யார் முன்னிலை தந்தையா தனஐயனஆ..

அன்பு என்பது ஓர் ஆண் பெண்ணின் உடலில் மீது கொள்ளவதல்ல.

வாலிப்பருவத்தை அடையும் முன்னரே சில ஆபாச படங்களை பார்த்து விட்டு, உடன் பயிலும் மாணவியின் மனதில் ஆபாசத்தை காதல் என்ற போர்வையில் பேசுவதல்ல காதல்.

காதல் என்பதில் உடல் என்ற ஓர் விஷயமே இருப்பதில்லை. காதல் என்பது இரே ஆன்மாக்களின் இணைப்பு.

புரியும் படி சொல்லுவதாக இருந்தால் ஒருவருக்கு வலி ஏற்படும் என்பதை அறிந்து அவருக்கு எந்த விதமான கஷ்டமும் வந்துவிடக்கூடாது என உதவி செய்வது.

எப்படி தந்தை தன் கையில் காசு இல்லாவிட்டாலும் தனது அன்பான செல்ல மகள் ஆசைபட்ட மிட்டாய்க்கு கடன் சொல்லி வாங்கி, அவளின் முகத்தில் சந்தோஷத்தை காண நினைக்கிறாரோ அதைப் போல்.

தன் தந்தையிடம் காசு இல்லை என்பதை அறிந்து எனக்கு இதெல்லாம் வேண்டாம் அப்பா..வா நம்ம வீட்டுக்கு போகலாம் அம்மா காத்துகிட்டு இருப்பா என்பாளே அது போன்றதே காதல்.

ஆனால் இங்கே சிலர் காதல் என்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவே முயல்கின்றனர். சிலர் அதில் வென்றும் விடுகின்றனர்.

அப்படி ஏமாற்றி திருமணம் செய்தவர்கள்,ஊரை ஏமாற்றி விடலாம். தனக்கு பிறந்த குழந்தைகளிடம் அவரின் ஏமாற்று வேலை நடக்காது.

தென்னையின் குருத்தில் தென்னையே விளையும் என்று ஓர் இறைநூலில் சொன்னதை போல். நல்லவனின் குழந்தை நல்லவனாக பிறக்கிறது நல்லவனாக வளர்கிறது.

பொய் பித்தலாட்டம் செய்து உலகை ஏமாற்றி வாழ்பவனின் குழந்தையும் அவனை விட பல மடங்கு வளர்கிறது.


இதில் இறைவன் நடத்தும் வேடிக்கை என்னவென்றால் ஊரை ஏமாற்றி சம்பாதித்தவனின் குழந்தைகள். வெளியே சென்று திருடாமல் தன்னை பெற்றவரிடமே திருடுவது தான்.

ஏனெனில் இறைவன் மிகப் பெரியவன்.

கோபத்தில் பேசும் மனிதர்கள் உண்மையாக வாழ்கிறார்கள்.தந்தை மகனிடம் கோபம் கொள்வதே நீயாவது என்னை மாதிரி வந்திடாம நல்லபடியா பிழைக்க கத்துக்கோடா என்பதால் தான்

ஆனால் இதை புரிந்து கொள்ள இயலாமல் தான் பல வீடுகளில் கருத்து வேறுபாடு வருகிறது.

அவரும்  கூட இன்னொரு இடத்தில் இதே விஷயத்தை தான் சொல்கிறார் என் பையனுக்கு ஏமாத்தவே தெரியலை அவனும் என்னை மாதிரியே ரொம்ப நல்லவனா இருக்கானே.. ஆனாலும் பாழாய் போன ஈகோ, மகனை பலர் முன்னிலையில் திட்டி அவன் ஓண்ணும் என்னை விட பெரியவனில்லை என்பதாக முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.


இந்த இருவரின் இடையே கிடந்து தந்தை தனையன் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யவும் முடியாமல், தீர்வு சொல்லவும் தெரியாமல் தங்குகிறாள் தாய்.

இருவரின் மனதிலும் ஓரே சிந்தைனை தான் இருவரில் யார் முன்னிலை.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...