விஜயகாந்த் பாசக்கார தலைவர்

அம்மாவின் பாசம்.. 

அப்பாவின் கோபம் 

தங்கைகளின் வேதனை.

நட்பின் இலக்கியம்.

பொய்யே பேசாமல் தெரியாமல் 

இந்திய வரலாற்றில் எதிர்கட்சி தலைவராக உருவான 

ஓர் உன்னத தலைவன்... 

தன் கட்சியில் இல்லாத 

மனிதருக்கு உதவும் 

ஓர் ஹானஸ்ட் ராஜ்..

கலைஞர் ஜெயலலிதா 

இருவரையும் எதிர்த்து 

அரசியல் ஆட்டத்தை 

தொடங்கிய  வீரமிக்க கேப்டன்.. 

செவாலியே சிவாஜிக்கு பிறகு

நீண்ட நெடிய உணர்ச்சிகரமான 

வசன உச்சரிப்பு..

ஆர்ப்பரிக்கும் கோபம்

உள்ளத்திலோ குழந்தையின் குணம்

அள்ளிக் கொடுப்பதில் 

இன்னொரு வள்ளல் 

கடந்த காலத்தில் 

வெள்ளம் பாதித்த பகுதியில் 

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு

கேமரா வெளிச்சம் காட்டாமல் இவர் செய்த உதவிகள்  ஏராளம் . 

நடிகர் சங்க

கடனை அடைத்து 

முதுபெரும் 

அரசியல்வாதிகளின்

வயிற்றில் புளியை

கரைத்தவர்.

பொய்யே பேசாமல்

உண்மையை தைரியமாக பேசி

எதிர்கட்சி தலைவராக

அரியணை ஏறிய கள்ளழகர்

உங்களின் உடலுக்குத் தான்

மறைவு.. என்றும்

வாழ்வீர்கள் எங்களின் 

நெஞ்சங்களில் அன்பு கேப்டனாக..

ஆழ்ந்த இரங்கல்கள்

யார் முன்னிலை தந்தையா தனஐயனஆ..

அன்பு என்பது ஓர் ஆண் பெண்ணின் உடலில் மீது கொள்ளவதல்ல.

வாலிப்பருவத்தை அடையும் முன்னரே சில ஆபாச படங்களை பார்த்து விட்டு, உடன் பயிலும் மாணவியின் மனதில் ஆபாசத்தை காதல் என்ற போர்வையில் பேசுவதல்ல காதல்.

காதல் என்பதில் உடல் என்ற ஓர் விஷயமே இருப்பதில்லை. காதல் என்பது இரே ஆன்மாக்களின் இணைப்பு.

புரியும் படி சொல்லுவதாக இருந்தால் ஒருவருக்கு வலி ஏற்படும் என்பதை அறிந்து அவருக்கு எந்த விதமான கஷ்டமும் வந்துவிடக்கூடாது என உதவி செய்வது.

எப்படி தந்தை தன் கையில் காசு இல்லாவிட்டாலும் தனது அன்பான செல்ல மகள் ஆசைபட்ட மிட்டாய்க்கு கடன் சொல்லி வாங்கி, அவளின் முகத்தில் சந்தோஷத்தை காண நினைக்கிறாரோ அதைப் போல்.

தன் தந்தையிடம் காசு இல்லை என்பதை அறிந்து எனக்கு இதெல்லாம் வேண்டாம் அப்பா..வா நம்ம வீட்டுக்கு போகலாம் அம்மா காத்துகிட்டு இருப்பா என்பாளே அது போன்றதே காதல்.

ஆனால் இங்கே சிலர் காதல் என்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவே முயல்கின்றனர். சிலர் அதில் வென்றும் விடுகின்றனர்.

அப்படி ஏமாற்றி திருமணம் செய்தவர்கள்,ஊரை ஏமாற்றி விடலாம். தனக்கு பிறந்த குழந்தைகளிடம் அவரின் ஏமாற்று வேலை நடக்காது.

தென்னையின் குருத்தில் தென்னையே விளையும் என்று ஓர் இறைநூலில் சொன்னதை போல். நல்லவனின் குழந்தை நல்லவனாக பிறக்கிறது நல்லவனாக வளர்கிறது.

பொய் பித்தலாட்டம் செய்து உலகை ஏமாற்றி வாழ்பவனின் குழந்தையும் அவனை விட பல மடங்கு வளர்கிறது.


