744- நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லை

பொறுப்பு துறப்பு. 


இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.. இதைப்போன்ற நிகழ்வு யாராவது ஒருவரின் வாழ்வில் நடந்து இருந்தால் அது தற்செயலானதே அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்.


கதை தலைப்பு....நீங்க ஏன் இன்னும் ஏன் 

 இந்த கேள்வியை ஓர் பத்திரிகையாளர் தமிழகத்தின் பெரிய அரசியல்வாதியிடம் கேட்டார் .ஓர் காலத்தில் அம்மா தம்பி படிப்பு இது தவிர வேற எதுவுமே தெரியாது.. இவங்க  என்னிடம் எதுவும் எதிர்ப்பார்த்ததே இல்லை...லவ்ன்னா ஏதோ எதிர்த்து தான் பழகுவாங்க.. அம்மாவை போல் அன்பு காட்டுற ஒருத்தரை தான் தேடினேன்..ஆனா விதிவசம்.. எல்லோருக்கும் என் உடல்,அறிவு, பணம் மீது தான் காதல் வந்துச்சே தவிர என்னை யாரும் காதலிக்கலை மேலும் அவங்களுக்கு காதல் என்ற பெயரில் தான் சொன்னதை கேட்டு நடக்கும் அடிமை தான் தேவைபட்டாங்க.. எனக்கு யாருக்கும் அடிமையா வாழ்வதில்லை இஷ்டமில்லை. சில நாள் எனக்கு யாருமில்லையே என அழுதுஇருக்கேன்.. ஆனா இன்னிக்கு என் மீது நான் நினைச்சதை விடவும் பாசத்தை கோடிக்கணக்கான மக்கள் காட்டுறாங்க.. என்னை பார்த்தவுடனே காலில் விழும் மனிதரை தான் உங்களுக்கு தெரியும்..நிறையபேர்..என்னை பார்த்தவுடனே ஏதோ கடவுளை பார்த்த மாதிரி கண்கலங்கி தன்னோட கஷ்டத்தை சொல்லி அழுது இருக்காங்க..நான் இப்போ பெரிய பதவியில் இருந்தாலும் அவங்க எல்லோரோட கஷ்டத்தையும் போக்க முடியலை.. இருந்த போதும் அவங்க என்மேல் இன்னும் பாசமா தான் இருக்காங்க.. அப்போது செய்தியாளர் கேட்டர்..நீங்க பெரிய பதவியில் இருக்கீங்க உங்களால் எது நினைச்சாலும் நடக்குமே.. அதற்கு அவங்க ரொம்ப அருமையாகவும் அழகாகவும் பதில் சொன்னாங்க.சில நாட்கள்.தொடர்ந்நு ஓர் ஓர் மூதாட்டி வந்துட்டு இருந்தாங்க... அவங்களை பத்தி யாராலும் எந்த செய்தியும் சேகரிக்க முடியலை.. ஆனால் தன்னோட மகன் மருமகள் கைவிட்டு விட்டதாக சொல்லி இருக்காங்க.. எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு 

.ஓரே சேலையை கட்டிகிட்டு அந்த அம்மா தினமும் நான் காரில் போகும் போதும் வரும் போது கைகூப்பி கூப்பிட மாதிரியே இருப்பாங்க..எனது பாதுகாவலர்கள் போய் விசாரித்த போது கூட அவங்க.. என்னை பார்த்தா போதும் என்று தான் சொல்லி இருக்காங்க.

என் மனசுக்காள் ஏதோ பண்ணுச்சு அவங்களை சந்திக்க சம்மதித்தேன்... என்னை பார்த்தவுடனே ஓடி வந்து கட்டி பிடிச்சு கண்ணீர் விட்டு அழுதாங்க... எப்பவுமே என்னை விட்டு செக்யூரிட்டி பத்து அடி தள்ளி தான் நிப்பாங்க.. அவங்களுக்கு வேற விஷயம் பயமா இருந்துச்சு அவங்களை அப்புற படுத்த நினைப்பாங்க ஆனா என் மனசுக்குள்ள இவர்களால் நமக்கு எந்த பாதுகாப்பு குறையும் வராதுன்னு திடமா நம்புனேன்...

