774 - அடுத்த தலைமுறைக்கும் தமிழ்

 வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாட்டில் தான் பிறந்தனர் இருந்தாலும் பேசும் பாதி வார்த்தைகள் ஆங்கிலம் கலந்து தான் பேசுகின்றோம்.. இந்த நிகழ்காலத்தில் கணிணி இயந்திர மயமான வாழ்க்கையில் தமிழை படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது..தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமையையும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்கிறது.. சிலர் தமிழ் பாரம்பரியத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுக்க  அவர்களின் நிலை இப்போதும் குழந்தைகள் வெளிநாட்டில் இவர்களோ வயதான முதியவர்கள் இல்லத்தின் வாசலில் தனது பிள்ளை வரும் வரவை எதிர் பார்த்து 

குறிப்பு 

கட்டுரை எழுதி இன்னும் முடிக்கப்படவில்லை 

773 -கங்கை கொண்ட சோழபுரம்

 "சோழநாடு சோறுடைத்தது"

என்ற பழமொழியை

மாற்றி எழுத தணியாத 

ஆசைகொண்ட ராஜராஜசோழன்

கடாரத்தை வென்ற பிறகு 

நிலையான புகழ் தேடி

கட்டினான் தஞ்சை 

பெரிய கோவில் 

தந்தையின் வழியில் 

கங்கை கரையை வென்றுவிட்டு 

தனையன் உருவாக்கினான் 

கங்கை கொண்ட சோழபுரத்தில் 

சிவாலயம் ..அன்று சோழன் 

உருவாக்கிய சரித்திரத்தின் 

புகழை பாரெல்லாம் 

பறைசாற்ற காசியின்

கங்கை கரையில் வரலாற்றை 

தொடங்கிய இந்தியாவின் 

பிரதமர் வருகை தருகிறார் 

சோழ நாட்டிற்கு. தமிழகத்தின் 

சோழநாட்டுப் சிவாலயத்தின்

சிறப்பையும் பெருமையையும் 

உலகெல்லாம் உணர்த்த

சிவனை வழிபட்டு தமிழின் 

தொன்மையை

தரணியெங்கும் அறிந்திட

பெரிய புராணத்தின் 

கோஷம் விண்ணை 

தொட்டு விடவே மக்கள் 

கூட்டம் ஆர்ப்பரித்து 

நிற்கிறது சேக்கிழார் 

வரியில் நாமும் சொல்வோம் 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்


அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்


மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்கெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்...'. 

772 -கனவு பலிக்குமா தெரியலையே

 கனவு பலிக்குமா தெரியலையே.... நேத்து நல்லா தூங்கிக் கொண்டிருந்த போது ஓர் கனவு அந்த கனவில் டீ கடை( அட நம்ம கனவு டீ கடை தான் வரும்... சினிமா காரனும் அரசியல்லாதி அமர துடிக்கும் நாற்காலியாவயும்😃😃)..அட நாம குடிக்கிற டீ சாப்பிடற சாப்பாட்டுக்கு எல்லாம் GST வரி பிடிக்கிற மாதிரி அரசியல்வாதி வீட்டில் E.D Raid - பண்ணி பிடிக்கிற பணத்துக்கும் GST வரி போட்டா எப்படி இருக்கும் .. டீ குடித்து கொண்டு இருந்த இரண்டு நபர்கள் பேசிக் கொண்டு இருந்தனர் அடுத்த என்ன நடந்துச்சு எனக்கு சத்தியமா தெரியாது ஏன்னா அதுக்குள்ள கனவுல விளம்பர இடைவேளை வந்துச்சு அதுல நடிகை சமந்தா வந்து உங்க டூத் பேஸ்ட்-ல் உப்பு இருக்கான்னு கேட்க வந்துட்டாங்க..என்ன செய்யுறது நண்பா இப்போ எல்லாம் கனவுல கூட விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...😃😃😃கவலை மறந்து சிரிங்க நிம்மதியா தூங்குங்க 

771 -படைப்பு உலகபிரம்மாக்கள்

 மனித வாழ்க்கை 

குறுகியதாக இருக்கலாம், 

ஆனால் எழுத்தாளர்களின் 

எழுத்துக்கள் என்றென்றும் 

நிலைத்திருக்கும். 

நல்லது செய்வது 

எல்லோருடைய விருப்பம் 

எழுத்துக்கள் மூலம் 

சமூகத்தை மாற்ற முயற்சிக்கும் 

சில நபர்கள் ஏனோ கடவுள் 

சிலருக்கு மட்டுமே அளித்த அருள்.

மக்கள் அவர்களை

அழைப்பதுண்டு இவர்கள் 

படைப்பு உலகபிரம்மாக்கள்

 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...