தாத்தாவும் பேத்தியும்

அப்பாவுக்கும்

தாத்தாவுக்கும்

வார்த்தை விளையாட்டில்

வீணானது காலை நேரம்

அம்மாவும் ஆச்சியும்

சமையலறையில்

அடுத்த வாரம்  போக

வேண்டிய கல்யாணவீட்டிற்கு 

கூட்டணி அமைத்து

ஆலோசனையில் 

ஆரவாரித்தனர் 

"அம்மா பசிக்கது" என்ற

மகளின் கையில்

பத்து ரூபாய் பிஸ்கட்

திணித்து விட்டாள்

போடீ போய் சிந்தாம சாப்பிடு 

தனது தங்கச்சியை காட்டிலும்

அதிக நகை அணிந்து போகும்

கனவில் மிதக்கிறாள் ---.தனது

பசியை நினைத்து

விழியோர கண்ணீருடன்

சாய்வு நாற்காலியில்

தள்ளாடியபடி தாத்தா அருகில்

வந்த குட்டி தேவதை தான்

கடித்து தின்ற எச்சில்

பிஸ்கட்டை அவரின்

வாயில் திணித்தே கேலியில்

சிரித்தாள் நீயும் நானும்

ஓண்ணும் நமக்கு இன்னிக்கு

கிடைச்சது பிஸ்கட்  பதிலுக்கு

அவளின் கன்னத்தில் அன்புடன் 

எச்சிலை தூவிட்டார் தாத்தா..

ஏமாந்தவனா..ஏமாற்றியவனா... யார் புத்திசாலி..

 


ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு விதமாக ஏதோவொரு விஷயத்தில் அதீதமான நம்பிக்கையில் மனிதர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாந்த பிறகே உணர்கின்றனர்... அவர்கள் நமக்காக நாம் எதிர்பார்த்த விஷயத்தை செய்வார்கள் என நம்பியது தவறே.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்... உன்னை ஏமாற்றியவர்களும் என்றாவது ஓர் நாள் இன்னொரு விஷயத்தில் ஏமாந்து போகும் போது உணர்வார்கள்.குழந்தைகள் அதிகமாகவே ஏமாறும்.ஆனால் அதன் நம்பிக்கை குறைவதில்லை..நம்மை போல் யாராவது இருப்பாங்க என்ற தேடலை வாழ்வில் தொடங்கும்.ஆனால்  ஏமாற்றியவரோ..நம்மள மாதிரி தானே எல்லாவனும் என்று பயந்து பயந்தே வாழ்வான்..

தங்கமா..தகரமா..

கடவுளே....என்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க என்றே கவலைபடாதே நண்பா.. 

இந்த உலகம் எப்போதுமே தங்கத்தை மட்டுமே தான் வாங்கும் போதும் விற்கும் போதும்.. அடமானம் வைக்கும் போது உரசிப் பார்க்கும்.

தகரக்தை யாரும் நல்ல தகரமா என்று உரசிப் பார்க்கவே மாட்டார்கள்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தகரத்தை உரசினால் அது உரசிப் பார்ப்பவரின் கைகளையும் பதம் பார்த்து விடும்.

ஆனால் அதன் பயன்பாடு மிகவும் சொற்பமான நாட்களே. தங்கத்தின் மதிப்போ நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

பொறுமையாக இருந்தால்


நீயும் கூட தங்கம் தான் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் 

எது உலகம்.

 


உன்னை விட இந்த உலகத்துல எதுவும் சொந்தமில்ல.

நான் கருப்பா சிவப்பாக குள்ளமான நெட்டையா ஊனமா நல்லவனா குற்றவாளியா தேசபக்தனா தீவிரவாதியா ஏழையா பணக்காரனா அன்பானவனா அனபற்றவனா.

சாந்தமானவனா கோபக்காரனா என்று எதுவுமே தெரியாமல்

அன்பும் ஆசையும் மனதில் மறைத்து வைத்து

பத்து மாதம் பட்டினியும் பரிதவிப்பும் கலந்தே வயிற்றில் சுமந்தவள்.

பல லட்சக்களை சம்பாதிக்கும் என் வயது நண்பர்களில் இருந்து மாறுபட்டு.. ..ஏன்னா என்னை படைத்தவள் தான் எனக்கு பிரம்மா கடவுள் எல்லாமே..

அம்மா-வ  பாரத்துக்கோடா என்று நோயுற்ற போதும் தனக்கு பிறகு அவளை நல்லபடியா தன்னை மாதிரியே பாரத்துகிடணும் என்ற நினைப்பில் பேசிய வாரத்தைகளில் உஷ்ணம் வைத்து உள்ளத்தில் மலரை விட மெல்லிய காதலை தாங்கி வாழந்த கோபக்கார அப்பா..

எது பேசினாலும் எதிர்த்து பேசினேன்..இன்றோ அவரைப் போலவே வாழ்கிறேன்..அப்பனையும் அதிகமாக நேசித்த காரணமாகவே இன்றும் கூட ...நீ எதுக்கு அடிக்கடி என் மேல கோபமா பேசுறே என்றே கேள்விகளால் அவளை குடைந்து எடுக்கிறேன்.

அவளுக்கு எப்படி புரியவைப்பேன் 15 வருஷமா நோயுடன் போராடிய தகப்பனை கண்ணும் கருத்துமா பார்த்தகிட்டவளை..சில வருஷமா தானே பார்த்துக்கிறேன்.அதுவும் அவளின் தேவையை என்னவென்று தெரியாமல் எனக்கு தெரிஞ்சதை செய்கிறேன்....

..அவளுக்கு எப்படி புரியவைப்பேன்..

இந்த உலகத்துல டைர்வர்ஸ் வாங்க முடியாத ஓரே உறவுமுறை அம்மாவும் அப்பாவும்..உடன் பிறந்தவங்களோ மாமன் மச்சானோ பிடிக்கலை என்றால் பேசாம விலகிப்போயிடலாம்.மனசும் அவங்களை தேடாது..ஆனா அம்மா அப்பா எதிர்பார்ப்பே இல்லாம வாழந்த வாழுற ஜீவன்.அவங்களை விட பெரிய சாமி உலகத்துல ஏதவுமே இல்லை...

உன்னோட அன்பே போதும் உன்னை விட இந்த உலகத்துல எதுவும் சொந்தமில்ல.