சில நிமிடங்கள் அழுதவங்க தன்னோட மகன் மகள் மருமகள் சொந்தம் எதுவுமே தனக்கு உதவலை என்று சொன்னாங்க..சரிம்மா அவங்க பெயரை சொல்லுங்க நான் உங்களை உங்கள் குடும்பத்தோட சேர்த்து வைக்கிறேன் என்று சொன்னேன்.அவங்க சொல்ல மறுத்தாங்க... என் பையன் பெயரை உங்களால் அவனுக்கு ஏதாவது கெடுதல் வந்துட கூடாது என்று சொன்னாங்க.. இங்க பாருங்கம்மா நான் உங்க பையனுக்கு கெடுதல் செய்ய மாட்டேன் என்ற போது அவங்க தயங்கி தயங்கி அந்த பெயரை சொன்னாங்க.... எனக்கு கீழே முக்கிய பொறுப்பில் இருந்தவர் அவர்.. எனக்கே ஆச்சரியமாக போச்சு.. நான் உடனே சொல்லுறேன் என்றவுடன் இல்லம்மா.. நீங்க சொன் தான் என் மகன் என்கிட்ட பாசமா இருக்கிற மாதிரி நடிப்பானே தவிர அது உண்மையான பாசமா இருக்காது... ஓர் வேளை நானும் உங்களை மாதிரியே வாழ்ந்து இருந்தா என்னை தேடியும் ஏதாவது ஓர் பாட்டி இப்படி வந்து பேசி இருக்கும் தானே.. என்னோட பதவி பட்டம் அந்தஸ்து என்கிற எந்த பயமும் இல்லாம ரொம்ப யதார்த்தமான பேசிய அந்த கிராமத்து பெண்மணி... ஏதாவது வேணுமா என்ற போதும் உங்களை பார்த்தே போதும் இனிமே நான் சாகுற வரைக்கும் இந்த நினைப்பே போதும் என்றாங்க... பிறகு வற்புறுத்தி சொன்னதாலே கொஞ்சம் பழம் மற்றும் ஸ்வீட் மட்டும் வாச்கிட்டாங்க.. நீங்க இந்த வயசான காலத்துல கஷ்டப்பட வேண்டாம். நான் கார் ஏற்பாடு பண்ணுறேன் என்றது.. நீங்க கார் ஏற்பாடு பண்ணி வீட்டுக்கு அனுப்பினா எனக்கு பெருமையா தான் இருக்கும் ஆனா இப்போ கிடைக்கிற மரியாதை கூட பிறகு நான் பெத்த மகன் தரமாட்டேனே என்ன செய்யுறதுன்னாங்க.. நீங்க யார் கூட வந்தீங்க.. வீட்டுல குலதெய்வம் கோவிலுக்கு போற தான் சொல்லிட்டு வந்திருக்கேன்.. இந்த வயசான காலத்துல பொய் சொல்லாமா அது தப்பில்லையா...

நம்ம குறையை கேட்குறது தானே குலதெய்வம் பதிலுக்கு அது பேசினாலோ பேசாமலே இருந்தா கூட நாம அவங்களை மனசுல கூம்பிட தானே செய்வோம்.நம்ம மனக்குறையை இறக்கி வைக்கிற இடம் தானே கோவில்..சாமி பேசவே பேசாது நம்ம குறையை கேட்டு வைச்சுக்கும்.. அதுக்கு நம்மை விட ரொம்ப அறிவு ஜாஸ்தி.. நான் பஸ்ல போறேன் என்று கிளம்பி போனாங்க.. ஓர் வாரம் கழிச்சு நான் அவரை கூப்பிட்டேன்.. நான் உங்க வீட்டுக்கு வரணும் என்ற நாலைஞ்சு வருஷமா என்னோட P.A கிட்ட நேரம் கேட்டதா சொன்னாரே உண்மைதானா கேட்டேன்.. அவர் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து.. நீங்க என்னை வயிற்றில் சுமக்காத தாய்... நீங்க வந்தா எங்க வீடே சுபிட்சம் ஆகும் என்று கண்ணீர் விட்டு அழுதார்.. எனக்கு அவங்க அம்மா சொன்ன ஓவ்வொரு சொல்லும் நினைவு வந்துச்சு.. தயாராக இருங்க.. நான் ஓர் நாள் உங்கள் வீட்டுக்கு வருவேன்.. உங்க அம்மா அப்பா மற்றும் குடும்பத்தில் உள்ள எல்லோருடனும் சேர்ந்து ஓர் நாள் மதிய உணவு பண்ணுற மாதிரி ஏற்பாடுகள் பண்ணுங்க என்றேன்.பதிலுக்கு எப்போ எந்த நாள் என்று கூட கேட்காம சரிங்க உங்க உத்தரவுன்னு கிளம்பி போனார்.. எனக்கு சிரிப்பா வந்துச்சு ஓர் வேளை இதே மாதிரி இவங்க அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தா நீங்க எப்போ வருவீங்க உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று பல கேள்விகள் கேட்டு இருப்பாங்க ஏன்னா அது உண்மையான அன்பு...இவர் ஏதோ பதவிக்காக கூழை கூம்பிடு போடுறாரே தவிர உண்மையான அன்பு கிடையாது..

இரண்டு வருஷம் கழிச்சு அவங்க மாவட்டத்தில் ஓர் நிகழ்ச்சிக்கு போகும் போது அவங்க வீட்டுக்கு போறதா ஏற்பாடுகள் செய்யப்பட்டது..


 அவங்க அன்று காலையில் இருந்தே அவங்க அம்மா எனக்காக காத்து இருந்திருக்காங்க.. ஏதும் சாப்பிட இல்லை என்று வீட்டில் உள்ளவங்க எல்லாம் சொன்னாங்க... நீங்க ஏன்ம்மா சாப்பிடலை என்று கேட்துக்கு..வயசாயிடுச்சுல்ல அதனால் ஓர் வேளை சாப்பிட்டாலே பிறகு சாப்பிட கஷ்டமாகுது.. நீங்க வருவதா பையன் சொன்னான் அதான் உங்களோட சாப்பிடணும் என்று காத்து கிடந்தேன்... நான் சாப்பிடும் போது கூட உட்கார்ந்து கவனிச்சாங்க.. அவங்க கூட தனியி பேசணும் என்று சொன்னவுடனே அவங்க வீட்டில் உள்ள எல்லோருமே பயந்தாங்க.. எங்க அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு அவங்களுக்கு சரியி பேச தெரியாது உங்க மனசு கஷ்டபடுற மாதிரி ஏதும் பேசிட கூடாதுன்னு 

ஓர் பார்வை நான் பார்த்தவுடனே எல்லோரும் எங்களை தனியா விட்டுட்டு தள்ளி போனாங்க..


என்னம்மா இப்போ உங்க பையன் உங்களை நல்லா பார்த்துக்கொள்ளுறாரா...

