நான் ஓர் அனாதை

Story writing @ Work-in-progress

 தனக்கு யாருமே இல்லை என்பவன் எப்படி தலைவனாக மாறுகிறான் என்பதே கதை களம்...

பேச்சியம்மா...

 Story writing @ Work-in-progress

ஓர் ஏழை சிறுமி ஆசையுடன் வாங்கும் செம்மறி ஆடு பற்றிய கதை...

I love my RAM

Story writing @ Work-in-progress

பல நாட்களுக்கு குழந்தை இல்லாத ஓர் பெண்ணின் படும் வேதனைகளை சொல்லும் கதை....

மலடி என்று அழைத்தவளை ராம் அம்மா இவங்க தான் என்று உலகம் அழைக்கும் ஓர் அற்புதமான கதை....

குளிக்க போறீயா...

தாயும் தந்தையின் இருவரின் உலகமான ஓர் குழந்தை.....

அவர்களின் அன்பை புரிந்து கொள்ளாமல் தன் செல்ல நாய்க்குட்டி மட்டும் போதும் என்பதே இந்த கதை...

தன்னை பெரிய மனுஷியா நினைக்கும் குழந்தையின் உன்னத உலகம்...


ஓர் சிறு குழந்தை தன் செல்ல நாய்க்குட்டிக்கு தன்னையே ஒர் தாய் என்று நினைக்கும் நினைவு கதை கரு..

இவ்வளவு தான் வாழ்க்கை

 வாழ்க்கை என்பது இரண்டு வகை ஓன்று விஷ்ணு தத்துவம்...

மற்றொன்று சிவ தத்துவம்....

பெண் ஆணை அதிகமாக காதலித்தால் கணவனின் எல்லா செயலையும் ஏற்று கொள்வாள்... ( அவர் சரியான தத்தி நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்)

ஆண் பெண்ணை அதிகமாக காதலித்தால் பெண்ணின் எல்லா செயலையும் ஏற்றுக்கொள்வான்...( என் வீட்டுக்காரி சரியான கோவக்காரி, என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும்) 

இவ்வளவு தான் சார் வாழ்க்கை... 


குட்டி தேவதை


வாகனங்கள்

வேகமாக செல்லும்

நாற்கர சாலையில்

வளைந்து நெளிந்த

சாலையின்

மேம்பாலத்தின் கீழே

வேப்பமரத்து நிழலில்

அப்பனுக்கு துணையாக

வியாபாரம் செய்கிறாள்

குட்டி தேவதை...

சின்னஞ்சிறு அரக்கு

பாவாடை மஞ்சள் நிற

ரவிக்கை சட்டை..

மெளனமாய் சிரித்தே

அனைவரின்

முகத்திலும்

அன்பை பரப்புகிறாள்

நெற்றியிலே குங்கும பொட்டு

இந்த குட்டி தேவதை...

மாபெரும் பங்களாவின்

அனைத்து சுகத்தையும்

அனுபவித்து விட்டு...

பால்கனியில் வந்து

நின்று கையசைக்கும்

வேடதாரி போல்

அல்லாமல் இயல்பாய்

பேசுகிறாள்...

பணக்கார தோரணையில்

இருக்கும் மனிதரின்

மனதிலும் பாசத்தை

விதைத்து விடும்...

ஆற்றல் கொண்டவள்

இந்த சின்னஞ்சிறு

குட்டி தேவதை...

கீச்சு குரலில்... கேட்கிறாள்...

தன் குடும்பத்தின் ஏழ்மை

மறந்து வாழ்ந்துவிட துடித்தபடியே

அடிவயிற்றில் இருந்தே

வருகிறது அந்த

அற்புதமான கீச்சு குரல்...

தனக்காக தகப்பன்

ஆசையாய் வாங்கி வந்த

கிரீம் பிஸ்கட்

பாக்கெட் டாமியுடன்

பகிர்ந்து சாப்பிட்டுகிறாள்

உனக்கு ரொம்பவே

பசிக்குதா "டாமி" என்றபடி

ஓற்றை பிஸ்கட்

விழுங்கி விட்டு

மீதியை டாமிக்கு

கொடுத்தபடியே....

தன் தாய்மையை

டாமிக்கும் புரியவைத்தாள்

அருகே வந்த கொகுசு

காரின் கண்ணாடிகள்

இறங்கும் முன்னே... தன்

கீச்சு குரலில் கேட்டாள்...

சார் இளநீர் வேணுமா

இளநீர் வேணுமா....

கீச்சு குரலுக்கு

ஒத்திசைவு தருகிறது

மரத்தின் மீதிருந்தே.

குயில்களும் ஏனென்றால்

பேசுவதே...

குட்டி தேவதை..

நான் ஆதரிக்கிறேன்

 நான் ஆதரிக்கிறேன்.

( அரசு கொண்டு வரும் சட்டத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும், கருத்துக்களை சொல்லுவதும் ஜனநாயகத்தின் உரிமை.உங்களுக்கு என் கருத்தில் மாறுபாடு இருந்தால் சொல்லுங்கள்.)

