யானையும் பாகனும்


யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது...

கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை... அதுவே அமைதியாக பாகனின் கட்டுப்பாட்டில் நிற்கும் போது அதிக மரியாதை... இறைவனை தனது முதுகில் சுமந்து செல்லும் அரிய வாய்ப்பு அதற்குத்தான்..

உலகில் முடி சூடிய அரசர்ளுக்கும் கூட கிடைக்காத பாக்கியம் யானைக்களுக்கே கிடைக்கிறது....

யானைக்கு வந்த வாழ்வு பார்த்தாயா??...கேலியாக சிரிக்கும் ஓர் மனிதர், கூட்டத்தின் ஓர் ஓரத்தில்...

அவருக்கு தெரியாது யாருக்கும் அடங்காமல் காட்டில் சுதந்திரமாக அது சுற்றிய நாட்கள் எத்தனையோ... 

வகைவகையான உணவுகள், ஆயினும் அது உணவு தேடவில்லை.பல நாட்கள் உணவை வெறுத்து பட்டினியில் கிடந்தது....உண்மை அன்பை தேடி மதம் கொண்டது... மலையும்,காடும், அருவிக்கரையும், ஆற்றின் ஓரங்களிலும் எத்தனை எத்தனையோ.....இடைஞ்சல்கள்

யானை தான் உண்ணும் தென்னை மட்டைகளை கூட பல முறை தரையில் தட்டும்.. ஏனென்றால் அதில் இருக்கும் எறும்புகளின் வேதனை கூட அறிந்து செயல்படும் ஓர் புத்திசாலி மிருகம் யானை...

பல கடினமான போராட்டங்களுடன் வாழ்ந்த அந்த மிருகம்.

கூட்டத்தில் இருந்து வெளியேறிய வெறியில்.. போகும் இடம் தெரியாமல் பல இடங்களில் தனிமையில் சுற்றி திரிந்தது. தன்னை போலவே அனாதையாக சுற்றி திரிந்து அன்பு தேடும் இன்னொரு யானை எங்கேயும் உள்ளதா என தேடியது..

அதன் அமைதியான தேடலை புரியாமல்... உனக்கு பசிக்குதா இந்தா பழம் சாப்பிடும் என்றே தனது கெட்ட எண்ணங்களை மனதில் மறைத்து வைத்து இனிமையான சொற்களை சொல்லி சாப்பிடும் பழத்தில் வெடி வைத்து விளையாடிய கயவர்கள் சிலர்.

யாரோ ஒருவர் செய்த செயலுக்காக மனித இனத்தை கண்டாலே கோபத்தில் கொப்பளித்து அந்த கொம்பன் யானை ரொம்ப பயங்கரமானவன் என்று பெயர் வாங்கியது 

அதை படைத்த இறைவனுக்கு மாத்திரமே புரிந்தது கொம்பன் கோபக்காரன் தான் ஆனால் அவனின் கோபம் கயவர்களின் மீது தானே தவிர நல்லவர்களின் மீது அல்லவே

யாருக்கும் தீங்கு செய்ய விரும்பாத அன்பே உருவான மிருகம்...ஏனோ மதம் பிடித்து காடுகளில் அலைந்த காலங்களில் தெரிந்து கொண்டது... தனக்கு துணையில்லை என்பது தான் பிரச்சினை என்று...பல விதமான கடினமான போராட்டங்களை கடந்து புரிந்து கொண்டது.. இந்த உலகில் எதிர்பார்ப்பே இல்லாமல் பழகும் மனிதர்கள் மிகவும் சிலரே..

அப்படிப்பட்ட சிலரை தேடி அலைந்தது.. ஆமாம் அதன் தேடலில் தனக்கு இணையான தன்னைப் போன்ற குணத்திலும் அன்பிலும் சிறந்த ஓருவனை கண்டது 

தனக்கு யாருமில்லை என்று தனித்து அலைந்த யானையின் அருகே இன்று நிற்கும் அதன் பாகன்.. 


யானை காட்டில் அலைந்து அன்பு தேடியது... 

பாகன் நாட்டில் அலைந்து மனிதரில் அன்பு தேடினான்...

இருவருக்கும் தேவை ஓன்று தான்.. .

அது அன்பு ...

எனவேதான் "அன்பே சிவம்" என்று எழுதப்பட்ட ஊரின் மிகப்பெரிய ஆலயத்தில் இருவரும் வாழ்கின்றனர் போலும்...