ஏன்னா அம்மாவின் வலியை யாராலும் புரிஞ்சுக்க முடியாது..நானே இன்னும் புரிஞ்சுக்கலையே....

பணமுடையா.. பணமூட்டையா

பொண்டாட்டின்னா சொன்ன படியே கேட்க மாட்டான்னு பெரியவங்க சொன்னது சரியா போச்சு.

ஆமா நீ அப்படி என்னதான் சொன்னே உன் பொண்டாட்டி கேட்க மாட்டேன்ங்குற..

அது ஓண்ணுமில்லா.. எனக்கு வியாபாரத்துல கொஞ்சம் கடனாகி பணமுடை ஆயிடுச்சு.உங்க அப்பன் தான் பணமூட்டை கட்டி வைச்சிருக்கானே அதிலே இருந்து இரண்டு மூட்டை வாங்கிட்டுவான்னு சொன்னேன்

😳😳😳😳அதுக்கு அவ என்ன செஞ்சா....

அதை ஏன் கேக்குறீங்க.. அவங்க அப்பன் காலையிலேயே வந்து மாப்பிள்ளை நீங்க ஆசையா கேட்ட  இரண்டு கோழி முட்டைன்னு எரிச்சலை கிளம்பிட்டு போறாரூ..

இவ என்னடான்னா..அப்பா இவருக்கு எதுக்கு இரண்டு முட்டை ஓரு கூமுட்டை கொடுத்ததே அதிகம்ன்னு தெருவில் நின்னு கத்துறா மச்சான்..

அவன மனதுக்குள் நல்ல குடும்பன்டா சாமி என்று நினைத்த படி வீட்டுக்கு கிளம்பினான் 

அரசியல் ஓர் குருஷேத்திரம்

 


அரசியல் என்பது ஓர் மாபெரும் விளையாட்டு. 


ஏதோ சின்னஞ்சிறு சிறுவன் கோலி விளையாடுவது போலவும்.. வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்தாச்சு இதிலும் கொஞ்சம் இறங்கித் தான் பார்ப்போமே என்பதல்ல அரசியல்.


அரசியலில் சாதித்தவர்களை விட உடனிருப்பவர்கள் செய்த சோதனைகளால் சோகத்தை மனதில் மறைத்த படி தாங்கியே அரசியலில் இருந்து விடுபட்டு அமைதியை தேடி சென்றவர்கள் தான் ஏராளம்.


அரசியல் அனைவருக்கும் வசப்படாது.

பல நேரங்களில் தலைவர் பதவிக்கே ஆசைபடாத தொண்டனாக வாழந்தவனை பதவியில் அமர வைத்து, அவரின் கண்ணீர் கதைகளை வெளியே தெரியாத வண்ணம் பதவி பட்டங்களால் பூசி மொழுகி பின்பு அவரையும் ஓர் அச்சாணியில் சுழல வைப்பதே அரசியல்.

அரசியலில் பதவி பெற்று தரணியாள நினைப்பவர்கள் முதலில்,மக்களின் வலிகளை உணர்ந்தவராக இருக்க வேண்டும்


கட்சியையும் பதவியையும் காப்பாற்ற முடியும் என்பவரை தான் தலைமைப் பதவியில் அமர வைக்க வேண்டும்.

தனது இஷ்டத்துக்கு சிறுபிள்ளை தனமாகவும்

கார்ப்பரேட் போலவும் கட்சியை நடத்தினால் தொண்டர்கள் விலகிப் போய் விடுவார்கள்.


தலைவர்களால் தொண்டர்கள் தேர்ந்தெடுக்க படவில்லை.

தொண்டர்களால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள்.

அப்படி உருவான தலைவர்களும் கடைசி வரை தனது தொண்டர்களுக்காக வாழ்ந்தால் மாத்திரமே, தொண்டர்கள் தொடர்ந்து பின்வருவார்கள்


சுயநலமென்ற அசுரன் தலைவனின் மனதில் புகுந்து விட்டால் கட்சியும் ஆட்சி கட்டிலும் எட்டாத கனவாகவே மாறிப்போகும்.

இது உலக வரலாற்றின் உன்னதமான பாடம்.


தனக்கு முன்னால் இருந்து சாதித்தவர்களை பற்றி படிப்பது மிகவும் நல்லது.


அதைவிட முக்கியம் அவர் பட்ட கஷ்டமும் அவமானமும் பதவியை தக்க வைக்க அவர் செய்த சாதனைகளும் ன, தாண்டி வந்த சோதனைகளும் புரிவது முக்கியம்.

படித்தும் புரியவில்லை என்றால் பேரரசரின் கடைகண் அசைவில் குறுநில மன்னராக கூட அல்ல.அரசியலில் இருந்து துடைத்து ஏறிந்து விடுவார்கள்

தற்போதைய சூழலுக்கு ஏற்ப தகவமைத்து செல்ல வேண்டிய கட்டாயம்.


இங்கே அரசியலில் பணத்தை சம்பாதித்தை விட அரசியலில் தாக்கு பிடிக்க வேண்டி, தன்மானத்தை காக்கவும் சொத்துக்களை பாதுகாக்கவும் அரசியலில் நுழைபவர்களை பக்கத்தில் வைத்தால் அது மிகவும் ஆபத்தான விஷயம்

நாளைக்கு ஓர் வேளை பதவியும் கட்சியும் கரைந்தால் உடனிருக்கும் தலையாட்டி பொம்மைகள் வேறு இடத்திற்கு சென்று விடுவர்.


அப்படிபட்டவர்களுக்கு அரசியல் கூட ஓர் வியாபார கணக்கு தான்.ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது.

அரசியலில் வியாபாரம் செய்தால் நாளை அந்த அரசியலில் நீங்களும் ஓர் வியாபார பொருளாக மாறிவிட நேரலாம்.


தனக்காக வாழாமல் முகம் தெரியாத எத்தனையோ பேருக்காக வாழ்வது தான் அரசியல்.


குடும்பத்தை பாதூகாக்க வேண்டும், குடும்ப சொத்தை பாதுகாக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர்களும் வருபவய்களும் ஓர் குறிப்பிட்ட எல்லையை தாட்ட முடியாமல் சிக்கி திணறுகின்றனர்


அரசியலில் ஈடுபட பணமோ, படைபலமோ, ரசிகர் பட்டாளமோ தேவையில்லை நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும்.