இதில் இறைவன் நடத்தும் வேடிக்கை என்னவென்றால் ஊரை ஏமாற்றி சம்பாதித்தவனின் குழந்தைகள். வெளியே சென்று திருடாமல் தன்னை பெற்றவரிடமே திருடுவது தான்.

ஏனெனில் இறைவன் மிகப் பெரியவன்.

கோபத்தில் பேசும் மனிதர்கள் உண்மையாக வாழ்கிறார்கள்.தந்தை மகனிடம் கோபம் கொள்வதே நீயாவது என்னை மாதிரி வந்திடாம நல்லபடியா பிழைக்க கத்துக்கோடா என்பதால் தான்

ஆனால் இதை புரிந்து கொள்ள இயலாமல் தான் பல வீடுகளில் கருத்து வேறுபாடு வருகிறது.

அவரும்  கூட இன்னொரு இடத்தில் இதே விஷயத்தை தான் சொல்கிறார் என் பையனுக்கு ஏமாத்தவே தெரியலை அவனும் என்னை மாதிரியே ரொம்ப நல்லவனா இருக்கானே.. ஆனாலும் பாழாய் போன ஈகோ, மகனை பலர் முன்னிலையில் திட்டி அவன் ஓண்ணும் என்னை விட பெரியவனில்லை என்பதாக முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.


இந்த இருவரின் இடையே கிடந்து தந்தை தனையன் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யவும் முடியாமல், தீர்வு சொல்லவும் தெரியாமல் தங்குகிறாள் தாய்.

இருவரின் மனதிலும் ஓரே சிந்தைனை தான் இருவரில் யார் முன்னிலை.

அனாதையின் மனநிலை

 அனாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தங்களின் சிறு வயதிலேயே ஓர் மாபெரும் மனமுதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.


எத்தனை ஊடகங்கள் அப்படியெல்லாம் இல்லை அவங்களை நாங்க நல்லா பார்த்துகிட்டு தான் இருக்கோம் என்று சொன்னாலும் யதார்த்தமான உண்மை கசகக்கவே செய்கிறது.


அந்த இல்லத்தில் வாழும் குழந்தைகளை தன் வயிற்றில் பிறக்கா விட்டாலும் தன்னுடைய குழந்தைக்கு எவ்வளவு செல்லம் கொடுப்பிர்களோ அப்படித்தான் அவர்களும் வளர்த்தார்கள் இன்றும் வளர்க்கிறார்கள்.


எனவே தான் அந்த இல்லத்திற்கு மென்மேலும் பெற்றோரை இழந்த சில குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வந்து சேர்ந்து விட்டு போகின்றனர்.

ஆயினும் அந்த செல்லக் குழந்தைகள் அந்த ஆசிரமத்தில் மட்டும் வாழவில்லையே.வெளி உலகிற்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அப்படி பேருந்தில் செல்லும் போது, தாங்கள் ஆசிரமத்திற்கு வெளியே இருக்கிறோம் என்பதையும் மறந்து அந்த குழந்தைகள் சிரித்து சந்தோஷமாக பேசி சிரித்தனர் 


அப்போது அந்த பேருந்தில் சென்று கொண்டிருந்த இருவர், அந்த குழந்தைகளின் காது படவே பேசினர்.

டேய் இது அந்த ஆசிரமத்து குழந்தைகள், கண்டிச்சு வளர்த்தா தானே பெறுப்பு வரும்..அதை ஆமோதிப்பது போல் ஆமாம் மச்சான் எல்லோருக்கும் நம்மை மாதிரி பொறுப்பு இருக்குமா...என பேசினர் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்குமே அதை ஆமோதிப்பது போல் அந்த குழந்தைகளின் மீது தங்களின் பார்வையால் வெறுப்பை உழிந்தனர்.


தாங்கள் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல், குழந்தைகள் அமைதியாயினர். தங்களின் பள்ளிக்கூடம் வரும் வரை எந்த குழந்தைகளும் பேச முற்பட வில்லை.

ஆனால் இவர்களை விமர்சனம் செய்த இருவர் தங்களின் உற்றார் உறவினர் மற்றும் ஜாதி.. மத...அரசியல் வெறியில் பேசினர்.அவை பேருந்தில் இருந்த அனைழருமே உற்று கவனிதத்து.ச்சே என்ன ஓர் அறிவாளி வாழந்தா இவங்களை மாதிரி வாழணும்.எவ்வளவு சமூக பொறுப்பு என பெருமிதப்பட்டனர்.

