தாத்தா பயங்கர குசும்பன் போலையே

என்னடா உங்க வீட்டுல நேத்து பெரிய பிரச்சினையாமே... வீட்டுல யாருமே தூங்கலையாமே..

அட அதை விடுறா....அதை கேட்டு என் மனசை கஷ்டப்படுத்தாதே

ஏன்டா...எப்பவும் சந்தோஷமா பேசுற நீ கூட விரக்கியா பேசுற..ஏதாவது பணம் தேவைன்னா தயங்காம கேளூடா...

அடேய் இது பணத்தேவை இல்ல பாசத்தேவையா......

புரியிற மாதிரி சொல்லுடா...

அடுத்த வாரம் எங்க தாத்தாவுக்கு அறுபதாம் கல்யாணம் வருது....

அதனால் என்ன??? சிறப்பா செஞ்சுற வேண்டிதானே...
அதுல தான்டா பிரச்சினையே.... ஓர் தடவை Arrange Marriage, பண்ணி நான் பட்ட கஷ்டம் போதும்.. சொல்லி எல்லாரையும் 

என்னடா புது கதையா இருக்கு...

இனிமேலும் நான் கல்யாணம் பண்ணிணா.. அடுத்த வாரம் பண்ணுற கல்யாணம் கண்டிப்பாக.. Love Marriage மட்டும் தான்னு அடம் பிடிக்கிறாரூ தாத்தா

அதனால் தான் வீட்டில் யாருமே ராத்திரி சரியா தூங்கலை.நல்லா சாப்பிட்டு நாலு நாளாச்சு 

😳😳😳🤣😳😳😳🥳😳😳

Whatsapp Leave Request

 From,

Raman Sankar,

Freelancing writer

(Just imagination only, don't think him as a great writer)


To,

My whatsapp friends,

Respected sir/Madam,

     I kindly request you to grant me leave for only one for my whatsapp account.

Reason being I have some personal work, so consider my whatsapp leave application form.

My humble request to you. Please don't show it to anyone.

Because someone may say in jealous.

This leave letter belongs to them and i have stolen it..


Your truly,

Raman Sankar

Freelancing writer 

பக்தா வேண்டும் வரங்களை கேளூ..

ஒருவன் செய்த கடும் தவத்தை மெச்சி கடவுள் அவன் முன்னால் தோன்றினார்...
பக்தா உன் கடும் தவத்தை மெச்சுகிறேன்...
நீ சாகா வரத்தை தவிர உனக்கு விரும்பிய வரத்தை கேள் தருகிறேன்..
ஆண்டவா எனக்கு இரண்டு பொண்டாட்டி கட்டி, அவங்களோட சந்தோஷமா வாழ்ந்து பத்து பிள்ளைங்க பெத்து அவங்களை நல்ல மாதிரி படிக்க வைச்சு நோய் நோடியில்லாம வாழும் வரம் கொடு...
பக்தா, உனக்கு M.L.A., M.P..பதவி வேணாலும் தருகிறேன்... உனக்கு எதுக்கு இரண்டு பொண்டாட்டி ஆசை...

ஆண்டவா...நீ சொல்லுற மாதிரி M.L.A. M.P... பதவி கிடைச்சாலும் அது கொஞ்ச நாளைக்கு தான்...பதவி போயிட்டா.அடுத்து ஆட்சிக்கு வருபவன்...
I.T..Raid..அது... இதுன்னு கேஸை போட்டு சொந்தமா இருந்த பூர்வீக சொத்தையும் புடுங்கிடுவான்....
இவன் செய்வதை அடுத்த வருபவரும் செய்வான்...
பக்தா உன் பயம் புரிகிறது... இருந்தாலும் இரண்டு பொண்டாட்டி பத்து புள்ளைங்க கொஞ்சம் அதிகமா தெரியலையா....
ஆண்டவா உனக்கு உலக நடப்பு தெரியலை போல...
பக்தா என் சொல்லுறே எனக்கு உலக நடப்பு தெரியலையா

ஓரே ஒரு பொண்டாட்டி கட்டி அவங்களை கஷ்டப்பட்டு காப்பாத்தினாலும்.. கடைசி காலத்தில் நீங்க எங்களுக்காக என்னத்த செஞ்சு கிழிச்சிங்க என்று திட்ட தான் செய்வாங்க...
நீ என்னப்பா, சொல்லுறே...

