ம்ம்மா.. ம்ம்மா.. அம்மா.. அம்மா

முகம் காணும்

முன்னாலே முகவரியை

தந்தவளே..என்புள்ள

வரமென்று

காத்திருந்த தருணத்தில்

கவலை மறந்து இருந்தாயே..

கண்கள்கலங்காமல் 

கண்ணிமை போல் 

காலமெல்லாம் காத்தவளே...

ஓலை குடிசையிலே வாழ்ந்த காலத்திலும்

நெஞ்சமதில் அன்பு அரண்மனை காட்டினானே.....

அப்பாவின் முகவரி கூட

நீ தந்த காதலென்றோ...

தலைநகரில் தன்னந்தனியாக

சொந்தமின்றி மழையில் தவித்தவளே...

பக்கத்தில் தவித்த ஏழை மக்களுக்கு

பரிவுடன் பாங்காய் பாசமான

வார்த்தையை சொன்னவளே....

மழை வெள்ளம் சூழ்ந்து நின்று

ஊரெல்லாம்  தவித்த போதும்

உள்ளத்தில் நீ சுமந்த 

அன்பு நெஞ்சத்தை

உன்னுள்ளே நானிருந்து

உணர்ந்த தருமெல்லாம்

வாழ்வின் தவக்காலம்..

பனிக்குடம் உடைத்து விட்டு

கதறி அழுதபோதும்

"புள்ள எப்படி இருக்கு"...

சிரித்த படியே கேட்டவளே...

என் சிரிப்பே உன் புன்னகை 

வேண்டித்தானே....

பொன்னகை தவிர்த்து

புன்னகை பூத்தவளே

என்னுயிர் நீ அம்மா...

முகவரியும் நீ அம்மா...

ம்ம்மா ம்ம்மா...

என்னுயிரே நீ அம்மா..


என்னுயிர் நீ அம்மா

ம்ம்மா... ம்ம்மா.....

அம்மா.... அம்மா...

அன்பை தான்

யாசித்தாயே..

அன்பையே 

யோசித்தாயே...

அன்பென்றே  

சொன்னவரெல்லாம்

பரிதவிக்க விட்ட போதும்

சொந்தங்கள் வேண்டுமென்று

சோகங்கள் மறைத்தாயே

 சுகமாக சிரித்தாயே..

சிந்தனையில் அன்பு

கொண்டு உதிரத்தை

கொட்டினாயே...... தாயென்று

சொல்லும்வரை 

பொறுமையாக

நின்றவளே... ஊர் போற்றும்

மனகென்றே பெயரெடுக்க வைத்தவளே

பத்து மாதம் சுமந்த உன்னை

பத்திரமாய் பார்த்திடும்

பாக்கியமே சொர்க்கத்தின்

வாசல் அன்றோ.

உன் தடியில் வீழ்ந்த என்னை

தலைவனென்று சொன்னாயே

தரணி பாடும் கூட்டத்தில்

பரணி பாட வைத்தவளே.

நீ தந்த அன்புதான் 

அமைதியின் பிறப்பிடமே..

உன் பெயரை சொல்லித்தானே

தினமும் வாழ்கிறேனே...

அம்மா.. அம்மா.. என்னுயிர்

நீ அம்மா...என்னுயிரே நீ அம்மா..

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...