உன்னை பார்த்துட்டு வந்து ஓர் மாசத்துக்கு பிறகு தான் என் பையன் என்கிட்ட வந்தான் அப்போது இருந்து என்னை பழைய மாதிரியே பார்த்துக் கொள்கிறான்... ஆனாலும் மனசுல ஓர் சின்ன வருத்தம்..


என்னம்மா சொல்லுங்க... உன்னை வந்து பார்த்துட்டு வந்து நான் செஞ்ச தப்பு போலே..


ஏன்ம்மா இப்படி சொல்லுறீங்க.

நீங்க வீட்டுக்கு வருவதா சொன்ன பிறகு தானே என் பையன் என்கிட்ட பாசமா இருக்க ஆரம்பிச்சான் இன்னிக்கு நீங்க வந்துட்டீங்க.. நாளையில் இருந்து என் மகன் திரும்பவும் பழையபடி ஆயிட்டா.

அந்த அம்மா சொல்லவும் எனக்கு பயம் தூக்கி வாரிபோட்டுச்சு..ச்சே இந்த விஷயத்தை நான் யோசிக்கவே இல்லையே.

அப்போ அந்த அம்மா சொன்னாங்க.. ஓர் வேளை என்னோட பையன் பழையபடி மாறினாலும் நான் கஷ்டப்பட மாட்டேன்.. ஏன்னா அன்னிக்கு பிச்சைகாரி மாதிரி ஓரே சேலையை கட்டி கிட்டு உங்க வீட்டு வாசலில் வந்து நின்ன போது.. எத்தனையோ பணக்காரங்க உங்களை பார்க்க காத்து கிடந்த போதும் நீங்க என்னை கூப்பிட்டு பாசமா பேசுனீங்களே அந்த அன்பு ஓண்ணு போதும் தாயே...அப்படன்னு சொல்லிகிட்டே என்னோட கன்னத்தில் முத்தம் கொடுத்தாங்க அந்த நிமிஷத்துல என்னை பெத்த தாய் முத்தம் கொடுத்தது போல் இருந்துச்சு...


தெரிஞ்சோ தெரியாமலோ என்னை பார்க்க வந்தவங்க குலதெய்வம் கோவிலுக்கு போறதா பொய் சொல்லிட்டு வந்தாங்களே....

அடுத்த நாள் அவரை என்னோட அலுவலகத்தில் கூப்பிட பேசினேன்.. உங்களின் அம்மா ஓவ்வொரு நாளும் நீங்க நல்லா இருக்கணும் என்று பிராத்தனை பண்ணுறாங்க அவங்க எனக்கு கூட சில ஆன்மீக விஷயங்களை சொல்லி தந்தாங்க..அவங்களை நல்லா பார்த்துக்கோங்க என்று அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்துட்டு சொன்னேன்...உங்க அம்மா ஆசிர்வாதம் இருந்தா நீங்க இன்னும் பெரிய இடத்துக்கு வருவீங்க என்று..

..

ஓர் வகையில் பார்த்தால் இது தான் அன்பு... இதே மாதிரி நிறைய நிகழ்வு என் வாழ்வில் நடந்து இருக்கு..  சிரித்தபடியே சொன்னவரின் வசனங்கள்... 




743 மும்மொழி கொள்கை

 கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை கூட வாங்காத தயாநிதி மாறன் அவர்களுக்கு ஏன் M.P Seat..

ஏன்னா எங்களுக்காக பாராளுமன்றத்தில் ஹிந்தி நன்கு பேசவும் எழுதவும் தெரிந்த நம்பிக்கையான நபர் தேவைப்படுகிறார் அதனால் தான் என்றார் கலைஞர்..

ஹலோ எனக்கு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மூணு மொழியும் தெரியும்.. ஆனால் நான் எழுதும் கதை கவிதை எல்லாமே தெனாலிராமன் என்ற பெயரில் தமிழில் தான் எழுதுகிறேன்..

தேசிய மொழி படிச்சா மாநில மொழி அழியும் என்று சொல்வது அபத்தமானது.உங்களுக்கு புரியுற மாதிரி சொன்னா..நான் ஹிந்தி படிச்ச பிறகு தான் தமிழ் மொழியில் எழுதணும் என்ற ஆர்வமே வந்தது.


ஹிந்தி சொல்லி கொடுக்க ஆசிரியர் இல்லை என்று எல்லாம் தயவுசெய்து சொல்லாதீங்க.. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஆங்கில பள்ளியில் படித்தவர்களுக்கும் மூணு மொழியும் நல்லாவே தெரியும்.நாலாயிரம் வருஷம் பழைய இதிகாசங்கள் பேசும் எங்களை நீங்கள் பழமைவாதி என்றால்..50 வருஷத்துக்கு முன்னாடி ஹிந்தி வேண்டாம் என்று சொன்னதை கடைபிடித்தால் இது பழமைவாதம் ஆகாதா..


ஆங்கிலம் படிப்பதால் தான் தமிழர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொல்பவர்களே.. it.industry-ல் வேலை பார்க்கும் பல நபர்கள் வடநாட்டை சார்ந்தவர்களும் இருக்காங்க..

தயவுசெய்து ஏழை எளிய குழந்தைகளின் படிப்பை இனியும் உங்களின் அபத்தமான கொள்கை என்ற பெயரால் சிதைக்க வேண்டாம்...


அவங்களுக்கு ஹிந்தி வாத்தியார் வேலை உடனே அரசு கொடுத்தால் கூட அவங்க நல்லாவே பாடம் நடத்துவாங்க..

742 - அப்பாவ தொந்தரவு பண்ணாதீங்க

 மாமனார் மரியாதையை எதிர்பார்க்கிறார் 

மருமகன் நன்மதிப்பை 

எதிர்பார்க்கிறான் சம்பந்தி ஆலோசனையை எதிர்பார்க்கிறார்.

