என்னுயிர் நீ அம்மா

ம்ம்மா... ம்ம்மா.....

அம்மா.... அம்மா...

அன்பை தான்

யாசித்தாயே..

அன்பையே 

யோசித்தாயே...

அன்பென்றே  

சொன்னவரெல்லாம்

பரிதவிக்க விட்ட போதும்

சொந்தங்கள் வேண்டுமென்று

சோகங்கள் மறைத்தாயே

 சுகமாக சிரித்தாயே..

சிந்தனையில் அன்பு

கொண்டு உதிரத்தை

கொட்டினாயே...... தாயென்று

சொல்லும்வரை 

பொறுமையாக

நின்றவளே... ஊர் போற்றும்

மனகென்றே பெயரெடுக்க வைத்தவளே

பத்து மாதம் சுமந்த உன்னை

பத்திரமாய் பார்த்திடும்

பாக்கியமே சொர்க்கத்தின்

வாசல் அன்றோ.

உன் தடியில் வீழ்ந்த என்னை

தலைவனென்று சொன்னாயே

தரணி பாடும் கூட்டத்தில்

பரணி பாட வைத்தவளே.

நீ தந்த அன்புதான் 

அமைதியின் பிறப்பிடமே..

உன் பெயரை சொல்லித்தானே

தினமும் வாழ்கிறேனே...

அம்மா.. அம்மா.. என்னுயிர்

நீ அம்மா...என்னுயிரே நீ அம்மா..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...