பள்ளிக்கூட பேருந்து நிலையம் வந்தவுடன் எல்லா குழந்தைகளும் ஏனோ பாவத்தின் கூடத்திற்கு செல்வது போல் கண்ணில் வந்த கண்ணீரையும் மனதில் ஏற்பட்ட அபரிமிதமான உணர்ச்சி பெருக்கோடும் இறங்கி சென்றனர்.

தங்களின் மனதை இன்னொரு காயப்படுத்திவிட்டார் என்பதை கூட யாரிடமும் சொல்லாமல் சென்ற அப்பாவி குழந்தைகள்.


அதில் ஓர் ஓர் குழந்தை பஸ் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் இரு கரம் கூப்பி, தங்களை கேலி செய்த மனிதரை நோக்கி கைகூப்பி வணங்கியது.


தயவுசெய்து இனிமேலாவது எங்களை காயப்படுத்தாதீங்க. எங்களால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரமா பார்த்துக்கிறேன் என்பது போல் அந்த பார்வை இருந்தது.

அந்த மனிதனோ ஏளனமாக ஓர் புழுவை போல் அந்த குழந்தையை கேவலமாக பார்த்தான்.


மழை வெள்ளம்

 முந்தி எல்லாம் உங்க அக்கா அதான் என் அருமை பொண்டாட்டி  மீன் குழம்பு வைக்கணும்ன்னு சொல்லி என்னோட சம்பளத்தை பாதியா காலி பண்ணுவா..ஆனா இப்போ பிரச்சினையே இல்லை.


என்னாச்சு மச்சான் மீன் சாப்பிடுறதை நிறுத்திட்டீங்களா..


அட நீ வேற மச்சான்.இப்போ எல்லாம் அவளே  போயி இறா..சுறா நெத்திலி எல்லாம் பிடிச்சுட்டு வந்துடுவா..


ஏது மச்சான், நீ நினைச்ச மாதிரியே E.C.R-ல பங்களா வாங்கிட்டீங்களா.


என்ன..நீ வேற மச்சான்  இப்போ எங்க வீடு கடலுக்குள்ள இருக்கிற மாதிரி தான் இருக்கு 😭😭😭😭




நெல்லை மழை

 நேற்று நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து.

வழக்கத்திற்கு அதிகமான மழை பதிவு 62 செ.மீ என பதிவாகியுள்ளது 

தவளையும் கடவுளும்

 ஓர் காலத்தில் கடவுள் மட்டும் தான் இருந்த  உலகத்தில் இருந்தார் அப்போது எல்லாம் கரெண்ட் வசதி கிடையாது ஏன் செல்போன் வாட்ஸ்அப் இமெயில் இப்படி எதுவுமே இல்லாது இருந்துச்சு. இது காணாதுன்னு உலகமே இருட்டாக தான் இருந்துச்சு.


ரொம்ப நாளா தனிமையில் அமைதியா வாழ்ந்த கடவுள் மனசுல ஓர் எண்ணம் ஏற்பட்டது.நாம ஏன் இப்படி தனியாவே இருக்கோம் என்று யோசிச்ச கடவுளுக்கு ஓவ்வொரு நிமிஷமும் ஓவ்வொரு யோசனை தோணுச்சு


தனிமையிலேயே வாழ்ந்த கடவுளுக்கு வாழ்க்கை அலுப்பாக மாறியது..ஏன்னடா இது வாழ்க்கை நமக்கு என்று யாருமே இல்லையே என யோசித்த கடவுள் கடைசியில் ஏதாவது புதுசா பண்ண ஆசைபட்டு உலகத்தை படைக்க தொடங்கினாரூ.

தனிமையிலேயே பல யுகங்களாக கஷ்டபட்டவரு, பிரபஞ்சத்தை படைக்கும் போது ஓவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சாரூ.


எப்படின்னா பல ஆண்டுகள் சொந்த வீடே இல்லாமல் வாடகை வீட்டில் இருந்தவன் எப்படி சிரத்தையா வீடு கட்டுவானோ அப்படி. 


அட பிரபஞ்சத்தை படைக்கிறதுக்கு முன்னாடி அவர் எங்கே இருந்தாரூன்னு உங்களுக்கு வரும் அதே சந்தேகம் எனக்கும் வந்துசசு..ஆனா இந்த கேள்விக்கு இதுவரைக்கும் எந்த விடையும் தெரியவில்லை.. கோழி முட்டை இதில் எது முதலில் வந்ததது என்பது போலவே...நீங்க மேற்கொண்டு கதையை படிங்க


பிரபஞ்சத்தில் ஓவ்வொரு கோள்கள் நட்சத்திரம் சூரியன் இப்படி படைச்ச இறைவன் தான் வசிப்பதற்க்காக ஓர் உலகத்தை படைசசாரூ.


