என்னால அது பண்ணவே முடியாது டீ நாயே..
கல்யாணம் ஆகி சில வாரங்களுக்கே ஆன மனைவியை ஏசிக்கொண்டே கையில் இருந்த நாளேட்டை தூக்கி அவளின் முகத்தில் வீசி எறிந்தான்
என்னால முடியாது
அதையெல்லாம் இதுவரையில் நான் செஞ்சே கிடையாது
இனியும் நான் வாழ்நாளில் பண்ணாத ஓர் விஷயத்தை நீ என் பொண்டாட்டியா வந்த ஓரே காரணத்தால் பண்ணவே முடியாதுடீ நாயே..
என்ன வாய் ரொம்ப நீளுது.....தேவைன்னா கொஞ்சுறது இல்லாட்டி கெட்ட கெட்ட வார்த்தையில பேசுறது..
ஏன்டீ நாயீ கூப்பிடுறது ஓர் குத்தமா...உங்க அப்பாவே உன்னை என் செல்ல நாய்க்குட்டின்னு தான் கூப்பிடுறாரூன்னு நீ தானே சொல்லுவே.
இப்போ எதுக்கு எங்க அப்பா பேச்சை பத்தி பேசுறீங்க..உடனே நான் அமைதியா ஆகும்ன்னு தானே
அம்மா தாயே..நீ வேணா கோபிச்சுக்கிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போகணும்ன்னா போ...சட்டை பையில் ஐந்நூறு ருபாய் இருக்கு எடுத்துட்டு போ..
போகும் போது அந்த பஸ்ஸாப்பு கடையில் உங்க அப்பாவுக்கு பிடிச்ச ரவா லட்டு ஓர் பாக்கெட் வாங்கிட்டு போய்.. என் மாமனார்கிட்ட குடு. போன வாரம் வந்தவரு அதை ரொம்ப விரும்பி சாப்பிட்டாரூ
அப்பாவுக்கு பிடித்ததை வாங்கி போக சொன்னது.அவளுக்கு கோபம் மிகவும் வெகுவாக குறைந்தது.
என்னங்க ஓரு வாரத்துலையே, எங்க வீட்டுல யார் யாருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று தெளிவா தெரிச்சு வைச்சிருக்கிற உங்களுக்கு ஏன் நான் சொல்லுற விஷயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது
ஏன்னா நீ சொல்லுற விஷயம் ரொம்ப ஆபத்தானது மேலும் அது ரொம்ப பெரிய பாவ காரியம்.
ஆமா உலகத்துல எல்லாரும் பாவபுண்ணியம் பார்த்துட்டா வாழுறாங்க
உங்க அப்பன் ஆத்தா யார் வந்து பேசினாலும் இது தான் என்னோட முடிவு.
நான் அதை பண்ணவே மாட்டேன்
ஏன் எல்லாமே பழகினா தான் பண்ணீவீங்களா.
எனக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி, வேற ஓருத்தி கழுத்துல தாலி கட்டி பழகிய பிறகா தான் கட்டுனீங்களா.
அதை மாதிரியே தான் இதுவும். பொண்டாட்டி சொன்னா கேட்டு தொலைய வேண்டியது தானே.
அவன் அவன் பொண்டாட்டிக்காக கடன் வாங்கி செலவு செய்யுறான்.
நான் அப்படி என்னத்தை புதுசா சொல்லிட்டேன். ஊர் உலகத்தில் எல்லோரும் பண்ணுற விஷயம் தானே.
என்ன யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக பண்ணி நாம எதுக்கு மாட்டீகிக்க போறோம்.
ஏன்டீ காலையிலேயே சண்டையிழுக்கிறே.
நமக்கு கல்யாணம் ஆகி ஓரு வாரம் கூட ஆகலை அதுக்குள் நான் சொல்லுறது எதுவுமே கேட்க மாட்டேன்னா என்ன அர்த்தம்.
சரியான களிமண். உங்க அப்பன் உன்னை என் தலையில் கட்டி வைச்சுட்டான்னு அர்த்தம்
நான் சொல்லுறதை மட்டும் ஓழுங்கு மரியாதையா பண்ணுங்க
இல்லாட்டி என்னடீ பண்ணுவ
நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன்
பிறகு என்ன மயிதுக்கு டீ என்னை கட்டிகிட்டே.