ஆனால் பிறருக்காக நீங்கள் வாழ்வது இயல்பானதாக உங்களின் வாழ்வியலாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் அரசியல் என்னும் அச்சு ஆளையே விழுங்கி விடும்.


இங்கே வெற்றி பெற்ற இலக்கியவாதிகளாக வலம் வரும் பலர், தங்களின் ஆரம்ப காலத்தில் அரசியல் ஆசையில் நிம்மதி இழந்து தவித்த பின்னரே புரிந்து கொண்டனர்


அரசியல் நமது களமல்ல, அது பூப்பாதையல்ல பூபாளம் வாசிக்க, அது அசந்தால் நீங்கள் சேர்த்து வைத்த பணம் பொருளை மட்டுமல்லாமல் உங்களின் நற்பெயரை கூட புகுந்து விளையாடி விடும்.


எதற்கும தயார் எது வந்தாலும் தாங்கிக் கொள்வேன் என்பவரை தான் அரசியல் விரும்புறது.

ஓர் வேளை அப்படி எந்த விதமான அடிப்படை தகுதி இல்லாதவரை கூட காலம் புடம் போட்டு ஆட்சியில் கட்டிலில் ஏற்றிவைத்து அழகு பார்க்கும்.


பெற்றவரும் முப்பாட்டனும் வந்த வழியில் வந்து ஆட்சி கட்டிலில் அமர வைக்க இது ஒன்றும் வாரிசுரிமை பதவியல்ல.


உங்களுக்கு ஆசையிருந்தால், சென்ற மாதம் பிறந்த கைக்குழந்தையை கூட அரசியல் மேடையில் அமர வைத்து அழகு பார்க்கலாம்.ஆனால் காலம் அந்த குழந்தையை கூட ஆட்சியாளராக மாற்றும் முன்னர் நீங்கள் சந்தித்த சவால்களை விட பெரிய சவால்களை சமாளிக்க வேண்டியது இருக்கும்.


ஜனநாயக முறையில் தான் பிறந்து

நாட்டில் யாரும் எங்கும் வேண்டுமானாலும் போட்டி இடலாம்.


அரசியலில் என்றுமே வெல்பவர்களை சுற்றித்தான் கூட்டம் இருக்கும்.


தோல்வியை சந்திப்பவரை நோக்கி யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.

இந்த யதார்த்தமான உண்மையை புரிந்த அரசியல்வாதி.

ஓவ்வொரு நாளும் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள படும் பாடு 

நீங்கள் வெல்லும் பாடு அவனின் மனசாட்சிக்கு மாத்திரமே தெரிந்த சிதம்பர ரகசியம்


தோற்றவர்கள் வெல்வதும் வென்றவர்கள் தோற்பதும் அரசியலில் இயல்பான விஷயமே. ஆனால் தோல்வியில் இருந்த போது கற்ற பாடங்களை, சரியாக பயன்படுத்த தெரியாவிடில் அரசியல் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குறி.


பதவியையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டும் அல்லது காப்பாற்றுவார்கள் யார் காலை வாருபவர் யார் என்பதையாவது குறைந்த பட்சம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.


தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும், எனது குடும்ப உறுப்பினர் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டுமென நினைத்தால் சுற்றி இருப்பவர்களே உங்களை சுற்றிவிட்டு விடுவர்.



உங்களின் கட்சி கலைந்து போனால் பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து செயல்படுங்கள்.


அல்லது அரசியலே வேண்டாமென்று இலக்கியத்தை மட்டும் கையில் எடுத்து செயல்படுங்கள்.


அரசியலில் எதிர்கள் அதிகம், ஆனால் இலக்கிய துறையில் நண்பர்களே அதிகம்.

அவர்களின் வார்த்தையில் கேலியும் நய்யாண்டியும் தான் இருக்கும்.ஆயினும் கடைசி காலம் வரை நிம்மதிக்கான வாழ்வு உத்தரவாதம்.

ஆனால் அரசியலில் யார் எப்போது காலை வாரி விட்டு விட்டு உங்களின் பதவியை பிடிப்பான் என்பதை அறியும் போது அந்த பதவியை விட்டு விலகி நீங்க தூரமாக போய் இருப்பீர்கள்.

நிம்மதியா வாழ்வு தருவதல்ல அரசியலில்.அந்த சதுரங்கத்தில் ஆட்டம் ஆட தொடங்கினால் உங்கள் அடுத்த வேளை உணவை கூட நீங்கள் விரும்பிய நேரத்தில் சாப்பிட இயலாது.

பெயரும் புகழும் வேண்டுமென்றால் கிடைக்கலாம்.



கிருஷ்ணனை போன்ற தன்னலமற்ற ஓருனால் தான் ஆர்ஜீனனை வெல்ல வைக்க இயலும். படைப்பதும காப்பதும் அழிப்பதும் பரந்தாமன் கிருஷ்ணனின் செயலே.


கிருஷ்ணனை சொன்னதை எல்லாம் கேட்க முடியாது என்றால் பரவாயில்லை அவனை சரணைந்து விடுங்கள். உலகத்தையே காக்கும் மாயவன் கண்ணன் உங்களையும் காப்பான் 


அரசியல் என்பது பூபாளமல்ல,அது ஓர் பூகோள சரித்திரம் 


முடிவு செய்யுங்கள் சரனாகதியா சண்டையா...

அரசியல் ஒன்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானம் அல்ல.. அரசியல் ஓர் குருஷேத்திரம்.


கோவை தமிழர்

 

கோவையில் பகுதியில் பிறந்து சிறந்த அர்பணிப்பு உணர்வுடன் இந்திய வளர்ச்சிக்கு உதவ முயன்ற அறிஞர்..வளரட்டும் ஜி.டி.நாயுடு அவர்களின் புகழ் உலகமெங்கும்.


பெரியார் வாழந்த காலத்தில் அவரை விட சிறந்த அறிவாளியாக விளங்கிய ஜி.டி.நாயுடு அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...பல அற்புதமான அரிய கண்டுபிடிப்புகளை யாரும் மதிக்க வில்லை என்று தனது அறிவியல் கூடத்தை அழித்த.ஜி.டி.நாயுடு மிகவும் மதிக்க தக்கவர்.

