நீர் திவலை

எதுவுமே வேண்டாம், யாரும் வேண்டாம்.

உண்மையை பேசவும் முடியாமல் மறைக்கவும் தெரியாமல் வாழும் போலியான வாழ்க்கை

அவனுக்கென்ன பெரிய பணக்கார வீட்டு பையன் என்றே பொறாமை கொள்ளும் சில சிறந்த உறவினர்கள்.

அவர்களை பற்றி அப்பா சொன்ன போதெல்லாம் அவருடன் சண்டை செய்தேன்.

கருப்பு கண்ணாடி போட்டு கிட்டு உலகத்தை பார்த்தா உலகமே கருப்பா தான் தெரியும்

உலகம் நிலையற்றது

 நிலையற்ற உலகில் இறைவன் படைத்த அமைதியும் அன்பும் நிலையாக இருக்க செய்ய உங்களால் ஆன நல்ல செயல்களை செய்யுங்கள்.

ஏனென்றால் இந்த உலகில் யார் எத்தனை நாட்கள் வாழ்வார்கள் என்பதை யாராலும் கூற முடியாது.


மனிதனின் மரணத்திற்கு பிறகு அவன் செய்த செயல்கள் மட்டுமே பேசப்படும்.


அரசியலில் ஈடுபட்டால் மட்டும் தான் பிற மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்பதை நம்பாதீர்கள்.


அரசியலில் ஈடுபட்டால் உங்களின் நாற்காலியை தக்கவைத்து கொள்ள ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டி‌வரும்.

இறைவனின் பெயரால் அல்லது உங்களுக்கு பிடித்த பெயரால் பிற உயிர்களுக்கு இயற்ற உதவியை செய்யுங்கள்.


ஏன் ராம் அதிகமாக காதல் கதையை எழுதுகிறான்

 ஓர் நாள் எதிர்பாராத விதமாக அரசு ஆஸ்பத்திரியில் விபத்து காரணமாக அட்மிட் செய்யப்பட்ட ஓர் நண்பரை பார்க்க வேண்டி சென்றேன்.

அதற்கு முன்னர் கூட பல முறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தாலும்...

அன்று தான் முதன் முறையாக அவசர சிகிச்சை பிரிவில் சென்று ஓருவரை கண்டேன்.


அப்போது அவரை விடவும் மிகவும் அதிகமாக பாதிக்கபட்ட பலரை கண்டேன்.


சற்று நேரத்திற்கு முன்பே ஓர் சாதி பெயரை புகழ்ந்த படி ஓர் கூட்டம் தெருவை அடைத்து கொண்டு சென்றது.

அதனால் சில நிமிடங்கள் அல்ல பல நிமிடங்கள் தாமதமானது.. அந்த கூட்டத்தில் ஓர் ஆம்புலன்ஸ் வேறு மாட்டிக் கொண்டு விழித்தது.


கவலைபடாதீங்கம்மா நாம பின் வாசல் வழியாக கொண்டு போயிடுவேன்.. ஐயாவுக்கு ஓண்ணும் ஆகாது நம்ம டாக்டர் எல்லாம் சூப்பர்.. எப்படியும் காப்பாத்திடுவாங்க.டிரைவர் ஏதோ சமாதானம் சொன்னாலும் அருகில் இருந்தவர்களின் முகத்தில் இருந்த பதட்டம் என்னை என்னவோ செய்து சாதிகளை வெறுக்க செய்தது 


Contd...

களிமண் அல்ல அது ஓர் மண்பானை

 எல்லோரும் எதற்கும் உதவாத களிமண் என்று ஏளனம் பேசி விலகிச் சென்றனர். அந்த களிமண்ணின் அருமை தெரிந்த ஒருவன் அதை அழகிய மண்பானையாக செய்தான்.

களிமண் என்ற கேலி பேசியவரே மண்பானை தண்ணீர் அருமை என புகழ்ந்தனர்.

பலர் அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னது.அவனோ  

எல்லோரிடமும் திறமை இருக்கிறது.

