மழை வரமா...சாபமா...

மனைவி -  என்னங்க.. அவர் உங்க நண்பர் தானே. அவரை போய் ஏன் நீங்க இப்படி திட்டி அனுப்புனீங்க...


கணவன் - நான் எங்கடீ அவனை திட்டினேன்.... அவன் தான் டீ என்னை காயபடுத்துற மாதிரி பேசினான்.. நான் பதிலுக்கு பேசினேனா அவனுக்கு பொறுக்கல..கோபிச்சுகிட்டு போறான்....

மனைவி - அவரை வருங்கால டைரக்டர் அப்படின்னு புகழுவீங்க.. இப்போ என்னாச்சு..

கணவன் - பிறகு என்னடீ...நானே படாத பாடுபடுறேன்..நீ அந்த படத்தை பாரூ இந்த படத்தை பாரூ 1,000 கோடி செலவழிப்பது எடுத்திருக்காங்க...இரண்டே நாளில் 4,500 கோடி உலகளவில் சம்பாதித்திருச்சு.. நீதான் பத்தாயிரம் சம்பளத்துக்கு இவ்வளவு கஷ்டபடுறே என்றான்...

மனைவி - அதுக்கு நீங்க என்னதான் சொன்னீங்க..

கணவன் - நீங்க பல கோடி செலவழிச்சு படம் எடுக்கிறதை விட சில லட்சத்தில் நாங்க மழை நேரத்தில் வேலைக்கு போக... பெண்கள் துணி சமையல் செய்யவும்.. குழந்தைங்க மழையில் விளையாட போறேன்னு அப்படின்னு அடம் பிடிக்கிறது... வயசான காலத்துல இந்த மழையில் இன்னிக்கே நான் என் பழைய பிரெண்ட்ஸ் பார்க்கணும் அப்படின்னு அடம் பிடிக்கும் அந்த குழந்தை பத்த  படம் எடுத்தா வருஷம் பூராவும்  பல ஆயிரம் கோடி கிடைக்கும் நீ அசிஸ்டன்ட் டைரக்டர் தானே..இதை அவர்கிட்ட சொல்லு என்றேன்...

இதுக்கு போய் கோபமா போறான்...

மனைவி -. இப்போ தாங்க தெரியுது நீங்க இன்னும் அதே ஆபிஸ்ல இருக்கீங்கன்னு

கணவன் -.  😳😳😳 (மனதுக்குள் இவகிட்ட போய் சொன்னே பாரூ...இதை சொல்லியே இன்னும் இரண்டு வருஷத்துக்கு சண்டை இழுப்பாயே...கடவுளே காப்பாத்து டா....)


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...