அட அந்த உலகம் தான் நாம இப்போ வாழுற பூமி. ஓர் நாள் மண்ணை படைச்ச கடவுள் அதில் கூட தன்னுடைய கலை நயத்தை காடடினாரூ. செம்மண், களிமண் ஆற்றுமணல் கற்கள் பாறை கற்கள் படிம கற்கள்.கடினமான பாறைகள் இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

பிறகு மிருகங்கள் பறவை மனுஷன் என்று எல்லாத்தையும் ஜோடி ஜோடியா படைச்சாரூ.


இப்படி எல்லா உயிர்களையும் படைச்ச கடவுளுக்கு தன்னால் படைக்க பட்ட உயிர்கள் எல்லாம் ஜோடி ஜோடியா சந்தோஷமா இருப்பதை பார்த்து மனசு கஷ்டம் வந்துடுச்சு.. அந்த நேரத்தில் தன்னோட கையில் ஓர் உயிரை படைக்கிறோம் என்பதையும் மறந்து விரக்தியா மன கஷ்டத்தோட வேண்டா வெறுப்பா எரிச்சலா படைத்தார்.

திடீரென அவருக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுது.. அடக்கடவுளே என்ன காரியம் செஞ்சுட்டேன் என்று தன் கையில் இருந்த அந்த பொருளை அப்படியே தரையில் விட்டார். 


அது தவளையாக உருமாறி இருந்துச்சு. உலகத்துலேயே மிகவும் அவலட்சணமான ஓர் பொருளை தான் படைத்து விட்டோமே என்ற மனக்கவலை கடவுளுக்கு வந்துச்சு.



எல்லா உயிரை படைக்கும் போது தைரியமா இருந்த கடவுள் தவளையை படைக்கும் போது மனக்கஷ்டமும் பயத்துடனும் படைச்சதால் தவளையும் மிகவும் பயந்த சுபாவத்துடன்  இருந்தது.



புதிதாக படைக்க பட்ட தவளைக்கு தான் தான் அசிங்கமான உருவத்துடன் படைக்க பட்டு இருக்கிறோம் என்பது கூட தெரியாது.

 அது  கடவுள் நம்மை தன்னுடைய கரத்தால் அல்லவா நம்மை படைச்சு  இருக்கிறார்.


நீங்க படைச்ச இந்த அழகான திறமைகள் நிறைந்த இந்த உலகத்தில் என்னையும் படைச்சதுக்கு ரொம்ப நன்றி.. ரொம்ப நன்றி.. என்று ஓவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லி ரொம்பவே சந்தோஷமா வாழ்ந்துச்சு 


தான் எவ்வளவு பெரிய தவறு பண்ணிட்டோம் ஆனால் அது இந்த தவளைக்கு தெரியவும் இல்லை புரியவும் இல்லையே என்று யோசித்து பார்த்து பிறகு தான் அவருக்கு ஓர் விஷயம் புரிஞ்சுது. நாம படைச்ச உயிர்கள் எல்லாம் ஜோடி ஜோடியா மகிழ்ச்சியா வாழுதே என்று காமத்தின் வயப்பட்டதால் நமக்கு அறிவு மழுங்கிப் போனது. அதனால் தவளைக்கு புத்தி என்ற ஓன்றை வைக்க மறந்துட்டோம் என்பதை உணர்ந்தார்.



ஆனால் தவளையோ அந்த வித கவலையும் இல்லாமல் துள்ளி துள்ளி குதிச்சு விளையாடிக்கிட்டு இந்த உலகத்துலேயே தான் ஒருத்தர் தான் மிகவும் சிறந்த படைப்பு என்று குதூகலமாக சென்றது.


கடவுள் நினைச்சாரூ...சரி ஆனது ஆகிப்போச்சு.தவளைக்கு தான் புத்தியே இல்லையே அதுவோ சரியான தத்தி. நாம இதுக்கிட்ட எதுவுமே சொல்லாம போய்விடுவோம் என்று போயிட்டாரூ ( இதனால் தான் மரமண்டை என்பது போன்ற வார்த்தை தத்தி. விஷயமே தெரியாதவனை தவளையின் பட்ட பெயரான தத்தி என்று அழைப்பது மக்களின் வழக்கமாச்சு)


தவளையும் கடவுளை சில நிமிஷத்துலையே மறந்து போயி வாழந்து வந்துச்சு.


