பொறுப்பு துறப்பு -
கீழ் கண்ட கதை முழுக்க முழுக்க கற்பனையே..யாராவது ஒருவர் இது எனது வாழ்வில் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அது தற்செயலானதே.. அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல
ஓர் நாள் உலகில் இருக்கும் மக்கள் எல்லோரும் நம்மை எவ்வளவு அன்பா கூப்பிடுறாங்க.. ஆராதனை பஜனை எல்லாம் பண்ணுறாங்க என்று சந்தோஷமா பூமிக்கு வந்து தன்னை வணங்கிய வழிபட்ட ஓவ்வொரு மனிதரோட வீட்டுக்கும் போய் வாசலில் நின்று கொண்டு.. நீங்க தினமும் வழிபடும் கடவுள் நான் தான் என்றார்..இதே மாதிரி எல்லா வீடுகளிலும் போய் சொன்னார்.. பாவம் அந்த கடவுளோட நிலைமை யாருக்கும் வந்துட கூடாது.. என்னவென்று கேட்குறீங்க..எல்லா மதங்களை சேர்ந்த எல்லா மனிதர்களும் நாட்டுகாரங்களும்... அந்த.ஓரே ஓர் கேள்வியை தான் மீண்டும் மீண்டும் கேட்டார்களாம்..
ஏன்ப்பா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சு வந்தேன்னு சொல்லு????
கடவுளை நம்புறவங்க தான்..கடவுளை பைத்தியக்காரங்க என்று நினைக்குறாங்க..இது வரைக்கும் கடவுளே இல்லை என்று சொல்லி இருப்பவன் முன்னாடி நின்னு நான் தான் இந்த உலகை படைச்ச கடவுள் என்றவுடன்..
நீதான் கடவுள் என்பதை நான் எப்படி நம்புறது மூணு மணி நேரம் உனக்கு தருகிறேன் நீ தான் கடவுள் என்றால் உலகத்தை எப்படி படைச்சே உலகம் உண்டானது முதல் இதுவரை உலகில் என்னவெல்லாம் நடந்து இருக்கு சொல்லு பார்க்கலாம் என்றான் கடவுளே இல்லை என சொல்லி வாழ்ந்தவன்.
அட நம்மை தினமும் பல்வேறு மதங்களின் பெயரால் வணங்கிய மனிதர்கள் தான் நம்மை நம்பாமல் இருக்காங்க.. இவன் கடவுளை நேரில் பார்க்கவில்லை என்பதால் தான் இவ்வளவு நாள் இப்படி இருந்திருக்காம்.. நான் பேசி முடித்த பிறகு.. இவன் கேட்ட வரமெல்லாம் கொடுத்து இவனை உலகில் உலக புகழ் பெற்ற பெரிய மனிதனாக மாற்றணும் என நினைத்து கொண்டே மூணு மணிநேரம் மூச்சு விடாம பேசினார் கடவுள்.
எல்லாத்தையும் நல்லா விலாவாரியா கேட்டு கொண்டிருந்த அந்த கடவுள் இல்லை என்றவர்..
கடவுள் பேசி முடித்தவுடன்...சரிப்பா இனிமே நீ கிளம்பலாம் என்றார்.
தன்னை இவனாவது நம்புவான் என்று நினைச்சா .. இப்படி தலையும் காலும் புரியாம பேசுறானே என குழப்பி போனார்.
என்னப்பா நான் தான் கடவுள் என்று மூணு மணிநேரம் பேசிய பிறகும் நம்பா இருக்கீயே..இது எந்த விதத்தில் நியாயம்...
யோவ் இந்த உலகம் என்னையும் பல நாள் பைத்தியக்காரன் என்று தான் கேலி பண்ணுச்சு.. நம்மை மதிக்காத மக்களை எப்படி முட்டாளாக்குவது என்று நானே யோசித்து யோசித்து கண்டுபிடிச்ச விஷயம் தான் கடவுளே இல்லை என்று...
ஓர் ஜாதியை இல்லை என்றால் இன்னொ ஜாதிகாரன் சண்டைக்கு வருவான்..ஊரை பத்தி பேசினா ஊர்க்காரன் சண்டைக்கு வருவான்.
மதம் பற்றி பேசினா
சண்டைக்கு வருவான்.