இங்கே திறமையானவனை ஊக்குவிப்பவர்கள் குறைவு. இனியாவது யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்றே நகர்ந்தான்.. அப்போது அனைவரும் கவனித்தனர், அவனால் பிறரை ஊக்கப்படுத்த முடிகிறது.. ஆனால் இங்கே சிலர்

அப்பாவி அப்பா

 சென்ற வாரம் வரை நானும் அவரும் உருகி உருகித்தான் காதலித்தோம்.

எனக்காக அவரும் அவருக்காக நானும் மாறி மாறி காத்திருந்தோம்.சில நிமிட தாமதத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இருவரும் பல முறை கேள்வி கேட்டது உண்டு..

ஏய் பைத்தியம்...நீ இப்போ எங்கே வந்துட்டு இருக்கே சொல்லு... அவனை அவளும், அவளை அவனும் கொஞ்சி கூப்பிடும் செல்லமான அன்பு மொழி அது 

சில நேரங்களில் மழை, வேலை, மற்றும் பிற காரணங்களால் வர தாமதமாகும் போது மனமுருகி நெஞ்சுக்குள்ளே அழுத நாட்கள் உண்டு..


எத்தனையோ முறைகள்.. ஆனால் 

இருவருமே ஒருவருக்காக ஓருவர் ஏங்கிய கதையை பிறரிடம் சொன்னதில்லை..

ஓவ்வொரு நொடியும் அவ எங்கே இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கணும்.

அவளோட எந்த குறையும் வந்திட கூடாது என்றே அப்பாவி குழந்தை போல அவளை இன்னும் அதிகமாகவே காதலிக்கும்


தான்  விரும்பிய பெண் நேற்று முதல் அடுத்தவன் உடைமை என்பதை உணர்ந்த பிறகும் முட்டாளைப் போல, அவளை இன்னும் நினைத்த படியே வாசலில் அமர்ந்து கொண்டு அவள் அமரும் இடத்தை வெறித்த படியே பார்த்து வெறுமையாய் சிரிக்கும் அந்த முட்டாள் காதலன் 

ஏன் இன்னும் சாப்பிட வரலை...8மணிக்கு பசிக்குது பசிக்குதுன்னு உயிரை எடுப்பீங்க..மணி 10.30 ஆச்சு இன்னுமா சாப்பிட வரலை என்று எரிச்சல் பட்ட மனைவியிடம்..


கொஞ்ச நேரம் என்னை அமைதியாக தனிமையில் இருக்க விடு..நீ வேணா போய் சாப்பிட்டு விட்டு படு...

வீட்டிற்குள் சென்றவள் உறங்கிக் தான் போனாள்...

ச்சே இவ்வளவு நேரமாவா தூங்கிட்டோம் அலறி அடித்து எழுந்தவள் பக்கத்தில் தன் கணவனை காணாது பரிதவித்து இந்த மனுஷன் எங்க போனாரோ தெரியலையே..

வாசலுக்கு கதவருகே வந்தாள்...அவனோ  இன்னும் தொலைபேசியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்


ஏங்க நீங்க ராத்திரி பூரா இங்கேயேவா உட்கார்ந்து இருந்தீங்க...


போன வாரம் கூட அவ சொன்னா டீ.. அப்பா என்னால உன்னை மறக்கவே முடியாது.. தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஓரு தடவை உன்னை கூப்பிடுவேன்.. ப்ளீஸ் அப்பா நீ என்கிட்ட பேசாம இருந்திராதே.. எனக்கு எல்லாமே நீதானே..

சொன்னவன் சின்ன குழந்தை போல தேம்பித்தேம்பி அழுதான்..

ச்சீய் என்னங்க இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு ..அவ அவளோட புருஷன் கூட சந்தோஷமா இருப்பா.. அதான் உங்களுக்கு போன் பேச மறந்திருப்பா மேலும் புது இடம் புது மனுஷங்க அவளுக்கு அங்கே என்ன பிரச்சினையோ..

