இரங்கற்பா
நெல்லை
கண்ணணே
தமிழ் சொற்பொழிவின்
மன்னனே.....
எதுகை மோனையில்
எதிர் அணியினரும் உனது
பேச்சை ரசிக்க வைப்பாயே
மேடைகளில் நீ செய்த
வார்த்தை ஜாலத்தால் அனைவரின்
மனதிலும் அரியாசனம்
அமைத்து அமர்ந்தாயே...
கம்பனையும் ஷெல்லியும்
உடனிப்பது போல
உணர வைத்து
குற்றால அருவி போல
தமிழ் சொற்களைசாரல்
மழைதனை போலவே
பொழிந்தாயே
உங்களின் தமிழ்
சொல்லாற்றலை
எங்களின் தலைசாய்த்து வணங்குகிறோம்...
உமது மறைவை
கண்டு வானுலகமே
தன் சாரல் மழையை
நெல்லையின் ரதவீதியில்
மலர் போல் தூவியே
அழுகிறது போலும்...
ஆம் கடைசி யாத்திரை
செல்லும் உம்மை
காண வேண்டியயே
குற்றால சாரல் மழை
மாலை நேரத்தில் நெல்லை
வந்து கலந்து கொண்டது
யாத்திரைக்கு மரியாதை
😭😭😭
.