அவருக்கு ஆதரவாக பெரியார் ஏன் பேசவில்லை என்பது தான் இன்று வரை புரியாத புதிர்..இதை கேட்டா நீ சங்கியான்னு கேட்பானுங்க.. கோயம்புத்தூர் தமிழரின் புத்திசாலிதனத்தை இன்று வரை பல ஊடகங்கள் பேசவும் தயங்குகின்றன என்பதே மறுக்க இயலாத உண்மை

அப்பனும் ஆத்தாளும்

சென்ற மாதம் திருமணமாகி

வந்த முன்பின் தெரியாத

அவனும் அவளும்..

மார்கழி குளிரில்

மனைவியின் மடியில் அவன்

கணவனின் கதகதப்பில்

கிறங்கிப் போய் கிடக்கிறாள் அவள் 

பெற்ற அப்பனும் ஆத்தாளும்

பட்ட கஷ்டத்தை யெல்லாம் மறந்தே 

மாயையில் மயங்கியே 

பஞ்சணையில் இருந்து

எழுந்துவிட எண்ணமில்லாத

இறுமாப்புடன் இருவரும் 

இருவருமே மிதக்கின்றன 

சில நொடிகளில் கலைந்து விடும்

சொர்க்கலோக பளபளப்பில் 

கதகதப்பு தேடி காமத்தில்

திளைப்பது அல்ல காதல்....

படிப்பறிவு இல்லாவிட்டாலும் 

குடும்பத்திற்காக உழைத்து

 தேய்ந்த அப்பழுக்கற்ற

அப்பன் ஆத்தாளும்..

வீட்டின் திண்ணையில்

இருமல் சத்தம் இடியாக

இருவரின் காதிலும்.

யம்மா..காலையிலேயே

ஆரம்பிச்சுடாத உன்னோட

புலம்பலை மனைவியை

அணைத்த படி ஆரவாரித்தான்

நாளைக்கு நாம எங்கடீ போகலாம்...

போட்டோவில் பூமாலைக்குள்

சிரித்த படி அவளின் அப்பா...

உங்க பேரனும் உங்கள மாதிரியே...

உன்னைய சீக்கிரமா சொல்ல

வந்தவரின் வாயில்

மாத்திரையிட்டாள்... 

நானும் போயிட்டா ..

உனக்குன்னு யாருயிருக்கா...

நாலு மகனை தாண்டி பிறந்த

மாசற்ற மகள்...நீ யாரையாவது

விரும்புறீயா.. கேட்கும்போதே

குரல் உடைந்து கண்ணீர்

தழுதழுத்து..அப்பா நான்

உங்க பொண்ணு ... உங்க அண்ணன் அண்ணிய நீ எந்த காலத்திலும்

நம்பிடாதே ஏனோ அவர் 

பேசமுடியாமல் குழறினாள்.

எதுக்கு இப்போ இந்த பேச்சு

அவருக்கு கடிவாடமிட்டாள் மனைவி..

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு தாயீ

அப்பாவின் கேள்விககு விரக்கியாக

சொன்னாள் அப்படி யாருமில்லைப்பா...

எங்களுக்கு பிறகு யாரூடி

உன்னைபார்ப்பா என்ற அம்மாவின்

சீற்றத்தை தன் விரல் காட்டி

சுவற்றின் திசை திருப்பினாள்

அங்கே சிரித்தபடி உபதேசம்

செய்கிறான் மாயவன் கண்ணன்

என்னை இவன் நல்லா பார்த்துப்பான்..

மூவரின் உணர்ச்சியும் கொந்தளித்த

நேரத்தில் தூரத்தில் கிராமத்து

கோவில் ரேடியோ செட் அலறியது...

கீதையென்னும் தேரில் ஏறி

கண்ணன் வந்தான்.. கேட்டவருக்கு

கேட்டபடி கண்ணன் வந்தான்..

குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம்... அவளின் வாயில்

உதிர்ந்தன வார்த்தைகள்..

கண்ணா எனக்கு எல்லாமே இந்த 

அப்பனும் ஆத்தாளும்...

மற்றொரு சுவரில் சிரிக்கிறான

முருகன் யாமிருக்க பயமேன் 






கள்ளமில்லாத அன்புக் குழந்த.

வெட்கமின்றி தைரியமாக எனக்கு உன்னை தேடுது என்று சொன்ன போது நீ எங்க வீட்டுக்கே வந்திடுவேன் என்று சொன்ன குழத்தையை கேலி பேசி .சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் கல்யாண வீட்டில்....இன்றோ  அதே குழந்தை வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறான்.. எனக்கு உங்க கூட எல்லாம் பேச நேரமில்லை.. ஏன் பேசு பேசுன்னு சொல்லி உசுரை எடுக்குறீங்க...

அன்று சிரித்தவர்கள் தேடுகின்றனர் அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் அடிக்கடி மனம் நினைத்து பார்க்கிறது கள்ளமில்லாத குழந்தையாக இருந்தவன் இன்று எப்படி மாறிவிட்டான்.. அல்ல நாம் தான் அந்த குழத்தையை அப்படி மாற்றி விட்டோம்..

அன்று கள்ளமில்லாமல் பேசிய குழந்தையை உதாசீனம் செய்தவர்..இன்றோ ஜன்னலோரத்தில் நின்று கொண்டு வீதியில் செல்லும் தாத்தா பேத்தி..பாட்டி பேரன்.கணவன் மனைவி... உனக்கென்ன தெரியும் நான் சொல்லுறதை கேளூ என்று உடனிருப்பவருக்கு அறிவுரை கூறி சாலையில் செல்லும் சிறு குழந்தைகள்..

இந்த உலகில் பணத்தை தேடி ஓடி ஆடி ஓயந்த பின்னரே தேடுகிறோம் உண்மை அன்பை.....அன்பாக இருந்த கள்ளமில்லாத நபர்களை உதாசீனம் செய்த அனைவருமே தேடுகின்றனர்..அதே கள்ளமில்லாத அன்பை சுற்றி இருக்கும் அனைவரிடமும்..