சொன்ன அடுத்த நொடி எழுந்து பாத்ரூம் நோக்கி போனான்.. சீக்கிரமா உப்புமா பண்ணு நான் வெளியே கிளம்புறேன் 

கடைக்கு போக சொன்னால் பத்து காரணம் சொல்பவன்  

இன்றோ மகளை பார்க்க கிளம்பி போகிறான்...ஓரு வார்த்தை கூட அவனுக்கு கேட்கவும் தோணவில்லை..மாறாக அவளும் கேட்கவில்லை ஏதோ மகள் மீதான பாசம் தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல தன்னந்தனியாக செல்கிறார்.


செய்து வைத்த உணவை சாப்பிட மனமில்லாமல் அடுப்பங்கரையில் சென்று காபி போட்டு குடிக்கும் போது மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.


அவள் உங்களை அப்படி கூப்பிடும் போதெல்லாம் அவளை திட்டியது உண்ங

ஏன்டீ உன்னை பெத்த அப்பனை லூசூ பைத்தியம்ன்னு கூப்பிடுறீயே உனக்கு என்ன வாய்க்கொழுப்பு


இன்றே அதே வார்த்தையை அவளும் உச்சரித்து பார்த்தாள்..

ஏய் லூசு நீ உலக அறிவே கொஞ்சமும் இல்லாத அப்பாவி அப்பா 

என் பையன் சிங்க குட்டி

 

ரொம்ப பேசாதடீ.. என் பையன் சிங்க குட்டி போன வாரம் கூட ஓர் பொண்ணு வீடு 50 லட்சம் வீடு அவன் பெயரில் எழுதி தருவா சொல்லிட்டு போனாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ என்ற மாமியார்..அவளை ஓடி வந்து என்னம்மா என்னாச்சு என்று குழந்தை..

ஓண்ணுமில்ல கண்ணா அம்மா கண்ணுல தூசி விழுந்துடுச்சு..

ஒழுங்கு மரியாதையா போடுற சோத்தை நின்னுகிட்டு கிட.நான் தான் இந்த முட்டாள் பயலுகிட்ட சொன்னேன் அந்த பொண்ணு சரியான விபரம் பத்தாதவளா இருக்கா இப்பவே அவளை லவ் பண்ணுற மாதிரி நடி..பத்து பேர் கிட்ட நடிச்சா இரண்டு பேர் லவ்வு விழுவாங்க..

அதுல எது நல்லா படிச்சு சொன்ன பேச்சைக் கேட்குற மாதிரி இருக்கோ அதை கட்டி வைக்கிறேன்னு நான் தான் சொன்னேன்..

நீ என்னடான்னா கல்யாணத்துக்கு முன்னாடி சாது மாதிரி இருந்துட்டு இப்போ வந்து ஆயிரம் விதிமுறை சொல்லி குடுக்குறீயா..

ஓரே நிமிஷத்துல உன்னை உங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பிச்சு போடுவேன் பார்த்துக்கோ..

என் மச்சான் மகன் லாயர் தான் நினைச்சா இரண்டு மாசத்துல டைவர்ஸ் வாங்கி புடுவேன் என்றே கொக்கரித்த மாமியார்.

ஏதோ சட்டத்தை காய்கறி கடையில் வாங்கும் காய்கறி போல பேசினாள்..

எதெல்லாம் நினைச்சவுடனே டைவர்ஸ் வாங்க முடியாது குறைந்த பட்சம் ஓர் வருஷமாவது ஆகும்.. மேலும் இரண்டு குழந்தைகள் பெத்த பிறகு டைவர்ஸ் எதுக்கு கேட்குறீங்க.ஏனோ உதடு வரை வந்த சொற்களை 32 பற்களுக்குள்ளே தடுத்து வைத்தாள்.

கதவு அருகில் சாய்ந்த படி அமர்ந்தாள் கண்ணில் சாரை சாரையாக கண்ணீர் மல்கியது


காதலிக்கும் போது அவன் சொன்னவை எல்லாம் பொய் என்பது திருமணமான ஓர் வாரத்திலேயே புரிந்து போனதால் விதியை நொந்து கொண்டாள்

 வீடே அமைதியாக இருந்தது..