.

.

கொடுப்பதில் சிவனுக்கு நிகர் யார்..

"நாயிற் கிடையாய் கிடைந்த அடியாருக்கு தாயிற் சிறந்த தயவான தத்துவம் அவன்"...

.

.

அந்த பாகனுக்கும் யானை மட்டும் தான் சொந்தம்...

யானைக்கும் பாகன் மட்டுமே சொந்தம்...

ஆயிரம் பேர் வந்து அவர்களை பார்த்து விட்டு போனாலும் இருவரும் இடையே உருவான பந்தம் நிலையானது.... விசித்திரமான வரலாறும் கூட.......

.

.

.

யானையால் பாகனும், பாகனால் யானையும் அன்பில் ஒன்றுபட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை பரப்புகின்றனர்...

.

.

இருவரின் குணங்கள் கூட ஒன்றே...

.

என்றாவது ஓர் நாள் தனது கடந்த கால வலிகளை நினைத்து அவனையும் மீறி கண்கள் கலங்கும் போது, தனது தும்பிக்கையால் அது அவனிடம் விளையாடும்...

உனக்காக நான் இருக்கும் போது உனக்கு ஏன் கவலை என்பது போல... 

.

.


யானையும் கூட சில நேரங்களில் தனது கடந்த காலத்தை நினைத்து அழும் போதும்.. அதன் அருகே சென்று தும்பிக்கையை தடவிக் கொடுத்து அன்புடன் ஆறுதல் சொல்லுவான்...

.

யானை விநாயகரின் அன்பான உருவம்.

இருபது ரூபாய்.

 சாமி என் பிரண்ட் நல்லா இருக்கணும் அர்ச்சனை பண்ணுங்க ஆனால் நட்சத்திரம் தெரியாதே.. என்று சொல்லும் பல நல்ல மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்...20  ரூபாய் பணத்தை முதலில் தட்டில் வைத்து சூப்பரா பண்ணுங்க.. சீக்கிரம் அவன் வாழ்க்கையில் செட்டில் ஆகணும்... அப்பாவியாக சொல்லும் ஏழைகள்... அவர்களின் கள்ளமில்லா உள்ளம் தான் கடவுள் வாழும் இடம்

காலை டிபன்

 லாக்-டவுண் கதை...

.

.

காலை டிபன்.....


.

சமையலறையில் நேற்றைய நிகழ்வுகளை நினைத்து பார்த்து எரிச்சலாக வந்தது..

.

நேற்றைய இரவில் கட்டிலில் அவளை கட்டித் தழுவும் போது, கேட்டான்.. ஏண்டி உன் பிளவுஸ் கிழிச்சிருக்கு...வேற நல்ல சட்டை போட்டா என்ன???. 

.

.

ஏன் இதுக்கு என்ன குறைச்சல்...

.

.

உனக்கு இந்த கலர் நல்லா இல்லடி....

.

.

.

நீங்க தானே வாங்கி தந்தீங்க...இப்போ நல்லா இல்லை அப்படின்னா, நான் என்ன செய்ய

.

வர வர நீ நல்லா எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டே....

.

ஏங்க, நீங்க கேள்வி கேட்டா, பதில் சொல்லுறது தப்பா....எஜமானுக்கு கோபம் பொத்துகிட்டு ஏன் வருது... உண்மை கசக்குதோ

.

ஏய் லூசு நான் சொல்லுறது புரியுதா...லவ் பண்ணும் போது.நான் பத்து வார்த்தை பேசுனா.நீ ஓரு வார்த்தை பேசுவே... இப்போ உனக்கு திமிர் கூடிப் போச்சு

.

.

நல்லா யோசிச்சு பாருங்க.நான் உங்க பெயரை மட்டும் தானே கேட்டேன்... நீங்க தான் ஒருமணிநேரம் பேசுனீங்க...எப்பா... எவ்வளவு புழுகு.... இன்னும் நீங்க மாறவே இல்லை..

அவனின் மார்ப்பில் சாய்ந்தாள்..

.

ஏண்டி நல்லா கத்து வைச்சிருக்கே....என்னை அடிமைபடுத்துற மாதிரி

.

பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க... நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுறேன்...

.

உங்க அம்மா வீட்டுக்கு அடிக்கடி போறதுக்குக்கா....கல்யாணம் பண்ணுன..லூசு...