தங்கையோ நகையை 

எதிர்பார்கிறாள் மகனும் மகளும் எல்லையற்ற பாசத்தை தன்னை பெற்றவருக்கு கொடுத்துவிட்டு அவர்களின் முகத்தில் 

சந்தோஷத்தை எதிர்பார்க்கின்றனர்..

அன்பான மனைவியோ அறுசுவை 

உணவை செய்து கொடுத்துவிட்டு 

எனது வாய் வார்த்தை கேட்க எதிர்பார்க்கிறாள் என்ன செய்வது 

சில நேரங்களில் உலகத்திடம் 

காட்ட இயலாத கோபத்தை காட்டுகிறேன்...  கவலையை 

மறக்க மதிய தூக்கத்தை தழுவியவன்.

தூக்கம் கலந்து சற்றே தலைநிமிரும் போது மனைவி மகன் மகளுக்கு  இடையே நடக்கும் ரகசிய ஆலோசனை காதில் விழுந்தது.... நீங்க அப்பாவை 

ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க 

அப்பாவுக்கு நம்ம எல்லார் மீதும் 

ரொம்பவே பாசம் அதிகம் அதனால் 

தான் தன்னோட கவலையை 

நம்மகிட்ட சொல்ல மாட்டேங்குறார்...

நீங்க அப்பா திட்டினா கேட்டுக்கோங்க 

எதிர்த்து பேசாதீங்க...ஏனோ கண்கள் 

கலங்குகிறது....இவர்களையோ 

திட்டினேன்.. நினைத்துப் பார்க்கிறேன் 

எனது அம்மா என்னிடம் சொன்ன 

அதே வார்த்தைகள் நம்ம அப்பாவை 

தொந்தரவு பண்ணாதீங்க....

நம்ம அப்பா ரொம்ப பாவம் பிழைக்க தெரியாத மனுஷன் அவருக்கு நம்மை விட்டா யாரு இருக்கா 

741 - கவிதை தலைப்பு - எங்கிருந்தோ வந்தவளே

எங்கிருந்தோ வந்தவளே....

இதயத்தில் நுழைந்தவளே...

தூணின் மறைவில் நின்று

தூரமாய் ரசித்தவளே...

தோல்வியில் துவண்டு..

காதல் ஏதுமின்றி 

கற்சிலையாய் கிடந்தவனை....

கற்கண்டாய் மாற்றியவளே...

பெற்றவர்களின்

நடுவே நடந்துவரும்

பெண் போல் அல்லாமல்...

தன்னந்தனியாக வந்த தாரகையே..

வாருங்கள் என்றவுடன்

தயங்காமல் வந்தாயே...

என் மீது உனக்குத்தான்

ஏன் இந்த நம்பிக்கை...

வலப்பக்கம் வந்து நின்று

மயில் வாகனத்து வேலவனை

வணங்கிய கண்மணியே...

மனதினுள்ளே எத்தனை 

தேடல்களோ நான் அறியேன்...

தேவை தான் புரிகிறது என்று 

சொல்லி விட்டாயே...

எதுவுமே தேவையில்லை

என்றே சுற்றியவனை....

சிந்திக்க வைத்தாயே...

தேவைகள் புரிந்த பின்னே

தேடுகிறேன் தேவதையே...

உள்ளத்தின் அன்பு

அதை தானே தேடுகிறேன்..

எத்தனை எத்தனையோ...

மனிதர்கள் கண்ணெதிரே....

ஆனாலும் உன்னை போல்

ஓருவருமே இல்லையடி..... கண்மணியே.

எதிர்பார்ப்பு ஏதுமின்றி

உடன் வந்த தேவதையே...

தேனீர் கடை போகலாமா... அல்லது

சாப்பிட போகலாமா

இருவருமே கேட்கவில்லை...

கண்மூடி இருந்தவனின்

கண்களை அன்பெனும்

நம்பிக்கை கொண்டு திறந்தாயே...

காதல் என்பதே நம்பிக்கையின்

தொடக்கம் தானே... மஞ்சள்

நிற சுடிதாரில் வந்த

மஞ்சள் நிற தேவதையே... அன்றுமுதல்

நானும் கூட காவியை

கிழத்துப் போட்டு

மஞ்சளுக்கு மாறிபோனேன்...

தேடல்களை தேடிப் போனேன்...

.

.

கவிதை என்பதே கற்பனையின் வெளிப்பாடு...

இந்த பதிவு முழுவதும் ஓர் கற்பனை பதிவே.இதை யாராவது உண்மை என்று நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல....

.

கற்பனைகளை நிஜம் போல எழுதுவதே காவியம்... மாபெரும் கவிஞன் காளிதாசன்..எழுதியதே சகுந்தலை என்னும் காவியம்...


.

பாரத நாட்டின் காவியங்களை மொழிபெயர்ப்பு செய்வது பெரிய வேலை. இராமாயண மகாபாரத கதைகளை சொல்ல நான் ஒன்றும் வித்வான் அல்ல.. படித்தேன் புரிந்ததும்...

இந்திய புராணங்களும் இதிகாசங்களும் மீண்டும் மீண்டும் சொல்லுவது ஓன்றே விதி அதன் படியே உலகம் இயங்குகிறது...

கர்மா, உயிர்,ஆன்மா, மறுபிறப்பு, இதை பற்றி சொல்லி புரிய வைப்பது கடினமான செயல்...

காதல் கதையும் கவிதையும் எழுதுங்கள்..