வீட்டிற்குள் விசில் அடித்த படி உற்சாகமாக வாசல் படி நுழையும் முன்பே சற்று சத்தமாகவே சொன்னான். நீ சொன்ன மாதிரியே எல்லாம் நடக்குதும்மா.. அவகிட்ட இப்போ தான் வீடியோ-ல பேசினேன்.இரண்டாம் தாரமா இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிட்டா.. எப்படிம்மா நீ ரொம்பவே புத்திசாலி

நகரத்து வாழ்க்கை

  புதிதாக திருமணமான நபர்களின் யதார்த்தமான கதை அவர்கள் சந்திக்கும் பொருளாதார மற்றும் வாழ்க்கை பிரச்சினை பற்றிய ஓர் கதை..

சீரியஸா எழுதினா அலுப்பு தட்டும் என்பதால் சற்றே மசாலா தூவி எழுதப்படுகிறது.விரைவில் எனது பிளாக்கரில்..


திருமணமா சில நாளில் அவனுக்கு வேலை போய் விடுகிறது..

அப்போது அவளுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் பிணக்கு மற்றும் புரிதல் பற்றிய கதையே இந்த நகரத்து வாழ்க்கை 

அன்புள்ள அப்பா

 அவருக்கு பிடித்த நெய் முறுக்கு, மசால் தோசை, கூட்டாஞ்சோறு என பெரிய கடையில் இருந்து பார்சல் வர செய்தவள்.அப்பாவுக்கு போன் செய்தாள்.. இன்னிக்கு நீங்க எங்க கூட தான் சாப்பிடணும்.அவளின் அளவிட முடியாத அன்பில மயங்கி சரிம்மா உன் இஷ்ட படியே செய். அம்மாவும் உன்னை பார்க்காம எங்கி போயிட்டா..

இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே வந்திட போறாம்.மகளை பார்க்க போகிறோம் என்று பூரிப்பில் தட்டு தடுமாறி எழுந்து போய் முகம் கழுவி வந்து கட்டிலில் அமர்ந்தார்.

நாலு தெரு தள்ளி இருக்கிற நாயீ இப்போ எதுக்கு புதுசா நம்மளை வந்து பார்க்கணும்..அவ பேசின பேச்சு எல்லாம் உங்களுக்கு வேணா மறந்து போயிருக்கலாம் எனக்கு எதுவுமே மறக்காது.. ரேஷன் கடை பொங்கல் சேலையை துவைத்தே பத்து நாட்கள் ஆனது போல இருந்தது

அவ வந்துட்டு போன பிறகு தானே உங்களுக்கு புத்தியில் நல்லா உறைக்கும், அது வரைக்கும் நான் எது சொன்னாலும் மரமண்டைக்கு ஏறாதே..

தன் மனைவியின் பேச்சு வேப்பங்காயை விட ரொம்பவே கசப்பது போல் இருந்தது அந்த வயதான கிழவனுக்கு.


இப்போ வந்துட்டு கொஞ்ச நேரத்தில் போக போற புள்ள, அவளை எதுக்குடீ இப்படி கரிச்சு கொட்டுறே..

ம்க்கும் உங்களுக்கு புத்திர பாசம் கண்ணை கட்டுது..வந்து நல்லா தெளிய வைப்பா பாருங்க.

வாசலில் கார் வந்து நின்றது அதிலிருந்து ஓர் பெரிய வியாபாரி இறங்கி வருவது போல் வந்தாள்.

அம்மா தாயீ, அவசரமாக ஓடி சென்று கட்டிப்பிடிக்க பாய்ந்தவர்.. ஏதோ  அமலாக்க துறையை கண்டு விலகும் அமைச்சரை போல பத்து தள்ளிப்போனாள்.


