அப்பாவுக்கும்
தாத்தாவுக்கும்
வார்த்தை விளையாட்டில்
வீணானது காலை நேரம்
அம்மாவும் ஆச்சியும்
சமையலறையில்
அடுத்த வாரம் போக
வேண்டிய கல்யாணவீட்டிற்கு
கூட்டணி அமைத்து
ஆலோசனையில்
ஆரவாரித்தனர்
"அம்மா பசிக்கது" என்ற
மகளின் கையில்
பத்து ரூபாய் பிஸ்கட்
திணித்து விட்டாள்
போடீ போய் சிந்தாம சாப்பிடு
தனது தங்கச்சியை காட்டிலும்
அதிக நகை அணிந்து போகும்
கனவில் மிதக்கிறாள் ---.தனது
பசியை நினைத்து
விழியோர கண்ணீருடன்
சாய்வு நாற்காலியில்
தள்ளாடியபடி தாத்தா அருகில்
வந்த குட்டி தேவதை தான்
கடித்து தின்ற எச்சில்
பிஸ்கட்டை அவரின்
வாயில் திணித்தே கேலியில்
சிரித்தாள் நீயும் நானும்
ஓண்ணும் நமக்கு இன்னிக்கு
கிடைச்சது பிஸ்கட் பதிலுக்கு
அவளின் கன்னத்தில் அன்புடன்
எச்சிலை தூவிட்டார் தாத்தா..
No comments:
Post a Comment