.

.

நான் எங்கே தாலி கட்டுனேன்...‌நீங்த தானே என் கழுத்துல கட்டுனீங்க... உங்க ஆத்தாகாரி அஞ்சு பவுன் செயின் செஞ்சு கொடுத்துட்டு என்னை சிறையில் போட்ட மாதிரி இங்கேயே அடைச்சு வைச்சிருங்காங்க.... ஓர் இடத்துக்கு வெளியே போக முடியலை..... இரண்டு தெரு தள்ளி இருக்கிற அம்மா வீட்டுக்கு போறதுக்கு கூட அவங்க துணையில்லாம போக கூடாது...

. ரொம்பவும் கண்டிஷன்...

.


எப்பவுமே, அவங்க பத்தி தான்.பேசுவியா..

.

பிறகு யாரை பத்தி பேசணும். மகராசா..நீங்களேசொல்லுங்க. அவங்களை பத்தி மாத்திரமே பேசுறேன்...

.

நான் என்ன சொல்ல வந்தேனோ.அதுவே மறந்து போச்சு...

.

ம்ம்ம்..சட்டை...

.

.

இந்த கிழிச்சதை போட்டு கிட்டு தான்.வெளியே போனியா....

.

இப்படி தெளிவா.கேட்க வேண்டி தானே.. அதைவிட்டு விட்டு...

.

ஏய் பதில் சொல்லுடி...சிரிக்காதே எனக்கு வயிறு எரியுது...

‌.

கொஞ்சம் இருங்க ஜஸ் வாட்டர் எடுத்துகிட்டு வர்றேன்.. ஜில்லுன்னு குடிங்க சுடு குறையும்...

.

.

முந்தானையை பிடித்து இழுத்தான்... கொஞ்சம் கூட வெட்கமின்றி. ஜஸ் வாட்டர் எடுத்து வந்தவள்.டம்ளரில் அதை நீட்டினாள்...

.

கொஞ்சமாவது உனக்கு வெட்கமாக இல்லையா...

.

நான் எதுக்கு வெட்கப்படணும்... என் புருஷன் கிட்ட. இருக்கும் போது...என்ன வெட்கம் வேண்டியிருக்கு.....

.

டம்ளரை வாங்கியவன் அதில் இருந்த தண்ணீரை அவளின் முகத்தில் வீசி எறிந்தான்...

.

அவளுக்கு தான் பெரிய தவறு செய்து விட்டோம் என்று தோன்றியது...தன் முந்தானையை சரிசெய்த படி தலையணை எடுத்துக் கொண்டு..பீரோ அருகில் சென்று படுத்துக் கொண்டாள்..

.

.

இப்போ ஏண்டி முரண்டு பிடிக்கிறே...வா வந்து கட்டிலில் படு...

.

.

எனக்கு எதுவும் வேண்டாம்... சத்தம் போடாதீங்க... உங்க அம்மா காதுல விழுந்தா.. ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க.... நம்ம கஷ்டம் நம்மோட... பாதியில் உதடுகளை கடித்து வார்த்தைகளை அணை கட்டினாள்..

.

.

ஏய் புரிகிற மாதிரி பேசுடி.... எரிச்சல் உண்டாக்காதே...

அவள் மெளனமாக இருந்தாள்...

.

.

அவளது முதுகை தடவிவிட்டான்.... நா.....எழுதிக்காட்டினான்.... பிஸ்கட் டேபிள்ல இருக்கு எடுத்து போடுங்க......

உங்க ஜிம்மிக்கு தூக்கம் வருது....பிறகு கோபத்தில் கடிச்சுடும்....

அவன் எதுவுமே அலட்டவில்லை.....  அருகே கிழித்த இடத்தை தொட்டான்...

.

.

போர்வை எடுத்து மூடிக்கொண்டாள்... அவளுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியது...

.

அவன் கொஞ்சி கெஞ்ச வேண்டும் என்று ஏங்கினாள்...எதிர்பார்த்தாள்...

.

.

அவனுக்கு கோபம் கோபமாக வந்தது...உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா.எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்...போய்யும் போய் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன் பாரு.. என் புத்தியை....

.

.

அவசரத்தில் வார்த்தைகளை கொட்டினான்..

.

.

அவள் தூங்கிவிட்டது போல இருந்தது...

.