அதான் நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னே. இப்படி அடம் பிடிச்சா வேற என்ன பண்ணுறதாம்
அப்போ சரி..இதனால் நீ என்னை விட்டு ஓரேடியா போனாலும் பரவாயில்லை.
என்னால இதை செய்யவே முடியாது.
விவாதமே சண்டை போல் நடப்பதை பார்த்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் சுவற்றில் காது வைத்து கேட்காத குறையாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.
ஓர் சிலர் மனதில் ஆனந்தம்.சிலர் மனதில் கஷ்டம்.
ஏன்னா இந்த உலகத்துல சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருந்தா பிடிக்கும். சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரன் நம்மை விட இப்படி இருக்கிறானே என்று நினைக்க பிடிக்கும்
அதுக்காக நீ நீட்டுற பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட முடியாது
அரசு வேலைக்கு லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தப்பு. நீ இதை நல்லா புரிச்சுக்கோ
அப்போது தொலைபேசி அழைத்தது
எதிர்முனையில் குலசாமி கோவில் பூசாரி.. தம்பி நான் பூசாரி அரவிந்த் சர்மா பேசுறேன்
எரிச்சலாக இருந்தாலும் போலியான புன்னகையில் கேட்டான் சொல்லுங்க சாமி என்ன விஷயம்.
அது வந்து தம்பி.நேத்து எனக்கு ஓர் கனவு அதுல ஓருத்தர் உன்னை கிணத்துல பிடிச்சு தள்ளுற மாதிரியும்.. மஞ்சள் பாவாடை சட்டை போட்ட ஓர் சின்ன குழந்தை பிடிச்சு காப்பாத்துற மாதிரியும் இருந்துச்சு.
சீக்கிரமா உனக்கு ஓர் நல்லது நடக்க போகுதுன்னு மட்டும் தெளிவா தெரியுது
சூழ்நிலையை அறிந்து சொல்கிறாரா.. அல்லது புரியாம பேசுறாரா குழப்பமா இருந்தாலும்..
சரி சாமி எப்படியோ நல்லது நடந்தா சரிதானே
அடுத்த வாரம் நவராத்திரி மறக்காம தம்பதி சமேதரா வந்திடுங்க.. அம்பாள் விஷ்ணு துர்க்கை நிச்சயமாக காப்பாத்துவா கவலை படாதே. போனை வைத்தான்..
அவர் சொல்லுவது எதுவுமே புரியாத புதிராக இருந்தாலும். மனம் ஏதோ தெளிவானது போல் இருந்தது.
அதுவரையில் அவளுடன் பேசியது எல்லாம் வீண் என்ற முடிவுக்கு வந்தவனாக அவளை கூப்பிட்டான்..
ஏன்டீ நீ சொல்லுற மாதிரியே செய்யுறேன்.. ஆனா இப்பவும் சொல்லுறேன் எனக்கு இதுல இஷ்டமே இல்லை.ஆனாலும் உன் மனசு சந்தோஷத்துக்காக மட்டும் தான்.
என் செல்லம் நீங்க இது சொன்னதே போதும். இப்பவே என்னோட சித்திக்கு இந்த விஷயத்தை சொல்லிடுறேன்.
இருங்க சூடா ஓர் கப் காபி எடுத்துட்டு வர்றேன்.. ஏன்னா நான் இவ்வளவு நேரம் பேசியது உங்களுக்கு தலை வலி வந்திருக்கும் ரொம்பவே பாசமாக பேசுவது போல் சொன்னாள்.
அது சரி இவ்வளவு நேரம் கழிச்சாவது உன் பேச்சால எனக்கு தலை வலின்னு சொன்னீயே
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு என்று தன் சேலை முந்தானையை அவனின் முகத்தில் செல்லமாக தட்டி விட்டு சிரித்தாள்..
கனவுலகில் மிதந்தாள்.. இரண்டு நாளைக்கு முன்னர் வீட்டுக்கு வந்த சித்தி சொன்ன வார்த்தைகள் காதுகளில் ரீங்காரமிட்டது.
