கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை கூட வாங்காத தயாநிதி மாறன் அவர்களுக்கு ஏன் M.P Seat..
ஏன்னா எங்களுக்காக பாராளுமன்றத்தில் ஹிந்தி நன்கு பேசவும் எழுதவும் தெரிந்த நம்பிக்கையான நபர் தேவைப்படுகிறார் அதனால் தான் என்றார் கலைஞர்..
ஹலோ எனக்கு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மூணு மொழியும் தெரியும்.. ஆனால் நான் எழுதும் கதை கவிதை எல்லாமே தெனாலிராமன் என்ற பெயரில் தமிழில் தான் எழுதுகிறேன்..
தேசிய மொழி படிச்சா மாநில மொழி அழியும் என்று சொல்வது அபத்தமானது.உங்களுக்கு புரியுற மாதிரி சொன்னா..நான் ஹிந்தி படிச்ச பிறகு தான் தமிழ் மொழியில் எழுதணும் என்ற ஆர்வமே வந்தது.
ஹிந்தி சொல்லி கொடுக்க ஆசிரியர் இல்லை என்று எல்லாம் தயவுசெய்து சொல்லாதீங்க.. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஆங்கில பள்ளியில் படித்தவர்களுக்கும் மூணு மொழியும் நல்லாவே தெரியும்.நாலாயிரம் வருஷம் பழைய இதிகாசங்கள் பேசும் எங்களை நீங்கள் பழமைவாதி என்றால்..50 வருஷத்துக்கு முன்னாடி ஹிந்தி வேண்டாம் என்று சொன்னதை கடைபிடித்தால் இது பழமைவாதம் ஆகாதா..
ஆங்கிலம் படிப்பதால் தான் தமிழர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொல்பவர்களே.. it.industry-ல் வேலை பார்க்கும் பல நபர்கள் வடநாட்டை சார்ந்தவர்களும் இருக்காங்க..
தயவுசெய்து ஏழை எளிய குழந்தைகளின் படிப்பை இனியும் உங்களின் அபத்தமான கொள்கை என்ற பெயரால் சிதைக்க வேண்டாம்...
அவங்களுக்கு ஹிந்தி வாத்தியார் வேலை உடனே அரசு கொடுத்தால் கூட அவங்க நல்லாவே பாடம் நடத்துவாங்க..
No comments:
Post a Comment