விஜயகாந்த் பாசக்கார தலைவர்

அம்மாவின் பாசம்.. 

அப்பாவின் கோபம் 

தங்கைகளின் வேதனை.

நட்பின் இலக்கியம்.

பொய்யே பேசாமல் தெரியாமல் 

இந்திய வரலாற்றில் எதிர்கட்சி தலைவராக உருவான 

ஓர் உன்னத தலைவன்... 

தன் கட்சியில் இல்லாத 

மனிதருக்கு உதவும் 

ஓர் ஹானஸ்ட் ராஜ்..

கலைஞர் ஜெயலலிதா 

இருவரையும் எதிர்த்து 

அரசியல் ஆட்டத்தை 

தொடங்கிய  வீரமிக்க கேப்டன்.. 

செவாலியே சிவாஜிக்கு பிறகு

நீண்ட நெடிய உணர்ச்சிகரமான 

வசன உச்சரிப்பு..

ஆர்ப்பரிக்கும் கோபம்

உள்ளத்திலோ குழந்தையின் குணம்

அள்ளிக் கொடுப்பதில் 

இன்னொரு வள்ளல் 

கடந்த காலத்தில் 

வெள்ளம் பாதித்த பகுதியில் 

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு

கேமரா வெளிச்சம் காட்டாமல் இவர் செய்த உதவிகள்  ஏராளம் . 

நடிகர் சங்க

கடனை அடைத்து 

முதுபெரும் 

அரசியல்வாதிகளின்

வயிற்றில் புளியை

கரைத்தவர்.

பொய்யே பேசாமல்

உண்மையை தைரியமாக பேசி

எதிர்கட்சி தலைவராக

அரியணை ஏறிய கள்ளழகர்

உங்களின் உடலுக்குத் தான்

மறைவு.. என்றும்

வாழ்வீர்கள் எங்களின் 

நெஞ்சங்களில் அன்பு கேப்டனாக..

ஆழ்ந்த இரங்கல்கள்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...