ம்ம்மா.. ம்ம்மா.. அம்மா.. அம்மா

முகம் காணும்

முன்னாலே முகவரியை

தந்தவளே..என்புள்ள

வரமென்று

காத்திருந்த தருணத்தில்

கவலை மறந்து இருந்தாயே..

கண்கள்கலங்காமல் 

கண்ணிமை போல் 

காலமெல்லாம் காத்தவளே...

ஓலை குடிசையிலே வாழ்ந்த காலத்திலும்

நெஞ்சமதில் அன்பு அரண்மனை காட்டினானே.....

அப்பாவின் முகவரி கூட

நீ தந்த காதலென்றோ...

தலைநகரில் தன்னந்தனியாக

சொந்தமின்றி மழையில் தவித்தவளே...

பக்கத்தில் தவித்த ஏழை மக்களுக்கு

பரிவுடன் பாங்காய் பாசமான

வார்த்தையை சொன்னவளே....

மழை வெள்ளம் சூழ்ந்து நின்று

ஊரெல்லாம்  தவித்த போதும்

உள்ளத்தில் நீ சுமந்த 

அன்பு நெஞ்சத்தை

உன்னுள்ளே நானிருந்து

உணர்ந்த தருமெல்லாம்

வாழ்வின் தவக்காலம்..

பனிக்குடம் உடைத்து விட்டு

கதறி அழுதபோதும்

"புள்ள எப்படி இருக்கு"...

சிரித்த படியே கேட்டவளே...

என் சிரிப்பே உன் புன்னகை 

வேண்டித்தானே....

பொன்னகை தவிர்த்து

புன்னகை பூத்தவளே

என்னுயிர் நீ அம்மா...

முகவரியும் நீ அம்மா...

ம்ம்மா ம்ம்மா...

என்னுயிரே நீ அம்மா..


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...