தெனாலிராமனின் 24 -வது கவிதை படைப்பு கிருஷ்ணா

நான்
கல்லூரியில்
படிக்கவில்லை,
போலியான
வார்த்தை
பகட்டு பந்தா
எனக்கில்லை,
ஆனால்
மாடுகளை
மயக்கிய உன்
காலடியில் என்
வம்சமே தஞ்சம்
கிருஷ்ணா 

தெனாலிராமனின் 23 -வது கவிதை படைப்பு சொன்னார்


4 டேபிட் கார்டு
(Debit card)
இருந்தும் என்
பணத்தை
எடுக்க முடியாத
நிலை காரணம்,
மனிதர்கள் அல்ல
கம்யூட்டர் தான்
அதிகாரி சொன்னார்

தெனாலிராமனின் 22-வது கவிதை படைப்பு புளி - கிராம பொருளாதாரம்

ஒரு சிறு விஷயம் தான், ஆனால் நம் கிராம பொருளாதாரம், குறைய  இதுவும் காரணம் தான்

200 வருடங்களுக்கு முன்னால் சாலையின் இரு பக்கம் புளிய மரக்களை
நட்டு வைத்தனர். வெயில் அதிகமான காலத்தில் புளிய மரத் த தடியில் வெயில் தாக்கம் இல்லாமல் குளுமையான காற்று வீசும். கிராமத்திற்கு தேவையான புளி எளிய வழியில் கிடைத்தது.
சுற்றுசுழல் பாது காக்கப்பட்டது.
இன்று புளி விலை என்ன.. யோசிக்க நேரம் இருந்தால்...

தெனாலிராமனின் 21-வது கவிதை படைப்பு முயற்சி

எனது
எழுத்துக்கள்
இலக்கியம் அல்ல,
கவிதையும் அல்ல,
நான் சந்தித்த
மனிதர்கள்,
பார்த்த நிகழ்வுகள்
என் எழுத்தில்
பதிவு செய்யும்
முயற்சி

தெனாலிராமனின் 20-வது கவிதை படைப்பு பாதுகாப்பு

சில நல்ல
இதயங்களுக்கு
மெதுவாகவே
புரிகிறது
கோபம்
ஒன்று தான்
நல்லவனுக்கு
பாதுகாப்பு 

தெனாலிராமனின் 19-வது கவிதை படைப்பு விரும்புவது

எத்தனை
வாழ்த்துக்கள்,
வசதிகள்,
வந்தாலும்
சுதனே  - உனது
முள் கீரிடமே
நான்
விரும்புவது

தெனாலிராமனின் 18 -வது கவிதை படைப்பு வசந்தம்

   
வசந்தம்

எத்தனை
கஷ்டத்தோடு வந்தாலும்
அப்பா என்று
ஓடிவந்த
குழந்தை
வாழ்வின்
வசந்தம்

தெனாலிராமனின் 17-வது கவிதை படைப்பு நண்பன்

 நண்பன்

பத்து வருடம்
பழகியவரை விட
சில நிமிடம்
பழகிய  புதிய
நண்பனை
நம்புகிற
ஏமாளி
மனிதன்
எனது
நண்பன் 

தெனாலிராமனின் 16 -வது கவிதை படைப்பு விடுவதில்லை

எப்பொழுது
எப்படி
எவன்  நம்
முதுகில்
குத்துவான்
தெரியாது ,
இருந்தாலும்
என்ஆசை
"அரசியல்"
 விடுவதில்லை

தெனாலிராமனின் 15-வது கவிதை படைப்பு ஞாநி

        ஞாநி

ஞானமற்றவனை
கூட யோசிக்க
சொல்லி தந்தவர்,
வரிகளை
நம்மிடம் விதைத்து,
பல மனித
மனங்களில்
உண்மையை
தேடச் செய்தவர்,
தமிழ் போற்றிய
நடு  நிலையாளர்,
எங்களின் அருமை
வழிகாட்டி
'ஞாநி'

தெனாலிராமனின் 14-வது கவிதை படைப்பு என் வரம்

உலகம் முழுவதும்
சுற்றினாலும்,
எத்தனை மனிதரை
சந்தித்தாலும்,
பூக்களை கண்டவுடன்
நினைப்பது என் தாயும்,
ஓற்றை ரோஜாவிற்காக
அடம் பிடித்த
அன்பு தங்கையும்
பணத்தை விட
பாசத்தை போதித்த
இவர்கள் என் வரம்



100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...