சாமி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா குழந்தைகள் எத்தனை

இந்த உலகத்துல நீங்க ஆண் /பெண் எவ்வளவு தான் பெரிய புத்திசாலியா இருந்தாலும் மத்தவங்க கவலை.. ஏன் அந்த பையனுக்கு பெண்ணுக்கு கல்யாணம் ஆகலை.

வேற ஏதாவது ஓர் சங்கதியா இருக்குமோ.. இருக்கும் இருக்கு, இந்த உலகத்துல நல்லவனா நடிக்கிற முக்கால்வாசி பேர் அயோக்கிய பயலுக தான் என்று சால்ஜாப்பு வேறு.

உலகம் நீங்க நல்லவராக வாழும் ஓவ்வொரு நாளும் உங்களை உரசிப் பார்க்கும்.

ஆனால் எல்லா அயோக்கியதனமும் செய்தவனை..அட அவரை மாதிரி ஆளு உண்டா என்று வானளாவ புகழும்.

உலகம் இப்படித்தான்.


ஓர் வேளை கல்யாணம் செய்யாமல் உலக நன்மைக்காக பிறவியெடுத்த மக்களுடன் மக்களாக வாழ்ந்த அந்த அந்த கடவுளே இன்றைய தினம்.உயிர்பெற்று வந்தால் கூட.

கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்‌ அவருக்கு உலகம் கேட்கும் முதல் கேள்வி.

சாமி உங்க காலத்துல தான் ஓருத்தன் பத்து பொண்டாட்டி கட்டினாலும் தவறு இல்லையே.பிறகு ஏன் நீங்க கல்யாணமே பண்ணாம இருந்துட்டீங்க. அதுசரி இனியாவது காலாகாலத்துல கல்யாணம் பண்ணுங்க. எங்க சொந்தகார பொண்ணு ஓண்ணு இருக்கு . அவங்க அப்பன் பெரிய குடிகாரன் காசு எதுவும் பெருசா சேர்த்து வைக்கலை.. நீங்க சம்மதம் சொன்னா நான் வேணா போய் உங்களுக்காக பேசட்டுமா என்று கூட கேட்கும்.

ஏதோ கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருப்பது போலவும். கல்யாணம் ஆகாதவன் கஷ்டப்படுவது போலவும் உலகம் பூச்சாண்டி வேலை காட்டுகிறது.

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் கோவிலுக்கு போனால் படிப்பு வந்துடும் வேலை கிடைச்சுடும் கல்யாணம் ஆகிவிடும் என்று தான் சொல்லி கேட்டு இருப்போம்.


சென்ற வாரம் ஓர் கோவிலுக்கு போன இடத்தில் அந்த மனிதர் சொன்னார்.உங்க வீட்டில் வயதானவங்க படுத்த படுக்கையில் இல்லாம நிம்மதியா போய் சேர இங்கே பரிகாரம் பண்ணுறோம்  என்று.

இதை கேட்ட பிறகு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் இது கிராமத்து கோவில் உங்களைப் வருபவர்கள் எதாவது செய்தால் தான் உண்டு என உண்மையை சொல்லுங்கள்.

அதை விடுத்து, கடவுளை ஏதோ கமிஷன் வாங்கி விட்டு வேலையை முடித்து கொடுக்கும் வியாபாரி போல் சித்தரிக்க வேண்டாம்.

இந்த நடைமுறை எல்லா மதங்களிலும் இருக்கிறது என்பது பிற மதத்தை தழுவ நினைத்து அங்கே சென்று அங்கேயும் இதே கூத்து நடப்பதை பார்த்தால் புரிகிறது.

கடவுளின் அருகில் இருந்தும் அவருக்கு காசு ஆசை விடவில்லை என்பது 




கடவுள் என்பவர் என்ன  கமிஷன் கடை ஏஜெண்ட் போல் பேசிய அந்த மனிதர்.



உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா குழந்தைகள் எத்தனை என்பதை பற்றி தான் 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...