காதல் ஓன்றே அனைத்தும் புரிய வைக்கும் ஏனெனில் 

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது

நாதன் நாமம் நமசிவாயவே"

.


உணர்ந்து பாருங்கள்..அன்பே சிவம்..

740 - முருகா நீயே துணை

கவலையோடு 

வந்த பலர் கந்தா..முருகா...

இனி நீயே துணையென்றே

தன்னை மறந்து தும்பிக்கையை 

தெய்வத்தை முதலில் தொழுதே 

பின்னர் சிவனின் 

தவப்புதல்வனை நினைந்து 

கடலில் முழ்கி 

எழுந்து போது காதுகளில் 

ஒலிக்கிறது யாரோ சொல்லும் 

வார்த்தை என்னங்க நம்ம 

முருகனை எல்லா பிடிச்சுக்கோங்க...

நமக்கு எல்லாமே அவன் தானே 

திருப்பிப் பார்த்தேன்.

பல வருடங்களாக குழந்தை 

இல்லாம இருந்தவளுக்கு 

முருகன் கொடுத்த வரம் 

பதிலுக்கு யாரோ பேசிக்கொண்டனர்.

உணர்ச்சிகள் மேலிட மனதின் 

எல்லையற்ற கவலையை கடலில் 

கரைக்கும்  பல்லாயிரக்கணக்கான 

மனிதரின் நானும் ஓர் சாதாரண 

சராசரி எண்ணம் கொண்ட 

பரந்தாமன் மருமகனின் பக்தனாக...

நனைந்த உடையுடன் 

கரையில் ஏறும் போது 

ஏறிட்டுப் பார்த்தேன்.

தலைநிமிர்ந்து நிற்கும் 

ராஜகோபுரம்... சந்தோஷத்தின்

மிகுதியில் சஞ்சலங்கள்  மறைந்தது 

மதிய வேளையில் மணலின் 

சூடு கூட சுகமாகவே இருந்தது...

கோவிலிலுக்குள் நுழையும் 

முன்பே ஆர்ப்பரித்த மக்கள் சிலர் 

"முருகா முருகா " வழி விடுங்க 

தங்க தேர் வருது.. 

தங்கத் தேர் வருது..சோதனை 

ஓட்டமாக மதிய வேளையில் 

மயிலேறிய வேலன் சப்பரத்தில் 

சிரித்து படியே காட்சி தருகிறான்...

மனித வாழ்வின் சிக்கலை 

நீக்கும் சிங்கார வேலவன்...

பட்டாடையில் பிறந்தநாள் 

கொண்டாடும் குழந்தைகள் சிலர் 

பத்தாவது பாரும் போற்றும் படியே

பாஸாகி விட பரிதவித்து 

தலைகனம் தவிர்த்து 

தலைகுனிந்து வணங்கும் சிலர் 

புதிதாக திருமணமான சிலர் 

பல வருட தவத்திற்கு பிறகு 

தனது முதல் குழந்தையின் 

முதல் வருட பிறந்தநாள் 

கொண்டாடும் சிலர்.

இழந்த வேலையை 

விட கண்ணியமான 

கெளரவமிக்க வேலை 

கிடைத்த மகிழ்ச்சியில் சிலர்.

எங்க அப்பாவுக்கு நோய் 

குணமாயிடுச்சு என்றே 

சங்கடம் தீர்ந்த சலனத்தில் சிலர் 

இந்த ஏழை கிழவிக்கு நீயே 

இனி துணையென்றே 

ஏக்கத்துடன் சிலர்...

பேத்தியின் விரல்களை 

பிடித்த படி வயதான 

பாட்டி.. கவலைப்படாதே 

நான் உன்னை நல்லா 

பார்த்துக்குவேன்... 

சின்னஞ்சிறு தேவதையின் 

அன்பு மொழி...உங்க ஆத்தாளுக்கு

என் மகள் தான் லாயக்கு 

பக்தி முற்றுவதற்கு முன்னால் 

பொறுமலுடன் அவள்..

அருகில் பொறுமையுடன் அவன்..

கையில் காசு இல்லாத 

காரணத்தால் சொந்தங்களால் 

பந்தாட்டப்பட்ட அன்பு மிகுந்த 

ஏழை அப்பாவுக்கும் 

அம்மாவுக்கும் என்னை தவிர  

யாருமில்லையே. அவங்களுக்கு 

"திருச்செந்தூர் வேலவா"

எனக்கோ உன்னை தவிர 

கையிலும் மனதிலும் 

ஏதுமில்லை . ஏற்றமிகு 

வாழ்வு தந்து தரணி புகழும் 

வள்ளியின் மணவாளனே... மனிதரின் 

எண்ணங்கள் பலவிதம் ஆனாலும் 

அனைவரின் வார்த்தைகளும் 

ஓரே விதம்.. விண்ணை 

முட்டுகிறது  சரகோஷம்

"முருகா நீயே துணை"

சில நொடிகளில்  

பதவியும் பட்டமும் 

பணக்கார தோரணையும்

எல்லாமும் மறந்தே போனதே

என்னையும் அறியாமல் 

தன்வயமிழந்து தலைக்கு மேல் 

கைகூப்பி உதடுகள் 

முணுமுணுத்தது 

"முருகா..முருகா..

