கதா... நான் சொல்லுற மாதிரி பண்ணு..
அப்படி எல்லாம் என்னால மனிதாபிமானம் இல்லாம என் Team members , மேல் பொய்யா அவங்க எந்த வேலையுமே பார்க்கலை என்று H.R.-லகேஸ் கொடுக்கவும் முடியாது திமிரா பேசிவிட்டு போன நேர்மறையான கதா...
மறுநாள் காலை கதா-வை H.R ரூம்க்கு அழைத்தார்கள்..சரி நேத்து பிரச்சினை தான் உண்மையை பேசி சமாளித்து விடலாம் என்று சென்றவருக்கு காத்திருந்தது... ஓர் பெரும் அதிர்ச்சி..
H.R மேனேஜர் கேட்டார்.. நீங்க உங்க பக்கத்து சீட் மேனேஜர் கூட அடிக்கடி.. ஓவ்வொரு வார்த்தையும் இடி போல இருந்தது
சார் நான் அப்படி பட்ட ஆள்இல்லை எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்கு..
இடையே புகுந்த கவி....
சார், இவருக்கு என்கிட்டயும் இதே கதையை பல முறை சொல்லிட்டாரூ... நீங்க அந்த மெயில் கம்பிளெண்ட் எடுத்து காட்டுங்க...அதை எடுத்து படித்த கதா கண் கலங்கியது.. ஏன்னா நீங்க தான் என் தலைவன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்ன அவன்... காதல் மனைவியிடமிருந்து போன் வந்தது.. என்னங்க அப்பாவுக்கு இந்த மாசம் ஹார்ட் செக்கப் பண்ணிடலாமா... எப்படியும் 2லட்சம் செலவு.. நீங்க எப்படி தான் சமாளிக்க போறீங்களோ எனக்கு ரொம்பவே பயமா இருக்கு...
ஓர் நிமிட சிந்தனையில்
விழியில் கண்ணீர் மல்க சொன்னார்...
கவி நீங்க இனி என்ன சொன்னாலும் மறுக்காம சொல்லுறேன்.
மிஸ்டர் கதா நாலு பேர் முன்னாடி ஆபிஸ்ல ஓர் பொண்ணு கைய பிடித்து இழுத்து இருக்கீங்க... நீங்களா வேலையை விட்டு போறீங்களா அல்லது நாங்க அனுப்பினா வேற மாதிரி இருக்கும்...என்ற போது...கதா தவித்து போனார்.. அப்போது அந்த நேரத்தில் அந்த
வழியாக வந்த *முட்டாள்* சூழ்நிலை தெரியாமல்...உள்ளே நுழைந்தான்..
கண்ணீர் மல்க கதா..குறுக்கு புத்தியில் பிறர் முதுகில் குத்தியே பதவி உயர்வு பெறும் கவி...
எல்லா தவறுகளை செய்து விட்டு உத்தமர் போல பேசும் H.R manager...
தன் தவறு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில்..
அது வந்து இவங்க மாமனார் சீரியஸ் அதனால் லீவு சம்மந்தமாக...
கண் முழுவதும் ரத்த சிவப்பில்.....
கதா....
ஹலோ கவி.. எனக்கு பிராசஸ் வேணா நீங்க சொல்லி தரலாம் ஆனா எந்த மனுஷனும் மாமனாரை நினைச்சு கண்ணீர் விட மாட்டான்...
உஷ்ணமாக பேசிய அந்த முட்டாள்...
ஹலோ மிஸ்டர் நீ யார் எங்க வேலையில் இடையூறு பண்ண.. நாங்க..H.R ..தெரியுமா என்று தோரணையில் குதித்தான்...
டேய் வாயை மூடுடா..போன வாரம் நீ மெரினாவுல ராத்திரி 11 மணிக்கு அடி வாங்கின கதையெல்லாம் எனக்கு தெரியும் என்றவுடன்... அவனுக்கு உடம்பெல்லாம் வியரத்தது...
அவனின் கையை பிடித்து இழுத்தது அதே மெரினா பெண்..
அட மேடம் நீங்க கூட இங்க தான் இருக்கீங்களா.. தன் கிராமத்து ஏகதாளத்துடன் பேசியவுடன்.. அனைத்து தனக்கு எதிராக திருப்புவதை நினைத்து குழம்பித்தான் போறான்..கவி...
ஹலோ நீங்க யாரா வேணா இருங்க.. எங்க கதா அப்பழுக்கில்லாத சுத்த தங்கம்.. அவர் மேல நீங்க ஏதாவது பொய் பிராந்து கொடுத்தீங்க.. பிறகு உங்க கதையெல்லாம் தண்டவாளம் ஏறிடும்..
ஏய் கவி..நீ பழைய ஆபிஸ்ல எப்படி எல்லாம் முன்னேறின என்பதை நோட்டீஸ அடிச்சு கொடுத்திடுவேன் பார்த்துக்கோ என்றே சிம்மத்தை போல் கர்ஜித்தான்..
எதிர்பாராத திருப்பமாக அந்த அறைக்குள் நுழைந்த நிறுவனத்தின் ஓர் பெரும் அதிகாரி..
அந்த முட்டாளை அன்பாக பேர் சொல்லி அழைத்தார்...
என்னப்பா ஏதாவது பிரச்சினையா.. எதுவானாலும் என்கிட்டை மறைக்காம சொல்லுப்பா... உன்னை மாதிரி பிறருக்கு உதவும் ஓர் நல்லவன் இந்த காலத்தில் பார்க்கிறது ரொம்ப கஷ்டம் என்றே புன்னகை செய்தவரிடம்...
ஓண்ணுமில்ல சார்..இவரோட காதல் மனைவி கொடுத்த வாட்ச் கல்யாண நாளில் தொலைஞ்சு போச்சு அதான் மனுஷன் கலங்கி போய் இருக்கிறாரூ..
அட இவ்வளவு தான் விஷயமா.. எனக்கு கூட இப்படி ஓர் தடவை நடந்துச்சு பிறகு தான் இந்த கம்பெனியில் ஓர் உயர் பதவி கிடைச்சுது.. கடவுள் நமக்கு செய்வது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழுங்க சிரித்த படி சென்றார்..
கவியின் கண்களில் எரிச்சலும் கோபமும்..கதா கண்ணிலோ நிம்மதி பெருமூச்சு...
எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் என்று பேசும் போது எல்லாம்..
கவ, இவன் ஓர் பைத்தியக்கார பய என்று நக்கல் அடித்தவரின் மனதில் உயரத்து நின்றான் அந்த முட்டாள் சாரி ..