அப்பா எத்தனை தடவ சொன்னாலும் உங்களுக்கு புத்தியே வராதா... அடுத்த ஓர் மணிநேரத்தில் எனக்கு  கிளப் மீட்டிங்.. உங்க வியர்வை படிஞ்ச கையால் என்னோட விலையுயர்ந்த பட்டு புடவை அழுக்கு ஆக்கிடாதீங்க..

நல்லா சொல்லு பிரபாவதி.. உங்க அப்பாவுக்கு வயசு ஆயிடுட்டே போகுதே தவிர அறிவு வளரவில்லை.

அது வந்து அப்படி இல்லாம்மா, பத்து நிமிஷம் தான் எனக்கு டைம் இருக்கு அதான் இன்னிக்கு Father's day...இவரை பார்த்துட்டு அப்படியே ஓர் செல்ஃபி எடுக்கலாம்ன்னு வந்தேன்.

கிழவிக்கு எதுவுமே புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி தலையை நன்கு ஆட்டினாள்.

அப்பா இப்படி வந்து பக்கத்தில் நில்லுங்க. பயந்த படி அருகில் வந்தவருடன் செல்ஃபி எடுத்தால்...


கன்னத்தோட கன்னம் உரசி இருப்பது போல் இருக்கும் போட்டோவை பார்த்து. இன்னிக்கு உங்க அப்பா நிம்மதியா தூங்குவாரூ என்றவளை முறைத்த படி கேட்டாள்.

ஏன் என்னாச்சு, இப்படி சொல்லுறே..


அவரு தினமும் புலம்புவாரூ, நீ சின்ன புள்ளையா இருக்கும் போது சொன்னபடியே கேட்க மாட்டேன்.. ராத்திரி பத்து மணிக்கு அவர் வந்தவுடனே என்னை பத்தி குறை சொல்லும் போது என் செல்லக்குட்டி அப்படின்னு அவரு உன்னை கன்னத்தை உரசி முத்தம் கொடுப்பாரூ.அதுக்கு அப்புறம்தான் நீ சமாதானம் ஆகி தூங்குவே.. இன்னிக்கு நீ அவர் கன்னத்தை உரசியாச்சுல்லா..

இது மனுஷன் ஆறு மாசத்துக்கு பழைய கதை சொல்ல மாட்டாரூ...

பிறகு என்னத்தை சொல்லுவாராம்..


நீ இப்போ உரசுன கதையை புதுசா சொல்லிகிட்டு திரிவாரூ...

ச்சே.நான்சென்ஸ் இதுக்கு தான் நான் உங்கள பார்க்க வருவதே கிடையாது..

சரியான நாட்டுப்புறம்..கொஞ்சமாவது இங்கிதம் இருந்தா உனக்கு இப்படி பேச தோணுமா... நான் ஒண்ணும் அவர் கன்னத்தை உரசலை 


கேலரி கட்சிக்காரர்கள்

கட்சி மாறினால்

காட்சி மாறுமா...

காட்சி மாறவே

கட்சி மாற்றமா ..

அரியணையில்

இருப்பவருக்கு

அழைப்பு மணி வந்ததா..

ஆராய்ச்சி மணியோசை

அதிகார மையங்களை 

அசைத்து பார்த்திடவே...

ஆண்டவனின் விளையாடவா...

ஆள்பவர்களின் ஆட்டமா...

அமைதியாக வேடிக்கை

பார்க்கும் சராசரி மக்கள் கூட்டம்

யார் வென்றாலும்

தோற்றாலும் அவர்களுக்கென்ன

என்றுமே ஓரே கட்சிதான்

அடுத்தவர் வீழ்ந்தால்

கைகொட்டி விமர்சிக்கும் 

கேலரி கட்சியை 

சார்ந்தவர்கள் 



Radha Krishna philosophy

 Krishna loved Radha so Deep with great love & respect. But she loved only materialistic life than peace and married a richest person.


First time in his life, he cried like a child at a lonely place.

Hey Radha, what did I do wrong for you.

When you were with me. Did I misbehave with you.

Did I hug you.

Hey Radha, Do you remember. When you feel lonely and cried like a baby saying that no one is understanding your feelings.