குழந்தையும் தெய்வமும்

 எத்தனையோ பேர் வீட்டிற்கு வந்துவிட்டு போனாலும் இரவில் தூங்கச் செல்லும் குழந்தை.. மனதில் மறைத்து வைத்து பேச தெரியாத குழந்தை கேட்டது ஏன் அவங்க நமக்கு பொங்கல் வாழ்த்து சொல்லலை... இப்படி மனதில் உள்ளதை வெளிபடையாக பேசுவதால் தான் சொல்கிறார்கள் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஓன்று

பொய்களை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு... நாலு சுவரில் போய் தேடுகிறார்கள் கடவுளை..அவரோ உண்மையை பேசும் குழந்தைகளின் உள்ளத்தில் வாழ்கிறார்..

எனவேதான் அனைவரும் சொல்கிறார்கள் குழந்தையும் தெய்வமும் மனதால் ஓன்று


எது பெண் விடுதலை

இன்றும் கூட எல்லா வீட்டிலும் 

எங்க அப்பா ஓர் அப்பாவி மனுஷன் 

என்னோட புருஷனுக்கு சாமர்த்தியம் காணாது

என் புள்ள சரியான சோம்பேறி அவங்க அப்பன் போலவே என்றறு பேசும் பெண்கள்

எங்க அம்மா ரொம்பவே பாசமா இருப்பாங்க எ

ன்னோட பொண்டாட்டி தைரியசாலி

என் பொண்ணு பயங்கரமான சுட்டி

என்று பேசும் ஆண்கள்.


இப்படி சந்தோஷமாக உடனிருக்கும் ஆணாமகனை அடிமையாக நடத்திய நடத்தும் பெண்கள்.

எந்த வேலைக்கும் போகாமல்,

தனக்கு தெரியாத ஓர் விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக்கொண்டு வீட்டில் இருந்த படியே கேள்விகளால் தகப்பனை ...கணவனை..மகனை.... வார்த்தை என்னும் சாட்டையால் சுளுக்கு எடுக்கும் பெண்கள் தானே சுதந்திரமானவர்கள்.

அவர்களின் முகத்தில் சிறு கவலை ரேகை வந்து விடக்கூடாது என்று நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உடலாலும் மனதாலும் கஷ்டப்படும் ஆண்மகனை பாராட்ட இங்கே யார் இருக்கிறார்கள்.

இது போது என்று பல வருசத்துக்கு ஓர் முறை, தங்கையை பாசத்தில் பார்க்க வருவதாக சொல்லிக்கொண்டே வீட்டில் வந்து தங்கி.. அத்தான், உங்களால தான் எனக்கு அந்த காரியத்தை செய்து தர முடியும்.ஆனா சொந்தகாரங்களுக்கு தெரிஞ்சா அசிங்கமா தப்பா பேசுவாங்க.. நீங்க தான் பேச வேண்டியவங்க எல்லோரிடமும் பக்குவமா பேசி முடிஞ்சு தரணும்.உங்களை தான் மலை போல நம்பி வந்திருக்கேன் என்று தனிமையில் அவரின் காலில் விழாத குறையாக பேசியவன்.

கல்யாண பந்தியில் ஓரே ஓர் இடத்தை பிடித்து கொடுத்து விட்டு, அக்கா உன் மாப்பிள்ளைக்கு சாப்பாட்டு பந்தியில் கூட இடம் பிடிக்க தெரியலை எப்படித்தான் அவர் கூட நீ காலம் கடத்துறீயோ என்று திரியை கொளுத்தி விட்டு போகிறான்.

இப்படி அவன் பலர் அறிய பேசிய பிறகும் அவனுக்காக உதவியை செய்து கொடுத்து விட்டு, அன்று முதல்.உங்க அப்பனுக்கு சாப்பாட்டு பந்தியில் கூட இடம் பிடிக்க தெரியலை என்னால் என்னோட தம்பி மாதிரி திறமைசாலியா இருக்க முடியுமா என்கிறாள் அவனின் மனைவி

அவள் விருப்ப ஆடையை வாங கொடுப்பதும், இருசக்கஙவாகனத்தில்  உடலை உரசியபடி கடற்கரை சாலையில் வேகமாக சென்று அவளை காதல் என்ற மொழியில் விபத்தில் சிக்க வைப்பது அல்ல காதல். அது அல்ல பெண்ணியம் பெண் விடுதலை.

அவள் இருக்கும் இடத்தில் அவளை அவளாக அவளின் விருப்ப படி வாழ விடுவதே பெண் சுதந்திரம்.

தனக்கு தானே ஓர் எல்லை வட்டத்தை போட்டுக்கொண்டு, அதில் பாதுகாப்பாக நிம்மதியாக வாழும் சுதந்திரமான பெண் உங்களின் அரிதாரம் பூசிய வியாபார உலகிற்காக, வார்த்தை ஜோடனையில், குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்களை சேர்க்க வேண்டி பெண் விடுதலை பேசுவதை விட்டு விடுங்கள்.

ஏன்னென்றால் பெண் விடுதலை பெண்ணியம் பேசும் தலைவர்கள் நடத்தும கட்சி கூட்டத்திலும், வியாபார நிறுவனத்திலும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது.

உங்களுக்கு குறைந்த சம்பளத்தையும் பெற்று கொண்டு உடலாலும் மனதாலும் அவள் படும் வேதனை அடுத்தவர்களுக்கு புரியாதே.

அவளை கண்ணும் கருத்துமாக பேணி வளர்த்த அப்பனுக்கும் அவளை கண்ணியமாக காதலிக்கும் கணவனுக்கும், நாள் முழுவதும் அவள் கன்னத்தில் தரும் சின்னச்சிறு  மகனுக்கும் 

அவளை தவிர எதுவுமே அறியாமல் காமத்தின் கலப்பின்றி, அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து, அவளுக்கு உதவியாக அவளைப் போலவே சம்பளம் வாங்காமல் அவள் சொன்ன சின்ன சின்ன வேலைகளையெல்லாம் செய்து விட்டு அம்மா உனக்கு கை வலிக்குதா என்று அவளின் கைகளை வருடிக்கொடுத்து..


நான் பெரியவன் ஆனதும் உன்னை எந்த வேலையும் செய்ய விடாம மகாராணி மாதிரி பாத்துக்கிறேன் என்று சொல்லும் சிறுவனின் அன்பு


இதை எல்லாம் விட பெரியதல்ல, போகுமிடமெல்லாம் காசு வாங்கி விட்டு பெண் விடுதலை என்று மைக் செட்டில் புலம்புவது.

