வேலைக்கு போகணும்...

 


ஏண்டா நீ வேலைக்கு போக மாட்ங்குறேன்னு...

எல்லோரும் என்னை கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க.

எனக்கு பயங்கரமா கோபம் வந்திருச்சு..

அதனால அம்மா ஆசையா தந்த மொறு மொறு நெய் தோசை திங்க மாட்டேன்னு அடம் பிடிச்சேன்...( முரட்டு சிங்கம். அதான் எங்க நயினா...முதுகு தோலை உரிச்சுட்டாரு)..

அக்கா கூட நம்ம தம்பியை அடிக்காதீங்கன்னு சொல்லவரலை....

இரு இரு..‌அக்கா பிசாசு நாளை நீ ஐஸ்கிரீம் கேளூ.. அப்போ காட்டுறேன் என் வீரத்தை..

மச்சான் விளையாட வர்றீயாடா...

டேய் இன்னிக்கு நான் விளையாட வரலைடா...

நான் ரொம்ப சோகமா இருக்கேன்...

மச்சான் உன் பிரென்ட் பம்புளிபாஸ் உன்னை கூப்பிடுறா...

அவளுக்கு சைக்கிள் தள்ளி விட ஆள் இல்லையாம்..

அந்த லூசை கூப்பிடு..நல்லாவே பல்லை காட்டிக்கிட்டே வந்து உதவி செய்வான், அப்படின்னு சொன்னாடா...

.. சீக்கிரம் போடா.. எப்படியும் ம்ம் ம்ம்... அந்த பொண்ணு உனக்கு தான்...


டேய் இருக்குடா இந்த கதை சொல்லி முடிச்சுட்டு விளையாட வாரேன்...

அட டென்ஷன் ஆகாதீங்க நண்பா...

நம்மளை ஓர் கதை கூட நிம்மதியா சொல்ல விடுறாங்கங்களா... எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் தான்..என்னைய மாதிரியே தான்..

ஆங்.. எங்க விட்டேன்.. ஆங்....

அப்புறம் அம்மா நாலு முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணீனாங்க..அதனால வீட்டை விட்டு போற முடிவை மாத்திக்கிட்டேன்....

இப்போ சொல்லு தங்கம் உனக்கு என்ன பிரச்சினை...

அட என்னை விட சின்ன பசங்க எல்லாம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறான்னுங்க....

நான் இன்னும் எத்தனை நாளைக்கு தான் அப்பா சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடுறது....

எனக்கு வெளியே தலை காட்ட முடியலை. ..

ஓரே shyயா இருக்கு...

அட இது தான் செல்லம் உன் கோபமா....

உன்னை யாராவது வேலைக்கு சேர்த்து கிட்டா அவங்களை போலீஸ் பிடிச்சு போயிரும்....

ஏம்மா அப்படி...

அட மக்கு பயலே.... குழந்தையை வேலை செய்ய சொல்லகூடாதுடா.....

உனக்கு சந்தேகமா இருந்தா போய் கண்ணாடியில் போய் உன் முகத்தை பாரு...அப்படின்னு.  சொன்னாங்க....

நானும் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன்...ரொம்பவே சின்ன பையன் மாதிரியே தான் இருக்கேன்..


அட நீங்க ஏன் இப்போ இவ்வளவு சீரியஸ்யா முறைக்குறீங்க...

இது ஓர் கற்பனை கதை தானே..இதுக்கே இப்படின்னா... இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ....பாக்கி இருக்கு....

வாழ்க்கையில் இருக்கிற கவலையை சிரித்து மாற்றுங்க..

அப்புறம் பாருங்க..வாழ்க்கை சும்மா சூப்பரா இருக்கும்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நண்பா..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...