எல்லாவற்றையும்
உதறி விட்டு
உண்மை பாசம் தேடி
உன்மத்தனாய்
ஊமையாய் ஊர்
சுற்றிய அனைவருக்கும்
சுதந்திர காற்றை
சுவாசிக்க வைத்து
தலைநிமிர்ந்து
நிற்கும் திராணியை
தேவைக்கு மீறி
வாரி வழங்கிட்டு
கற்சிலையென்றே
காட்சி கொடுக்கும்
வீரத்தின் விளைநிலமான
விஷ்ணு துர்க்கையே
தூரத்தில் நானிருந்தாலும்
துளி தண்ணீர் கண்ணில்
துளிர்க்கும் முன்னே
துடியாய் வந்தென்னை
காக்கும் தேவதையே.
வீழாமல் வாழும் வசதிதந்தவளே
பொருளை வெறுத்தவனின்
கைகளில் பொருளாளூம்
சக்தியை தந்தவளே
உன்னை தொழுகின்ற
தொழுகின்றேன் தாயே.
கண்ணிமை போல்
காத்திடும் பாளைநகரத்தில்
பாங்குடனே வீற்றிருக்கும்
விஷ்ணு துர்க்கையே
நீ தந்த இன்பத்திற்கு
ஈடு இணை ஏதுமுண்டோ.
No comments:
Post a Comment