சுதந்திர இந்தியாவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண் விடுதலை என்பதை தெளிவாக வரையறை செய்த பிறகும் ஏதோ தான் அந்த ஓருவர் தான் பெண் விடுதலை வாங்கி தந்ததாக இன்னும் மேடை பேச்சு பேசாதீர்கள்.

ஏன்னென்றால் புளித்து போனது பெண் விடுதலை என்ற போலி முழக்கம்

இனியாவது யாரோ ஒருவர் மேடையில் மேம்போக்காக தனது வருமானத்திற்காக மட்டும் காசு வாங்கி விட்டு போலியாக சில மணித்துளி பேசும் பெண்ணியம் என்ற கருத்தை ஆழந்து அறிவோம்

வீட்டில் இருக்கும் ஓவ்வொரு ஆண்மகனும், தனது பெண்டு பிள்ளைகளுக்கு தரும் பெண் சுதந்திரத்தை போற்றுவோம் 

தினமும் கொஞ்சி விளையாடிய அன்பு மகளை கூட வருடத்திற்கு ஓர் முறை சென்று பார்க்கும் பாசக்கார அப்பா

சில நிமிடங்களில அவருக்கு நன்றாக புரிகிறது, அவள் இன்று அடுத்தவரின் காதல் மனைவி..கள்ளமில்லாமல் வளர்த்த மகள், அப்பா வந்திருக்கிறார் என்பதை கூட சொல்ல முடியாமல்.அவர் வீட்டிற்கு வந்த பிறகு சொல்லுவோம் என்று பேசும் போது அவர் சொல்லி கொடுத்த வார்த்தைகளை நினைத்து பார்க்கிறாள்.


தன் வீட்டில் இன்னும் இருக்கிறது  பெண் சுதந்திரம்.ஏனோ மருமகனின் அலுவலக அறையில் போட்டோவில் இருந்த படி  சிரிக்கிறார் போகுமிடமெல்லாம் காசு வாங்கி அவர் பேசிய பெண் சுதந்திரம்...


தன் வீட்டில் இருக்கும் பரந்தாமனை நினைத்து வணங்கினார்..யப்பா பெருமாளே நீயே எங்களுக்கு எல்லாம் சுதந்திரமா வாழ வையு...

பெண் சுதந்திரம் மேடை பேச்சு இல்லப்பா அது ஓர் வாழ்வில் சார்ந்த விஷயம் என்றே புலம்பிய படி நடையை கட்டினார் தனது வீட்டிற்கு

 அவரின் மனதில் மீண்டும் மீண்டும் ஓரே ஓர் கேள்வி தான் எழுகிறது

எது பெண் சுதந்திரம் எது பெண்ணியம்..


எது சொர்க்கம்..

 ஹீரோ வில்லன் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம்

வில்லன் ஹீரோவ முன்னோற விடாம தடுத்து கிட்டே தான் இருப்பான்.

ஹீரோவும் பொறுமையா தான் இருப்பான் மீண்டும் மீண்டும் அவனை வளர விடாமல் செய்யும் வில்லனை வேற வழியே இல்லை என்று ஓர் சிறு அடி அடித்தவுடன் அந்த வில்லன் கதையே முடிச்சு போயிடும்..

நீங்க கேட்கலாம் இவ்வளவு டம்மி பீஸ் வில்லனை எதுக்கு ஹீரோ பொறுத்து பொறுத்து போனார் என்று.

ஏன்னா ஹீரோ யாரையும் தண்டிக்கவோ மாத்தவோ விருப்பவலை..சில நேரங்களில் கடவுள் ஹீரோ சில நேரங்களில் மனிதன் ஹீரோ..அவன் பாட்டுக்கு வாழ்ந்துகிட்டு இருக்கான்..நம்ம வில்லன் அவனை எப்படி விடாமல் என்று வலிய சென்று வம்பிழுப்பார் அப்போ தான் கிளைமாக்ஸ் வரும்.. வில்லன் சொத்து பத்து வாகனம் வசதி எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு போயிடுவாரூ.. 

அவனுக்கு நல்ல வேணும் என்னா ஆட்டம் போட்டான் என்று சிலர் சொல்லுவாங்க.

அப்படி சொல்லுறவங்க எல்லோருமே வில்லன் கூடவே இருந்து, ஹீரோ அப்படி அடிங்க..இப்படி அடிங்க என்று உசுப்பேத்தி விட்ட.அதே வில்லனின் அடி பொடிகள் தான்.


என்ன கொஞ்சம் குழப்பமாக இருக்குதா.. வில்லனை கீழே தள்ளிய ஹீரோவை விட. வில்லனின் பழைய கூட்டாளிகள் ஏன் சந்தோஷபடுறாங்க என்று தானே உங்களுக்கு சந்தேகம்.

அது ஓண்ணு பெரிய விஷயமில்லை.வில்லன் ஹீரோவை அடிக்கும் போது எல்லாம், அவர் கொடுத்த காசுக்காக தான் ஜால்ரா தட்டினாங்க.ஓர் கட்டத்தில் வில்லனின் கூட்டாளிகளுக்கு, வில்லனுக்கு ஆகும் செலவைக் விட ரொம்பவே அதிகமாகவே செலவு செய்ய வேண்டிய கட்டாயம்.

அதன் காரணமாக வில்லன்கிட்ட விலைவாசி ஏறிப்போச்சு. அதனால் எங்களுக்கு இன்னும் நிறைய பணம் தேவை என்ற போது. நீங்க வெட்டி முறிக்கிற வேலை எதுவுமே கிடையாது.

சும்மா எனக்கு ஜால்ரா போடுறதுக்கு நான் இப்போ கொடுக்கிற காசே அதிகம்..என்று மிகவும் மனசு நோகும் படி பேசி அவங்களை இவ்வளவு நாளா சோம்பேறியாக வாழ வைத்த வில்லன் சொன்னவுடன் தங்களின் தவறை உணர்ந்து திருந்தினர்


பிறகு எல்லா மக்களுடன் சேர்ந்து ஹீரோவ நீங்க அப்படி இப்படி என்று வானளாவ புகழுவாங்க ..அப்போது அவன் என்னை இப்படி வாழ விடுங்க மக்களோட மக்காளாவே வாழுறேன்னு சொல்லிட்டு அவன் வழியில் போயிடுவான்.