கட்டிலில் வந்து அமர்ந்தான்... இரண்டு அடி தள்ளி இருப்பவளின் இருப்பு ஏதோ வானத்து நட்சத்திரம் போல தோன்றியது...

.

.

அவளோ தூங்கவில்லை.போர்வைக்கு அடியில் தன்னை மறைத்துக் கொண்டாள்... பீரோவில் இருவரும் முதன்முதலாக ஒட்டிய குட்டி பாலமுருகன் படத்தை ரசித்தாள்...இதை பார்த்து கொண்டே இரு.. கூடிய சீக்கிரம். .... வந்து பிறப்பான்.. அவளின் காதில் உதடுகளால் பேசி இரண்டு மாதங்கள் ... சந்தோஷமாக உணர்ந்தவள்.திரும்ப நினைத்தாள்... அப்போது..

.

அவளின் கால்கள் போர்வைக்கு வெளியே தெரிந்தது கண்டு அருகே வந்து போர்வையை விலக்கினான்... அவள் கண்களை நன்கு மூடிக்கொண்டு தூங்குவது போல செய்கை செய்தாள்...

.

.

போர்வை எடுத்து நன்றாக போர்த்தி விட்டு...தூங்கி விட்டாள் என நினைத்து தலைவருடினான்....

.


நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணுறேன் தெரியுமா...புஜ்ஜிம்மா....

தன்னை படாதபாடுபட்டு கட்டுப்பத்தியபடி இருந்தாள்..

.

மீண்டும் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

.

அவள் திருப்பி பார்த்தாள்.அவனோ சுவரை பார்த்தவாறு படுத்திருந்தான்...

.

சரியாக இன்றுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேதியில் தான் அந்த கருப்பு பிளவுஸ் எடுத்து கொடுத்தான்... இந்த கலர் உனக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும்..... இன்று கூட எல்லாம் நினைவில் இருந்தது அவளுக்கு...

.

ஏனோ கல்யாணத்திற்கு பின் மரியாதை குறைந்து போச்சு...லூசு.. வாயாடி..மக்கு பாப்பா.. இன்னும் எத்தனையோ பட்டங்கள் சூட்டி மகிழ்ந்தான்..

.

.

கோபத்தில் ஏதாவது கேட்டால் அவ்வளவு தான்... காதின் ஓரத்தில் விரல்களால் கோலமிட்டு புதிய உலகத்தை காட்டிவிடுவான்....

.

மறுநாள் காலை சத்தமாக கூப்பிடுவான்.. ஏய் லூசு...மக்கு பொண்டாட்டி...சீக்கிரமா....காப்பி கொண்டு வா... நாய்குட்டி.....புஜ்ஜிம்மா.....

.

.

அவனின் பேச்சில் அன்புடன் கலந்த கேலியை ரசிப்பாள்...

.

.

காப்பி டம்ளரை நீட்டியவளிடம்...வர்ணனை போதுமா..இல்லையென்றால்....கேட்டபவனிடம்.

.

உங்க இஷ்டப்படியே கூப்பிடுங்க...தனது காது ஓரத்து முடியை வருடியவளை அணைக்க நிறைந்தவனை......

.

உங்க மாமனார் வர்றார்...என்று சொல்லி விட்டு சிரிப்பாள்..அவனோ அசடு வழிந்தான்... 


சொந்தக்காரங்க யாராவது வந்து

குழந்தை பத்தி பேச ஆரம்பித்தால் அது யாராக இருந்தாலும்..வேற ஏதாவது இருந்தா பேசுங்க.... கடவுள் எப்போ தருவாரோ.. அப்போது தான் கிடைக்கும்... என்பான்..

.

.

இதை பற்றி அவள் கேட்டபோது... இப்படித்தான் எங்க அத்தைக்கு குழந்தை இல்லை என்று சொல்லி மாமாவுக்கு இன்னோர் கல்யாணம் செஞ்சு வைப்பாங்க...அத்தை எவ்வளவு கஷ்டப்பட்டுது தெரியுமாடி உனக்கு...

.

.

அவனின் இந்த பதிலில் அவனின் பயத்தை உணர்ந்தாள்... குழந்தை பிறந்தா ஓர் குழந்தை .. இப்போ இரண்டு குழந்தைகள் என்று கட்டிப்பிடித்து முத்தமிடுவான்...

.

.

நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது..கேவி கேவி அழுதாள்....

