725 - ஆண்ட கட்சி

 தொண்டர்களை மறந்து 

கரண்சியை எண்ணிய 

கட்சி தலைவர் அவர்..

கரண்சியின் கரெண்ட் 

வந்த மயக்கத்தில் 

தொண்டர்களை புறந்தள்ளினார்.

கரண்சியும் கட்சியும் 

கரைந்த பின்னர் 

( மன்னிக்கவும் மேலே இருப்பவன் 

கரைக்க வைத்த பின்னர்)

கரைந்து போன கரண்சி வந்த 

வழியை சொல்ல 

வருமானவரித்துறை வாசலில் 

நிற்கிறார்.. சார்..டீ... சார் டீ...

என்பவன் கூட முறைத்து செல்கின்றான்...

முன்னாள் தலைவர்.. பணமின்றி 

அவர் படும் அவஸ்தையை ...

கரைந்தது கரண்சி மட்டுமல்ல...

ஆறுபது ஆண்டுகளாக 

ஆண்ட கட்சியும் தான்..

724 - பணத்தின் வலி(மை)

பாசத்தை தேடுபவன் 

பரிதவிக்கிறான்..

பணத்தை தேடுபவனோ 

பரிகாசம் செய்கிறான்..

பாசத்திற்கு கட்டுபட்டு 

கடையில் கல்லாவின் 

அமர்ந்தவனை பதம் பார்க்கிறது 

பணமென்னும் வஜ்ராயுதம்..

ஓவ்வொரு நாளும் சொந்த 

உறவுகளிடம் பணத்தின் 

கணக்கை சொல்லும் போதே 

புரிகிறது....பாசத்தை 

அடமானம் வைத்தது

பணத்தின் வலி(மை)


723 - அந்த மனிதர்கள்

பணமும் பாசமும் 

மாறுபட்ட தளங்கள் 

ஆனால் இந்த உண்மை 

புரியாமலே புறந்தள்ளி 

நடக்கின்றனர் பணத்தை 

தேடி ஓடி அலையும் பாசக்கார 

மனிதர்கள்.... அலுத்துக் களைத்து 

அமரும் போதே தேடி கின்றனர் 

தாங்கள் தொலைத்த அன்பான 

நேரங்களை....காசுக்காக பாசத்தின் 

நேரத்தை அடமானம் வைத்த 

அந்த மனிதர்கள்

722 - மன்மோகன்சிங் மறைந்தார்

கூண்டிற்குள் அடைபட்டு கிடந்த இந்திய பொருளாதாரத்தை உலகளாவிய சந்தைக்கு விரிவுபடுத்தி, இந்தியாவின் பொருளாதாரத்தின் தரத்தை உலகமே வியக்கும் வண்ணம் வழிகாட்டிய சிறந்த பொருளாதார நிபுணர்.


லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தங்கம் வாங்கி விட்டு இந்திய பொருளாதாரத்தை தங்கமாக ஜொலிக்க வைத்தவர்

இந்திய வங்கிகளின் தலைமையாக செயல்பட்ட ரிசர்வ் வங்கியின் கவர்னராக  விளங்கியவர்.

இந்திய பொருளாதாரத்தின் கட்டமைப்பை மாற்றியமைத்து மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர்.. இவர் செய்த பொருளாதார மேம்பாட்டிற்கான வரலாற்று நிகழ்வுகளே செயல்களே இவரை பாரத பிரதமராக அரியணையில் அமர வைத்தது.

நமது இந்திய பொருள்கள் உலக நாடுகளில் கிடைக்கவும்..பிற நாட்டு பொருள் இந்தியாவில் கிடைப்பதற்கும், இவர் வகுத்து கொடுத்த மிக உன்னதமான திட்டங்கள் தான்.

படித்தவர் என்பதையும் தாண்டி சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்திய திருநாட்டின் பாரத பிரதமராக இவர் செய்த செயல்கள் காலம் கடந்தும் போற்றுதலுக்குரியதே...

ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭

721 - செல்ல மகள்

அன்பே உருவான எனதருமை மஞ்சள் நிற தேவதையே உனது மனதில் இருந்த காயங்கள் எல்லாம் சரியாகி விட்டதா என்றே வாஞ்சையுடன் அவளின் முன்னால் கெஞ்சலுடன் கேட்டேன்..அவளோ தனது மழலை மொழியில் வார்த்தைகளை தட்டு தடுமாறி தேடிப் பிடித்து யோசித்து யோசித்து சொன்னாள்.   என்மேல் இருந்து பயம் குறைச்சு போச்சுன்னு நினைக்கிறேன்.. உனக்கு ரொம்ப தான் கொழும்பு கூடிப் போச்சு.. ஏய் சமையல்காரி உன் புருஷன் என்கிட்ட என்னமோ சொல்லுறான்.. என்னன்னு கேட்டு சொல்லுடீ.. நான் கேட்டத்தை வாங்கிட்டு வந்தால் தான் இந்த செல்லம் அந்த ஆள்கிட்ட பேசும்..தோசை கரண்டியோடு எரிச்சலுடன் வெளிப்பட்டாள்..அவளை பெற்ற மகராசி..

ஏன்டீ நாலு வயசு கூட முழுசா முடியலை அதுக்குள்ளே என்னையவே அதிகாரம் பண்ணுவீயா... அம்மாவின் அடிக்கு பயந்தே தோளில் வந்து சாய்ந்து கொண்டு சிணுங்கினாள் செல்வமகள்..யப்பா வர வர உன் பொண்டாட்டி ரொம்ப எரிச்சல் படுறா இவளை   நீ எப்படித்தான் சமாளிக்கிறீயோ...அலுத்துக் கொண்டாள் 

கள்ளமில்லாத சின்னஞ்சிறு தேவதையான அன்புமகள்..மனைவியோ கண்களால கவிதை சொன்னாள்..உங்க பொண்ணுக்கு உங்கள மாதிரி வாய் ஜாஸ்தி 

720 - அப்பாவின் அப்பாவி காதல்

 தன் மீது அளவுகடந்த அன்பும் பாசமுமாய் வாழ்ந்த அப்பாவிடம் அவள்தான் அந்த கேள்வியை கேட்டாள்.

அப்பா எத்தனையோ நாள் நான் உன்னிடம் கேட்க நினைத்த கேள்விதான் ஆனால் உன்னோட மனசு கஷ்டப்படுமே என்று கேட்காமலே இருந்து விட்டேன்.. இப்போ நீ நோய் பட்டு படுத்த படுக்கையில் இருப்பதால்... உன் அதிகமாக மரியாதை வைத்து இருக்கும் சொந்த பந்தமும் நட்பும் கூட உன்னை போல் வாழ முடியலையே என்று ஏக்கத்துடன் சொல்வதுண்டு.


உங்க அப்பா தான் எங்களுக்கு எல்லாம் ஓர் வழிகாட்டி என்று அதனால் தான் கேட்கிறேன்..நீ என்கிட்ட உன் மனசுலே தோணும் பதிலை எனக்கு சொல்லுவாயா அப்பா.. தளர்ந்து போன உடல், தள்ளாடிய படி இருக்கும் அவரின் உடல்.. மெதுவாக அவருக்கு வலித்து விடாத படி அப்பாவின் கன்னத்தோடு தனது கன்னத்தை உரசிய படி கேட்டாள்.அப்போது அவளின் கண்ணில் வந்து உஷ்ணமான நீர் அவரின் நெற்றியில் பட்டது.

என் அன்பான மகள் நீ எந்த ஒரு விஷயத்துக்கு அழக்கூடாது என்று தானே உனக்கு சொல்லி வளர்த்தேன்.. ஏன் இன்னிக்கு இப்படி என்றார்.

என்னை மன்னிச்சிடு அப்பா , என்னோட மனசுல இருந்து நம்பிக்கை குறையுது அதனால் தான்..


கவலைபடாதே மகளே எனக்கு இப்போ 72 வயசு தான் ஆகுது.. இன்னும் 21 வருஷத்துக்கு என்னோட ஆயுசு இருக்கு..நீ கவலைபடாதே.

அப்பா அவளின் கண்ணீர் பெருகியது.. இருந்தாலும் நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லியே தீரணும்.

நான் எவ்வளவு நல்லவனா இருந்தாலும் என்னோட சின்ன வயசுல யாருமே என்னை நல்லவனா நினைக்கவும் இல்லை அங்கீகாரம் செய்யவும் இல்லை.

