பாசத்தை தேடுபவன்
பரிதவிக்கிறான்..
பணத்தை தேடுபவனோ
பரிகாசம் செய்கிறான்..
பாசத்திற்கு கட்டுபட்டு
கடையில் கல்லாவின்
அமர்ந்தவனை பதம் பார்க்கிறது
பணமென்னும் வஜ்ராயுதம்..
ஓவ்வொரு நாளும் சொந்த
உறவுகளிடம் பணத்தின்
கணக்கை சொல்லும் போதே
புரிகிறது....பாசத்தை
அடமானம் வைத்தது
பணத்தின் வலி(மை)
No comments:
Post a Comment