.

.

இவளின் சத்தம் கேட்டது... இப்போது பேசாமல் இருப்பதே நல்லது என்று அவனுக்கு தோன்றியது.... நேத்து பெரிய மாமாவும் அத்தையும் வந்தாங்க.அந்த கிழவி...வயசான காலத்தில் சும்மா இருக்க வேண்டியது தானே...

நம்ம இல்லாத போது எதாவது குழந்தை பத்தி கேட்டு இவளை .....நினைக்கும் போது எழுந்து போய் அடிக்கணும் போல இருந்தது.... யோவ் மாமா உன் பொண்ணை கட்டவில்லை என்று தானே இப்படி பண்ணுறே... நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு....பல நினைவுகளுடன் தூங்கி போனான்....

.

காலை எழுந்தவுடன் அருகே பார்த்தான்.. பாய் சுருட்டி அழகாக அதன் இடத்தில் இருந்தது...

.

.

"ஏய் லூசு ஆசையா கூப்பிட வேண்டும்" போல இருந்தது..ஏதோ நம்மகிட்ட மறைக்கிறா...அதை கண்டுபிடிக்கணும்...ஏதோ சொல்ல வந்தா.. "நம்ம கஷ்டம் நம்மோடு" தலைவலியா இருந்தது....

.

அருகே காப்பி டம்ளருடன் வந்தவளிடம்... இன்னும் பல் தேய்க்க வில்லை...


எத்தனை நாளைக்கு இந்த புது பழக்கம்....

.

.

இனிமேல் அப்படித்தான்... எனக்கும் ரோஷம் வரும்...எழுந்து வாசலுக்கு போனான்...

.

.

அந்த கருப்பு கலர் பிளவுஸ் வாசலில் கைப்பிடி துணியாக கிடைத்தது...

.

.

அம்மா... புது துணி எதுக்கு இங்கே கிடக்கு...

.

.

எனக்கு என்னப்பா தெரியும்...உன் பொண்டாட்டி கிட்டே போய் கேளூ.... நேத்து சாயங்காலம் நீ வருவதற்கு கொஞ்சம் நிமிஷம் முன்னாடி குளிச்சுட்டு வந்து அதை எடுத்து உடுத்துனா...ஏதோ கைக்குள் கிழிச்ச மாதிரி இருக்குன்னு சொன்னதை கூட கவனிக்கவில்லை....சரி நான் பெரிய மாமா வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் வருகிறேன்... அவன் பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னிக்கு வர்றதா...வந்து சொல்லிட்டு போனான்...

.

.


.

அவனின் எல்லா கேள்விகளுக்கும் பதில் அதில் இருந்தது...

.

நேராக சமையலறை பக்கம் போனான்..காபி மேஜையில் இருக்கு...ஏதோ ஓர் பாவனையில்..

.

.

அந்த கருப்பு பிளவுஸ்...ஏதோ சொல்ல தொடங்கியவனை..... அதான் உங்களுக்கு பிடிக்கலையே.பிறகு எனக்கு எதுக்கு அது....

.

.

இல்லடி.. அது நான் உனக்கு வாங்கி கொடுத்த முதல் பொருள்....

.

.

அது எனக்கு நல்லாவே நினைவு இருக்கு.. நேத்து தேதி உங்களுக்கு மறந்து போச்சு....

.

.

காலண்டர் பார்த்து விட்டு தலையில் கைவைத்தான்....

.

.

உங்களுக்கு எப்போதும் பொறுமை . கிடையாது...

.

மெதுவாக அவளை பின்புறமிருந்து அணைத்து தாலியை தொட்டு சொன்னான்.. அது உனக்கு இப்போ தான் தெரியுதா...

.

.

அவனின் முகத்தில் முகத்தை சாய்த்தபடி கேட்டாள்.. காலைக்கு .என்ன டிபன் செய்யணும்...

சிகப்பு பேனா

 சிகப்பு பேனா.

.

.


சாப்பிட மறந்தியா... ஹோம் ஓர்க் செய்யலை.. பென்சில் டப்பா மறந்து வீட்டில் வைச்சுட்டு வந்துடுட்டேன்... இந்த காலாண்டு பரீட்சையில் மட்டும் தான் நீ  எல்லாம் பாடத்திலும் பாஸ், அதுவும் 45% தான். என்னவோ பள்ளிக்கூடத்தில் பர்ஸ்ட் ரேங்க் எடுத்த மாதிரி திரியாதே... 