அதனால் நான் உங்க அம்மாவ கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ஓர் தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன்..உனக்கு தான் தெரியும் முருகன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று.


அதனால் சாகுறதுன்னு முடிவு எடுத்தாச்சு, நமக்கு பிடிச்ச முருகனை கடைசியா ஓர் தடவை கோவிலில் போய் கும்பிட்டு விட்டு சாகலாம் என்று பத்து கிலோமீட்டர் தள்ளி இருந்த அந்த மலை கோவிலுக்கு நடந்தே போனேன் .

கோவில் உள்ளே போகும் வரை எப்படியும் செத்தே போகணும் என்று நினைச்ச எனக்கு .. அங்கே அந்த கோவிலுக்கு போன உடனே மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை உணர்ந்தேன்.

யாரும் அதிகமா இல்லாத அந்த கோவிலில் பூசாரி இருப்பா..சில நேரங்களில் அந்த கோவிலில் ஓர் சாமியார் இருப்பார். 

அவர் குளிச்சே பல வருஷமா இருக்கும், பெரிய தாடி சடாமுடி அழுக்கேறிய உடை இப்படி தான் இருப்பார். நான் கடவுளை தான் கூப்பிடுவேன்.. இவர் சாதாரண மனுஷன் தானே இவனுக்கு எல்லாம் வணக்கம் சொல்லணும் என்ற வாலிப திமிரில் அலைந்த கால கட்டத்தில் அவரை நான் மதிச்சதே கிடையாது.


ஆனால்அந்த மனிதன் எப்போதும் 

719 - நல்லவன் வாழ்வான்

 நல்லவனாக வாழ்ந்து பாருங்க.. பிறகு தெரியும் நல்லவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று ஏன்னா நீங்க நல்லவனா இருக்கலாம் ஆனால் எதிரில் இருக்கும் நபர்கள் உங்களை கெட்டவனா என்று தான் யோசிப்பாங்க ஏன்னா இந்த உலகில் நல்லவனா வாழும் ஓவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரால் ஏமாற்ளத்தை தன்னோட வாழ்க்கையில் அனுபவமாக பெற்று..அதை போன்ற அனுபவம் வேறு யாருக்கும் வந்துட கூடாது என்று வாழ்பவர்கள் தான்.. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களை பெற்றோரிடம் கேட்டு பாருங்கள் அவங்க ஏன் நல்லவராகவே வாழ்ந்த கதையை சொல்லுவாங்க 

718 - மகாகவி பாரதி

 பாவைகளின் வாழ்வில் தனது பாக்களால் பாதை காட்டியவன் மேடையில் ஏறி 

போலியாக 

பெண் விடுதலை பேசி காசு வாங்க தெரியாத அப்பாவி முண்டாசு கவிஞன்..ஆயினும் இந்த அப்பாவி மனிதன் தன்னை விடவும் அப்பாவியாக வாழ்ந்த இந்திய மக்களின் மனதில் ஏற்படுத்திய சுதந்திர தாகம் தான் எவ்வளவு அசாத்தியமது

பரங்கியரின் பீரங்கியும் துப்பாக்கியும் கண்டு கலங்கிடாமல் கர்மத்தின் வழியில் தர்மம் நிலைநாட்ட எழுதிய கட்டுரையை படித்து கோட்டையில் இருந்தவருக்கு 

சிம்ம சொப்பனமாய் இருந்ததுவே... எட்டயபுரத்தில் அவதரித்து இந்திய இலக்கியத்தில் 

இமயம் தொட்ட 

இவனின் உயரத்தை  இதுவரையில் யாராலும் தொட முடியவில்லையே..

ஏனெனில் இவன் காசுக்காக வாழ்ந்தவனில்லை..