இந்த விஷயத்தை மட்டும் நீ பக்குவமா பேசி மாப்பிள்ளையை சம்மதிக்க வைச்சுட்டா... உங்க சித்தப்பாவுக்கு இந்த பிராஜெக்ட் லாபம் மட்டும் 10 கோடி.அவர் கூட அடிக்கடி சொல்கிட்டே இருப்பாரூ.
நீ பிறந்ததுல இருந்து உனக்கு எதுவுமே செய்யலை.. இந்த வேலை முடிச்சா செல்லநாயீக்கு..
நம்மளோட அந்த தென்னந்தோப்பு மாப்பிள்ளை பேரில் எழுதி வைக்கணும் . அப்படின்னு உங்க அண்ணன் கூட சரின்னு சொல்லிட்டான்.
நாங்க அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டோம்..அதை விட முப்பது மடங்கு பெரிசா இங்கே தோட்டமும் வாங்கியாச்சு..
என்ன நம்ம ஊர் மாதிரி வேலைக்கு ஆள் கிடைச்சா கூலி அதிகமா கொடுக்கணும் அதனால் ஏதோ விமானத்துலையே எல்லாம் விவசாய வேலையும் செய்யுறானாம்...
நம்ம தாத்தா வாரிசுல நமக்கும் அவ தானே ஓர் பெண் வாரிசு அதனால் அவளுக்கே கொடுத்து என்று வேற சொன்னதாக சொன்ன சித்தி.
சித்தப்பாவோ திருதிருவென்று விழித்தார். இவளால் எப்படி ஓர் இடத்திற்கு தகுந்தவாறு பேச முடிகிறது.
நேத்து மகனிடம் பேசும் போது நமக்கு இங்கே இருக்கிற சொத்து பத்தாது. இன்னும் இரண்டு தோப்பு பக்கத்துலையே வருது.
வாங்கி போட்டால் தான் அடுத்த வருஷம் நீங்க அந்த வேலை முடிஞ்சு வந்தால் நாம் அந்த தோப்புல பங்களா கட்டி இருக்கலாம் என்றாளே
ஏன் சித்தி சித்தப்பா இப்படி முழிக்கிறார் என்றவளிடம், அது வேற ஓண்ணும் இல்லை.இந்த விஷயத்தை ஓர் ரகசிய பரிசா கொடுக்க நினைச்சதை நான் இப்படி சொல்லுறதை என்று மழுப்பினாள்
அவரும் ஆமாம் என்பது போல் மண்டையை ஆட்டினார்
தொலைபேசியை எடுத்து. சித்தி அந்த இடத்தை நீங்க சொன்ன மாதிரி பண்ண மனுஷன் சம்மதிச்சுட்டாரூ..அரசு புறம்போக்கு தானே அதை அப்படியே குத்தகைக்கு விடுவது போல் உங்க கம்பெனி பெயருக்கு எழுதி தருவது போல் பண்ணுவாராம்..
மத்த விஷயத்தை சித்தப்பாவிடம் சொல்லுவதா சொன்னாரூ சந்தோஷ பெருமூச்சுடன் பேசி முடித்தாள்..
அந்த இடத்தை பத்தி எல்லாம் இப்போ பேசவே பேசாதே.. நாங்க அப்படி கேட்டோம் என்பதை கூட யாரிடம் ஊறி வைக்காதே.இங்கே பெரிய பிரச்சினை போய்கிட்டு இருக்கு. நான் அப்புறமா பேசுறேன். வேகமாக ரிசீவர் வைக்கபட்டது.
எதுவுமே புரியாமல் சமையலறை சென்று காபி கலந்து வந்த அவனுக்கு தந்த படி சோஃபாவில் அமர்ந்தாள்.
உனக்கு என்னடீ ஆச்சு திரும்பவும் டல்லா இருக்கே..
அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து கொட்டியது.
அவனோ ஓர் தகப்பனைப் போல் அருகில் வந்து தான் கட்டியிருந்த வேட்டியில் அவளின் முக வியர்வை துடைத்து விட்டான்.