.

நீயெல்லாம் எதுக்குடா பள்ளிகூடத்துக்கு வரணும்... 2ம் வகுப்பு டீச்சர் எல்லோருக்கும் முன்னால் திட்டினார்கள்....

.

போடா போ... போய் வாசலில் முட்டி போட்டு நில்லு..நாலு பேரு உன் பார்த்து சிரிச்சா தான் புத்தி வரும்... அடைமழை போல சொல்லி முடித்தாள் இங்கிலீஷ் டீச்சர் விஜி மேடம்...

இல்லை மேடம், ஏதோ அவசரத்தில் மறந்து விட்டேன்...

டீச்சர், "என்கிட்ட இரண்டு பேனா இருக்கு'.. சொல்லிக்கொண்டே டீச்சரின் அனுமதியை கூட எதிர்பாராமல், ராம் நீ வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்...

.

.

இதை கவனித்த டீச்சருக்கு இன்னும் கோபம் அதிகமானது...முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள நீயெல்லாம் குரூப் சேர்க்க அரம்பிச்சுட்டே...உன்னை எல்லாம் சீர்திருத்த பள்ளிகூடத்திலே கொண்டு சேர்க்கணும்... என் உயிரை வாங்கணும் வந்து சேர்ந்த மாதிரி இருக்கு...

.

கவிதா நீயெல்லாம் இவன் கூட சேராதே... இவனுக்கு இரக்கமே காட்டக்கூடாது...

.

போடா, போ...

..


மெதுவாக அந்த பள்ளியில் நடுவே அமைந்த ப்ரேயர் இடத்தில் சென்று முட்டிக்கால் போட்டு நின்றான்....

.

.

.பாடத்தை நடத்த தொடங்கிய டீச்சர்....

.

.

வெயிலில் மண்டை காய்ந்து தலைசுற்றுவது போல இருந்தது... சொன்னால் நல்லா நடிக்கிறேன்னு சொல்லுவாங்க...

.

.

ஜன்னல் ஓரத்தில் இருந்து கவிதா செய்கை காட்டினாள்..

அந்த குரோட்டஸ் இலையை பிச்சு அது மேல் முட்டி போட்டு நில்லு.கால் வலிக்காது.. நான் உனக்கும் எழுதி தருகிறேன்.

.

சற்று நேரம் கழித்து அந்த வழியாக பள்ளிக்கூடத்தின். ஆயா பேச்சியம்மா வந்தாள்

செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல நின்று கொண்டு மெதுவான குரலில் கேட்டாள்....


.

விஷயத்தை சொன்னான். லஞ்ச் பாக்ஸ் கூட மறந்து வைச்சுட்டு வந்துட்டேன் பேச்சிம்மா...


.

கவலைப்படாதே கண்ணா... நான் வேணா  மதிய சாப்பாட்டு  கொண்டு வரவா..ஆனால பழையது தான் இருக்கு. ???

.


வேண்டாம், பேச்சிம்மா...... ஓரு நாள் பட்டினி கிடந்தால் பரவாயில்லை.. எனக்கு பழக்கம் தான்... வயதான கிழவன் போல பேசினான்.

.

.

பேச்சிம்மா, அவன் கன்னத்தை தடவியபடி சொன்னாள்.. "உனக்கு எல்லாம் புரியுது... சின்ன வயசுல உனக்கு ஏன் தான் இத்தனை பெரிய கவலை...பேசுடா செல்லக்குட்டி....இந்த உலகத்துல பேசுற பிள்ளை தான் பிழைக்கும்"...

சொல்லி விட்டு போனாள்...


.

பெல் அடித்தவுடன் விஜி டீச்சர் அடுத்த க்ளாஸ் போகும் போது எதோ சண்டைக்காரனை முறைப்பது போல சென்றார்....

.

.

வேகமாக ஓடி வந்த கவிதா கேட்டாள்.. ஏண்டா ரொம்ப வலிக்குது தா...

.

.

ம்ம்ம்....

.

.

இந்தா, பேனா...எங்க அப்பா எனக்கு இரண்டு பேனா கொடுக்குறதே.அடுத்தவங்களுக்கு கொடுக்கத்தான்...

.

.

அடுத்த இரண்டு க்ளாஸ் அமைதியாக போனது...

.