ஆனால் அதுவரையில் வில்லனின் அடிபொடிகளில் ஓருவனாக இருந்தவன்,‌திரும்பவும் இன்னொரு வில்லனாக மாறுவான்.


இந்த கால சக்கரம் தொடரந்து கொண்டே தான் இருக்கும்.

இதில் ஹீரோ என்பது பொருளாதார சுதந்திரம்/ .மனிதனின் பேராசை என்ற பேங்க் கடன் தான் வில்லன்.


ஆசைகளை குறைத்து கடன் வாங்காமல் வாழுங்க என்று தான் எல்லா மத நூல்களும் சொல்கின்றனர்.

ஆயினும் மனிதனின் பேராசை தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கி கஷ்டப்பட வைக்கிறது.


நன்றாக யோசித்து பாருங்கள்

வரவை மீறி செலவு வந்து, அதை போக்க கடன் வாங்கினா. அந்த கடனை எப்படி அடைக்க முடியும்.

அத்தியாவசிய அவசரகால தேவைக்கு கடன் வாங்குவது தவறே அல்ல.

ஏன்னா நாம எல்லோருமே மனிதர்கள் தான் நம்மை மீறி ஏதோவொரு வகையில் எதிர்பாராத செலவு வரத்தான் செய்யும்.

.உங்களின் வரவுக்குள் செலவு அமைத்தால் அது தான் சொர்க்கம் 

படித்ததில் பிடித்தது விதையின் கதை

 ஓர் சிறந்த மரத்தில் இருந்து கீழே விழும் போது பழம் கவலைபட்டதாம்.அப்படி கீழே விழும் போது அதற்கு பலமாக அடிபட்டதால் வலிதாங்காமல்  மெளனமாக அழுதது.

அதன் அழுகையின் அந்த பழம் கனிவான நிலையில் இருந்த போதும் உண்ணாமல்.அந்த பழம் எவ்வளவு அழகாக இருக்கு பாரூ.கடவுளோட கருணையே கருணை.ச்சே கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை ரசித்து ரசித்து செய்து இருக்கான்.ஆனா மனுஷனங்க பாரு.இந்த இயற்கையை ரசிக்க தெரியாம இயந்திரதனமா வாழுறாங்க என்று பேசிக்கொண்டன இரு அணில்கள் வருத்தப்பட்டன.

அந்த பழமோ,ஆண்டவனே நான் யாருக்கும் எந்த தீங்கும் மனசு அறிந்து செய்யலையே. பிறகு ஏன் இப்படி என்னை விழ வைக்கிறாய் என்று கதறியது.


அப்படியே கதறியே படி கீழே விழந்தது, தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளை அனைத்தும் ஓடி வந்து அந்த கனிந்த பழத்தை சாப்பிட்டு விட்டு மீதமிருந்த பழத்தின் விதையை தனது காலால் எட்டி உதைத்தது.


அப்போது மீண்டும் அந்த பழம், மன்னிக்கவும். சில நிமிடங்கள் முன்பு வரை தான் அது பழம் இப்போதோ எதற்கு பயன்படாத பொருள் என்பதால் உதாசீனமாக அனாதையாக கிடக்கும் விதை.


ஆம் இதைப் போலவே தான் பல இடங்களில் மனிதர்கள், அவர்களின் தேவை முடிந்தவுடன் தூக்கி வீசப்படும் குப்பைகளை போல் நடத்தப்படுகின்றனர்.

அப்படி உதாசீனமாக நடத்தப்பட மனிதர்களின் மனநிலை மற்றும் மனதின் வலிகள் என்னவென்பதை கதையின் முடிவில் பார்ப்போம். 

அதுவரையில் நீங்க எல்லோரும் கொஞ்சம் பொறுமையா கதையை மேற்கொண்டு படியுங்க நண்பர்களே.


அப்படி தேவையும், பசியும் முடிந்தவுடன் தனித்த விடப்பட்ட விதை, கவனிப்பாரர் அற்று கிடந்தது.

அப்போது தங்களின் கஷடத்தையெல்லாம் அந்த கடவுளை போய் பார்த்தவுடன் சரியானது என சத்தமாக பேசி அந்த வழிபாட்டு இடத்திற்கு சுற்றி இருக்கும் தன்னம்பிக்கையற்ற மனிதரை மூளை சலவை செய்த போலி பக்தர்கள்.

கடவுளின் நாமமத்தை கூவி கூவி விற்று கல்லா பல ஊரில் இருந்தும், நாடுகளில் இருந்து பணத்தை வரவழைத்து தங்களின் சுகபோக வாழ்க்கை தரத்தை உயரத்தவே அப்படி பேசுகின்றனர் என்பதை அந்த போலி வேடதாரிகளை நம்பி ஏமாந்த சிலருக்கு தெரியும்.

ஆனாலும் அந்த ஏமாளிகள் யாரிடமும், தாங்கள் ஏமாந்து விட்டதாக சொல்லவில்லை.

ஏன் போலீஸ் ஸ்டேஷனில் போய் கடவுள், கடவுள் பெயரை சொல்லி காசு பிடிங்கியவர்களையும் காட்டிக் கொடுக்கவில்லை.

அதனால் அவர்களுக்கு மேலும் தைரியம் வந்தது, கடவுளே தன் பக்கம் என்பது போல் கொகரித்தனர்.


ஏமாந்தவரின் கூட்டத்தில் இந்த விதையும் சேரத்தது.

ஆம் அந்த கடவுளை வேண்டினால் எல்லாம் நடக்கும் என்ற வார்த்தையை அந்த அனாதை விதை முழுமையாக நம்பியது.

ஓவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு அழுதது.ஆண்டவனே இந்த ஜென்மத்தில், நான் யாருக்கும் எந்த விதமான தீங்கு செய்தது இல்லையே. ஓர் வேளை பூர்வ ஜென்மத்தில் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து எனக்கு அருள் செய் என அழுது புலம்பியது.


அப்படி அழுது புலம்பிய சமயத்தில் அந்த கடவுளின் தூதுவர் போல் தன்னை பிரகடனப்படுத்தி வாழும் போலியான மனிதரை காண வந்தனர் பலர்.

காசை கொடுத்தால் பாவம் போய்விடும், கடவுளிடம் நான் உங்களுக்காக வேண்டுகிறேன் என்பவரை நம்பி பல ஆயிரத்தை வாரியிறைத்தனர்.