எந்த ஜாதியில் பிறந்தார் என்பது முக்கியம் அல்ல...

மனதூய்மையும், மன அமைதியும் தேடுவோரும்....

மக்கள் சேவையே மகேசன் சேவையாய் நினைப்போர் அனைவரும் கோவில் அர்ச்சகர் பணி செய்யலாம் பெண்களுக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பெண்களும் வழிபாடு செய்ய வழி வகுத்த மேல்மருவத்தூர்  கோவில்....

பெண்கள் கோவிலில் பூஜை செய்ய கூடாது என்ற விதி எங்கே உள்ளது....

மயிலை கற்பகாம்பாள் சிவபூஜை செய்தார்...

சீதா தேவி தன் கைகளால் செய்த மணல் லிங்கமே இராமேஸ்வரம் கோவில் கற்பக்கிரகத்தில் உள்ளது...

சிவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் ஓர் பெண் என்பதை மறக்க வேண்டாம்...

வீட்டில் விளக்கேற்ற மருமகள் வர வேண்டும், அப்போ தான் வீடு செழிக்கும் என்பதே பேச்சு வழக்கு...

பெண்களுக்கு போலீஸ் வேலை சரிவராத என்று முதலில் எதிர்ப்பு வந்தது....

இப்போது அந்த துறையில் அவர்கள் சாதித்து ராணுவத்தில் இடம் பெற்றனர்....

பெண் பூஜை செய்வது பாவம் என்பவர்களே... நம்மை பத்து மாதம் கருவறையில் சுமந்தவள்...

நிச்சயமாக சிறந்தவளே....

சாக்த வழிபாட்டில் எல்லா பெண்களையும் பராசக்தியின் வடிவாக கண்டவர் எழுதியதே அபிராமி அந்தாதி


By ...

Raman Sankar

https://dhenaliraman.blogspot.com

Kiss pannu

இப்போ நான் சொல்லுறதை கேட்க போறீயா இல்லையா... 

கோபத்துடன் அம்மா பேசும் பேச்சிற்கும் தனக்கும் எதுவுமே சம்பந்தம் இல்லை என்பது போல டி.வியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ..ஹேமா...

ஏண்டி உன்னை தானே கேட்குறேன்...

காது கேட்குதா இல்லையா....

நான் என்ன உங்க அப்பன் மாதிரி செவிடு போல நடிக்கிறவ இல்லை....

இந்த வார்த்தையை கேட்டவுடன் அவளுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறியது.... அருகே இருந்த தண்ணீர் டம்ளரை அவளை நோக்கி வீசினாள்.....

கையில் இருந்த துண்டால் சச்சின் சிக்ஸர் அடிப்பது போல துண்டை சூழற்றினாள்....

ஆனால் ஏனோ ஓப்பனிங் பேட்ஸ்மேன் போல டம்ளரை தடுக்க முடியவில்லை...அது வசமாக அவளின் காலில் பட்டது....

வரவர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா போச்சு.... பெத்த பிள்ளே மேலேயே வீசுறீயே...

3 வயது குழந்தைக்கு தன் பேசும் பேச்சில் உள்ள தவறு தெரியாமல்.. தன் அம்மாவிடம் சொல்லி காட்டிய வார்த்தை அனைத்தும் மாமியார் மருமகள் பேசிய பேச்சுக்கள்...

ஹேமா கோபத்தில் மேலும் கத்தினாள்... ஏண்டி எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம்..நீ இதுவும் பேசுவே.. இதுக்கு மேலேயும் பேசுவே......

அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு ஆபிஸ் முடிந்து வந்த களைப்பில் சோஃபாவில் அமர்ந்தான்....

அப்பா ஓடிப்போய் அவனின் முதுகில் சாய்ந்தாள்.... இன்னிக்கு எனக்கு என்ன ஸ்பெஷல் என்ற வைஷ்ணவியிடம்....

நீதான் செல்லும் ஸ்பெஷல் அன்று கன்னத்தில் முத்தமிட்டான்....உடனே தன் தாயை நோக்கி கைகளை நீட்டி உனக்கு தைரியம் இருந்தா..இதே மாதிரி செய் பார்ப்போம்..

டி.வியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா நமட்டு சிரிப்பு சிரித்தார்...

கவனிச்சியா..உமா...நீ பேசுற வசனத்தை ஓண்ணு விடாம மனப்பாடம் பண்ணி வைச்சுக்கிட்டு..உன்னை மாதிரியே அவள் கிட்ட சண்டை போடுறா பாரு....என்ன குழந்தைக்குஇ எதை எப்போ பேசணும்னு தெரியலை ஆனா உன்னை போல ...

நீங்க சும்மா இருங்க மாட்டீங்க போலையே.. நாங்க சண்டை போட்டு மூணு நாள் ஆச்சு....




100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...