விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் அதி அற்புதமான கதை...
வயதான முதியவருக்கும் நாய்க்குட்டிக்கும் நடக்கும் பாச போராட்டமே கதை களம்
டெய்சியின் காதல்...
Story on progress..
என்னங்க இப்போ நீங்க வரப்போறீங்களா இல்லையா...வந்து பாருங்க..வீட்டுல என்ன கூத்து நடக்குதுன்னு பாருங்க...
ஏண்டி படுத்துற... ராத்திரியிலே தான், என்னை கொஞ்சுங்கன்னு சொல்லி படுத்துற... இப்போ பகல் நேரத்தில் கூடவா....
ராத்திரியிலே ஓரு பேச்சு, பகல்ல ஓரு பேச்சு...என்னை கொஞ்சும் போது ரொம்பவே கசந்துதா... கோபத்தில் பேசிய உமா...
ஓர் நாள் ஞாயிற்றுக்கிழமை லீவு கூட நிம்மதியா இருக்க விட மாட்டே போலையே....
ஆமாம், எப்பவுமே என்னையே மாத்திரமே குறை சொல்லுங்க... சீக்கிரமா எந்திருச்சு வாங்க...
மாமனார் ஆசையாக வாங்கி கொடுத்த கிங் சைஸ் கட்டிலில் படுத்து கிடந்தவன்...அருகே ஏ.சி காத்து இதமாக அடித்தது... சித்திரை வெயிலில் ஏசி போட்டா அந்த சுகமே தனி தான்...
எப்போ பாரு.. சுகம் சுகமுன்னு..... உங்களை கல்யாணம் பண்ணிண நாளில் இருந்தே என் உடம்பும் மனசும் வம்பா போச்சு....
சீக்கிரம் வந்து உங்க அப்பா சொல்லுற கதையை கேளூங்க....
"அப்பா ". என்ற வார்த்தை கேட்டவுடன் முருகனின் முகத்தில் எரிச்சல் வந்தது.... இன்னிக்கும் உன்னை அந்த ஆளூ நிம்மதியா இருக்க விட மாட்டாறா....
எழுந்திருந்து பல்லு கூட தேய்காமல் ஹாலுக்கு வந்தான்....
அங்கே ஓர் மஞ்சள் பையை எடுத்து மடியில் வைத்து கொண்டு சோபாவில் ஓர் ஓரமாக அமரந்திருந்தார்...
இப்போ உனக்கு என்ன பிரச்சினை... நேத்து தானே... ரேஷன் கடைக்கு போக ஜம்பது ரூபாய் கொடுத்தேன்.... அதுக்குள்ளே அது தீர்ந்து போச்சா....
என்னது ஜம்பது ரூபாயா.... அதுவும் ரேஷன் கடைக்கு...
அது வந்து ஏதோ சொல்ல வாயெடுத்தவரை வேண்டாம் என்று கையின் அசைவில் உத்தரவு போட்டான்...
ஏங்க டெய்லி சுவீட் கேட்க தெரியுதே . இந்த மூணு மாசத்துல எத்தனை தடவை... உங்களுக்கு நான் சம்பளமில்லாத......அலுப்புடன் தனது கழுத்தில் கிடந்த சக்கிலியை காட்டினாள்....
ஏண்டி இது இருபது பவுணு...என்றவனை...ஏதோ ஐம்பது மாதிரி பேசுறீங்க.. அவனுக்குள் உஷ்ணத்தை ஏற்றிவிட்டாள்...அவரை இன்னிக்கு வெளியே அனுப்புங்க...கண் சாடையில் அவனுக்கு வெறியை ஏற்றினாள்...
இன்பமான பகலுக்காக... வெயிலின் வேதனையில் பல நாட்களுக்கு தந்தையை அலைய விட்டவன்.. இன்றும் கூட அவரை வெளியே போக சொல்ல நினைத்தான்...
அதற்குள் அவரே பேச தொடங்கினார்...
அது வந்து முருகா... நான் ஓர் இரண்டு நாளூ தங்கச்சி வீட்டுலே போயி தங்கலாம்ன்னு நினைக்கிறேன்.. உங்க அம்மா போனதில் இருந்தே எனக்கு அவ நினைப்பாவே இருக்கு...அவ உங்க அம்மா சாயல். கனவில் மிதந்தவரை...
உங்களை ஒரு நாள் கடைக்கு போக சொன்னா...மறுநாள் இப்படி கதை சொல்லுறதே பொழப்பா போச்சு...
ஏன் மருமகளுக்கு வேலை செஞ்சா உங்க கெளரவம் குறைச்சு போகுமா???
அது எல்லாம் எங்கேயும் போக வேண்டாம்.. நாளைக்கு என் பைக் சர்வீஸ் விடணும்.. நீங்க வீட்டிலேயே தண்டச்சோறு தானே தின்னுறீங்க.... பொறுப்பா அந்த வேலையை பாருங்க....வர வர தோட்டத்து வேற சரியா தண்ணீர் பாச்சுறது இல்லையாம்....ஏதோ போனா போகுதுன்னு விட்டா.. ரொம்பவே படுத்துறீங்களே.... போங்க..போயி நேத்து நான் வாங்கிட்டு வந்ந தென்னங்கன்றை நட்டு வைங்க... எழுந்து பல் நேரம் கிளம்பினான்..