சட்டத்தை பத்தி பேசினா நம்மை பிடிச்சு ஜெயில் அடைச்சாலும் அடைப்பான்..
கடவுளை பத்தி என்ன பேசினாலும் கடவுள் நேரில் வரவே மாட்டான்.. அதான் கடவுள் எதிர்ப்பை பேசி பேசியே சில வருஷத்தில் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைச்சுட்டேன்..
பிறகு எதுக்கு என்னை இப்படி மூணு மணிநேரம் பேச வைச்சு கேட்டேன்.
எல்லோரும் சொல்லுற மாதிரி நீ பைத்தியக்காரன் தானா.
ஏய் என்னப்பா நீயும் என்னை பைத்தியக்காரன் என்று சொல்லுறே.
இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ..
பேசவே தெரியாத நன்கு படித்த கூமூட்டைகளையும்...
இன்னிக்கு இதை பேசினா நாளைக்கு நம்ம பதவிக்கு ஆபத்து வருமே என்று கூட தெரியாம மனசில் பட்டதை பேசும் வெள்ளந்தினா மனுஷனையும் கண்டா உடனே எங்களோட அடுத்த மீட்டிங்கில் அவரை சிறப்பு விருந்தினரா அழைத்து...அவரோட அறியாமையை பயன்படுத்தி எங்க கடவுள் மறுப்பு விஷயத்தை நல்லா பேசி சிரிப்போம்... அப்போ தான் அடுத்த மீட்டிங் போடும் போது காசு வசூல் சுலபமா இருக்கும்..
அப்போ நான் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா..
நீ உண்மையிலேயே கடவுளா இருந்தா நான் உன்னை எவ்வளவோ எதிர்த்து பேசி இருக்கேன் அதுக்கு நீ என்னை தண்டிச்சு அல்லவா இருக்கணும்.
நான் மனுஷன் கிடையாது கூட இருந்து சிரித்து சிரித்து பேசி விட்டு முதுகில் குத்துவதோ.. பிறருக்கு துன்பம் தருவது போல செயல் செய்வதோ எனது வேலை கிடையாது.
என்னை வணங்கும் எல்லா மக்களுக்கும் நல்லது செய்வது தான் என் வேலை
அது வரை அமைதியாக பேசிக்கொண்டு இருந்தவனுக்கு கோபம் வந்தது..
யோவ் இப்போ நீயா போறீயா இல்லாட்டி..சில வார்த்தைகள் பேசவும் மிகுந்த மனவருத்தம் கொண்டு கடவுள் அங்கிருந்து கிளம்பினார்.. அப்போது மனதிற்குள் நினைத்தார்... என்னை வணங்குபவர்கள் எல்லோருமே நல்லங்க அவங்ககிட்ட காசு பணம் இல்லாமல் இருந்தாலும் என்னை பைத்தியக்காரன் என்று தான் சொன்னாங்க... ஆனால் நீயோ என்னை இவ்வளவு நேரம் பேச வைத்து மனசும் கஷ்டபட வைத்து அனுப்பியதால்... உனக்கு நீ விரும்பிய படியே நிறைய காசு பங்களா தருகிறேன்..அதே மாதிரி உன்னை தன்னோட நண்பனா காட்டிக்கொண்டு வாழும் அரசியல்வாதிகளுக்கும் பதவி பட்டம் அந்தஸ்து எல்லாமே தருகிறது.. ஆனால்.. உன்கிட்ட எல்லாமே இருக்கும்... இருந்தாலும் உன் மனசுல நிம்மதியே இல்லாம தான் இருக்கணும்..அது போக உன்கிட்ட இருக்கிற எந்த பொருளாக இருந்தாலும் நீ உன் கூட இருக்கும் நல்லவனை கூட நம்பாமல் சந்தேக புத்தியோட தான் எப்போது இருப்பேன்...எப்போ பதவி போகுமோ எப்போ பணம் நம்மை கையை விட்டு போகும்போது..நம்மை விட இன்னொருத்தர் முன்னேறி விடுவானே என்று சந்தேகம் இது எல்லாமே இருக்கும் என சபித்து விட்டு போனார்.