முதல் நாளில் தவளை கடவுளால் படைக்க பட்ட நாய் கிட்ட போய். என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க நானும் உங்க கூட சேர்ந்து மகிழ்ச்சியா வாழணும் என்றது.


ச் சனியனே நீ தூரப்போ. உன் உடம்பும் நீயும் உன் உடம்பும், உன்னை பார்த்தாலே கண்றாவியா இருக்கு. நாங்க உங்க கூட எல்லாம் விளையாட முடியாது. போ..போ.. என்று அடித்து விரட்டியது.


தினமும் நிலத்துல வாழும் ஓவ்வொரு உயிர்களிடமும் போய் கேட்டுச்சு. ஆனா எந்த உயிர்களும் அதை தன்னோட சேரூஅதுக்கவே இல்லை.


பாரு நாங்க எவ்வளவு அழகாக மினுக்கா இருக்கிறோம் நீயும் தான் இருக்கியே..

பானை வயிறு.மூஞ்சிய பாரு சப்பையா.கண் வேற கோழி முட்டை மாதிரி. 


முதல்ல உன் மூஞ்சி எப்படி இருக்குன்னு போய் பாரூ என கேலி செய்தது.


நிலத்துல தான் நம்மை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. நீரில் வாழும் உயிர்களிடம் சென்று கேட்டுப் பார்ப்போம்.


கடவுள் நம்மை ஏரிக்கரையில் இருக்கும் போது தானே படைச்சாரூ.ஓரு வேளை அந்த இடம் தான் நமக்கானது போல என்று நீர் நிலைக்கு சென்றது.


அங்கே இருந்த மீன் நண்டு பாம்பு முதலை இப்படி எல்லா உயிர்களிடமும் கேட்டுப் பார்த்துச்சு. ஆனா யாருமே அதை தன்னோட சேர்த்துக்காம ஒதுங்கியே வைச்சாங்க.


என்னடா இது நம்மை யாருமே சேர்த்துக் மாட்டேன் என்று சொல்லுறாங்களே என நினைச்சு வருத்தப்பட்டுச்ச..

கடவுளால் படைக்கப்பட்ட ஓவ்வொரு மிருகமும் எப்படியெல்லாம் வாழுறாங்க.ஏன் எதற்காக தன்னை யாரும் அவங்க கூட சேர்த்துக்கொள்ள வில்லை என்று இப்படி எல்லோரும் வெறுத்து ஓதுக்குறாங்க என யோசிக்க ஆரம்பிச்சுது.


தவளை தனக்கு அறிவு இல்லை என்பதை கூட சிந்திக்க தெரியாம யோசிக்க ஆரம்பிச்சுது. 



காட்டிற்கு ராஜாவாக வாழும் சிங்கம் மாசத்துல ஓர் நாள் தான் வேட்டையாடி சாப்பிடுது. மத்த நாள் எல்லாம் உயரமான இடத்துல ஏறி உட்கார்ந்து தான் நான் காட்டுக்கு ராஜா என்று கர்ஜனை பண்ணுது.


 ஆனால் பத்து நாட்கள் பசி தாங்குற மாதிரி ஓரே நாளில் சாப்பிடுது புலி, சிறுத்தை கரடி கூட இப்படித்தான்.



நரி ஓநாய் மாதிரி விலங்குகளுக்கு வேட்டையாட தெரியாத காரணமா..புலி சிங்கம் சிறுத்தை போன்ற மிருகம் வேட்டையாடிய உணவை கூட்டமா போய் பிடுங்கி தின்று விட்டு ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் இருந்தன.


பசு ஆடு மாடு போன்ற விலங்குகளோ தினமும் இரை தேடி தின்றது. பல நாட்கள் பட்டினி கிடந்து ஓரே ஓர் நாள் சாப்பிடும் விலங்குகள் சாப்பிட்டு முடிக்கும் வரையாவது ஓற்றுமையா இருந்துச்சு.ஆனா இவர்களுக்கோ நிறைய புல் இருந்தாலும் தன் பக்கத்தில் வந்து தன் இனத்தை சார்ந்த இன்னொரு விலங்கு வந்தவுடன் முட்டி தள்ளி நீ தூரப்போ என சண்டையிட்டது.

  

தவளையோ எந்த முடிவும் எடுக்க இயலாமல் தவிச்சது


இப்படி யோசித்து கொண்டே இருந்தாலும்.கடவுள் தனக்கு ஓரவஞ்சனை செய்து விட்டார் என்பது கூட புரியவில்லை.