My flute make you happy, but today you have made me cry.

Is this true love. Peace which we realise is that false ya illusion.

I haven't loved anyone before, because I'm so afraid missing them.

Yes, i might have been born in richest place, but not interested in any kind of materialistic world.


Every day I was searching for true love from a true girl.


When you speak with me, i understood that you are also like me. 

Our friendship grows like a beautiful plant every day.

But today what happened..( whatever he uttered was not heard by Radha, becoz she had married a richest man. She loved only money not peace)

From my childhood i have realised a lot regarding money, love l, relations friends society etc..

Every human beings are so selfish, they try to ride on others back.

After a long quest, i understood that only cows are so loveable.

They understand me very well. They know me better.

I never interfere in their freedom, they also never disturbed me.

I like isolate from everything, i forgot everything in my flute.

At dask my cattle make me remember.

Hey Krishna, its time to go home, by way of rubbing me.

You only came infront of me and ask and spoken so many things.

Now you're not with me.

Now I'm saying your word's again and again.

"World is so selfish, they never understand my feelings"

Time has an excellent power to cure everything.

But the pains which we got from loved ones cannot be forgotten nor forgiven.


Later Krishna became so rich than everyone.

Teach Arjuna philosophy which was told by Radha to him.


Yes who was betrayed in love started speaking philosophy or start living their rest of the life with the help of philosophy.

கதா ரொம்ப நல்லவர்

 கதா... நான் சொல்லுற மாதிரி பண்ணு..

அப்படி எல்லாம் என்னால மனிதாபிமானம் இல்லாம என் Team members , மேல் பொய்யா அவங்க எந்த வேலையுமே பார்க்கலை என்று H.R.-லகேஸ் கொடுக்கவும் முடியாது திமிரா பேசிவிட்டு போன நேர்மறையான கதா...

மறுநாள் காலை கதா-வை H.R ரூம்க்கு அழைத்தார்கள்..சரி நேத்து பிரச்சினை தான் உண்மையை பேசி சமாளித்து விடலாம் என்று சென்றவருக்கு காத்திருந்தது... ஓர் பெரும் அதிர்ச்சி..

H.R மேனேஜர் கேட்டார்.. நீங்க உங்க பக்கத்து சீட் மேனேஜர் கூட அடிக்கடி.. ஓவ்வொரு வார்த்தையும் இடி போல இருந்தது ‌‌

சார் நான் அப்படி பட்ட ஆள்இல்லை எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்கு..

இடையே புகுந்த கவி....

சார், இவருக்கு என்கிட்டயும் இதே கதையை பல முறை சொல்லிட்டாரூ... நீங்க அந்த மெயில் கம்பிளெண்ட் எடுத்து காட்டுங்க...அதை எடுத்து படித்த கதா கண் கலங்கியது.. ஏன்னா நீங்க தான் என் தலைவன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்ன அவன்... காதல் மனைவியிடமிருந்து போன் வந்தது.. என்னங்க அப்பாவுக்கு இந்த மாசம் ஹார்ட் செக்கப் பண்ணிடலாமா... எப்படியும் 2லட்சம் செலவு.. நீங்க எப்படி தான் சமாளிக்க போறீங்களோ எனக்கு ரொம்பவே பயமா இருக்கு...

ஓர் நிமிட சிந்தனையில் 

விழியில் கண்ணீர் மல்க சொன்னார்...

கவி நீங்க இனி என்ன சொன்னாலும் மறுக்காம சொல்லுறேன்.

மிஸ்டர் கதா நாலு பேர் முன்னாடி ஆபிஸ்ல ஓர் பொண்ணு கைய பிடித்து இழுத்து இருக்கீங்க... நீங்களா வேலையை விட்டு போறீங்களா அல்லது நாங்க அனுப்பினா வேற மாதிரி இருக்கும்...என்ற போது...கதா தவித்து போனார்.. அப்போது  அந்த நேரத்தில் அந்த 

வழியாக வந்த *முட்டாள்* சூழ்நிலை தெரியாமல்...உள்ளே நுழைந்தான்..