அதே சமயம் இரண்டு பொண்டாட்டி பத்து புள்ளைங்க இருந்தா... ஒருத்தர் ஏசினாலும் இன்னொருத்தி நல்லவிதமாக பார்த்துப்பா.. அதையும் மீறி இரண்டு பேரும் ஏசினாலும்...பத்து பிள்ளைகளில் ஏதாவது ஒன்று நமக்கு கடைசி காலத்தில் நல்லவிதமா பார்த்துகிட்டு கஞ்சி ஊத்தும்... இதே இது ஓரே ஓர் பொண்டாட்டியா இருந்தா 
வயசான காலத்துல கஷ்டப்பட்டு சொத்து எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்தாலும் எனக்கு ஏதாவது மருத்துவ செலவு என்றால் முகம் சுழித்து கொண்டு தான் காசு தருவாங்க.
நான் வயசான காலத்துல சந்தோஷமா இருக்கணும் என்று நினைப்பதால் இந்த வரங்களை கேட்டேன்...
ஆண்டவன் ---(மனசுக்குள் இப்படி ஓவ்வொரு மனுஷனும் நினைச்சா பிறகு நம்மை எல்லோரும் மறந்திடுவாங்களே..இப்போ என்ன செய்வது, இவன் கேட்ட மாதிரியே வரத்தை கொடுப்பதா வேண்டாமா)

என்னடீ வேணும்

 பல நாட்களாக அவளுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது போதும் என்று முடிவு பண்ணி, ஓர் வழியா கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு. அவளின் முகத்திற்கு நேராக, அதுவும் அதிகாலையிலேயே கேட்டு விட்டேன்..

ஏன் டீ என்னை இப்படி இம்சை பண்ணுற, வாயைத் திறந்து சொல்வேன்.. உனக்கு

என்னடீ வேணும் என்று..

அதுக்கு அவ என்ன மச்சான் சொன்னா...

டீ தூள் எல்லாம் வீட்டில் நிறையவே இருக்கு...

எனக்கு பத்து பவுன் சங்கிலி கேட்டு பத்து நாளாச்சு வரும் போது மறக்காம வாங்கிட்டு வாங்க என்று...


மழை வரமா...சாபமா...

மனைவி -  என்னங்க.. அவர் உங்க நண்பர் தானே. அவரை போய் ஏன் நீங்க இப்படி திட்டி அனுப்புனீங்க...


கணவன் - நான் எங்கடீ அவனை திட்டினேன்.... அவன் தான் டீ என்னை காயபடுத்துற மாதிரி பேசினான்.. நான் பதிலுக்கு பேசினேனா அவனுக்கு பொறுக்கல..கோபிச்சுகிட்டு போறான்....

மனைவி - அவரை வருங்கால டைரக்டர் அப்படின்னு புகழுவீங்க.. இப்போ என்னாச்சு..

கணவன் - பிறகு என்னடீ...நானே படாத பாடுபடுறேன்..நீ அந்த படத்தை பாரூ இந்த படத்தை பாரூ 1,000 கோடி செலவழிப்பது எடுத்திருக்காங்க...இரண்டே நாளில் 4,500 கோடி உலகளவில் சம்பாதித்திருச்சு.. நீதான் பத்தாயிரம் சம்பளத்துக்கு இவ்வளவு கஷ்டபடுறே என்றான்...

மனைவி - அதுக்கு நீங்க என்னதான் சொன்னீங்க..

கணவன் - நீங்க பல கோடி செலவழிச்சு படம் எடுக்கிறதை விட சில லட்சத்தில் நாங்க மழை நேரத்தில் வேலைக்கு போக... பெண்கள் துணி சமையல் செய்யவும்.. குழந்தைங்க மழையில் விளையாட போறேன்னு அப்படின்னு அடம் பிடிக்கிறது... வயசான காலத்துல இந்த மழையில் இன்னிக்கே நான் என் பழைய பிரெண்ட்ஸ் பார்க்கணும் அப்படின்னு அடம் பிடிக்கும் அந்த குழந்தை பத்த  படம் எடுத்தா வருஷம் பூராவும்  பல ஆயிரம் கோடி கிடைக்கும் நீ அசிஸ்டன்ட் டைரக்டர் தானே..இதை அவர்கிட்ட சொல்லு என்றேன்...

இதுக்கு போய் கோபமா போறான்...

மனைவி -. இப்போ தாங்க தெரியுது நீங்க இன்னும் அதே ஆபிஸ்ல இருக்கீங்கன்னு

கணவன் -.  😳😳😳 (மனதுக்குள் இவகிட்ட போய் சொன்னே பாரூ...இதை சொல்லியே இன்னும் இரண்டு வருஷத்துக்கு சண்டை இழுப்பாயே...கடவுளே காப்பாத்து டா....)


100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...