ஓர் நாள் தவளையின் இடைஞ்சல் பிடிக்காத ஓர் உயிர் கோபத்தில் கத்தியது ச்சீ தூரப்போ.போயி ஆறு குளத்துல விழுந்து சாவு அப்போது தான் உனக்கு நல்ல புத்தி வரும் என்று நல்லா திட்டி விட்டது.


யார் எது சொன்னாலும் கேட்டு அது படியே செய்யுற தவளை.

நம்ம தவளைக்கு தான் அறிவே கிடையாதே அதுவும் அதே போல் போய் குளத்துல விழுந்துச்சு.. ஆனால் அதனால் தண்ணீரில் முழ்க முடியலை பல நாட்களாக அது தண்ணீரில் கிடந்தாலும் பசி தாகம் இல்லாம உயிரோட இருந்துச்சு.


குளத்துல தண்ணீர் குடிக்க வந்த பசு தண்ணீரில் விழந்து உயிருக்கு போராடுச்சு. உடனே தவளை கடவுளுக்கு நன்றி சொல்லிய படி அது பக்கமா போனவுடனே பசுமாடு ச்சே இந்த அருவருப்பு பிடிச்ச தவளை நம்ம பக்கம் வருது என்று விலகி போக முயற்சி செய்தது. இப்படி செய்த முயற்சி அதை பிழைக்க வைத்து கரையேறியது 


அட கடவுளே, நிறைய உயிர்கள் நீச்சல் தெரியாம தண்ணீரில் முழ்குது.நமக்கு நீச்சல் தெரியாம தண்ணீரில் விழுந்தாலும் சாக விடாம காப்பாதுற அளவுக்கு இறைவன் நம்மை படைச்சு இருக்காரே என்று மீண்டும் அதற்கு சந்தோஷம் வந்துடுச்சு.



மீண்டும் தன்னை யாரும் அவங்க கூட சேர்த்து கொள்ளவில்லை என்றாலும் தவளை சந்தோஷமா குதிச்சு குதிச்சு விளையாடிக் கொண்டு தான் இருந்துச்சு.


இதை கண்ட எல்லா மிருகமும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ச்சே இருந்தாலும் கடவுள் ரொம்ப மோசமான ஆளு தான்.  இவ்வளவு அழகா அறிவா படைச்ச கடவுள் நம்மை படைச்ச கடவுள் நம்மை என்றைக்காவது ஓரு நாளாவது நிம்மதியா வாழ விட்டானா சொல்லு ஓவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழுறோம்.

ஆனா அந்த தத்திக்கு எதுவுமே தெரியாத கூமுட்டை எவ்வளவு சந்தோஷமா வாழுது..என்றாவது ஓர் நாள் கடவுள் நம்ம கண்முன்னாடி வராமலா போயிடுவாரூ. அப்போ மனுஷனை நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும் என்று முடி செய்து கொண்டன. மனிதர்கள் கூட கடவுளை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க. கடவுள் என்பவர் கொசு மாதிரி அவரை ஓழிக்கணும் என்று பேச ஆரம்பிச்சாங்க.


இப்படி தன்னால் ஆசையாகவும் அன்பாகவும் பார்த்து பார்த்து உருவாக்கிய உயிர்கள் தனக்கு நன்றி சொல்லா விட்டாலும் பரவாயில்லை இப்படி எல்லோரும் நம்மை குறை சொல்லுறாங்களே என வருத்தப்படார்.

அப்படி வருத்தப்பட்டு சிந்திய கண்ணீர் மழையா வெள்ளமா பெருக்கெடுத்து ஓடி ஊரே வெளத்துல முழ்கியது. 


ஊரெல்லாம் தண்ணீரில் முழ்கியதால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால் தவளையாலீ தண்ணீரில் முழுவதும் முழ்க முடியாத காரணமாக தண்ணீரில் மிதந்தது.


அப்போது கூட தவளை சந்தோஷமாக கடவுளை நன்றி சொல்லி இரவெல்லாம் கததியது. எல்லா உயிர்களும் தவளைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.. இந்த மழை வெள்ளத்துலேயும் எப்படியெல்லாம் கத்துது பாரூ.. இவையெல்லாம் நாம இனி பக்கத்துல சேர்த்துக்கவே கூடாது என முடிவெடுத்தது.


