718 - மகாகவி பாரதி

 பாவைகளின் வாழ்வில் தனது பாக்களால் பாதை காட்டியவன் மேடையில் ஏறி 

போலியாக 

பெண் விடுதலை பேசி காசு வாங்க தெரியாத அப்பாவி முண்டாசு கவிஞன்..ஆயினும் இந்த அப்பாவி மனிதன் தன்னை விடவும் அப்பாவியாக வாழ்ந்த இந்திய மக்களின் மனதில் ஏற்படுத்திய சுதந்திர தாகம் தான் எவ்வளவு அசாத்தியமது

பரங்கியரின் பீரங்கியும் துப்பாக்கியும் கண்டு கலங்கிடாமல் கர்மத்தின் வழியில் தர்மம் நிலைநாட்ட எழுதிய கட்டுரையை படித்து கோட்டையில் இருந்தவருக்கு 

சிம்ம சொப்பனமாய் இருந்ததுவே... எட்டயபுரத்தில் அவதரித்து இந்திய இலக்கியத்தில் 

இமயம் தொட்ட 

இவனின் உயரத்தை  இதுவரையில் யாராலும் தொட முடியவில்லையே..

ஏனெனில் இவன் காசுக்காக வாழ்ந்தவனில்லை..

கண்ணனின் மொழியில் கர்மயோகியாக 

வாழ்ந்த முண்டாசு கவிஞன் எங்களின் 

மகாகவி பாரதி

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...