கடிகார மணி பத்தரை என்று காட்டியது...வேறு வழியின்றி தோட்டத்தில் சென்று மரத்தை நட்டினார்....
குளித்து விட்டு வந்தவன்... சமையலறையில் தனியாக இருந்த பொண்டாட்டியை கட்டிப்பிடித்து அவளின் கழுத்தில் முத்தமிட்டான்....
ஆமாம், இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை....
ஏன்டி காலையிலேயே புலம்புறே...
என்னது மணி 11.20 சாருக்கு நேத்து நைட்டு டூட்டி அதான் எல்லாமமறந்து போச்சு... அவனின் ஆசைகளை தனது அடித்தளமாக்கி வீட்டில் மகாராணியாக தன்னை நிலைநிறுத்தியவள்....
முத்தமிட்டு கொண்டிருந்தவன் முகத்தை ஜன்னல் வழியாக பார்க்க வைத்தாள்... பாருங்க.. நான் உங்களுக்கு பிடிக்குமேன்னு புடலங்காய் கூட்டு, பீட்ரூட் பொரியல், கார குழம்பு எல்லாம் கஷ்டப்பட்டு வைக்குறேன்....
உங்க அப்பா அழுது அழது நம்மை ......அவரு தான் உங்க தங்கச்சி வீட்டுக்கு போறேன்னு சொன்னாறே அவரை அனுப்பி தொலைக்க வேண்டி தானே... மதியம் அம்மா வருவதாக சொல்லி இருக்காங்க... உங்க பத்து நாள் லீவுக்கு நான் எப்படி எல்லாம் ப்ளான் போட்டு வைச்சேன்...
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கிழத்தை நாம சுமக்கணும்.. பேசாம அவரை அங்கே அனுப்புங்க... பிறகு தினமும் பகலில் கூட உங்களுக்கு... சேலையை சரி சய்வது. போல தனது உள்ளாடையின் நிறத்தை காட்டினான்...
சொன்னா புரியணும். ...சிவ பூசை பண்ணும் போது கரடி மாதிரி எதுக்கு....
சிற்றின்ப ஆசையை அவனுக்குள் விதைத்தாள்.... துணிக்கடையில் ஆறாயிரம் சம்பள வேலையில் கிடைத்த முப்பது வருட வருமானத்தில் தீபாவளிக்கு எடுக்கும் இரண்டு செட் வேட்டி சட்டை தவிர பெரிதாக எதுவுமே செய்து கொள்ளாத தகப்பனின் பாசத்தை.. பொண்டாட்டியின் உள்ளாடை பின்னுக்கு தள்ளியது..... பத்து மணிக்கு மேல் வீட்டு வந்தவருக்கு பாதி நாள் கிடைத்தது பழைய சோறும் பொரிகடலை துவையலும்....
ஏன் செண்பகம், குழத்தைங்க இதையா சாப்பிட்டாங்க....
இல்லைங்க, அவங்களுக்கு ரவை தோசையும் பாசிப்பருப்பு சாம்பாரும் வைச்சு கொடுத்தேன்...இது நம்ம இரண்டு பேருக்கு மட்டும் தான்..ஓரே ஒரு தோசை இருக்கு தரட்டுமா...
தட்டில் ஆறிப்போன தோசை .. அதில் பாதியை எடுத்து மனைவி செண்பகத்தின் தட்டில் வைத்தார்...
நீயும் நல்லா சாப்பிடுன்னு சொன்னா.கேட்டா தானே... பெரிய குந்தி தேவின்னு நினைப்பு...
அறுபது வயது கிழவிக்கு வெட்கம் வந்தது...சும்மா பேசாம சாப்பிடுங்க..
மாப்பிள்ளைக்கு நம்ம பழையது சாப்பிடுறது தெரிச்சா மனசு கஷ்டப்படும்...
காலையிலேயே இட்லி தான் நம்ம எல்லாருக்கும் .. உங்களுக்கு பிடிச்ச புதினா சட்னி....வாசல்ல ஒருத்தன் கொண்டு வந்தான்.. இரண்டு கட்டு பத்து ரூபாய்... அவளின் பேச்சில் குடும்பத்தின் பொருளாதாரமே அடங்கிப்போனது....
மரத்தை நட்டியவரின் கண்களில் நீர் தழுப்பியது... படிச்சு முடிச்சிட்டு நாலு வருஷமா கவர்மெண்ட் வேலைக்கு தான் போவேன் அடம் பிடித்தவனை செண்பகம் கேள்வி கேட்டாள்...
ஏன்டா, முதல்ல ஏதாவது ஓரு வேலைக்கு போ... கவர்மெண்ட் வேலை கிடைக்கும் போது கிடைக்கட்டும்....
செண்பகம் நமக்கு இருக்கிறது ஓரே பையன்... பொண்ணை நல்ல படியா கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... பொறுமையா இரு.. நம்ம பையன் கவர்மெண்ட் வேலைக்கு போனா நமக்கு தானே பெருமை.... ஏன் பையன் எதுக்காகவும் கஷ்டப்படக் கூடாது....
ரொம்பவே செல்லம் கொடுக்காதீங்க.. ஓர் நாள் அவன் உங்களை தண்டச்சோறுன்னு சொன்னாலும் சொல்வான்.... நினைத்து பார்த்தவருக்கு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை....
செண்பகம்.. செண்பகம்... வார்த்தைகள் கண்ணீருடன் போரிட்டன...
கதை தொடரும்....