மதிய வேளையில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்....

.

.

தனியாக ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு, வேப்பமரத்தின் மீது விளையாடும் அணில்கள் பார்த்து சிரித்தபடி இருந்தான்.


.

டேய், சாப்பிட வா... என்னுடைய லஞ்ச் பாக்ஸ் நம்ம ஷேர் பண்ணி சாப்பிடலாம்... இன்னிக்கு எங்க அம்மா இடியாப்பம் செஞ்சாங்க.. ரொம்பவே நல்லா இருக்கும்..


.

இல்லை கவிதா..நீ போய் சாப்பிடு..

.

நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்... பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்..

.

நேத்து உங்க வீட்டில் பெரியவங்க சண்டைய???


.

ஆமாம்  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.. இரண்டு பேரில் ஒருத்தனை நான் வளர்த்துக்கிறேன்.. நீ அவனை கூட்டிக்கொண்டு உன் அம்மா வீட்டுக்கு போ..அப்போ தான் அறிவு வரும்..எது பேசுனாலும். எதிர்த்து எதிர்த்து பேசுறே... அப்படின்னு அப்பா சொன்னார்..எதற்காக சண்டை என்றே தெரியலை... நான் தான் பாஸ் பண்ணிடேனே.பிறகு எதுக்கு அவங்க சண்டை போட்டாங்க..  

.

பெரிய மணுஷி போல கதை கேட்டவள் பதில் இன்றி இருந்தாள்..



அந்த அணில் எவ்வளவு வேகமாக போகுது பாரு... என்று சந்தோஷமாக சொன்னான்..

.

எப்படி இவ்வளவு கஷ்டத்தில் சிரிக்க முடியுது...

எப்போதும் வீட்டை பத்தி நினைச்சு தான் உனக்கு படிப்பு வரலையா??

.

அது எல்லாம் தெரியாது..... எனக்கு படிப்பே  வேண்டாம் கவிதா... படிச்சவங்க தான் சண்டை போடுறாங்க...படிக்காதவங்க சண்டை போடாம சந்தோஷமாக இருக்காங்க... எங்க அம்மாவும் அப்பாவும் எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கணும்... எனக்கு அதுவே போதும்... ஆனா நான் என்ன செய்யணும்..அது தான் தெரியலை...


கேட் வாசலில், அவனின் பெரியம்மா லஞ்ச் பாக்ஸ் மற்றும் பென்சில் பாக்ஸ் சகிதம் வந்து நின்றாள்..

.

நீ எதுக்கு இப்படி கஷ்டப்படுறே.. நீ வீட்டில் படுற கஷ்டம் போதாதா.. எரிச்சலாக..


.

நீ கூட என்மேல் கோபப்படுறே.... உனக்கு பிடிக்கலை என்றால் சொல்லு அம்மா...செத்து போறேன்...வர வர யாருக்கும் என்னை பிடிக்கவில்லை... விஷம் வாங்க கூட அப்பா காசு தரமாட்டார்... உனக்கு தெரியாதா??.

கை வேற கரண்ட் பட்டு நொண்டியா போச்சு...

என்ன செய்ய, என் வயித்துலஎதுவுமே பிள்ளை பிறக்கவில்லை.. நான் செஞ்ச பாவம்... புலம்பினாள்..


.

நீ செத்து போனா, எல்லாரும் என்னை அடிப்பாங்க.நீ எங்கேயும் போகாதே...

.

வாணியம்மா கைகளில் முத்தமிட்டான்.. இந்த கையை குறை சொல்லாதே வாணிம்மா......இது தான் கேசவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கு...

அப்பா என்ன திட்டினாலும் பொறுத்துக்கோ.... நேத்து தான் கதை சொல்லை.. இன்னிக்கு ராத்திரி நீ அந்த யானை கதை எனக்கு சொல்லுவியா...

.

நான் உயிரோடு இருக்கிறதே, உன் அன்புக்கு தானே கேசவ குட்டி...

.

சரி, நீ பத்திரமாக வீட்டிக்கு போ...ரோட்டுல நிறைய பஸ்ஸு போகும்...


.

லஞ்ச் பாக்ஸ் திறந்து பார்த்தால், வெண்டைக்காய் பொரியல்... புளிக்குழம்பு... கொஞ்சம் கூழுவத்தல்...இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.... தெரியுமா உனக்கு???

.

