722 - மன்மோகன்சிங் மறைந்தார்

கூண்டிற்குள் அடைபட்டு கிடந்த இந்திய பொருளாதாரத்தை உலகளாவிய சந்தைக்கு விரிவுபடுத்தி, இந்தியாவின் பொருளாதாரத்தின் தரத்தை உலகமே வியக்கும் வண்ணம் வழிகாட்டிய சிறந்த பொருளாதார நிபுணர்.


லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தங்கம் வாங்கி விட்டு இந்திய பொருளாதாரத்தை தங்கமாக ஜொலிக்க வைத்தவர்

இந்திய வங்கிகளின் தலைமையாக செயல்பட்ட ரிசர்வ் வங்கியின் கவர்னராக  விளங்கியவர்.

இந்திய பொருளாதாரத்தின் கட்டமைப்பை மாற்றியமைத்து மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர்.. இவர் செய்த பொருளாதார மேம்பாட்டிற்கான வரலாற்று நிகழ்வுகளே செயல்களே இவரை பாரத பிரதமராக அரியணையில் அமர வைத்தது.

நமது இந்திய பொருள்கள் உலக நாடுகளில் கிடைக்கவும்..பிற நாட்டு பொருள் இந்தியாவில் கிடைப்பதற்கும், இவர் வகுத்து கொடுத்த மிக உன்னதமான திட்டங்கள் தான்.

படித்தவர் என்பதையும் தாண்டி சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்திய திருநாட்டின் பாரத பிரதமராக இவர் செய்த செயல்கள் காலம் கடந்தும் போற்றுதலுக்குரியதே...

ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...