எனக்கு கடவுளுக்கு செய்ய ஆசை தான் ஆனா கையில் காசு இல்லையே என்று அழுது புலம்பிய படி, நன்றாக படித்து பட்டம் வாங்கியும். பொய் பேச தெரியாமல் உண்மையை மாத்திரம் பேச நினைத்து பல இடங்களில் அடித்து துரத்தப்பட்ட ஓர் ஏழை விவசாயி மகனும் அதில் இருந்தான்.


அவனின் கண்ணில் இந்த விதை பட்டது, ஏனோ அதனருகில் வந்தவன்,அதை கைகளில் எடுத்துப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.

இந்த விதையை பார்த்தால் நல்ல தரமான விதையாக இருக்கிறது. ஆனால் இந்த இடத்துக்கு எப்படி வந்தது என்று யோசித்தாலும் அவனுக்கு விடை தெரியவில்லை.

பலரின் கைகளிலும் காலிலும் மிதிபட்டு தான் பிறந்த இடத்தில் இருந்து பல தூரம் பயணித்து, கடைசியாக அந்த போலி வேடதாரியின் வழிபாட்டு நிலையம் அருகே வந்நு கிடந்தது.

கடவுளே உனக்கு கொடுக்க காசில்லையே என்றே சில நிமிடங்களுக்கு முன்பு அழுது புலம்பியவனின் மனதில் ஓர் எண்ணம் வந்தது.

நம்மால இப்போ காசு கொடுக்க இயலவில்லை என்பது உண்மை.ஆனா இந்ந விதையை ஊன்றி வைத்தால்..

எந்த விதமான சரியான உபகரணமும் இல்லாமல் தன்னால் முடிந்தவரை கையாலும் சிறு கற்களை கொண்டும் குழி தோண்டி அதில் அந்த விதையை இட்டு,சிறு வேலி அமைத்து விட்டு, நிறைவான மனநிலையில் வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்கினான்


அடுத்த நடந்த திருப்பகளை காண தொடர்ந்து படியுங்கள் மீதி கதை விரைவில் 


உலகிற்கு


முகத்தில்
அரிதாரம்
பூசினாலும் ஓர்
கலைஞனின்
கவலை
தெரிவதில்லை
உலகிற்கு

நடுத்தர வர்க்கம்


ஏழைகளுக்கு
பணக்கார
வாழ்க்கை
பிடிப்பதில்லை..
பாசத்தை விலை
பேசி விடுமாம் பணம்..
ஆனால் ஏழையாக
மாறிவிடக் கூடாதென்று
பணக்கார வாழ்க்கைக்கு
ஆசைப்படும் சராசரி
நடுத்தர வர்க்கம்
உலகத்தில்
அதிகம்பேர்...

What a human being really wants.......


Good education ?
Well to do salaried job ?
Social status?
Handsome boy/ girl to get married?
Higher official contacts ?
Good friends who pamper him/ her doings always ?
Friend giving unconditional loans without any pledge?
Luxury car and hotel stay ?
Week end party's with Alcohol ? ...@"#''😘"
Bank balance ?
Fixed assets ya share holdings?
Or
Doing what u really want to do with
Peace of mind ?
That's up to u.

கோவில்... யதார்த்தம்...

கோவிலுக்கு

வரும் மனிதர்
பலர் அவர்களுள்
அன்பை தேடி.... சிலர்
பாசம் தேடி... சிலர்
பணத்தை வேண்டி
இறைவனை கேட்கும் சிலர்...
சொத்து தகராறு
தீர்வு தேடி சிலர்...
கல்யாணம் வேண்டி
தோஷம் கழிக்க சிலர்...
கோர்ட் கேஸில் நல்ல
தீர்ப்புக்காக சிலர்....
உண்டியல் பணம்
போட்டு பல லட்சம்
வேண்டுதல்
அதனால் கடவுளுக்கும்
கவலை பிறந்தது...
தன்னை தேடி
ஞானம் வேண்டி
இறை நிலை அடைய
வருபவர் ஓரு சிலரே....
பிரச்சினை தீர்க்க சொல்லி
மட்டுமே இறைவனின்
இருப்பிடம் வருகிறது
வியாபார மாந்தர் கூட்டம்..
அர்ச்சகர் தட்டில்
பத்து ரூபாய் நோட்டு..
கேட்பதோ பல மதிப்பு
வேடிக்கையாக
சிரிக்கும் கோவில்
வாசல் ஞானி..
விதியை நம்புவதில்லை..
பாமர மக்கள்..
தேவியோ சிரித்தாள்...
இன்னுமா உங்களுக்கு
உலகம் புரியவில்லை...
எதிர்பார்ப்பு கொண்டதே
யதார்த்த உலகம்...

Good morning Appa



அன்பான அப்பாவுக்கு

அதிகாலை நேரத்தை

நினைக்க செய்கிறாள் தனது மழலை மொழியுடன் 

செல்ல முத்தங்களால்.

 *குட் மார்னிங் அப்பா*

நிறைய பேர்

 பணமில்லாம

கஷ்டப்படுபவனை விட 

உண்மையான

பாசமும் பந்தமும் 

தன்னம்பிக்கையும் 

இல்லாம கஷ்டப்படுறவங்க 

தான் நிறைய பேர்.


அப்பாவ மன்னிச்சுடு

சென்னை நோக்கி

வேகமாக செல்லும்

பறந்து செல்லும்

வாகனங்கள்...

ரோட்டில் ஓரத்தில்

நடந்து செல்லும்

பலரில் நானும்

ஓருவனாக சென்ற

மாதம்வரை நிமிர்ந்த

நடையும் அதிகார பேச்சும்

தான் அப்பாவின் அடையாளம்

எதை கண்டும் அஞ்சாமல்

பேசும் தைரியம்.. அடிக்கடி

சொல்லுவார் எனக்கு அப்புறம்

இவன் தான் என்னைப்போலவே...

சாயங்கால வேளையில்

காபி அருந்தும் போது

சிறிதாக சிந்தியதற்க்காக

பெல்டை பட்டைஆதீட்டினார்

எனது முதுகில் அவரோடு

வலப்புறமாக அம்மா

இடப்புறத்தில் சற்று தள்ளி 

நடந்து ச

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...