கவிதா கேட்டாள்... இப்போது வந்துட்டு போறது யாரு ராம்...

.

எங்க அம்மா...

.

அப்போ போன வாரம் வந்தது...

.

அதுவும் எங்க அம்மா தான்...

.

உனக்கு எத்தனை அம்மா... 

.

எனக்கு இரண்டு அம்மா.. அவங்களுக்கு நான் என்ன பெயர் வைச்சு இருக்கேன் தெரியுமா???.

.

உதடுகளை பிதுங்கி தெரியாது என்றாள்.

.

ஓரு அம்மா சிகப்பு ருக்மணி...

இன்னொரு அம்மா கருப்பு ருக்மணி...

எங்க அப்பா தான் கிருஷ்ண பகவான்.....

.

ஜன்னல் வழியாக இதை வேடிக்கை பார்த்த  விஜி மேடம்.அவன் அருகே வந்து அவனிடம் கொடுத்தாள் தனது சிகப்பு பேனா....

.

.

இதில் இருந்த வாசகம் "HERO"

ராம் ஏன் புகழப்படுகிறார்...

பல்லாயிரக்கணக்கான

வருடங்களுக்கான

வரலாற்றை தன்னகத்தே கொண்டது

பாரத நாடு.. இந்த நாட்டை எத்தனை எத்தனையோ

அரசர்ள் ஆண்டுவிட்டனர்.

ஆயினும் அத்தனை அரசர்களையும்

வரலாறு தன்னுள் சேர்த்து வைக்கவில்லை.

மிகச் சில அரசர்களையும்

மக்களின் தேவையை புரிந்து மக்களுக்காகவே 

வாழ்ந்த அரசர்களையும்

வரலாறு மறக்காமல் தன்னுள் பத்திரப்படுத்திக் கொண்டது.

அப்படிப்பட்ட அரசர்களில் ஒருவர் தான் இந்த ராம்.

கடவுளின் அவதாரமாக அனைவரும் கொண்டாடினாலும் 

தனது வாழ்நாளில் தனது எந்த விதமான ஆன்மீக சக்திகளையும்

சாமானிய மனிதரிடம் கூட காட்டிக்கொள்ளாமல்

யதார்த்தமான மனிதராக தசரதனின் புதல்வனாக பிறந்து

சாதாரண மனிதனின் வாழ்நாளில் சந்திக்கும்

எல்லா இன்ப துன்பங்களையும்

கடந்து மக்களின் மனதில் மன்னராக உயர்ந்து நின்ற தசரதராமன்.

 இந்த நேரத்தில் எல்லோரின் மனதில் எழும் 

ஓர் சாதாரணமான கேள்வி தான் இது..

தம்பி பரதன்,

அண்ணா, "நீயே நாட்டை ஆள தகுதியானவன் "

என்று அரியணையை தந்த போதும்..

தந்தைக்கு தாய் கொடுத்த வாக்கை

காப்பாற்ற கானகம் சென்று பஞ்சவடியில்

தங்கியவன்.....ராம்...ராம்...ராம்...

இந்த  ராம் ஏன் புகழப்படுகிறார் ... ???

இதை யோசித்துப்

பார்த்தால் உண்மை புரியும்..

அரசின் தலைமை பீடம் தேடி வந்த போதும்..

ஆட்சி அதிகாரத்தை,

பதவியை விரும்பாதவர்....

தன்னை விட பிறரால் சிறந்த

ஆட்சியை கொடுக்க முடியும் 

என்று வாழ்ந்து காட்டியவர்...

அனைவரும் அழைத்தாலும்

14 வருடங்களுக்கு காட்டில் வாழ்ந்தவர்...

ஆடம்பரத்தை துறந்தவர்....

தந்தை கொடுத்த வாக்குறுதியை

காப்பாற்றியவர்....

காடுகளில் சென்று கஷ்டத்தை அனுபவித்தவர்...

கஷ்டத்தை கூட சுகமாக நினைத்தவர்..

தன் மனைவியை தவிர பிறர்

பெண்களை ஏறிட்டு பார்க்காதவர்...

ஜனகனின் மகள் ஜானகியை

மணந்த தசரத புதல்வன்

காதலில் மயங்கும் ஓவ்வொரு

மனிதரின் மனதிற்குள்...

வெளியே சொல்லாத எதிர்பார்ப்பு...

ராமனும் சீதையும்...

 

 

 


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...