கண்ணனின் மொழியில் கர்மயோகியாக 

வாழ்ந்த முண்டாசு கவிஞன் எங்களின் 

மகாகவி பாரதி

717 - கடவுளும் குழந்தையும்


பொறுப்பு துறப்பு - 
கீழ் கண்ட கதை முழுக்க முழுக்க கற்பனையே..யாராவது ஒருவர் இது எனது வாழ்வில் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அது தற்செயலானதே.. அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல 

 ஓர் நாள் உலகில் இருக்கும் மக்கள் எல்லோரும் நம்மை எவ்வளவு அன்பா கூப்பிடுறாங்க.. ஆராதனை பஜனை எல்லாம் பண்ணுறாங்க என்று சந்தோஷமா பூமிக்கு வந்து தன்னை வணங்கிய வழிபட்ட ஓவ்வொரு மனிதரோட வீட்டுக்கும் போய் வாசலில் நின்று கொண்டு.. நீங்க தினமும் வழிபடும் கடவுள் நான் தான் என்றார்..இதே மாதிரி எல்லா வீடுகளிலும் போய் சொன்னார்.. பாவம் அந்த கடவுளோட நிலைமை யாருக்கும் வந்துட கூடாது.. என்னவென்று கேட்குறீங்க..எல்லா மதங்களை சேர்ந்த எல்லா மனிதர்களும் நாட்டுகாரங்களும்... அந்த.ஓரே ஓர் கேள்வியை தான் மீண்டும் மீண்டும் கேட்டார்களாம்..

ஏன்ப்பா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சு வந்தேன்னு சொல்லு????

கடவுளை நம்புறவங்க தான்..கடவுளை பைத்தியக்காரங்க என்று நினைக்குறாங்க..இது வரைக்கும் கடவுளே இல்லை என்று சொல்லி இருப்பவன் முன்னாடி நின்னு நான் தான் இந்த உலகை படைச்ச கடவுள் என்றவுடன்..

நீதான் கடவுள் என்பதை நான் எப்படி நம்புறது மூணு மணி நேரம் உனக்கு தருகிறேன் நீ தான் கடவுள் என்றால் உலகத்தை எப்படி படைச்சே உலகம் உண்டானது முதல் இதுவரை உலகில் என்னவெல்லாம் நடந்து இருக்கு சொல்லு பார்க்கலாம் என்றான் கடவுளே இல்லை என சொல்லி வாழ்ந்தவன்.

அட நம்மை தினமும் பல்வேறு மதங்களின் பெயரால் வணங்கிய மனிதர்கள் தான் நம்மை நம்பாமல் இருக்காங்க.. இவன் கடவுளை நேரில் பார்க்கவில்லை என்பதால் தான் இவ்வளவு நாள் இப்படி இருந்திருக்காம்.. நான் பேசி முடித்த பிறகு.. இவன் கேட்ட வரமெல்லாம் கொடுத்து இவனை உலகில் உலக புகழ் பெற்ற பெரிய மனிதனாக மாற்றணும் என நினைத்து கொண்டே மூணு மணிநேரம் மூச்சு விடாம பேசினார் கடவுள்.


எல்லாத்தையும் நல்லா விலாவாரியா கேட்டு கொண்டிருந்த அந்த கடவுள் இல்லை என்றவர்..

கடவுள் பேசி முடித்தவுடன்...சரிப்பா இனிமே நீ கிளம்பலாம் என்றார்.

தன்னை இவனாவது நம்புவான் என்று நினைச்சா .. இப்படி தலையும் காலும் புரியாம பேசுறானே என குழப்பி போனார்.


என்னப்பா நான் தான் கடவுள் என்று மூணு மணிநேரம் பேசிய பிறகும் நம்பா இருக்கீயே..இது எந்த விதத்தில் நியாயம்...


யோவ் இந்த உலகம் என்னையும் பல நாள் பைத்தியக்காரன் என்று தான் கேலி பண்ணுச்சு.. நம்மை மதிக்காத மக்களை எப்படி முட்டாளாக்குவது என்று நானே யோசித்து யோசித்து கண்டுபிடிச்ச விஷயம் தான் கடவுளே இல்லை என்று...


ஓர் ஜாதியை இல்லை என்றால் இன்னொ ஜாதிகாரன் சண்டைக்கு வருவான்..ஊரை பத்தி பேசினா ஊர்க்காரன் சண்டைக்கு வருவான்.

மதம் பற்றி பேசினா 

சண்டைக்கு வருவான்.

சட்டத்தை பத்தி பேசினா நம்மை பிடிச்சு ஜெயில் அடைச்சாலும் அடைப்பான்..

