அனாதையின் மனநிலை

 அனாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தங்களின் சிறு வயதிலேயே ஓர் மாபெரும் மனமுதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.


எத்தனை ஊடகங்கள் அப்படியெல்லாம் இல்லை அவங்களை நாங்க நல்லா பார்த்துகிட்டு தான் இருக்கோம் என்று சொன்னாலும் யதார்த்தமான உண்மை கசகக்கவே செய்கிறது.


அந்த இல்லத்தில் வாழும் குழந்தைகளை தன் வயிற்றில் பிறக்கா விட்டாலும் தன்னுடைய குழந்தைக்கு எவ்வளவு செல்லம் கொடுப்பிர்களோ அப்படித்தான் அவர்களும் வளர்த்தார்கள் இன்றும் வளர்க்கிறார்கள்.


எனவே தான் அந்த இல்லத்திற்கு மென்மேலும் பெற்றோரை இழந்த சில குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வந்து சேர்ந்து விட்டு போகின்றனர்.

ஆயினும் அந்த செல்லக் குழந்தைகள் அந்த ஆசிரமத்தில் மட்டும் வாழவில்லையே.வெளி உலகிற்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அப்படி பேருந்தில் செல்லும் போது, தாங்கள் ஆசிரமத்திற்கு வெளியே இருக்கிறோம் என்பதையும் மறந்து அந்த குழந்தைகள் சிரித்து சந்தோஷமாக பேசி சிரித்தனர் 


அப்போது அந்த பேருந்தில் சென்று கொண்டிருந்த இருவர், அந்த குழந்தைகளின் காது படவே பேசினர்.

டேய் இது அந்த ஆசிரமத்து குழந்தைகள், கண்டிச்சு வளர்த்தா தானே பெறுப்பு வரும்..அதை ஆமோதிப்பது போல் ஆமாம் மச்சான் எல்லோருக்கும் நம்மை மாதிரி பொறுப்பு இருக்குமா...என பேசினர் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்குமே அதை ஆமோதிப்பது போல் அந்த குழந்தைகளின் மீது தங்களின் பார்வையால் வெறுப்பை உழிந்தனர்.


தாங்கள் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல், குழந்தைகள் அமைதியாயினர். தங்களின் பள்ளிக்கூடம் வரும் வரை எந்த குழந்தைகளும் பேச முற்பட வில்லை.

ஆனால் இவர்களை விமர்சனம் செய்த இருவர் தங்களின் உற்றார் உறவினர் மற்றும் ஜாதி.. மத...அரசியல் வெறியில் பேசினர்.அவை பேருந்தில் இருந்த அனைழருமே உற்று கவனிதத்து.ச்சே என்ன ஓர் அறிவாளி வாழந்தா இவங்களை மாதிரி வாழணும்.எவ்வளவு சமூக பொறுப்பு என பெருமிதப்பட்டனர்.

பள்ளிக்கூட பேருந்து நிலையம் வந்தவுடன் எல்லா குழந்தைகளும் ஏனோ பாவத்தின் கூடத்திற்கு செல்வது போல் கண்ணில் வந்த கண்ணீரையும் மனதில் ஏற்பட்ட அபரிமிதமான உணர்ச்சி பெருக்கோடும் இறங்கி சென்றனர்.

தங்களின் மனதை இன்னொரு காயப்படுத்திவிட்டார் என்பதை கூட யாரிடமும் சொல்லாமல் சென்ற அப்பாவி குழந்தைகள்.


அதில் ஓர் ஓர் குழந்தை பஸ் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் இரு கரம் கூப்பி, தங்களை கேலி செய்த மனிதரை நோக்கி கைகூப்பி வணங்கியது.


தயவுசெய்து இனிமேலாவது எங்களை காயப்படுத்தாதீங்க. எங்களால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரமா பார்த்துக்கிறேன் என்பது போல் அந்த பார்வை இருந்தது.

அந்த மனிதனோ ஏளனமாக ஓர் புழுவை போல் அந்த குழந்தையை கேவலமாக பார்த்தான்.


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...