எத்தனையோ இடைஞ்சல்களையும் தாண்டித்தான் அவனின் அம்மா அவனுக்கு அனுமதி கொடுத்தால்..நீ போய் பாருங்க பக்கத்து ஊரில் வேலை தந்தா மட்டும் தான் நீ அந்த கம்பெனியில் சேரணும்..இல்வாட்டி எங்க கூடவே இருந்துகிட்டே கிடைக்கிற வேலையை பாரு போதும்..
நீ சம்பாதிச்சு வந்து கொட்டணும் என்று ஓண்ணுமீ தலையெழுத்து இல்லை புரியுதா.சரிம்மா என்றே ஊருக்கு கிளம்பினான் காலை நேரத்து முதல் பேருந்தில் ஏறி அமர்ந்தவனுக்கு மனதிலும் சிந்தனையிலும் ஆயிரம் ஆயிரம் சஞ்சலமும் சந்தேகமும்.
நமக்கு வேலை கிடைக்குமா.. ஓர் வேளை நம்மை விடவு திறமையானவங்க வந்திருந்தா என்ன செய்வது..
முதல் வேலைக்கான நேர்காணலுக்கு குடும்பத்தின் சுமை கவலை என்றே சோகம் தோய்ந்த முகத்துடன் பேருந்தில் ஜன்னலோரமாக இருந்தவனுக்கு தனது ராசியாக புன்னகையை பரிசாக தந்த கைகளை அசைத்த..நீ எடுத்து வைக்கும் முயற்சியில் எல்லாம் உனக்கு சுக்கிர திசை தான் என்பது போல் கைகளை அசைத்து அம்மாவின் ராட்சத பிடியில் இருந்தாலும் உலகிற்கு இருக்கும் அனைவரிடமும் சிரித்த முகமாக டாடா காட்டும் சிறு தேவதை... ஏய் பிசாசு என்னடீ பண்ணுவோம் என்றது முகத்தில் சோகமாக வைத்து கொண்டு தவறே செய்யாதவள் போல் தரையை பார்க்கிறாள். அந்த குட்டி தேவதை..
இந்த கழுதை எத்தனை சொன்னாலும் மண்டையில் ஏறாது எப்போ பாரு யாரையாவது பார்த்து டாடா காட்டிக்கொண்டு இருக்குது..
சற்று தொலைவில் யாரோ கவலை தோய்ந்த முகத்துடன், இருக்கிற பண்டம் பாத்திரம் எல்லாமும் அடமானம் வைச்சாவது இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டா அதுக்கு பிறகு எனக்கு இல்லையே இல்லை
தாத்தா போன பிறகு இவளுக்கு தாத்தா நினைப்புலயே ஆஸ்பத்திரி போனது தான் மிச்சம்.
கடன்கார மாமன் இரண்டு பேர் இருந்தும் தண்டம் தான் அவனுங்க..பொண்டாட்டி முந்தானைமை பிடிச்சுகிட்டு... எங்க அப்பா கல்யாணத்து தருவதாக சொல்லி இருக்கலாம் அதெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும்.
சாகும் போது என் மகளுக்கு பேத்தி இதையெல்லாம் கொடுங்கன்னு எங்க கிட்ட எதையும் சொல்லை போதும்..சொன்ன வலிமிக்க வரிகள்...
அவர்களின் வீட்டின் வராண்டாவில் கூட கடவுள் இருந்து தினமும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்..நீ ஆசிர்வாதமாய் இருப்பாய் என்றே
தாத்தா இல்லாத குறை தெரியாம வளரத்துட்டேன்.. இனிமே எப்படி சமாளிக்க போறேனா தெரியலை.கல்யாணத்துக்கு தாய் மாமன் சீர் செய்ய அந்த மூதேவிக தானே வரவேண்டி இருக்கு அதான் அமைதியா இருக்கேன்...எல்ல்ஆம அந்த மருதமலை முருகன் தான் இவளுக்கு நல்ல வழி காட்டணும்
மும்மரமாக பேசிக்கொண்டு இருந்தனர் . அவர்களின் வார்த்தைகளை கேட்டவள் மறுபுறமாக திரும்பி நின்றபடி தனது துப்பட்டாவில் கலங்கிய கண்களை துடைத்து கொண்டவளையும் மீறித்தான் தாத்தாவின் பாசமும் நேசமும்..
தாத்தா உயிரோடு இருந்தஆட்அவர்களை பார்த்து கண்களை சிமிட்டும் புன்னகையை செய்யும் குட்டி குழந்தை...எங்கோ த
No comments:
Post a Comment