அது வந்து காலையில் சாப்பிடாமல் இருக்கேனா அதான் சமாளித்தாள்
அப்போது பரதநாட்டிய வகுப்பு போயிட்டு வேகமாக வேகமாக வீட்டுக்கு வந்த அவனின் தங்கை
டேய் கேசவா நீ முதல்ல டி.விய போடு.எவ்வளவு பெரிய பிரச்சினை நடந்துட்டு இருக்கு நீங்க இரண்டு பேரும் விஷயமே தெரியாத மாதிரி அமைதியா இருக்கீங்க
நான் தான் அப்பவே சொன்னேனே மதினி உங்க சித்தப்பாவ நம்பாதீங்க.அவரை நம்பினா நம்ம எல்லாரையும் கைலாசத்துக்கே கூட்டிட்டு போயிடுவாரூ பெரிய அயோக்கியன்னு..
இருவருமே குழம்பி போயினர்.
அவளோ சமாளித்து கொண்டு பேசினாள் இங்க மாதிரி கலா எங்க வீட்டுக்கு சொந்தகாரங்களை பத்தி மரியாதை குறைவா பேசாதே அது உனக்கு நல்லதில்லை.
நான் எது சொன்னாலும் உங்க களிமண் மண்டையில் ஏறாது.நான் டிவிய போடுறேன்.
அவளோ வெறுப்பாக தன் கணவனை பார்த்தாள்.அந்த பார்வையில் உங்க கண்ணு முன்னாடி என்னை அசிங்கபடுத்துறா. நீங்க பேசாம இருக்கீங்களே என்ற கோபம் தெரிந்தது
திரையில் மிகவும் சத்தமாகவே ஓலித்தது.காண்டிடாக்டர் சிவஞானம் வீட்டில் அதிகாரிகள் சோதனை.
அரசு நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக சில அதிகாரங்களை போலீஸ் பிடித்து விசாரிப்பதாகவும் செய்தி.
அவளோ பிரமை பிடித்தது போல் இருந்தாள்.
இப்போ புரியுதாடீ நான் ஏன் மாட்டேன் சொன்னேன் என்பது
அண்ணே நீ என்ன சொல்லுற எனக்கு எதுவுமே புரியலை என்றாள் கலா..
அது நீ வேற, இன்னிக்கு அவங்க சித்தப்பா வீட்டுக்கு கூப்பிட்டா.
நானும் நீ சொன்ன மாதிரியே அவர் நல்லவரா தெரியலை அதனால் நான் அவர் வீட்டுக்கு வர மாட்டேன்.நீ வேணா போயிட்டு வான்னு சொன்னே அதானடீ.
மனைவியை சாட்சி சொல்ல சொன்னான்
அவளும் அசடு வழிந்தாள்.
மாறாக கலாவோ அண்ணி எங்க அண்ணன் சின்ன தப்பு பண்ணிணா கூட காட்டு கத்து கத்துவான்...இப்போ நீங்க வந்த பிறகு நிறைய விஷயத்தை சமாளிச்சு பேச கத்துகிட்டான்.
ஆனாலும் உனக்கு பொண்டாட்டி மேல இவ்வளவு கரிசனம் கூடாது கேலியாக சிரித்த படி சொல்லி விட்டு போனாள்
அவனோ அவளை திட்டாமல் அமைதியாக இருந்தான்.
என்னங்க, காலைக்கு என்ன டிபன் பண்ணட்டும்ன்னு.. ஆர்டர் கொடுங்க.
நீ தானே இந்த வீட்டுக்கு எஜமானி, திருப்பதி எங்க அம்மா அப்பா ஊரில் இருந்து வருகிறது வரை உன் ஆட்சி தான் உன் இஷ்டப்படியே பண்ணு பிறகு அதுக்கும் எதாவது குறை சொல்லுவே
அப்படியெல்லாம் இல்லை.. எப்பவுமே நான் உங்க செல்ல நாயீ தான்.
மாடியில் இருந்து கலா சத்தமாகவே கேட்டாள் அண்ணி.. நீங்க அல்சேஷனா பொமரேனியனா...
உனக்கு என்னை கேலி பேசாம தூக்கமே வராதா...
அப்போது அவன் சொன்னான்..இது சில நேரம் அல்சேஷன் பல நேரத்தில் பொமரேனியன்..
அனைவருமே ஓரு சேர சிரித்தனர்...