எது காதல்

 காதல் என்பதே ஓர் அமைதியான உணர்வு சார்ந்த விஷயம்.

சிலருக்கு காதல் உடனே புரிந்து விடுகிறது.பலருக்கு காதல் எது என்பது காலம் கடந்தே தெரிகிறது.

காதலை புரிந்து கொள்ள இயலாத படி இயற்கை காதலை மறைத்தே வைக்கிறது. காதல் என்பது அன்பின் தொடக்கம், அன்பு யாரையும் காயப்படுத்த விருமபாது. அது தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும்.

குழந்தைகள் தன் சொல்லை கேட்க வில்லை, என்ற போதும் அவர்களுக்காகவே வாழும் பெற்றவரின் அன்பு போன்றதே ஒப்பற்ற காதல்.



பொம்மலாட்டம்

 உடலில் மங்கையும் தலையில் கங்கையும்

அணிந்து காமத்தின் சிந்தனை ஏதுமின்றி எல்லையற்ற மாசில்லா

காதலை மனதில்

சுமந்தே தியானத்தில்

அமரந்தவனே.

உன் கோபத்தை

பாசமாக மாற்றி காட்டிய தேவியவள் நித்தமும்

பூஜிக்கிறாள் உன்னையே..

நதியின் வேகத்தை

தலையில் தாங்கி

தரணியை தழைக்க செய்தவனே...

எண்ண முடியாத

கஜானாவை குபேரனிடம்

கொடுத்து விட்டு நிம்மதியாக

வாழ்பவனே.

அபிஷேகப்பிரியனே..

மூலன் உரை மூலப்பரம்பொருளே..

புராணத்தை படித்து

சலித்துப் போனவருக்கும்

பிராணணை படிக்கும்

வித்தை சொல்பவனே..

தில்லையில் நீ ஆடிய

ஆட்டத்தை விட

உச்சம் தொடுகிறது சிலர் பணத்திற்காக போடும் 

குத்தாட்டம் ... நானும் கூட ஆடுகிறேன் பணம்

தேவையென்றே...

என்னை பார்த்து சிரித்த படியே கடக்கிறான் அந்த 

கலந்தலாடைபரதேசி....

 உனக்கும்

புரிஞ்சு போச்சா அவன் நடத்தும் பொம்மலாட்டம்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...