பொம்மலாட்டம்

 உடலில் மங்கையும் தலையில் கங்கையும்

அணிந்து காமத்தின் சிந்தனை ஏதுமின்றி எல்லையற்ற மாசில்லா

காதலை மனதில்

சுமந்தே தியானத்தில்

அமரந்தவனே.

உன் கோபத்தை

பாசமாக மாற்றி காட்டிய தேவியவள் நித்தமும்

பூஜிக்கிறாள் உன்னையே..

நதியின் வேகத்தை

தலையில் தாங்கி

தரணியை தழைக்க செய்தவனே...

எண்ண முடியாத

கஜானாவை குபேரனிடம்

கொடுத்து விட்டு நிம்மதியாக

வாழ்பவனே.

அபிஷேகப்பிரியனே..

மூலன் உரை மூலப்பரம்பொருளே..

புராணத்தை படித்து

சலித்துப் போனவருக்கும்

பிராணணை படிக்கும்

வித்தை சொல்பவனே..

தில்லையில் நீ ஆடிய

ஆட்டத்தை விட

உச்சம் தொடுகிறது சிலர் பணத்திற்காக போடும் 

குத்தாட்டம் ... நானும் கூட ஆடுகிறேன் பணம்

தேவையென்றே...

என்னை பார்த்து சிரித்த படியே கடக்கிறான் அந்த 

கலந்தலாடைபரதேசி....

 உனக்கும்

புரிஞ்சு போச்சா அவன் நடத்தும் பொம்மலாட்டம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...