முருகா...." தங்கத்தேர் 

நகர்ந்து சென்றதும் 

சுயநினைவுக்கு வந்தே 

வேகவேகமாக கண்களை 

துடைத்துக்கு சுற்றிமுற்றி 

பார்த்தேன்... கண்களில் 

தழுப்பிய கண்ணீரை கூட 

துடைக்க நினையாமல் 

முருகா முருகா என்றே 

கோவில் கோபுரத்தை 

நோக்கி தொழுதும் 

மனிதர்கள் பலர்.. என்னுள் கூட 

ஆவணம் அழிந்து நானும் 

சுய நினைவோடு 

கை தொழுதேன் 

சுரனை அழித்து 

வேலை உயர்த்தி  எங்களின் 

வேதனைகளை நீக்கிய 

கடல் கொஞ்சும் 

திருச்செந்தூர் அருளும் 

"முருகா நீயே என் துணை"


739 - சோமு Vs காமு

 சோமு Vs காமு 


ஓர் ஊரில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இருவர் நண்பர்களா இருந்தனர்.


அவர்கள் சிறுவயது முதலே எங்கே சென்றாலும் சேர்ந்தே போவாங்க வருவாங்க..

அவங்களுக்கு நிறைய திறமை இருந்தாலும் தன்னோட திறமையை யாருமே மதிக்கிறது இல்லை என்ற கவலை இருந்தது.

ஊர் மக்கள் எல்லோருமே இவங்க இரண்டு பேரையும் செல்லா காசு மாதிரி தான் பார்ப்பாங்க நடத்துவாங்க.


ஏன்னா நான் எவ்வளவு பெரிய திறமைசாலி தெரியுமா என்ற தலைக்கனம் இரண்டு பேருக்குமே இருந்தது.


நான் தான் இந்த உலகத்துலேயே பெரிய மனுஷன்.

என்னை சுத்தி இருக்கிறவன் எல்லாமே பிச்சைகார பயலுக என்பது போல் தான் பேசுவாங்க நடந்துப்பாங்க.

குடும்பத்தோட கஷ்டத்தை கூட புரிந்து கொள்ள தெரியாம..

எல்லோர் வீட்டிலும் கறி சோறும் சுடு சாதமும் தினமும் பண்ணுறாங்க.

உன்னால் உன்னோட மகனுக்கு கூட நல்ல சோறு போட வக்கில்லை...உன்னை கட்டிக்கிட்ட எங்க அப்பனை சொல்லணும்.. ஓர் புத்திசாலி பொம்பளையை கல்யாணம் பண்ணி இருந்தா காசு சேர்கிறது என்று தெரிஞ்சு இருக்கும் உன்னை மாதிரி சரியான அழுமூஞ்சியை கட்டிக்கிட்டு....

தன்னை பெற்ற அம்மாவை காயப்படுத்துகிறோம் என்று கூட தெரியாமல் புரியாமல் பேசிய இந்த இரண்டு ஏழை நண்பர்களுக்கு ஓர் பணக்கார நண்பனும் கிடைத்தான்..


டேய் சோமு நம்ம ஊரிலேயே ரொம்ப புண்ணியம் பண்ணி கொடுத்து வைச்ச ஒருத்தன் இருக்கான் என்றால் அது நம்ம பெரிய வீட்டு மீனாட்சி சுந்தரம் தான்டா..


அவங்க அப்பா அம்மா இரண்டு பேருமே நல்லா படிச்சவங்க அவங்க தாத்தா பாட்டி கூட அந்த காலத்துல படிச்சு இருக்காங்கடா.

என்னத்த சொல்லுறது நம்மை பெத்த அப்பனும் ஆத்தாளும் இருக்காங்களே எப்போ பாரூ ஓரே பழைய புராணத்தை பாடிக்கிட்டு...

இந்த வீட்டில் வந்து பிறந்து நாம படுற கஷ்டம் இருக்கே..

ஆமாண்டா.. நமக்கு அடுத்த ஜென்மம் என்று ஓண்ணு இருந்தா... மீனாட்சி சுந்தரம் வீட்டில் போய் பிறக்கணும் டா 


சும்மா சொல்ல கூடாது தான்.போன வருஷம் தான் கல்லூரி படிப்பு முடிச்சா அவங்க தாய் மாமன் பம்பாயில் இருக்காராமே...அவரூ அவனை அங்கே ஓர் பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்த்து இருக்கார்.

அனேகமாக அவருக்கு இருக்கிற அந்த பொண்ணை செல்வியை அவனுக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுவாரூ..

அதுக்கு பிறகு அவருக்கு என்ன குறைச்சல், ஏற்கனவே அவரோட இரண்டு பையனும் பாரினில் போய் படிச்சுட்டு வந்திருக்கானுங்க..

டேய் காமேஸ்வரா, . இவன் பாடுக்கு பம்பாயில் வேலை கிடைச்சு போயிட்டா.. இவங்களோட விவசாய நிலத்தை எல்லாம் வித்துட்டு தானே போவாங்க..

அட போடா பைத்தியகாரா.. அவனோட தம்பி மாதேஸ்வரன் இவனை விட நல்லா படிப்பான்.ஆனா மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை என்று அவங்க அப்பாகிட்ட பயங்கரமா சண்டை போட்டு இருக்கான்.அதுமட்டுமில்லை, நான் ஸ்கூல் பர்ஸ்ட் வந்தால் தானே என்னை காலேஜில் போய் சேர்ப்பீங்க என்று மாதாந்திர பரீட்சையில் எல்லாம் முதல் மதிப்பெண் வாங்கியவன் வேண்டுமென்றே... பள்ளி இறுதியாண்டு பரீட்சையில் 100 மார்க் கேள்வி தாளில் எல்லாம் வெறும் 60 மார்க் -க்கு மட்டும் தான் பதிலே எழுதி இருக்கான்.


