பக்தா வேண்டும் வரங்களை கேளூ..

ஒருவன் செய்த கடும் தவத்தை மெச்சி கடவுள் அவன் முன்னால் தோன்றினார்...
பக்தா உன் கடும் தவத்தை மெச்சுகிறேன்...
நீ சாகா வரத்தை தவிர உனக்கு விரும்பிய வரத்தை கேள் தருகிறேன்..
ஆண்டவா எனக்கு இரண்டு பொண்டாட்டி கட்டி, அவங்களோட சந்தோஷமா வாழ்ந்து பத்து பிள்ளைங்க பெத்து அவங்களை நல்ல மாதிரி படிக்க வைச்சு நோய் நோடியில்லாம வாழும் வரம் கொடு...
பக்தா, உனக்கு M.L.A., M.P..பதவி வேணாலும் தருகிறேன்... உனக்கு எதுக்கு இரண்டு பொண்டாட்டி ஆசை...

ஆண்டவா...நீ சொல்லுற மாதிரி M.L.A. M.P... பதவி கிடைச்சாலும் அது கொஞ்ச நாளைக்கு தான்...பதவி போயிட்டா.அடுத்து ஆட்சிக்கு வருபவன்...
I.T..Raid..அது... இதுன்னு கேஸை போட்டு சொந்தமா இருந்த பூர்வீக சொத்தையும் புடுங்கிடுவான்....
இவன் செய்வதை அடுத்த வருபவரும் செய்வான்...
பக்தா உன் பயம் புரிகிறது... இருந்தாலும் இரண்டு பொண்டாட்டி பத்து புள்ளைங்க கொஞ்சம் அதிகமா தெரியலையா....
ஆண்டவா உனக்கு உலக நடப்பு தெரியலை போல...
பக்தா என் சொல்லுறே எனக்கு உலக நடப்பு தெரியலையா

ஓரே ஒரு பொண்டாட்டி கட்டி அவங்களை கஷ்டப்பட்டு காப்பாத்தினாலும்.. கடைசி காலத்தில் நீங்க எங்களுக்காக என்னத்த செஞ்சு கிழிச்சிங்க என்று திட்ட தான் செய்வாங்க...
நீ என்னப்பா, சொல்லுறே...

அதே சமயம் இரண்டு பொண்டாட்டி பத்து புள்ளைங்க இருந்தா... ஒருத்தர் ஏசினாலும் இன்னொருத்தி நல்லவிதமாக பார்த்துப்பா.. அதையும் மீறி இரண்டு பேரும் ஏசினாலும்...பத்து பிள்ளைகளில் ஏதாவது ஒன்று நமக்கு கடைசி காலத்தில் நல்லவிதமா பார்த்துகிட்டு கஞ்சி ஊத்தும்... இதே இது ஓரே ஓர் பொண்டாட்டியா இருந்தா 
வயசான காலத்துல கஷ்டப்பட்டு சொத்து எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்தாலும் எனக்கு ஏதாவது மருத்துவ செலவு என்றால் முகம் சுழித்து கொண்டு தான் காசு தருவாங்க.
நான் வயசான காலத்துல சந்தோஷமா இருக்கணும் என்று நினைப்பதால் இந்த வரங்களை கேட்டேன்...
ஆண்டவன் ---(மனசுக்குள் இப்படி ஓவ்வொரு மனுஷனும் நினைச்சா பிறகு நம்மை எல்லோரும் மறந்திடுவாங்களே..இப்போ என்ன செய்வது, இவன் கேட்ட மாதிரியே வரத்தை கொடுப்பதா வேண்டாமா)

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...