காதல் என்பதே ஓர் அமைதியான உணர்வு சார்ந்த விஷயம்.
சிலருக்கு காதல் உடனே புரிந்து விடுகிறது.பலருக்கு காதல் எது என்பது காலம் கடந்தே தெரிகிறது.
காதலை புரிந்து கொள்ள இயலாத படி இயற்கை காதலை மறைத்தே வைக்கிறது. காதல் என்பது அன்பின் தொடக்கம், அன்பு யாரையும் காயப்படுத்த விருமபாது. அது தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும்.
குழந்தைகள் தன் சொல்லை கேட்க வில்லை, என்ற போதும் அவர்களுக்காகவே வாழும் பெற்றவரின் அன்பு போன்றதே ஒப்பற்ற காதல்.