பரீட்சை ஹாலில் மேற்பார்வை பார்த்த பள்ளி கூட வாத்தியார், டேய் மாதேஷ் உனக்கு தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியுமே எழுதுடா.. உன்னால் தான் நம்ம பள்ளி கூடம் மாநில ரேங்க் வாங்க போகுது என்று தலைமையாசிரியர் தினமும் உன்னை புகழ்ந்த வார்த்தைகள் பொய்யா போயிட கூடாது என்று சொல்லி இருக்கார். 

அதுக்கு இவன் என்னடா பதில் சொல்லி இருக்கான்.. 

சார் எனக்கு பரீட்சை எழுதவேண்டும் விருப்பம் இல்லை இருந்தாலும் எங்க அம்மா அப்பா பெயரை காப்பாத்தணும் எனக்கு அது போதும் என்று சொல்லி விட்டு வந்திருக்கான்.


டேய் நம்ம ஹெட் மாஸ்டர் சரவணன் இவனை தலை மேலே தூக்கி வைச்சுகிட்டு சுத்துவாரேடா..


ஆமாண்டா பரீட்சை முடிந்த பிறகு இவனை கூப்பிட்டு அவர் அக்கறையா விசாரிச்சு இருக்கார்.. வீட்டில் ஏதாச்சும் பிரச்சினை என்றால் சொல்லுடா நான் வந்து உங்க அப்பாகிட்ட பேசுறேன் நீ மட்டும் நல்ல மார்க் எடுத்தா உங்க அப்பா உன்னை லண்டனுக்கே அனுப்பி படிக்க வைக்கிகாத்து இருக்காரூ.


அதுக்கு இவன் என்னடா சொல்லி இருக்கான்.




கதை தொடரும் 


738 - அன்பே சிவம்

இரண்டு பொண்டாட்டி கட்டியது ஏன், இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசையா. அப்போது இந்த கட்டுரை உங்களுக்கானது தான் மேற்கொண்ட படியுங்கள் மிக சுவாரசியமான கதை தான் இது 

நாங்கள் வணங்கும் சிவபெருமான் ஏன் இரண்டு மனைவிகளை மணந்தார் என்பதற்கு ஓர் கற்பனை கலந்த விளக்கம் 

இந்த கதை புராணத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கற்பனை கதை தான். ஆனால் இதில் உள்ள விஷயங்களின் சாராம்சம் எங்களின் இந்து மத புராணங்களை படித்து புரிந்து கொள்ள இயலாத மனிதர்களுக்கு, இந்திய புராணத்தின் மீதான ஓர் அக்கறையும் ஆர்வத்தையும் தூண்டும் என நம்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள், தெனாலிராமன் என்ற புனைபெயரில் எழுதும் எனது எழுத்துக்களை உலகின் தமிழர்கள் வாழும் எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்யுங்கள். கட்டுரையில் பிழை இருப்பின் தாராளமாக சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறோம்.

சிறந்த விமர்சனமே, உன்னதமான படைப்புகள் தோன்ற காரணம் 

அன்பே சிவம் 

எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் நொடியில் அழித்து விடும் ஆற்றல் கொண்ட  அவனை எல்லோரும் கோபக்காரன் என்று தான் உலகம் சொன்னது.. அவருக்கு யாராவது தவறு செய்தாலோ அல்லது தவறு செய்வதை பார்த்தாலோ தான் கோபம் வரும்.. மத்தபடி அவர் ரொம்பவே அன்பா மனசு கொண்டவர் என்ற இரு பெண்கள்... எங்களுக்கு எல்லாம் அந்த மனுஷனை பார்த்தாலே வயிற்றை கலக்கும்.அப்படியொரு கோபக்கார அழிவு சக்தி உள்ளவன் என்று பயந்து ஒதுங்கி உலக மக்கள் பலர்..

உங்களுக்கு தைரியம் இருந்தா அவரை கல்யாணம் பண்ணிக்கோங்க பார்க்கலாம் என்றனர்... அதில் ஒருத்தி எனக்கு கல்யாணத்தில் துளியும் விருப்பமே கிடையாது தியானம் தவம் இது தான் என்னோட வாழ்க்கை என்று சொல்லி விட்டு ஆகாயத்துக்கு போனாள்..இன்னொருத்தியோ அவனையே திருமணம் செய்ய நினைத்து ஓவ்வொரு நாளும் அவனுக்காக தவமிருந்தாள்


காத்திருங்கள் 

கதை தொடரும்.......

737 - கருணாநிதி டீ குடிச்ச கதை தெரியுமா

கருணாநிதி தன்னுடைய ஆரம்ப  காலத்தில் டீ குடிக்க கூட காசில்லாம கஷ்டப்பட்ட போது எங்க தாத்தா தான் தினமும் அவரை சைதாப்பேட்டையில் உள்ள பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்று டீயும் காப்பியும் வாங்கி கொடுப்பாரூ... இப்போ அவங்க புள்ள குட்டிகள் எல்லாம் பெரிய பணக்காரங்களா ஆயிட்ட பிறகு அவங்களுக்கு நம்மை எல்லாம் நினைச்சு பார்க்கவும் நேரம் கிடையாதே..எங்க தாத்தா மாசத்தில் குறைந்த பட்சம் இரண்டு தடவையாவது இந்த கதையை என்கிட்ட சொல்லுவாரூ... ஓரே கதையை எத்தனை தடவை சொன்னாலும் நானும் சலிக்காம கேட்டுக் கொண்டே இருப்பேன்...அட நீங்க வேற இது ராமன் ஷங்கர் எழுதிய கதை இல்லை தலைவரே....

என்னை விட ரொம்பவே நிறைய புனைவு கதை சொல்பவர்கள் இந்த உலகில் இருக்காங்க என்பதற்காக நான் கேட்டதை எழுதுகிறேன்.