கடவுளை பத்தி என்ன பேசினாலும் கடவுள் நேரில் வரவே மாட்டான்.. அதான் கடவுள் எதிர்ப்பை பேசி பேசியே சில வருஷத்தில் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைச்சுட்டேன்..


பிறகு எதுக்கு என்னை இப்படி மூணு மணிநேரம் பேச வைச்சு கேட்டேன்.


எல்லோரும் சொல்லுற மாதிரி நீ பைத்தியக்காரன் தானா.


ஏய் என்னப்பா நீயும் என்னை பைத்தியக்காரன் என்று சொல்லுறே.

இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ..


பேசவே தெரியாத நன்கு படித்த கூமூட்டைகளையும்...

இன்னிக்கு இதை பேசினா நாளைக்கு நம்ம பதவிக்கு ஆபத்து வருமே என்று கூட தெரியாம மனசில் பட்டதை பேசும் வெள்ளந்தினா மனுஷனையும் கண்டா உடனே எங்களோட அடுத்த மீட்டிங்கில் அவரை சிறப்பு விருந்தினரா அழைத்து...அவரோட அறியாமையை பயன்படுத்தி எங்க கடவுள் மறுப்பு விஷயத்தை நல்லா பேசி சிரிப்போம்... அப்போ தான் அடுத்த மீட்டிங் போடும் போது காசு வசூல் சுலபமா இருக்கும்..


அப்போ நான் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா..


நீ உண்மையிலேயே கடவுளா இருந்தா நான் உன்னை எவ்வளவோ எதிர்த்து பேசி இருக்கேன் அதுக்கு நீ என்னை தண்டிச்சு அல்லவா இருக்கணும்.


நான் மனுஷன் கிடையாது கூட இருந்து சிரித்து சிரித்து பேசி விட்டு முதுகில் குத்துவதோ.. பிறருக்கு துன்பம் தருவது போல செயல் செய்வதோ எனது வேலை கிடையாது.

என்னை வணங்கும் எல்லா மக்களுக்கும் நல்லது செய்வது தான் என் வேலை 

அது வரை அமைதியாக பேசிக்கொண்டு இருந்தவனுக்கு கோபம் வந்தது..

யோவ் இப்போ நீயா போறீயா இல்லாட்டி..சில வார்த்தைகள் பேசவும் மிகுந்த மனவருத்தம் கொண்டு கடவுள் அங்கிருந்து கிளம்பினார்.. அப்போது மனதிற்குள் நினைத்தார்... என்னை வணங்குபவர்கள் எல்லோருமே நல்லங்க அவங்ககிட்ட காசு பணம் இல்லாமல் இருந்தாலும் என்னை பைத்தியக்காரன் என்று தான் சொன்னாங்க... ஆனால் நீயோ என்னை இவ்வளவு நேரம் பேச வைத்து மனசும் கஷ்டபட வைத்து அனுப்பியதால்... உனக்கு நீ விரும்பிய படியே நிறைய காசு பங்களா தருகிறேன்..அதே மாதிரி உன்னை தன்னோட நண்பனா காட்டிக்கொண்டு வாழும் அரசியல்வாதிகளுக்கும் பதவி பட்டம் அந்தஸ்து எல்லாமே தருகிறது.. ஆனால்.. உன்கிட்ட எல்லாமே இருக்கும்... இருந்தாலும் உன் மனசுல நிம்மதியே இல்லாம தான் இருக்கணும்..அது போக உன்கிட்ட இருக்கிற எந்த பொருளாக இருந்தாலும் நீ உன் கூட இருக்கும் நல்லவனை கூட நம்பாமல் சந்தேக புத்தியோட தான் எப்போது இருப்பேன்...எப்போ பதவி போகுமோ எப்போ பணம் நம்மை கையை விட்டு போகும்போது..நம்மை விட இன்னொருத்தர் முன்னேறி விடுவானே என்று சந்தேகம் இது எல்லாமே இருக்கும் என சபித்து விட்டு போனார்.