தன்னை பைத்தியக்காரன் என்று கேலி பேசி எல்லா மதம் சார்ந்த மக்களும் தன்னை மிகவும் இரக்கமாக பார்த்த படி செல்வதையும் அதில் சிலர் சில காசுகளை கடவுள் கையில் கொடுத்து... உனக்கு பசிச்சா போய் சாப்பிடு என்ற சிலர்.இன்னும் சிலர்.. நான் சொல்லுற வேலை மட்டும் செஞ்சா போதும் மூணு வேளை சாப்பாடு தங்கும் இடம் இலவசமாக தருகிறேன் என்றனர்.
சிலர் யார் பெத்த பிள்ளையோ... தானம் செய்து விட்டு நகர்ந்து சென்றனர்.
கடைசியில் யாருக்குமே நான் கடவுள் என்பதை அறிந்து கொள்ளாமல் மீண்டும் வானுலகம் செல்ல தயங்கிய படி கடவுள் நின்று கொண்டு இருந்தார்..
இந்த நிகழ்வை யெல்லாம் பார்த்து கொண்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்த சில சிறு குழந்தைகள், அவரை நோக்கி வேகமாக ஓடிச் சென்றனர்.
கடவுளே....கடவுளே... நீங்கள் யார் எந்த வரம் கேட்டாலும் கொடுப்பதாக எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி சொல்லி இருக்காங்க.. நீங்க எங்க எல்லோரும் ஓர் வரம் கொடுக்க முடியுமா என்றனர்.
ச்சே என்ன ஓர் பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன்.. எதையோ பேரிடம் நான் தான் கடவுள் என்ற போது ஒருத்தனும் நம்பாமல் பைத்தியக்காரன் என்று கேலி பேசி சிரித்தனர். கடவுளே இல்லை என்றவன் என்னை பகடை போல் உருட்டி விளையாடினான்.. இந்த குழந்தையிடம் நான் தான் கடவுள் என்று சொல்லாமலே என்னை புரிந்து கொண்டு வரம் கேட்கிறதே மிகவும் சந்தோஷ பட்டார்.
குழந்தைகளே என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். படிப்பு வேணுமா செல்வம் வேண்டுமா...தனி தீவு வேண்டுமா.. அல்லது இன்னொரு உலகம் குழந்தைகள் மட்டும் வாழும் படி உருவாக்கி தரவா மகிழ்ச்சியா கேட்டார்.
எல்லா குழந்தைகளும் ஓர் சேர கேட்டனர்.. கடவுள் நீங்கள் எங்களுக்கு எதுவுமே நேரடியாக தர வேண்டாம்.
குழந்தைகளே நான் கடவுள் நீங்க எது கேட்டாலும் என்னால் கொடுக்க முடியும் என மீண்டும் தான் கடவுள் என்பதை சொன்னார்..
அதில் ஒருவன் சொன்னான், நீங்க எது கொடுத்தாலும் எப்படியும் எங்க அம்மாவும் அப்பாவும் கண்டுபிடிச்சு அதை எங்கிட்ட இருந்து புடுங்கி விடுவாங்க
நீங்க என்ன சொல்லுறீங்க எனக்கு எதுவுமே புரிரலையே என்ற கடவுள்..
கடவுளே, நீங்க எங்களுக்கு எதுவும் தரவேண்டாம்.. ஆனால் நாங்க எது கேட்டாலும் எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி வாங்கி தரும் படியான வரத்தை கொடுங்க என்றார்.முக்கியமா .. நாங்க கேட்கும் ஐஸ்கிரீம் சாக்லேட் சாப்பாடு மற்றும் விளையாட்டு பொருட்கள் இதை நாங்க கேட்டவுடனே வாங்கி தரும் படி செய்யுங்கள் என்றனர்
தன்னிடம் இருக்கும் புத்திசாலித்தனம் தனது குழந்தைகளில் இருப்பதை நினைத்து சந்தோஷமாக அப்படியே ஆகட்டும் என்றார்.
பணம் என்பதை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் நீங்க எதை கேட்டாலும் உங்களின் பெற்றவர் வாங்கி தரும் படியான வரத்தை தருகிறேன் என்றார்.
அதனால் தான் எல்லோரின் வீட்டிலும் ஐஸ்கிரீம் சாக்லேட் சாப்பாடு விளையாட்டு பொருட்கள் கேட்டால் அவர்களுக்கு அவை கிடைக்கும் படியாக கடவுள் செய்கிறார்..