ச்சே நாம அவலட்சணமான படைச்ச உயிர் நம்மை நினைச்சு இவ்வளவு நன்றியா இருக்கே என்று கடவுள்.   அதன் முன்னால் தோன்றி ஏய் தவளையே நான் ஏதோ ஓர் தவறான சிந்தையில் உன்னை படைச்சுட்டேன். 



அதான்  கடவுள் தவளைக்கு அறிவை வைக்க மறந்துட்டாரே.

விஷ்ணு துர்க்கையே

எல்லாவற்றையும்

உதறி விட்டு

உண்மை பாசம் தேடி

உன்மத்தனாய்

ஊமையாய் ஊர் 

சுற்றிய அனைவருக்கும் 

சுதந்திர காற்றை

சுவாசிக்க வைத்து

தலைநிமிர்ந்து

நிற்கும் திராணியை

தேவைக்கு மீறி

வாரி வழங்கிட்டு

கற்சிலையென்றே

காட்சி கொடுக்கும்

வீரத்தின் விளைநிலமான

விஷ்ணு துர்க்கையே

தூரத்தில் நானிருந்தாலும்

துளி தண்ணீர் கண்ணில்

துளிர்க்கும் முன்னே

துடியாய் வந்தென்னை

காக்கும் தேவதையே.

வீழாமல் வாழும் வசதிதந்தவளே

பொருளை வெறுத்தவனின்

கைகளில் பொருளாளூம்

சக்தியை தந்தவளே

உன்னை தொழுகின்ற

தொழுகின்றேன் தாயே.

கண்ணிமை போல்

காத்திடும் பாளைநகரத்தில்

பாங்குடனே வீற்றிருக்கும்

விஷ்ணு துர்க்கையே

நீ தந்த இன்பத்திற்கு

ஈடு இணை ஏதுமுண்டோ.



Financial relief # Save chennai financially soon

Financial Awarness Article

Hi to all,


We are all speaking about 4,000 crore. There is also one more very critical situation, which most of the chennai peoples are going to face in future.

Due to rain Chennai was flooded and rain level was increased upto 1st floor in some areas.

In so many places rain has shown its bad face to town, still process are going on to get normal life. Each and everyone are facing same level of emotional turmoil and health issues.

Peoples who were affected in rain are not millionaires. They belongs to normal financial background.

Everyone in chennai has purchased household things. Everymonth loan has to be paid in proper time otherwise penal charges will be deducted from their respective accounts.


 All house hold products lost are valuale to min 2 lakhs and above. How Rs6,000 will be sufficient as relif. Products are bought in credit, eventhough they are lost. Financial instituations will be consider this natural calamaties. All financial MNC are using system generated report only. Once loan date occures, system will automatically levy penal charges, for nonpayment of loans.

All Chennai people are not govt employees, they are paid only for working days.

Most of the peoples are going to get their upcoming months salary less than previous month.

But their living cost for this month has shoot up more than 2 months of expenses. 

Central Govt, State Govt & RBI has to take proper actions for recovery of financial burden. 

Yes once again all credit bill dues has to be postponed for atlest 6 months. We are not asking any financial instituations to forgo their loans. Just asking them to consider and provide financial relief for a time being.

We humbly request all financial instituations to consider their customers personal and financial issues.

This has to be takes as very serious issues and policy has to be ruled out. Because overall Chennai has to recovery to normal as soon as possible.  

Their personal emotions, health 7 financial needs has to be taken care very carefully. 

If govt has not taken this issue very serious them, these emotions will be reflected in upcoming elections as vote.



சாமி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா குழந்தைகள் எத்தனை

இந்த உலகத்துல நீங்க ஆண் /பெண் எவ்வளவு தான் பெரிய புத்திசாலியா இருந்தாலும் மத்தவங்க கவலை.. ஏன் அந்த பையனுக்கு பெண்ணுக்கு கல்யாணம் ஆகலை.

வேற ஏதாவது ஓர் சங்கதியா இருக்குமோ.. இருக்கும் இருக்கு, இந்த உலகத்துல நல்லவனா நடிக்கிற முக்கால்வாசி பேர் அயோக்கிய பயலுக தான் என்று சால்ஜாப்பு வேறு.

உலகம் நீங்க நல்லவராக வாழும் ஓவ்வொரு நாளும் உங்களை உரசிப் பார்க்கும்.

ஆனால் எல்லா அயோக்கியதனமும் செய்தவனை..அட அவரை மாதிரி ஆளு உண்டா என்று வானளாவ புகழும்.

உலகம் இப்படித்தான்.