இந்த கதையை படித்து பார்த்து விட்டு நீங்க கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி...1950-ல் சைதாப்பேட்டையில் எந்த ஹோட்டல் இருந்தது.. அப்படி இருந்தாலும் காலையில் வடையெல்லாம் போட மாட்டாங்களே. அந்த காலத்தில் இட்லி பொங்கல் மட்டும் தான் உண்டு.

வாகன வசதி இல்லாத போது பத்து கி.மீ தள்ளி வந்து ஒருத்தர் வீட்டுக்கு வெறும் காப்பியும் வடையும் சாப்பிடுவதற்காக ஓருவர் வருவாரா...

அப்படி அவர் வந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.அப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றும் பொய் பேசும் மனிதர்கள் நிறைய பேர் இருக்காங்க..

தனது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்  வாழ்க்கையில் உயர்ந்த ஓர் மனிதனை நேரில் கூட சந்திக்காத பலர்.. அந்த மனிதனை நேரில் சந்தித்தது போலவும் அவருடைய வெற்றிக்கே இவர் தான் அச்சாணியாக இருந்து செயல்பட்டது போலவும் பொய்யாக பேசுவது சாதாரண மனிதனின் இயல்பே...இது தவறு அல்ல..  

பொய்களை பேசி வாழ்பவன் முன்னேறுவதில்லை. உண்மை பேசும் மனிதனே வாழ்வில் செல்கிறான்.. ஏனெனில் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்ற பலரும் தனது ஆரம்ப காலத்தில் சிலரின் பொய்களால் தனது முதுகில் குத்து வாங்கியவர்கள் தான்.

தன்னை முதுகில் குத்திய கோழை மனிதனின் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தங்களின் வாழ்க்கை முறையை வேறு ஓர் தளத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

அவர்கள் யாரையும் ஏமாற்றியதில்லை, ஆனால் ஏமாந்த கதையை யாரிடமும் சொல்லி பச்சாதாபம் தேடியதுமில்லை.

இறைவனின் தனக்கு வைக்கும் சோதனைகள் இவை என்றே கடந்து சென்றனர்.. அவர்கள் போகும் வழியில் அவர்களை நோக்கி பூக்களும் வெற்றி மாலைகளும் சூழந்து வந்தது.ஆயினும் மாலையும் மரியாதையும் கூட திகட்டிப்போனதால்.


அமைதியான வாழ்வை வாழ்கின்றனர், தன்னை போலவே உண்மையை மாத்திரம் தேடி உண்மையாய் வாழ்ந்த மனிதர்களின் கூட்டத்தில்.

இங்கே முதுகில் குத்துபவர்கள் யாருமே கிடையாது. இவர்கள் அனைவருமே முகத்திற்கு நேராக பேசும் தைரியசாலிகள்.


எனவே தான் செல்கின்றனர் வெற்றி வாகை சூடுகின்றனர் தாங்கள் எடுத்து வைக்கும் ஓவ்வொரு செயலிலும்.


எல்லா மதமும் சொல்லும் தத்துவத்தையும் அலசி ஆராய்ந்து பாருங்கள்.உங்களுக்கே உண்மை புரியும்.

உண்மையும் தைரியமும் இருக்கும் இடத்தில் தான் இறைவன் வசிக்கிறார்.

736 - யதார்த்தமான உண்மை

 கலைஞனின் 

மனதை கஷ்டங்களால் 

கடவுள் கசக்கிப் 

பிழியும் போதே 

உன்னதமான காவியங்கள் பிறக்கிறது.‌இதுவே 

யதார்த்தமாக உண்மை

735 - மாயா உலகில்...

காசு சேர்ப்பதில் தோற்றவன் 

காதலை தேடுகிறான்.

காதலில் தோற்றவன் 

கடவுளை தேடுகிறான்.

கடவுளில் தோற்றவன் 

ஆடம்பர பொருட்களை 

தேடுகிறான்.

ஆடம்பர பொருட்களை தேடுபவன் 

அமைதியை தேடுகிறான்.

அமைதியை நாடுபவன்..

அந்த அமைதியை அடைய 

மீண்டும் காசை தேடுகிறான்... 

மீண்டும் மீண்டும் இந்த சக்கரம் 

சுழன்று கொண்டே தான் இருக்கிறது.. 

ஓவ்வொரு முறை தோற்கும் போது 

இன்னொரு விஷயத்தில் வெல்வதாக 

நினைத்தே ஓடுகிறான்...

ஓடி முடிந்து உறங்கும் போதே 

உணர்வு வருகிறது.. இந்த 

மாயா உலகில் வெற்றியை 

அடைந்த எல்லோருமே யார் ஓர் 

மனிதனால் ஏமாந்தவர்கள் தான் 

734 - வெற்றி வசமானது

வார்த்தைகளை

நம்பி மனித 

வாழ்க்கையை  தேடாதீர்கள்

வாழ்க்கையை நம்பி

வார்த்தைகளை பேசுங்கள்.

வார்த்தைகளில் 

உண்மையிருந்தால் 

வாழ்கையில் நிச்சயமாய் 

வசந்தம் வரும்...

போலியான கானல் நீர் 

வார்த்தைகளை புறந்தள்ளுங்கள் 

வார்த்தைகளுக்கும் 

மனிதன் வாழும் 

வாழ்க்கைக்கும் 

நிறையவே சம்பந்தம்

இருக்கிறது.. .. வாழ்க்கையில்

சாதனை புரிந்த 

அனைவருமே இவ்விரண்டையும் 

ஓரே நேர்கோட்டில் 

நிறுத்தியதால் வெற்றி வசமானது 

 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...