யானை இரயில்
இரண்டுக்கும்
பல ஒற்றுமைகள்
ஏனோ அவற்றை
கண்டுகொள்ள நேரமின்றி
இவற்றின் பயனை மட்டுமே
அனுபவிக்கும் மனிதரில்
நானும் ஒருவன்... யானையும் ரயிலும்
தனக்கான பாதையை
மாற்றுவதே இல்லை.. ஆனால்
மனிதன் அவசர ஆசைக்கு
அவற்றின் பாதையில்
குறுக்கே செல்லும் போதே
பெட்டி செய்திகளில் இவை...
யானையின் பிளிறல்...
நான் வருகிறேன் வலசை பாதையை மறிக்காதே என்கிறது..
ரயிலில் பிளிறல் இயந்திரமாய்
வருகிறேன் தள்ளி நில்லுங்கள்
என்றே எச்சரிக்கை செய்கிறது..
யானைகளால் காடு வளம் பெறுகிறது
ரயிலின் சேவையால் நாடு
நலம் பெறுகிறது.. மொத்தத்தில்
சொன்னால் யானை ரயில்
இரண்டின் பிளிறல் சத்தமும்..
நன்மையே செய்கிறது அவர்களின் பாதையில்
சுயநல மனிதர்களாய் நாம் குறுக்கிடாத வரை
யானையும் ரயிலும்
No comments:
Post a Comment