கண்ணீர் மல்க கதா..குறுக்கு புத்தியில் பிறர் முதுகில் குத்தியே பதவி உயர்வு பெறும் கவி...

எல்லா தவறுகளை செய்து விட்டு உத்தமர் போல பேசும் H.R manager...

தன் தவறு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில்..

அது வந்து இவங்க மாமனார் சீரியஸ் அதனால் லீவு சம்மந்தமாக...

கண் முழுவதும் ரத்த சிவப்பில்.....

கதா....


ஹலோ கவி.. எனக்கு பிராசஸ் வேணா நீங்க சொல்லி தரலாம் ஆனா எந்த மனுஷனும் மாமனாரை நினைச்சு கண்ணீர் விட மாட்டான்...

உஷ்ணமாக பேசிய அந்த முட்டாள்...

ஹலோ மிஸ்டர் நீ யார் எங்க வேலையில் இடையூறு பண்ண.. நாங்க..H.R ..தெரியுமா என்று தோரணையில் குதித்தான்...

டேய் வாயை மூடுடா..போன வாரம் நீ மெரினாவுல ராத்திரி 11 மணிக்கு அடி வாங்கின கதையெல்லாம் எனக்கு தெரியும் என்றவுடன்... அவனுக்கு உடம்பெல்லாம் வியரத்தது...

அவனின் கையை பிடித்து இழுத்தது அதே மெரினா பெண்..

அட மேடம் நீங்க கூட இங்க தான் இருக்கீங்களா.. தன் கிராமத்து ஏகதாளத்துடன் பேசியவுடன்.. அனைத்து தனக்கு எதிராக திருப்புவதை நினைத்து குழம்பித்தான் போறான்..கவி...

ஹலோ நீங்க யாரா வேணா இருங்க.. எங்க கதா அப்பழுக்கில்லாத சுத்த தங்கம்.. அவர் மேல நீங்க ஏதாவது பொய் பிராந்து கொடுத்தீங்க.. பிறகு உங்க கதையெல்லாம் தண்டவாளம் ஏறிடும்..

ஏய் கவி..நீ பழைய ஆபிஸ்ல எப்படி எல்லாம் முன்னேறின என்பதை நோட்டீஸ அடிச்சு கொடுத்திடுவேன் பார்த்துக்கோ என்றே சிம்மத்தை போல் கர்ஜித்தான்..

எதிர்பாராத திருப்பமாக அந்த அறைக்குள் நுழைந்த நிறுவனத்தின் ஓர் பெரும் அதிகாரி..

அந்த முட்டாளை அன்பாக பேர் சொல்லி அழைத்தார்...

என்னப்பா ஏதாவது பிரச்சினையா.. எதுவானாலும் என்கிட்டை மறைக்காம சொல்லுப்பா... உன்னை மாதிரி பிறருக்கு உதவும் ஓர் நல்லவன் இந்த காலத்தில் பார்க்கிறது ரொம்ப கஷ்டம் என்றே புன்னகை செய்தவரிடம்...

ஓண்ணுமில்ல சார்..இவரோட காதல் மனைவி கொடுத்த வாட்ச் கல்யாண நாளில் தொலைஞ்சு போச்சு அதான் மனுஷன் கலங்கி போய் இருக்கிறாரூ..

அட இவ்வளவு தான் விஷயமா.. எனக்கு கூட இப்படி ஓர் தடவை நடந்துச்சு பிறகு தான் இந்த கம்பெனியில் ஓர் உயர் பதவி கிடைச்சுது.. கடவுள் நமக்கு செய்வது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழுங்க சிரித்த படி சென்றார்..

கவியின் கண்களில் எரிச்சலும் கோபமும்..கதா கண்ணிலோ நிம்மதி பெருமூச்சு...

எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் என்று பேசும் போது எல்லாம்..

கவ, இவன் ஓர் பைத்தியக்கார பய என்று நக்கல் அடித்தவரின் மனதில் உயரத்து நின்றான் அந்த முட்டாள் சாரி ..

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...