்தனை அற்புதமான பேச்சு.....
உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்...
.
முதலில் உங்களுக்கே நீங்கள் பதில் சொல்லுங்கள்... உண்மையாக இருங்கள்...
இறைவனின் முன் போலித்தனம் எடுபடாது...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...