ஆப்பிள் கேட்டது குற்றமா..

 ஏன்டா மகனே நல்ல நாளும் அதுவா உன் பொண்டாட்டி முகம் வாடின மாதிரி இருக்கா..நீ எதாவது திட்டினீயா 

அதை உன் மருமகள்கிட்டையே கேளூ.

என்னம்மா ஆச்சு..நீயாவது சொல்லேன் 

அத்தை உங்களுக்கே நல்லா தெரியும்.. இரண்டு நாளா தீபாவளிக்காக தனியா ஆளா.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு..உங்களை கூட நான் உதவிக்கு கூப்பிடல தானே..

ஆமாம்..நீ தனியா எவ்வளவு கஷ்டப்பட்டே அதுக்கு நீ எது கேட்டாலும் வாங்கி தரலாமே..

அதான் அத்தை உங்க மகன் கிட்ட ஓரே ஓர் ஆப்பிள் கேட்டேன் அதுக்கு போய் நல்லா திட்டிவிட்டாரூ..

ஏன்டா.. .மாசம் 30,000 சம்பளம் வாங்குறே.. அவள் ஆசையா ஓர் ஆப்பிள் தானே கேட்டா..வாங்கி கொடுத்தா நீ என்ன குறைச்சா போவே...

யம்மா நீயும் அவள் கூட சேர்ந்துகிட்டு லூசு தனமா பேசாதே.. உன் மருமகள் ஓர் ஆப்பிள்-ன்னு கேட்டது பழம் இல்லை..

பிறகு என்னடா அது..

அட்வான்ஸ் ஆப்பிள் ஐபோன் கேட்குறா அதோட விலையே மூணு லட்சம்.

🤣🤣🤣🤣

கவலை மறந்து சிரிங்க.. சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுங்க 


தீபாவளி துப்பாக்கி

 


நிஜமான துப்பாக்கியோ 

அதன் தோட்டோ கண்டு 

சற்றும் அஞ்சியதில்லை..

தினமும் தொட்டு விளையாடிய

 ராணுவகாரனுக்கு அதன் மீது பயமல்ல

பாசமே அதிகம்.ஆனால் அன்பு மகளின் 

தீபாவளி துப்பாக்கியை கண்டே 

அஞ்சுவது போன்றே நடிக்கிறேன்... 

ஒழுங்கா இருந்தா இல்லாட்டி 

இந்த துப்பாக்கி பேசும் என்பவளின் 

மழலை மொழியில் மயங்குகிறேன்.. 

சுவற்றில் இருக்கும் ராணுவ உடையில் 

துப்பாக்கி எந்திய போட்டோவ 

மறைத்தே சிரிக்கிறேன்.. 

இனிமேல் இந்த வீட்டில் பாப்பாவுக்கு தான்

எல்லோரும் பயப்படணும் 

என்றே சிங்கமாக கர்ஜிக்கிறாள்.. 

செல்வத்தில் பிறந்த செல்வமகள் 

எல்லோருமே அஞ்சுவது போலவே 

நடுங்குகிறோம் ஏனெனில் பஞ்சு விரல்களில் 

தீபாவளி துப்பாக்கி 

For more writings visit https://dhenaliraman.blogspot.com

கிழவியின் காதல்

 மலரே நீ வாடாதே.. நீ வாடினால் இந்த தோட்டக்காரனுக்கு மனது வலிக்கிறது.. என்னை மன்னித்து விடு இரண்டு நாளில் கனமழை வரும் என்றே நன்கு படித்தவர்களின் பேச்சை நம்பி..அதிகமாக தண்ணீர் பட்டு மலர் உனது வேர் அழுகி விடுவோமோ என்ற தண்ணீர் விடவில்லை..என்றே வெயில் தாக்கத்தில் வாடிய மலர் செடிகளின் மீது வயதான அந்த முதியவர் தண்ணீர் தெளிக்கிறார்.தோட்டத்தில் இருக்கும் எல்லா செடிஇகளுக்கும்..என்னங்க இங்க வாங்க போட்ட டீ ஆறுது சீக்கிரமா வந்து குடிச்சிட்டு போய் உங்க அருமை புள்ளகளை தீர ஆசை கொஞ்சுங்க.. நான் ஓண்ணும் தடுக்க மாட்டேன். தள்ளாத வயதிலும் தனக்காக மலர்செடி தோட்டம் போட்டு வாழ்க்கை நடத்தும் அவரை கேலி செய்கிறாள் செவ்வந்தி என்ற பெயர் கொண்ட அந்த கிழவி.

அவரோ அவளின் காதுகளுக்கு கேட்காதவாறு தனது மலர் செடிகளிடம் வாஞ்சையுடன் பேசுகிறார்..பத்து நிமிஷம் கழிச்சு ஆறின டீ குடிச்சா நான் என்ன குறைச்சா போயிடுவேன்..வர..வர..இந்த கிழவிக்கு ஏனோ நேத்து தான்  கல்யாணமான மாதிரி ரொம்ப கேலி பண்ணுறாரூ...ஏதாவது ஓர் வார்த்தை சொன்ன கண்ணுல குற்றால அருவியே வந்திடும் சரியான சிடுமூஞ்சி கிழவிகழுத்தில் மீண்டும் தளிர்க்க இன்றோ நாளையோ என்றே


still work in progress 

தாயுமானவள்

 பத்து மாதம் 

நான் அவனை சுமக்கவில்லை

அந்த குறையை போக்கவே 

ஓவ்வொரு நொடியும்

தனது மனதிற்குள் சுமக்கிறாள் அவள்...

தாயின் அன்பிற்கு போட்டி போட்டு 

பாசம் காட்டுபவள் வேஷமில்லாமல் 

சிலநேரத்தில் ரோஷத்துடன்   

வார்த்தை உஷ்ணத்தை கலந்தே 

அக்கறையை அதிகமாக 

அன்பில் கலந்த கருணைமிக்க 

பாசக்கார அக்கா 

எங்களின் வீட்டில் 

எல்லோருக்கும் இவளே 

தாயுமானவள்

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...