ஓர் வேளை கல்யாணம் செய்யாமல் உலக நன்மைக்காக பிறவியெடுத்த மக்களுடன் மக்களாக வாழ்ந்த அந்த அந்த கடவுளே இன்றைய தினம்.உயிர்பெற்று வந்தால் கூட.

கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்‌ அவருக்கு உலகம் கேட்கும் முதல் கேள்வி.

சாமி உங்க காலத்துல தான் ஓருத்தன் பத்து பொண்டாட்டி கட்டினாலும் தவறு இல்லையே.பிறகு ஏன் நீங்க கல்யாணமே பண்ணாம இருந்துட்டீங்க. அதுசரி இனியாவது காலாகாலத்துல கல்யாணம் பண்ணுங்க. எங்க சொந்தகார பொண்ணு ஓண்ணு இருக்கு . அவங்க அப்பன் பெரிய குடிகாரன் காசு எதுவும் பெருசா சேர்த்து வைக்கலை.. நீங்க சம்மதம் சொன்னா நான் வேணா போய் உங்களுக்காக பேசட்டுமா என்று கூட கேட்கும்.

ஏதோ கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருப்பது போலவும். கல்யாணம் ஆகாதவன் கஷ்டப்படுவது போலவும் உலகம் பூச்சாண்டி வேலை காட்டுகிறது.

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் கோவிலுக்கு போனால் படிப்பு வந்துடும் வேலை கிடைச்சுடும் கல்யாணம் ஆகிவிடும் என்று தான் சொல்லி கேட்டு இருப்போம்.


சென்ற வாரம் ஓர் கோவிலுக்கு போன இடத்தில் அந்த மனிதர் சொன்னார்.உங்க வீட்டில் வயதானவங்க படுத்த படுக்கையில் இல்லாம நிம்மதியா போய் சேர இங்கே பரிகாரம் பண்ணுறோம்  என்று.

இதை கேட்ட பிறகு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் இது கிராமத்து கோவில் உங்களைப் வருபவர்கள் எதாவது செய்தால் தான் உண்டு என உண்மையை சொல்லுங்கள்.

அதை விடுத்து, கடவுளை ஏதோ கமிஷன் வாங்கி விட்டு வேலையை முடித்து கொடுக்கும் வியாபாரி போல் சித்தரிக்க வேண்டாம்.

இந்த நடைமுறை எல்லா மதங்களிலும் இருக்கிறது என்பது பிற மதத்தை தழுவ நினைத்து அங்கே சென்று அங்கேயும் இதே கூத்து நடப்பதை பார்த்தால் புரிகிறது.

கடவுளின் அருகில் இருந்தும் அவருக்கு காசு ஆசை விடவில்லை என்பது 




கடவுள் என்பவர் என்ன  கமிஷன் கடை ஏஜெண்ட் போல் பேசிய அந்த மனிதர்.



உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா குழந்தைகள் எத்தனை என்பதை பற்றி தான் 

கத்தி என்னும் ஆயுதம்

 கசாப்பு கடைக்காரர்.. மருத்துவர். கோபக்காரன்.சிறு குழந்தை.விளையாட்டு வீரன்.. இவர் எல்லோரின் கையிலும் சில நேரங்களில் கத்தி என்ற ஆயுதம் இருக்கும். ஆனால் அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது.

இதைப் போலவே தான் சில இடங்களில் சில நேரங்களில் திறமையான மனிதர்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே மதிப்பு மரியாதை கிடைக்கும்.

உன் மண்டையில் களிமண் தான் இருக்கு எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு மண்டையில் எதுவுமே ஏறாது என கேலி செய்து பிறரை மட்டம் தட்டுவது எல்லா இடத்திலும் நடக்கும் ஓர் சாதாரண நிகழ்வு தான்.

ஆனால் ஓர் செயலை தன்னால் இயன்றவரை முயற்சி செய்து சிறப்பாக செய்து முடித்த பிறகும் திட்டுவதும் ஏளனம் பேசுவதும் இங்கே பலரின் இயல்பு.


திறமையான மனிதர்களே சக மனிதரை திறமையானவராக மதிப்பார்கள்.

ஏன்னெனில் அவர்களுக்கு தெரியும் நம்மை போலவே தான் இவரும் ஓர் திறமைசாலி.ஏனோ என் நண்பராக இருப்பதால் காலம் அவரையும் சோதித்து பார்க்கிறது. அவனும் கூட என்னை போல் வெற்றி பெறவே முயல்கிறான் என்பதை உணர்ந்த மனிதர்கள் அவர்கள் 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...