தன்னை பைத்தியக்காரன் என்று கேலி பேசி எல்லா மதம் சார்ந்த மக்களும் தன்னை மிகவும் இரக்கமாக பார்த்த படி செல்வதையும் அதில் சிலர் சில காசுகளை கடவுள் கையில் கொடுத்து... உனக்கு பசிச்சா போய் சாப்பிடு என்ற சிலர்.இன்னும் சிலர்.. நான் சொல்லுற வேலை மட்டும் செஞ்சா போதும் மூணு வேளை சாப்பாடு தங்கும் இடம் இலவசமாக தருகிறேன் என்றனர்.

சிலர் யார் பெத்த பிள்ளையோ... தானம் செய்து விட்டு நகர்ந்து சென்றனர்.

கடைசியில் யாருக்குமே நான் கடவுள் என்பதை அறிந்து கொள்ளாமல் மீண்டும் வானுலகம் செல்ல தயங்கிய படி கடவுள் நின்று கொண்டு இருந்தார்..


இந்த நிகழ்வை யெல்லாம் பார்த்து கொண்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்த சில சிறு குழந்தைகள், அவரை நோக்கி வேகமாக ஓடிச் சென்றனர்.


கடவுளே....கடவுளே... நீங்கள் யார் எந்த வரம் கேட்டாலும் கொடுப்பதாக எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி சொல்லி இருக்காங்க.. நீங்க எங்க எல்லோரும் ஓர் வரம் கொடுக்க முடியுமா என்றனர்.


ச்சே என்ன ஓர் பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன்.. எதையோ பேரிடம் நான் தான் கடவுள் என்ற போது ஒருத்தனும் நம்பாமல் பைத்தியக்காரன் என்று கேலி பேசி சிரித்தனர். கடவுளே இல்லை என்றவன் என்னை பகடை போல் உருட்டி விளையாடினான்.. இந்த குழந்தையிடம் நான் தான் கடவுள் என்று சொல்லாமலே என்னை புரிந்து கொண்டு வரம் கேட்கிறதே மிகவும் சந்தோஷ பட்டார்.


குழந்தைகளே என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். படிப்பு வேணுமா செல்வம் வேண்டுமா...தனி தீவு வேண்டுமா.. அல்லது இன்னொரு உலகம் குழந்தைகள் மட்டும் வாழும் படி உருவாக்கி தரவா மகிழ்ச்சியா கேட்டார்.


எல்லா குழந்தைகளும் ஓர் சேர கேட்டனர்.. கடவுள் நீங்கள் எங்களுக்கு எதுவுமே நேரடியாக தர வேண்டாம்.


குழந்தைகளே நான் கடவுள் நீங்க எது கேட்டாலும் என்னால் கொடுக்க முடியும் என மீண்டும் தான் கடவுள் என்பதை சொன்னார்..



அதில் ஒருவன் சொன்னான், நீங்க எது கொடுத்தாலும் எப்படியும் எங்க அம்மாவும் அப்பாவும் கண்டுபிடிச்சு அதை எங்கிட்ட இருந்து புடுங்கி விடுவாங்க 

நீங்க என்ன சொல்லுறீங்க எனக்கு எதுவுமே புரிரலையே என்ற கடவுள்..

கடவுளே, நீங்க எங்களுக்கு எதுவும் தரவேண்டாம்.. ஆனால் நாங்க எது கேட்டாலும் எங்க அம்மா அப்பா தாத்தா பாட்டி வாங்கி தரும் படியான வரத்தை கொடுங்க என்றார்.முக்கியமா .. நாங்க கேட்கும் ஐஸ்கிரீம் சாக்லேட் சாப்பாடு மற்றும் விளையாட்டு பொருட்கள் இதை நாங்க கேட்டவுடனே வாங்கி தரும் படி செய்யுங்கள் என்றனர் 

தன்னிடம் இருக்கும் புத்திசாலித்தனம் தனது குழந்தைகளில் இருப்பதை நினைத்து சந்தோஷமாக அப்படியே ஆகட்டும் என்றார்.

பணம் என்பதை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் நீங்க எதை கேட்டாலும் உங்களின் பெற்றவர் வாங்கி தரும் படியான வரத்தை தருகிறேன் என்றார்.

அதனால் தான் எல்லோரின் வீட்டிலும் ஐஸ்கிரீம் சாக்லேட் சாப்பாடு விளையாட்டு பொருட்கள் கேட்டால் அவர்களுக்கு அவை கிடைக்கும் படியாக கடவுள் செய்கிறார்..

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...